Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேற்றுமையால் தீமையே விளையும்

Featured Replies

வேற்றுமையால் தீமையே விளையும்

04MAIN02072018Page1Image0006-939d91f82aad06874ce012c7d0c616144ae5ca21.jpg

 

 

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எழு­திய ‘நீதி­ய­ரசர் பேசு­கிறார்’ எனும் நூலின் வெளி­யீட்டு விழா இம்­மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நிகழ்ந்­தது. இதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்ட எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் பின்­வ­ரு­மாறு கூறி­யி­ருக்­கிறார்.

நான் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­குப்பின் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்­த­போது அவர் மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசு­மாறு கூறினார். அதன்­படி நாம் மஹிந்­தவைக் கண்­டதும் மஹிந்த என்­னைப்­பார்த்து எனது தோல்­விக்கு நீரே காரணம் என்றார். உடனே நான் அதற்கு நானல்ல காரணம் எனது மக்­களே. அவர்­களைப் புறக்­க­ணிக்­க­மு­டி­யாது. அவர்­களின் ஆத­ரவைப் பெற்றால் தான் ஆட்­சிக்கு வரலாம் எனக் கூறினேன்’ என்றார்.

இதன் அர்த்தம் என்ன தெரி­யுமா? தற்­போ­தைய யாப்­பின்­படி இனப் பிரச்­சினை தீரவும் புதிய யாப்பை இயற்­றவும் வேண்­டு­மெனில் பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் அங்­கீ­க­ரிக்­கப்­படும் சாத்­தி­யமும் இருக்­க­வேண்டும் என்­ப­தே­யாகும். தற்­போ­தைய சூழலில் மஹிந்­தவைத் தவிர்த்­து­விட்டு அவை இரண்­டையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மல்ல என்றே மைத்­திரி ரணி­லி­டமும் சம்­பந்­த­னி­ட­மும் கூறி­யி­ருக்­க­வேண்டும். உண்­மையில் இதுவே தற்­போ­தைய யதார்த்­த­மான நிலை­வ­ர­மாகும். இதை அந்த கூட்­டத்தில் சம்­பந்தன் கூறிய காரணம் என்ன?

நான் மக்­க­ளா­ணைக்கு முர­ணாகச் செயற்­ப­ட­வில்லை. அதை ஆயுத ரீதியில் அணு­கு­வது வேறு, அர­சியல் ரீதியில் அணு­கு­வது வேறு. அர­சியல் ரீதியில் நடை­மு­றை­யினை அனு­ச­ரிக்­காது யதார்த்­தத்­துக்குப் புறம்­பாகச் செயற்­பட முடி­யாது என்­ப­தே­யாகும். இதில் ரணி­லோடும் மைத்­தி­ரி­யோடும் மஹிந்­த­வோடும் பேசாமல் சம்­பந்­தனால் தனித்து எதுவும் செய்­ய­மு­டி­யாது என்­பதைப் புரிந்­து­கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கில் மக்­க­ளு­ணர்வு உயிர்த்­தி­ருக்­கவும் மக்­க­ளா­ணையைத் தக்­க­வைக்­கவும் சி.வி.விக்கினேஸ்வரன் இறுக்­க­மான நிலைப்­பாட்டை கையா­ளு­வ­தைப்போல் சம்­பந்­தனால் முடி­யாது.

சமஷ்டி கோரிக்­கை­யின்­போது தந்தை செல்வா கையாண்ட அணு­கு­முறை வேறு, வட்­டுக்­கோட்டைத் தீர்­மா­னத்­துக்குப் பின் அவர் கையாண்ட அணு­கு­முறை வேறு. தமிழ் ஆயுதப் போரா­ளிகள் வேறு அணு­கு­மு­றையைக் கையாண்டனர். அந்த வகையில் தற்­போ­தைய அர­சியல் சூழலில் ஒரேவித அணு­கு­மு­றையை கையாள முடி­யாது. வடக்கு, கிழக்கில் இறுக்­க­மான நிலையைக் கையா­ளு­வ­து­போன்று மத்­திய அர­சோடு நடந்து கொள்ள முடி­யாது.

ஆக சம்­பந்­தனும் விக்கி­னேஸ்­வ­ரனும் தத்­த­மது பங்­க­ளிப்­பு­களை முறைப்­ப­டிதான் செய்­கி­றார்கள். இதி­லுள்ள யதார்த்­தத்தை புரிந்­து­கொள்­வதில் காணப்­படும் குறை­பா­டுகள் முக்­கிய பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. இரு­வரும் ஒரு­வரில் ஒருவர் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். ஒரு­வரை மற்­றவர் பல­வீ­னப்­ப­டுத்­தினால் இரு­வ­ருமே பல­வீ­னப்­பட்டு விடு­வார்கள். அந்த நிலை ஏற்­பட இட­ம­ளிக்­கக்­கூ­டாது. எப்­ப­டியும் புரிந்து செயற்­பட வேண்டும்.

ஆக, வடக்கு, கிழக்கு தமி­ழரால் தான் தனக்குத் தோல்வி ஏற்­பட்­டது என மஹிந்த வைராக்­கியம் கொண்­டி­ருந்த சூழ­லில்தான் எதிர்க்­கட்சித் தலை­மை­யையும் சம்­பந்தன் பெற்­றி­ருந்தார். தனது கட்­சியின் செய­லா­ளரைத் தந்­தி­ர­மாக தன்­னோடு போட்­டி­யிடச் செய்­து­விட்டுத் தன்னைத் தோற்­க­வைத்த ரணில், தன்னை தோற்­க­டித்த மைத்­திரி, அனுப்­பி­ய­தாக கூறி தனக்கு விரோ­த­மாக வாக்­க­ளித்துத் தனது தோல்­விக்குக் கார­ண­மா­கிய சம்­பந்­தனை அனுப்­பி­யது சாத­க­மான சூழ்­நிலை அல்ல என மஹிந்த கரு­தி­யி­ருக்­க­வேண்டும். இது தனக்­கி­ருக்கும் சிங்­கள வாக்கு வங்­கியைக் குறைக்கச் செய்யும் தந்­திரம் எனவும் அவர் கரு­தி­யி­ருக்­கலாம். மைத்­தி­ரியும் ரணிலும் தமது பொறுப்­பி­லி­ருந்து நழு­வவா இவ்­விதம் செய்­தார்கள்? என யாரும் கேட்க இடம்­பா­டுண்டு. மஹிந்த அர­சி­யலில் மீண்­டெழ எம்.பி.யாகி பிர­த­ம­ராக விரும்பி அது கைகூ­டா­த­போது எதிர்க்­கட்சித் தலை­வ­ராக விரும்­பினார். இந்­நி­லையில் சம்­பந்தன் அப்­ப­த­வியை ஏற்­றுக்­கொண்­டதும் மஹிந்­த­வுக்கு எப்­படி இருந்­தி­ருக்கும். அந்த வகையில் ரணிலும் மைத்­தி­ரியும் சம்­பந்­தனை மஹிந்­த­விடம் அனுப்­பி­யது ஒரு சாட்­டுக்­கா­க­வே­யாகும். சம்­பந்தன் வகிக்கும் எதிர்க்­கட்­சித்­த­லைமை ஒரு மாயத்­தோற்­ற­மா­கவே எனக்­குப்­ப­டு­கி­றது.

இதனால் அரசின் முழு அனு­ச­ர­ணையும் தனக்கு இருப்­ப­தாக சம்­பந்தன் கரு­து­கையில், இவர் அர­சுடன் சேர்ந்து இயங்கி நமது கொள்­கையை விட்­டு­விட்டார் என வடக்கு, கிழக்கு மக்கள் நினைக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. மறு­புறம் இவர் எதிர்க்­கட்சித் தலை­மையைக் கைவிட்­டு­விட்டால் பேரி­ன­வாத ஆளுமை மேலும் வலுத்­து­விடும் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. இப்­போது இருக்கும் நிலையும் அதற்கு விதி­வி­லக்­கல்ல என்­பதும் உண்­மை­யாகும்.

சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­மையைக் கைவிட்­டு­விட்டு ஓர் அமைச்­ச­ராக ஆக வேண்டும் என அண்­மையில் அமைச்சர் மனோ­க­ணேசன் கூறி­யி­ருந்தார். அதற்­கா­கவா வடக்கு, கிழக்கு மக்கள் சம்­பந்­த­னுக்கு மக்­க­ளாணை வழங்­கி­னார்கள். 1965 ஆம் ஆண்டு டட்லி –செல்வா ஒப்­பந்­தத்­துக்குப் பின் தனது அரசில் ஓர் அமைச்­ச­ராக ஆகும்­படி டட்லி சேனா­நா­யக்க, தந்தை செல்­வாவை அழைத்தார். எனினும் அவர் அதை ஏற்­காது முரு­கேசு திருச்­செல்­வத்­தையே உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக வைத்தார்.

பின்னர் திருக்­கோ­ணேஸ்­வரர் ஆலய விட­யத்தில் முரண்­பாடு ஏற்­பட்­டதும் முரு­கேசு திருச்­செல்வம் அமைச்சுப் பத­வியை தந்தை செல்வா கேட்டுக் கொண்­ட­தற்­கி­ணங்க இரா­ஜி­னாமா செய்தார். ஒரு கொள்கைப் போராளி அது பாதிக்­கலாம் எனக் கருதும் எந்த ஒன்­றிலும் நேரடிப் பங்கை வகிக்­கக்­கூ­டாது என்­ப­தற்கு இது ஒரு சிறந்த உதா­ர­ண­மாகும். தானாக எதிர்­பார்க்­காது தலை­மையின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே முரு­கேசு திருச்­செல்வம் அமைச்சுப் பத­வியை ஏற்­றி­ருந்தார். பின்னர் தலை­மையின் ஆணையை ஏற்று உடனே இரா­ஜி­னாமா செய்­து­விட்டார் எப்­படி முன்­மா­திரி?

தமிழர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக ஆகும் பட்­சத்தில் ஆட்சித் தலைமை சிங்­களப் பேரி­ன­வாத வசப்­படும் நிலை ஏற்­ப­டு­வது இன்­றைய இன­வாத அர­சி­யலில் தவிர்க்க முடி­யா­த­தா­கின்­றது. எதிர்க்­கட்சித் தலை­மையை மட்­டு­மல்ல ஆட்­சித்­த­லை­மையை வகிக்­க­வும்­கூட சிறு­பான்­மை­க­ளுக்கு உரி­மை­யுண்டு. அது அறவே இனப் பாகு­பா­டற்ற கால­கட்­டத்­தி­லேயே சாத்­தி­யப்­படும் என்­பதை நாம் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

பிர­தமர் முழு நாட்­டையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வது போல் எதிர்க்­கட்சித் தலை­வரும் செய­லாற்­ற­வேண்­டுமாம். சம்­பந்தன் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களைப் பற்றி மட்­டுமே பேசு­கிறோம். அரசு மட்டும் என்ன? பெரும்­பான்மை சிங்­கள மக்­களை மட்டும் பற்­றித்­தானே அதி­க­மாகப் பேசு­கி­றது எனும் கேள்­வியில் நியாயம் இல்­லா­ம­லில்லை.

எனினும் பாரா­ளு­மன்­றத்தில் பெரு­ம­ளவு ஆச­னங்­களைப் பெற்­றி­ருக்கும் தரப்­புக்கு எதிர்க்­கட்சித் தலை­மையை வழங்­காது குறைந்த ஆச­னங்­களைக் கொண்ட வடக்கு, கிழக்கை மட்­டுமே மைய­மாகக் கொண்ட தமிழ் தரப்­புக்கு எதிர்க்­கட்சித் தலை­மையை வழங்­கி­யி­ருப்­பது இனப்­பி­ரச்­சி­னையை மேலும் கூராக்­கவே வழி­செய்­தி­ருக்­கி­றது. சம்­பந்­தனை எதிர்த்து மைத்­திரி தரப்பும், ரணில் தரப்பும், மஹிந்த தரப்பும் ஒன்­று­பட வைத்­தி­ருக்­கின்­றது. விக்­னேஸ்­வ­ரனின் இறுக்­க­மான நிலைப்­பாட்டால் சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் தனி­மைப்­படும் நிலையே ஏற்­பட்­டி­ருக்­கி­றது எனலாம்.

எனினும் மனோ ­க­ணேசன் கூறி­யுள்­ள­படி சம்­பந்தன் அமைச்­ச­ரா­கி­விட்டால் உட­ன­டி­யா­கவே வடக்கு, கிழக்கின் தனித்­துவ தமிழ் தலை­மைத்­துவம் விக்­னேஸ்­வ­ரனின் வச­மா­கி­விடும். காரணம் சம்­பந்தன் அமைச்சுப் பத­வியை ஏற்­றுக்­கொண்டால் அர­சுக்குக் கட்­டுப்­பட்­ட­வ­ராக ஆகி­வி­டு­வ­தோடு முழு நாட்­டுக்கும் சேவை செய்ய வேண்­டி­ய­வ­ரா­கி­வி­டுவார். வடக்கு, கிழக்கின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மையையும் அடிப்­படைக் கொள்­கை­யாகக் கொண்ட அவ­ருக்கு இது சாத்­தி­ய­மல்ல.

வடக்கு, கிழக்­குக்கு வெளியே வாழும் தமி­ழ­ருக்கு இந்த நிலைப்­பாடு இல்லை. காரணம் வடக்கு, கிழக்கு தமி­ழர்கள் உரிமை அர­சியல் பேசு­கையில் அவற்­றுக்கு வெளியே வாழும் தமி­ழர்கள் சலுகை அர­சியல் பேசு­கி­றார்கள். சிறிது காலத்­துக்­குமுன் நான் ஒரு கட்­டுரை எழு­தி­யி­ருந்தேன். சிறு­வ­யதில் நான் கற்ற குமா­ரோதய் எனும் சிங்­க­ளப்­பாடப் புத்­த­கத்தில் ஏழெட்டு பாலர் கதைகள் இருக்­கின்­றன. அவற்றில் சிங்­கள மன்­னர்கள் கதா­நா­ய­கர்­க­ளா­கவும் தமிழ் மன்­னர்கள் வில்­லன்­க­ளா­கவும் எடுத்­துக்­காட்­டப்­பட்டு தமி­ழர்­க­ளைப்­பற்றி தரம் தாழ்த்தி எழு­தப்­பட்­டி­ருந்­தது. இது பிஞ்சு நெஞ்சில் ஏற்­றிய விஷம் அல்­லவா?

அந்த கதைகள் அனைத்­தையும் விப­ர­மாகக் குறிப்­பிட்டு அமைச்சர் மனோ­ க­ணே­சனும் கல்வி இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்­ணனும் இதில் தலை­யிட்டு அக்­க­தை­களை அகற்­றி­விட்டு இன ஒற்­று­மைக்­கான கதை­களை அதில் இணைக்­க­வேண்டும் எனவும் குறிப்­பிட்­டி­ருந்தேன். அந்த கட்­டு­ரையை அவர்கள் பார்த்­தி­ருக்­க­மாட்­டார்கள் போலும் பார்த்­தா­லும்­கூட அவற்றை அகற்றும் அள­வுக்கு இவர்­க­ளது அமைச்­சு­களில் இவர்­க­ளுக்கு முழு­மை­யான அந்­தஸ்து உண்டா என்­பதே கேள்­வி­யாகும்.

எனவே மனோ­ க­ணேசன் அமைக்கும் சலுகை அர­சி­ய­லுக்கு சம்­பந்தன் உட்­பட்டு விடக்­கூ­டாது. 1947 ஆம் ஆண்டு தந்தை செல்வா டி.எஸ்.சேனா­நா­யக்­கவின் அரசில் அமைச்­ச­ராக இருந்த ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்தின் தமிழ் காங்­கிரஸ் கட்­சி­யில்தான் இருந்தார். கிழக்கில் திட்­ட­மிட்ட சிங்­க­ளக்­கு­டி­யேற்றம் நிகழ்த்­தப்­பட்­ட­தாலும் மலை­யகத் தோட்ட தமி­ழர்­களின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­ட­தாலும் அவற்றை எதிர்க்­காத ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்தை விட்டும் பிரிந்து தமி­ழ­ரசுக் கட்­சியை ஆரம்­பித்தார். 1976 ஆம் ஆண்டு ஜி.ஜி.பொன்­னம்­ப­லமே தந்தை செல்­வாவை சரி­கண்டு வட்­டுக்­கோட்டை மகா­நாட்டில் கலந்­து­கொண்டு வடக்கு, கிழக்­குக்­கான சுய­நிர்­ண­யத்­தையும் தனி இறை­மை­யையும் வழி­மொ­ழிந்தார். முதலில் அதில் மலை­யகத் தலைவர் செள­மி­ய­மூர்த்தி தொண்­டமான் கலந்து கொண்­ட­போதும் பின்னர் அதற்குப் பங்­க­ளிப்­பதை அவர் தவிர்த்­துக்­கொண்டார். காரணம் வடக்கு, கிழக்கு தமிழ் தரப்­பி­னரின் நிலைப்­பாடு வேறு, மலை­யகத் தமி­ழரின் நிலைப்­பாடு வேறு என்­ப­தே­யாகும்.

செள­மி­ய­மூர்த்தி தொண்­டமான் ஒதுங்­கிக்­கொண்­டதைப் பற்றி தந்தை செல்­வாவும் குறை­கா­ண­வில்லை. இந்த உண்­மையை அமைச்சர் மனோ­ க­ணேசன் புரிந்­து­கொள்ள வேண்டும். இவர் அரசில் ஓர் அமைச்­ச­ராக மட்­டும்தான் இருக்­கிறார். கருணா அம்மான் ஆளும் கட்­சியின் உப தலை­வ­ரா­கவே இருந்­தாரே எதையும் சாதிக்க முடிந்­ததா? வெறும் அமைச்சுப் பத­விதான் வடக்கு, கிழக்கு தமிழ் தரப்­பி­னரின் ஒரே இலக்கு என மனோ­ க­ணேசன் எண்­ணு­வா­ரானால் இவர் சிங்­களப் பேரி­ன­வா­தத்தை தாஜா செய்­த­வ­ரா­கவே ஆகி­வி­டு­கிறார். முதலில் இவ்­வாறு தாஜா செய்­து­விட்டு பின்பு சிங்­களப் பேரி­ன­வா­தத்தால் கைவி­டப்­பட்ட சேர்.பொன் அரு­ணாச்­சலம் தனது சகோ­தரர் சேர்.பொன் இரா­ம­நா­த­னிடம் புலம்­பிய கதை பல­ருக்குத் தெரி­யாது. இலங்­கைக்கு சுதந்­திரம் பெற முதலில் முன் நின்­ற­வர்கள் சிங்­க­ள­வர்­க­ளல்ல. சேர்.பொன்.அரு­ணாச்­சலம், சேர்.பொன்.இரா­ம­நாதன் எனும் தமிழ்த் தலை­வர்­க­ளே­யா­வார்கள்.

அதன்­படி 1918 ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்­கி­ரஸை சேர்.பொன்.அரு­ணாச்­சலம் உரு­வாக்கிப் பின்னர் அதன் தலை­வ­ராக ஆகிக்­கொண்டார். தனது சகோ­தரர் சேர்.பொன்.இரா­ம­நாதன் விசாக தினத்தை விடு­முறை நாளாக்க வைத்­ததற்­கா­கவும் 1914 ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் அமுல்­ப­டுத்­திய அவ­சர காலச்­சட்­டத்தை அகற்ற வைத்­த­தற்­கா­கவும் சிங்­கள மக்­க­ளிடம் தன் மீதுள்ள இமேஜ் நீடித்­தி­ருக்கும் என்றே அவர் இறு­மாந்­தி­ருந்தார். எனினும் சேர்.பொன்.இரா­ம­நா­தனை வைத்து சிங்­க­ளத்­த­லை­வர்கள் தேர் இழுத்­த­தையும் மறந்­து­விட்டு சேர்.பாரன் ஜய­தி­லக்­கவை இலங்கை தேசிய காங்­கி­ரஸின் தலை­வ­ராக ஆக்­கிக்­கொண்­டார்கள். இது பற்­றியே சேர்.பொன்.அரு­ணாச்­சலம், சேர்.பொன்.இரா­ம­நா­த­னிடம் முறை­யிட்­டி­ருந்தார். அதன் பிறகே இரு­வரும் சிங்­களப் பேரி­ன­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தமி­ழரை மீட்க முயன்­றார்கள். எனினும் காலம் கடந்த ஞானத்தால் பயன் கிட்­ட­வில்லை.

தனது நூல் வெளி­யீட்­டுக்­கான ஏற்­பு­ரையில் விக்கினேஸ்வரன் பின்­வ­ரு­மாறு கூறி­யி­ருந்தார். எமது விசேட அதி­தி­யான சம்­பந்தன் காலம் தாழ்த்தி எம்­முடன் இணைய சம்­ம­தித்­தி­ருந்­தாலும் அவ­ரது வருகை எமக்கு பெரு­மை­யையும் மகிழ்­வையும் தந்­தி­ருக்­கி­றது. என்னை முத­ல­மைச்சர் பத­விக்கு கொண்­டு­வந்­தவர் இவ­ரே­யாவார். இது­வரை நான் இவ­ருக்கும் இவர் தலைமை வகிக்கும் கட்­சிக்கும் விசு­வா­ச­மா­கவே இருந்­துள்ளேன்.

நான் உண்­மை­களை உள்­ள­படி வெளிக்­கொண்டு வரா­தி­ருக்க முடி­யா­தவன். அத­னால்தான் எனக்கும் கட்­சிக்­கு­மி­டையில் விரி­சல்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற நிலை­யிலும் எனது நிலை­யைப்­பு­ரிந்து கொண்டு தனது நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து இவர் இறங்கி வந்­தி­ருக்­கிறார். எனினும் சிலர் என்னைக் கட்­சியை விட்டும் வெளி­யேற்றக் குறி­வைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இவ­ரது வரு­கை­யாலோ என்­னவோ கூட்­ட­ணியில் பலர் இக்­கூட்­டத்­துக்கு வந்­தி­ருக்­கின்­றனர். ஆக சம்­பந்­த­னுக்கும் பங்கு பற்ற வந்­த­வர்­க­ளுக்கும் எனது மன­மார்ந்த நன்றி உரித்­தா­கட்டும் என்­றெல்லாம் விக்கினேஸ்வரன் கூறிக்­கொண்டார். மேலும் அவர் கூறு­கையில்; “எல்லா கட்­சி­க­ளி­னதும் ஒற்­று­மை­யையே அர­சியல் ரீதி­யாக தமிழ் மக்கள் விரும்­பு­கி­றார்கள். தம்பி பிர­பா­கரன் தனது இயக்­கத்­துக்கு எதி­ராக நடந்­து­கொண்ட பல கட்­சி­களை ஒன்­றி­ணைத்து ஓர் அர­சியல் கட்­சியை உரு­வாக்­கினார். அப்­போது கூட்­ட­மைப்­புக்குள் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்த சில கட்­சிகள் இப்­போது வெளியே நிற்­கின்­றன. இதற்குக் காரணம் தனிப்­பட்­ட­வை­யா­கவோ கொள்கை ரீதி­யா­ன­தா­கவோ இருக்­கலாம்.

சிலர் என்னைத் தீவி­ரப்­போக்­குள்­ளவர் என்­கி­றார்கள். எமது கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களைப் பார்க்­கு­மாறு நான் அவர்­க­ளிடம் கேட்டுக் கொள்­கிறேன். மக்­க­ளி­ட­மி­ருந்து வாக்­கு­களைப் பெறு­வ­தாயின் அவ்­வாறு தான் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் எழு­த­வேண்டும். எனினும் அர­சியல் செய்ய வேண்­டு­மாயின் அவற்றைப் புறம்­தள்­ளி­வி­ட­ வேண்டும் எனச் ­சிலர் கூறு­கி­றார்கள். இத்­த­கை­யோரே என்னைத் தீவி­ரப்­போக்­குள்­ளவர் என்­கி­றார்கள். இத்­த­கை­யோரை நான் கண்­டிக்­கிறேன்” என்­றெல்லாம் விக்கினேஸ்வரன் குறிப்­பிட்டார்.

சம்­பந்தன் காலம் தாழ்த்தி இவ­ரோடு இணைய சம்­ம­தித்­தாராம். அப்­ப­டி­யானால் அவர் வேறு? இவர் வேறா? தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒத்­தொ­ரு­மித்த ஆத­ரவும் வடக்கு, கிழக்கு தமி­ழர்­களின் ஒட்­டு­மொத்த வாக்­கு­களும் இல்­லா­விட்டால் சம்­பந்­தனால் மட்டும் விக்கி­னேஸ்­வரனை முத­ல­மைச்­ச­ராக்­கி­யி­ருக்க முடி­யுமா? சம்­பந்தன் தலைமை வகிக்கும் கட்­சிக்கும் என விக்கினேஸ்வரன் கூறு­கி­றாரே. அப்­ப­டி­யானால் இவர் அந்த கட்­சியில் இப்­போது இல்­லையா? இவர் உண்­மை­களை உள்­ள­படி கூறு­வ­தால்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவரைப் பகைக்­கின்­றதாம் இவரை சரி கண்­டி­ருப்­ப­தா­லேயே சம்­பந்தன் இவ­ருக்­­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வில்­லையாம். இல்லை பிரிவு ஏற்­பட்டால் எல்­லோ­ருக்­குமே அழிவு என்­ப­தற்­கா­கவே சம்­பந்தன் அதில் கலந்து கொண்­டி­ருக்­கிறார்.

சிலர் என்னைக் கட்­சியை விட்டும் விலக்கக் குறி வைத்­தி­ருக்­கி­றார்கள் எனவும் சம்­பந்­தனின் வரு­கையால் பலர் வந்­தி­ருக்­கி­றார்கள் எனவும் விக்கினேஸ்வரன் கூறி­யுள்ளார். இவ­ருக்கு இல்­லாத கட்­சி­யி­லி­ருந்து இவரை எப்­படி விலக்­கு­வது? கூட்­ட­ணியில் பலர் கூட்­டத்­துக்கு வந்­தி­ருப்­ப­தா­கவும் கூறு­கிறார். இதி­லேயே இவர் சுய­மாக வில­கி­யி­ருக்­கி­றாரே.

அந்த கூட்­டத்தில் சம்­பந்­தனும் விக்­கினேஸ்­வ­ரனும் ஒரு விட­யத்தைக் கூறு­வதில் மட்டும் ஒன்­று­பட்­டி­ருக்­கின்­றார்கள். எனது சேவை தேவையா? இல்­லையா? என்­பதை மக்­களே தீர்­மா­னிக்­கட்டும் என சம்­பந்தன் குறிப்பிடுகையில் விக்கினேஸ்வரனும் அவ்வாறே குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். எனினும் நாம் பிரி­வ­டைந்தால் அழிவே மிஞ்சும் என மேல­தி­க­மா­கவும் சம்­பந்தன் குறிப்­பிட்­டுள்ளார். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இருப்­பவை கொள்­கை­களே. அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தெனில் சில வியூகங்கள் தேவை என்பதை விக்கினேஸ்வரன் உணராவிட்டால் தமிழரின் தனித்துவ வாக்குகள் சிதறி பேரின ஆதிக்கமே வடக்கு, கிழக்கில் ஓங்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-03#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.