Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒரு போதும் அச்சுறுத்தல் இல்லை: சு.ப. தமிழ்ச்செல்வன்

[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 09:42 ஈழம்] [புதினம் நிருபர்]

எமது வான்படையில் இந்தியாவுக்கு ஒரு போதும்அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப. தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்:

ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்கு, ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், "ஜனசக்தியிடம்" தெரிவித்தார்.

"புலிகளிடம் விமானப் படை இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்று இந்தியாவில் உள்ள சில ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இதே கவலை தங்களுக்கும் இருப்பதாக மத்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலரும் அரசியல் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்தார்கள்.

இது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பு என்ன கருதுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை 'ஜனசக்தி" தொடர்பு கொண்டது.

மின் அஞ்சல் ஊடாக சு.ப. தமிழ்ச்செல்வன், "ஜனசக்தி"க்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கேள்வி: விடுதலைப் புலிகள் சமீபத்தில் முதன்முறையாக விமானத்தாக்குதல் நடாத்தி இலங்கைப் படைகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் ஈழத்தமிழருக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன?

பதில்: சிறிலங்கா அரசும் சிங்களப் பேரினவாதமும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டமையால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் தீவிரமடைந்தது. இப்படிப் படிப்படியாக எமது ஆயுதப்போராட்டம் வளர்ச்சியடைந்து இன்று ஒரு நடைமுறை அரசை இயக்குகின்ற அளவுக்;கு வலுப்பெற்றிருக்கின்றது. பெருமளவு நிலப் பிரதேசத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற அளவுக்கும் எமது மரபுவழிக் கட்டுமானங்களைக் கட்டியெழுப்பி எமது மக்களைப் பாதுகாப்பதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுப்பதற்கும் தக்கவாறான பாரியளவு வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.

இந்த வகையில் எமது படைக்கட்டுமானங்களினுடைய வளர்ச்சியும் அதன் தொடர்ச்சியுமே இன்று விமானப் படையின் தோற்றமாக மாறியிருக்கின்றது. எமது விமானப்படை இதுவரை பொறுமைகாத்தது. இப்பொழுது சிறிலங்கா விமானப் படை எமது மண்மீது தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் அதன் மீது பதில் நடவடிக்கையொன்றை நடாத்தி அதனைச் செயலிழக்கச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. அதனால் தான் எமது விமானப்படையைப் பயன்படுத்தி இத்தாக்குதலை மேற்கொண்டிருந்தோம். எம்மைப் பொறுத்தவரையில் எமது சுதந்திரப் போராட்டத்தில் இதுவொரு மைல்கல்லாகவே இருக்குமென நான் கருதுகின்றேன். இது ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய வலிமையை அதிகரித்திருக்கிறது. இது விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு உந்துசக்தியாக அமையுமென்றே எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: விமானப்படைத் தாக்குதலுக்கு இது சரியான தருணம் என நினைக்கின்றீர்களா?

பதில்: சிறிலங்கா விமானப்படையினர் அண்மைக்காலத்தில் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக குண்டுகளை வீசி பல நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டு, பொறுமைகாத்து இருப்பதென்பது எமது மக்களை ஒரு மிகப்பெரும் பேரழிவுக்குள் இட்டுச்செல்லும் என்றே நான் நினைக்கின்றேன். இந் நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கும் எதிர்காலத்தில் இந்த இனவாத அரசின் விமானப் படையைச் செயலிழக்கச் செய்வதற்கும் நாம் எமது அனைத்து உத்திகளையும் கையாளுவோம். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும்மென்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: புலிகளின் படையிலிருப்பில் செக் விமானங்கள், ஐந்து விமானங்களுக்கு மேல் அவர்களிடம் விமானங்கள் இருக்க வாய்ப்பில்லை, இதனை ஒரு படையென்றெல்லாம் கூறமுடியாது என்பன போன்ற இலங்கை அரசின் கருத்துக்களுக்கு தங்கள் பதில் என்ன?

பதில்: விழுந்தாலும் தங்களுடைய மீசையில் மண்படவில்லை என்ற மாதிரியாகவே சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்கள் அமைகின்றன. நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைகளை வெளிப்படுத்தி வருவது சிறிலங்கா அரசின் வழமையாகும். எமது தாக்குதல்களும் அவற்றின் அழிவுகளுக்குப் பின்னாலுமே அவர்கள் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்கின்ற சூழல் உருவாகும்.இதற்கான பதில்களை எமது நடவடிக்கைகள் ஊடாக வெளிப்படுத்தவே நாம் விரும்புகின்றோம்.

கேள்வி: இலங்கைப் படையினர் இந்த விமானப்படைத் தாக்குதலால் கொந்தளித்திருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் மீது இது திருப்பிவிடப்படலாம். இந்நிலையில் சாதாரண சிங்கள மக்களைக் காப்பாற்ற இந்தத் தாக்குதல் உதவுமா?

பதில்: சிங்கள விமானப்படையினர் எமது மண்ணில் பொதுமக்களினுடைய இலக்குகளைத் தாக்கி அவர்களைக் கொல்வதையே வழமையாக்கிக் கொண்டுள்ளனர். தற்போது தமிழ் மக்களினுடைய விமானப் படை வளர்ச்சியடைந்து அவர்களுடைய பாதுகாப்பு மையத்திற்குள்ளேயே புகுந்து வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு திரும்பிவந்திருக்கிறது. இந் நிகழ்வு சிங்கள தேசத்தவருக்கும் இனவாதத் தலைவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றேன். எமது இலக்கு சாதாரண பொதுமக்கள் அல்ல. சிறிலங்கா இரணுவத்தின் இயங்கு தளங்களும் பேரினவாத செயற்பாட்டு மையங்களுமே எமது இலக்குகளாக இருக்கும். சாதாரண சிங்கள மக்களை நாம் எப்போதுமே இலக்கு வைக்கப்போவதில்லை.

கேள்வி: 2005ம் ஆண்டு கிளிநொச்சிக்கு வந்த இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அப்போதே தங்களிடம் விமானத்தளம் இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது அது மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது நீங்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றீர்களே?

பதில்: ஒருபோதும் நாம் எமது விமானப் படைத்தளம், விமானங்கள் உள்ளதென்பதை மறுக்கவில்லை. எப்பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம். 1998 ம் ஆண்டிலிருந்தே எமது விமானப் படையின் வளர்ச்சி ஆரம்பித்து விட்டது. இன்று ஒரு நல்ல நிலையில் அது இருக்கின்றது.

கேள்வி: தங்கள் விமானப்படையால் இந்தியப் பாதுகாப்பிற்கு ஆபத்து வரலாம். தென்னிந்தியாவிற்கு ஆபத்து வரலாம் என்றெல்லாம் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இக்கருத்துக்கள் மிகவும் தவறானவை. எமது படைக் கட்டுமானங்கள் எப்பொழுதும் எமது மக்களைப் பாதுகாப்பதற்கும் எமது தாயகப் பிரதேசத்தை விடுவிப்பதற்குமாகவே கட்டியெழுப்பப்பட்டவையாகும். ஆகவே எமது மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு எதிராகவே அவை செயற்படுமேயன்றி ஒருபோதும் அவை இந்தியாவுக்கோ ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்களினுடைய சுதந்திரம் என்பதும் அவர்களின் விடுதலை என்பதும் இந்திய தேசத்திற்கும் மிகுந்த நன்மையையும் நல்லுறவையுமே ஏற்படுத்தும். ஒருபோதும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எதிரான ஒரு போக்கை ஈழ விடுதலைப் போராட்டமோ தமிழீழ விடுதலைப் புலிகளோ கடைப்பிடிக்கமாட்டார்கள். தமிழர்களுடைய படைபலம் பெருகுவதையிட்டு எந்த அரசுமே கவலைகொள்ளத் தேவையில்லை. பதிலாக எமது படைபலம் பெருக்கி அதனூடாக சுதந்திரமடைந்தால் அதுவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பூரண அமைதியைக் கொண்டுவரும் என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: அதிகாரபூர்வ போர்நிறுத்தம் என்ற நிலையில் விமானப்படைத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கின்றதா? அல்லது சமரசப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு நெருக்கடி உத்தியென இதை எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: போர் நிறுத்தம் அமுலில் இருக்கின்ற போதே சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான விமானத் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்களினுடைய பெறுமதியான உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்ட போது நாம் பலமுறை இவற்றை நிறுத்தக் கோரினோம். ஆயினும் சிறிலங்கா அரசாங்கம் அதனை மதிக்காமல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு யுத்தத்தை தொடர்ந்து வரும் சூழலில் நாம் இனியும் பொறுத்துக் கொண்டிருக்கமுடியாத நிலையில் தான் இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். பேச்சுவார்த்தை என்பது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி ஆக்கிரமிப்புக்களை அகற்றி நேர்மையான வகையில் சிறிலங்கா அரசாங்கம் அணுகுகின்ற போதே சிந்திக்கக்கூடிய விடயமே தவிர இத்தகைய இராணுவ முனைப்பைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற சூழலில் அது சாத்தியமற்றதொன்றே.

கேள்வி: தோள்மீது வைத்துப்பயன்படுத்தக்கூடிய ஏவுகணையின் மூலம் கூட இலங்கை விமானங்களை வீழ்த்தமுடியும். சாதாரண தமிழ் மக்களை அதன்மூலம் காப்பாற்றமுடியும். ஆனால் மக்களைக் காப்பாற்றும் அந்த தடுப்பு நடவடிக்கையினை விடுத்து தற்போது தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளதற்கான நோக்கம் என்ன?

பதில்: சிறிலங்கா அரசாங்கத்தினுடைய விமானப் படை விளைவிக்கின்ற மனிதப் பேரவலங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அதனால் தான் அந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் படைத்தளக் கோட்டைக்குள் புகுந்து விமானப் படையின் தாளத்தில் வைத்தே அவற்றை அழித்திருப்பது எதிர்காலத்தில் அங்கிருந்து தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதென்பதைப் பலவீனப்படுத்தியிருக்கின்றத

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் ஒரு ஸ்திரமான கட்சியா? இதன் ஆதரவு நமக்கு கிடைத்தால் எதிர் காலத்தில் கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன? இப்போது இதன் வோட்டு பலம் என்ன? யாராவது விசயம் தெரிந்த பெரியவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி சிறு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் ஒரு ஸ்திரமான கட்சியா? இதன் ஆதரவு நமக்கு கிடைத்தால் எதிர் காலத்தில் கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன? இப்போது இதன் வோட்டு பலம் என்ன? யாராவது விசயம் தெரிந்த பெரியவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி சிறு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்!

கடவுள் மீது ஆணை எனக்கு தெரியாது :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் ஒரு ஸ்திரமான கட்சியா? இதன் ஆதரவு நமக்கு கிடைத்தால் எதிர் காலத்தில் கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன? இப்போது இதன் வோட்டு பலம் என்ன? யாராவது விசயம் தெரிந்த பெரியவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி சிறு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்!

இந்திய கம்யுனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் ஆதரவுடனே இந்தியாவில் மத்திய காங்கிரஸ் ஆட்சி அமைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் ஏற்படும் மாற்றங்களை உற்றுநோக்கும் போது ஒரு நல்ல ஆதரவு ஈழத்தமிழ் போரட்டத்திற்குப் பெருகி வருகிறது.

இது போன்ற பேட்டிகளையும், தொடர்புகளையும் புலிகள் இன்னும் முழு வீச்சில் தொடர்ந்து, தற்போது ஆரம்பித்திருக்கக் கூடிய ஆதரவுத் துளிகளை பெரும் சமுத்திரமாக மாற்ற வேண்டும்.

இடைவிடாத தொடர்ந்த தொடர்பு மூலம் இந்தச் செய்திகள் தமிழக மக்களைச் சேர வேண்டும். வை கோ, ராம்தாஸ், திருமாவளவன் போன்றோர் இன்னும் சிறிது முயன்றால், 1983 - 1992 இடைபட்ட காலத்தில் நிகழ்ந்த ஒரு வெளிப்படையான ஆதரவும் பெருகும்.

புலிகள் பற்றிய ஒரு மாயையை சாதாரண மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்

- கப்பல்பயணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"புலிகள் பற்றிய ஒரு மாயையை சாதாரண மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்"

மன்னிக்கவும். சிறு பிழை.

"புலிகள் பற்றிய சாதாரண தமிழக மக்களிடம் இருக்கும் மாயையை நீக்க முழு மூச்சாக பாடு பட வேண்டும்.

பெரும்பாலான தமிழக மக்களுக்கு , ஈழத்தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிகிறார்கள் என்ற உண்மை தெரியாது.

அது மட்டுமல்லாமல், புலத்தில் வாழும் ஈழத்தமிழர் , அவரவர் இடத்திலே வாழும் தமிழக தமிழருடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்

- கப்பல்பயணி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் ஒரு ஸ்திரமான கட்சியா? இதன் ஆதரவு நமக்கு கிடைத்தால் எதிர் காலத்தில் கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன? இப்போது இதன் வோட்டு பலம் என்ன? யாராவது விசயம் தெரிந்த பெரியவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி சிறு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்!

இந்தியாவின் இரண்டு முக்கிய மானிலங்களான கேரளாவிலும், மேற்க்கு வங்கத்திலும் ஆட்ச்சியில் இருந்த கட்சி... அதோடு இப்போதைய எதிர்கட்சி... இன்னும் பல மானிலங்களிலையும் பலமான கட்ச்சி...! தமிழகத்தில் முக்கிய தொழில் நகர் மாவட்டங்களில் பலமான கட்ச்சி ( திருச்சி, மதுரை , வடசென்னை, கோயம்பத்தூர், ) இண்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித் பர்ணாலா கம்யூனிச தலைவர்களில் ஒருவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளை.

ஆதரவு தந்தால் தான் அவர்களோடு கை கோர்க்க வேண்டும் என்ற சிந்தனையை அகற்றுங்கள். ஆதரவு தருகின்ற எல்லோரையும் உள்வாங்குவோம். அதில் என்ன குறைந்து போய்விட்டது? ஒவ்வொருவரையும் பற்றிப் பகுத்தறிகின்ற சக்தி மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்.

ஒருவன் பலம் பற்றிய அறிந்த பின்னர் தான், அவர்களின் ஆதரவை வரவேற்கின்ற அளவுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் அரசியல் அல்ல. அனைவரினதும் ஆதரவும் வேண்டிய ஒன்றாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.