Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழிற்நுட்ப துறையில் வவுனியா இளைஞன் கின்னஸ் சாதனை

Featured Replies

தொழிற்நுட்ப துறையில் வவுனியா இளைஞன் கின்னஸ் சாதனை

 

 
 

வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மல்ரி பிளக் (நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

IMG_1375_1_.JPG

வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியிலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.

அந்தவகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

க.கணேஸ்வரன் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபர், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கின்னஸ் சாதனை முயற்சியை பதிவு செய்திருந்தார் என்பதுடன் நில அளவை திணைக்களத்தை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கின்னஸ் சாதனை அமைப்பினால் உத்தியோகபூர்வமாக க.கணேஸ்வரனின் உலகசாதனை அறிவிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தொழில்நுட்ப துறையில் தனிநபர் ஒருவர் செய்து கொண்ட முதலாவது சாதனையாகவும், வவுனியாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட முதலாவது கிண்னஸ் சாதனையாகவும் இது பதிவாகியுள்ளது.

http://www.virakesari.lk/article/36033

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். மேலும் வெல்ல.. தொடர்ந்து முயற்சியுங்கள். ?

  • தொடங்கியவர்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வவுனியா இளைஞர்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வவுனியா இளைஞர்

 

Colombo (News 1st)  வவுனியாவைச் சேர்ந்த இளைஞரொருவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞரின் சாதனைக்கான கின்னஸ் சான்றிதழ் நேற்று (03) கிடைக்கப்பெற்றுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் சிறுவயது முதல் தொழில்நுட்ப விடயங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.

சாதனை ஏட்டில் இடம்பெறக் காத்திருந்த இவருக்கு அதற்கான களம் அமைந்திருக்கவில்லை.

தடைகளைத் தாண்டிய இவரின் உலக சாதனை முயற்சி கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பரிசோதிக்கப்பட்டது.

கின்னஸ் சாதனை முயற்சியான இவரது கண்டுபிடிப்பு வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான ஆவணங்கள் கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, இவரின் முயற்சி அங்கீகரிக்கப்பட்டது.

உலக கின்னஸ் சாதனைக்கான இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் இவருக்கு நேற்று கிடைக்கப்பெற்றது.

தனது சாதனை தொடர்பில் கனகேஸ்வரன் கணேஸ்வரன் தெரிவித்ததாவது,

உலகத்தில் உள்ள பவர் ஸ்ட்ரிப்-களில் அதிக சொக்கட் அவுட்லெட்ஸ் உள்ள ஒரேயொரு பவர் ஸ்ட்ரிப் இதுதான். 42 சொக்கட்களிலும் 42 வகையான அப்லயன்ஸஸினை இணைக்கலாம். 13 அம்பியருக்கு மேற்படாதவாறு, சொக்கட்ஸூக்கு அப்லயன்ஸ் இணைக்கலாம். அதிலும் 3.2 கிலோ வாட் பெறுமானம் உள்ள அப்லயன்ஸ் வரைக்கும் இணைக்கலாம். 42 சொக்கட்ஸிலும் 42 ஃபோன்களை இணைக்கலாம்.

ஏவுகணை தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

29 வயதான கணேஸ்வரன், க.பொ.த உயர்தரம் வரை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.

பின்னர், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் துறைக்குத் தெரிவான இவர், கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்.

இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவினால் 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் 14 கண்டுபிடிப்புகளுடன் இவர் பங்குபற்றினார்.

அவற்றில் இரண்டிற்கு தங்கப்பதக்கங்களும் மற்றொன்றிற்கு இரண்டாம் இடமும் கிடைத்ததாக கணேஸ்வரன் குறிப்பிட்டார்.

என்னுடைய அப்பா விவசாயி. அம்மா ஆசிரியையாக இருந்தார். போர்ச்சூழல் காலகட்டத்தில் கொழும்பிற்கு செல்ல இயலாது. வேலை செய்யும்போது இருந்த வருமானம் இப்போது இல்லை. என்றாலும், திருப்தி அதிகமாக இருக்கிறது. காசை மட்டுமே நாங்கள் யோசித்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க இயலாது. 7 வகையான ரொக்கெட்களை ஏவி முயற்சி செய்திருக்கிறேன். அவற்றில் இரண்டு வெற்றியளித்திருக்கின்றன. தற்போது இலங்கையில் முதலாவது ‘லிகியூட் பியூல் ரெக்கெட் எஞ்சின்’ என்ற வர்க்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

புதுவித முயற்சிகள் வெற்றியடைந்து, அவற்றால் நாட்டிற்கு நன்மைகிடைக்க வேண்டுமென்பதே கணேஸ்வரனின் எதிர்பார்ப்பு.

 

 

https://www.newsfirst.lk/tamil/2018/07/கின்னஸ்-உலக-சாதனை-புத்தக/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கணேஸ்வரன்.மேன்மேலும் சாதனைகள் படைக்க வேண்டுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.