Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அழியவிட்டு தமிழை வளர்த்து என்ன பயன்?…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அழியவிட்டு தமிழை வளர்த்து என்ன பயன்?…

அகரன்June 26, 2018
தமிழர்களை அழியவிட்டு தமிழை வளர்த்து என்ன பயன்?…

இன்று முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன் கனடா நாட்டின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஆரம்பித்து தமிழை வளர்ப்பதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக இருந்தது அச்செய்தி
பெருமைக்குறிய அந் நிகழ்வின் நோக்கம் 30 லட்சம் டொலர்களை சேகரிப்பது ( அண்ணளவாக 400 கோடி இலங்கை ரூபா )

அதற்கான முதல்நாள் நிகழ்விலேயே தமிழை நேசிக்கும் கனடா வாழ் பரோபகாரிகள் 700,000 டொலர்களை தமிழை காப்பாற்றவென வாரி வளங்கிவிட்டனர் இதில் கனடியத் தமிழர் பேரவை மாத்திரம் 50,000 கனடிய டொலரை வழங்கியதாம்

கடந்த ஆண்டு கனடாவுக்கு பக்கத்து நாடான அமெரிக்காவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவெனவும் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சேர்க்கப்பட்டதும் நடந்தது. அதற்கும் இந்த அமைப்புக்களும் தனி மனிதர்களும் வாரித்தான் வழங்கினர்.

இது தமிழை வளர்க்கும் நற்செயல்தான் வரவேற்கிறேன் அதற்கு முன் தமிழ்பேசும் இனத்தின் தனித்துவத்தை தக்கவைக்கவும் தமிழை காப்பாற்றவும் தனித்தமிழீழம் கேட்டு போராடிய இனத்தின் இன்றைய நிலை என்ன என்பதை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு குடும்பப் பெண் நுன்கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்த செய்தியும் இன்று இதே முகநூலில் வந்தது

அடுத்து ஒரு ஆண் வறுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தியும் வந்தது

இவ்வாறான செய்திகள் தினமும் ஒவ்வொன்று வந்துகொண்டிருக்கின்றன தற்கொலை செய்துகொண்டு இறப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் அவர்கள் பேசும் மொழி தமிழ். இன்று இலங்கையில் அதிகம் தற்கொலை இடம்பெறும் மாகாணங்களாக வடக்கு கிழக்கு இருக்கிறது அதற்கு காரணம் போர் போரின் பின்னரான வாழ்வாதாரம் இல்லாமை.

ஈழப்போராட்டம் தின்றது செமிக்க தொடங்கப்பட்டதல்ல தமிழை தமிழனை காப்பாற்ற தமிழனால் தொடங்கப்பட்டதுதான் அது. போரின் பின்னரான தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியல் கொடுமையான கட்டத்தில் இருக்கிறது. அவர்களை காப்பாற்றுவார் எவருமில்லை தினம் தினம் வாழ்வோடும் வறுமையோடும் போரடிக்கொண்டிருக்கின்றனர்.

எவர்கள் தமிழர்களை அழித்தார்களோ அவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தமிழர்களை விட்டுவிட்டு கனடாவிலும் அமெரிக்காவிலும் தமிழுக்கு இருக்கை அமைப்பதால் என்னபயன்?

அதுமட்டுமா தமிழீழம் கேட்டுப்போராடிய முன்னாள் போராளிகள் வாழ்வாதாரம் இல்லாமையால் ஆமியில் சேர்கிறார்கள் வயிற்றுப்பசியினால் கொன்றவனையே மாலையிட்டு தூக்கி கொண்டாடும் நிலையில் இருக்கின்றனர் ஐயோ தமிழன் மானம் போய்விட்டதே என்று பதறிய நாம் அவர்கள் சோரம் போய்விட்டார்கள் என்று திண்டது செமிக்க கட்டுரை எழுதுகிறோம். எழுதிவிட்டு என்ன செய்கிறோம் ஏன் அவர்கள் அங்குபோனார்கள் என்று யோசிக்கிறோமா? யோசித்திருந்தால் கனடாவில் தமிழ் இருக்கை அமைக்க நிதி சேகரித்திருக்க மாட்டீர்கள் ஈழத்தில் தொழிற்சாலை அமைக்க நிதி சேகரித்திருப்பீர்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த முனைந்திருப்பீர்கள்.

வறுமை, வாழ வழியில்லை தாய் தகப்பன் பிள்ளையென அத்தனை பேரும் இஸ்லாத்தில் சேர்ந்து முஸ்லிம் என இனம் மாறுகிறான் இனத்தை விடவும் மொழியை விடவும் வயிற்றின் பசி முக்கியமானது. இவற்றைப்போக்க என்ன செய்திருக்கிறோம் கோவிலுக்கு கோடிகள் செலவளிக்கிறோம் கோவிலுக்கு அருகில் இருப்பவன் குழந்தையின் கல்விக்கு வழியில்லாமல் மதம் மாறுகிறான் நீங்கள் அமைத்த கோவில் கோபுரத்தினால் என்ன பயன்?

தமிழ் வாழவேண்டுமெனில் தமிழன் வாழவேண்டும்.

தமிழுக்கு அமெரிக்காவிலும் கனடாவிலும் பல்லாயிரம் கோடியில் இருக்கை அமைத்து தமிழை ஆராய்ந்து முடிக்கையில் உலகில் இருந்து தமிழன் என்றோர் இனம் அழிந்துபோயிருக்கும் இனம் அழிந்தபின் மொழியை வைத்து என்ன செய்யப்போகின்றீர்கள்? செத்த பிணத்தை போஸ்மாட்டம் செய்வதால் செத்தவன் உயிர்த்துவிடுவானா?

கனடாவில் தமிழ் இருக்கை அமைக்க என்றவுடன் ஒரே நாளில் 7 லட்சம் டாலர்களை அள்ளிக்கொடுத்த கொடைவள்ளல்களே உங்களால் தாயகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏன் முடிவதில்லை. சிங்களவன் நுன்கடன் என்ற பெயரில் தினம் தினம் ஒவ்வொறு உயிர்களை பறிக்கின்றானே அது உங்களுக்கு தெரியவில்லையா? தினம் தினம் ஒருவனோ ஒருத்தியோ தூக்கில் தொங்குகிறார்களே அது உங்களுக்கு தெரியவில்லையா?

முதலில் தமிழனை காப்பாற்றுங்கள் பின் தமிழை காப்பாற்றலாம்.

சுப்ரமணிய பிரபா

 

http://akkinikkunchu.com/?p=59272

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்துக்கு கொடுப்பதால் வரிக்கழிவு கிடைக்காது பணக்காரர்களுக்கு.. :35_thinking:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

தாயகத்துக்கு கொடுப்பதால் வரிக்கழிவு கிடைக்காது பணக்காரர்களுக்கு.. :35_thinking:

உண்மைதான்.   வரி கட்டாமலேயே பெரும்பணக்காரர்கள் ஆன பலர் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள். ஆதாயம் இருந்தால் ஆத்துக்குள்ளையும் போடுவார்கள் இவர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.