Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு நிதி வழங்கியதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது

Featured Replies

மஹிந்த ராஜபக் ஷவுக்கு நிதி வழங்கியதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது

City-news-01-colorPage1Image0003-35ad5c3711d6c701bd3690400df1d26d4ac80472.jpg

 

(ரொபட் அன்டனி)

அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை வெளிப்படையானது- சீன தூதகரம் , சைனா ஹாபர் நிறுவனம் அறிவிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு சைனா ஹாபர் நிறுவனம் நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகம் ஒன்றினால் தெரிவிக் கப்பட்டுள்ளமை உண்மைக்குப் புறம்  பானதாகும்.    

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட பரஸ்பர உடன்படிக்கையின் பிரகாரமே அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. மிகவும் வெளிப்படையான முறையிலேயே இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டது என்று சீன அரசாங்கம் சைனா ஹாபர் நிறுவனமும் உத்தியோகப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளன.

கடன்பொறி என்ற விவகாரமானது மேலைத்தேய ஊடகங்களில் உருவாக்கப்பட்ட கதையாகும். இதன்மூலம் சீனா இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் முன்னெடுக்கும் இணைந்த வேலைத்திட்டங்களை குழப்ப முயற்சிக்கின்றனர். மேலைத்தேய நாடுகளை உலகில் உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ளும் பாரம்பரியத்தை முன்னெடுக்கும் நோக்கத்திலேயே இவ்வாறு செய்யப்படுகின்றது என்று சீனா அறிவித்துள்ளது. .

கொழும்பிலுள்ள சீனத்தூரகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தூதரகத்தின் பேச்சாளர் மற்றும் சைனா ஹாபர் நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோர் இந்த விடயத்தை குறிப்பிட்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

 இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளர் என்ற வகையில் யுத்தத்தின் பின்னரான மறுசீரமைப்புக்கும் தேசிய அபிவிருத்திக்கும் சீனா நிதி உதவி உள்ளிட்ட பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இலங்கையின் வெளிநாட்டுக்கடன்களுக்கு சீன கடன்கள் பிரதானமானவையல்ல.

இலங்கையின் 2017ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் மொத்த வெளிநாட்டு கடனாது 51.824பில்லியன் டொலர்களாகும். இதில் 10.6 வீதமானவையே சீனாவிற்கு செலுத்தவேண்டிய கடனாகும். அதாவது சீனாவிற்கான கடன் 5.5 பில்லியன் டொலர்களாகும்.

சீனா வழங்கியுள்ள இந்த கடனில் 61.5 வீதமானவை (3.38 பில்லியன் கடன்) சலுகைக் கடன்கள் சர்வதேச மட்டத்தில் மிகவும் குறைந்தளவு வட்டியில் இவை வழங்கப்பட்டுள்ளன. சீனாவின் வர்த்தகக்கடன்களும் இரண்டு தரப்புப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் சர்வதேச சந்தையின் விதிமுறைகளுக்கு அமையே இலங்கைக்கு வழங்கப்பட்டன.

 இலங்கையில் சீனா முன்னெடுக்கும் திட்டங்கள் இருதரப்பு ஆலோசனைகள், மற்றும் இருதரப்பு நன்மைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. துறைமுகம், வீதிகள், விமான நிலையங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர் திட்டங்கள் ஆகிய மக்களின் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட திட்டங்களையே சீனா முன்னெடுக்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்குமான அவசர தேவைகளாக இவை காணப்படுகின்றன. போதுமான சாத்தியவள ஆய்வுகளை முன்னெடுத்தே இவை மேற்கொள்ளப்படுகின்றன.

 இலங்கைக்கு போதுமான நிதி இன்மை, மற்றும் அனுபவம் உள்ள தொழில்நுட்பவியலாளர்களின் குறைபாடு உள்ளது. இதனால் இலங்கை சர்வதேச ஒத்துழைப்பை கோருகிறது. இருதரப்பு உறவை மதிக்கும் நாடு என்ற வகையில் சீனா அரசாங்கமானது நிதி உதவியை வழங்குகிறது. அதேபோன்று சீன நிறுவனங்கள் தமது திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துகிறது. குறிப்பாக தொழில் சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது. இலங்கையின் முழுமையான பொருளாதார சமூகப் பார்வையை புதுப்பித்துள்ளது. இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா உதவி வழங்கும். இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் சீனா முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டைதுறைமுகத் திட்டம் மற்றும் தொழில்பாடுகளை கைமாற்றியமை என்பன இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் இடம்பெற்றது. பல்வேறு வகையான வர்த்தக ரீதியான கலந்துரையாடல்களின் பின்னரே தீர்மானம் எடுக்கப்பட்டது. தற்போதைய நிலைமையில் அம்தோட்டை துறைமுகத்தின் தொழில்பாடுகள் இலங்கையும் சீனாவும் இணைந்த திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த துறைமுகத்தினால் பெறப்படும் இலாபம் இரண்டு தரப்பினராலும் பகிரப்படுகின்றது. துறைமுகத்தின் பாதுகாப்பானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் காணப்படுகின்றது.

இந்த கடன் உதவி மூலம் சீனா மறைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து நன்மை அடைவதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அந்தவகையில் கடன்பொறி என்ற விவகாரமானது மேலைத்தேய ஊடகங்களில் உருவாக்கப்பட்ட கதையாகும். இதன்மூலம் சீனா இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் முன்னெடுக்கும் இணைந்த வேலைத்திட்டங்களை குழப்ப முயற்சிக்கின்றனர். மேலைத்தேய நாடுகளை உலகில் உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ளும் பாரம்பரியத்தை முன்னெடுக்கும் நோக்கத்திலேயே இவ்வாறு செய்யப்படுகின்றது.

இலங்கைக்கு தேவையான உதவிகளை அபிவிருத்திக்கான நிதியை சீனா அரசியல் சுயலாபமற்ற முறையில் தொடர்ந்து வழங்கும். இலங்கை அரசாங்கத்துடனும் வர்த்தக சமூகத்துடனும் ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் இணைந்து செயற்பட சீனா விரும்புகிறது. தலையீடுகளை கலைந்து நம்பிக்கையை வலுவாக்கி இரண்டு நாடுகளும் நன்மை அடையும் வகையில் திட்டங்களை முன்னெடுப்பதே சீனாவின் நோக்கமாகும் என்றார்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மானித்த சைனா ஹாபர் நிறுவனத்தின் பிரதிநிதி இந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்;

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சைனா ஹாபர் நிறுவனம் நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகங்கம் ஒன்றினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை உண்மைக்கு புறம்பானதாகும். இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட பரஸ்பர உடன்படிக்கையின் பிரகாரமே அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. மிகவும் வெளிப்படையான முறையிலேயே இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

 சைனா ஹாபர் நிறுவனம் இலங்கையில் உள்ளக விவகாரங்களில் ஒருபோதும் தலையிடவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கை மக்களுக்காகவும் இலங்கைக்காகவும் நிர்மாணிக்கப்பட்டது. இலங்கையின் முதலீட்டு சார்பான அணுகுமுறையை நாங்கள் பாதுகாக்கின்றோம். இந்த சர்வதேச ஊடகத்தின் அறிக்கையானது விடயங்களை திரிபுபடுத்தியதாகவும் பொய்யான கருத்தை உருவாக்கியதாகவும் காணப்படுகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.