Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துறை­மு­கத்தை சீனா­விற்கு வழங்­கி­யமை மேற்­குல நாடு­க­ளுக்கு அவ­மானம் : அத­னா­லேயே பொய்க் குற்­றச்­சாட்­டுக்கள்– மஹிந்த ராஜ­பக்ஷ

Featured Replies

துறை­மு­கத்தை சீனா­விற்கு வழங்­கி­யமை மேற்­குல நாடு­க­ளுக்கு அவ­மானம் : அத­னா­லேயே பொய்க் குற்­றச்­சாட்­டுக்கள்– மஹிந்த ராஜ­பக்ஷ

City-news-01-colorPage1Image0009-c1e197912ef43ac03fd0a14cf49621f1f01da303.jpg

 

(நா.தினுஷா)

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விற்கு வழங்­கி­ய­மையால் மேற்­கு­லக நாடு­க­ளுக்கு ஏற்­பட்ட அவ­மானம் கார­ண­மா­கவே போலி­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­க­ப்ப­டு­கின்­றன என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஊடக பிரிவு நேற்று வியா­ழக்­கி­ழமை வெளி­யிட்ட விஷேட அறிக்­கை­யி­லேயே மெற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது ,

2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு சைனா ஆபர் நிறு­வனம் பெருந்­தொ­கை­யான நிதி வழங்­கி­ய­தா­கவும் அந்த நிதியில் டீ- சேர்ட் மற்றும் வாக்­கா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­காக பல்­வேறு பரிசு பொருட்­க­ளையும் கொள்­வ­னவு செய்­த­தாக நிவ்யோர்க் டைம் குற்றம் சுமத்­தி­யுள்­ளது. ஆனால் இந்த குற்­றச்­சாற்று 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி டெய்லி நியுஸ் பத்­தி­ரி­கையில் வெளி­வந்­தது.

இந்­நி­லையில் நியுயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையின் குற்­றச்­சாட்டு தொடர்பில் உண்மை தன்­மையை வெளிப்­ப­டுத்தும் வகையில் சண்டே ஒப்­சேவர் பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் குறித்து ஊடக சந்­திப்பில் கருத்­துக்கள் தெரி­வித்­தமை அச்­சு­றுத்தல் அல்ல. மாறாக நாட்டு மக்­க­ளுக்கு உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். குறித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் கடந்த சனிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற உறப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் பதி­ல­ளிப்­பினை நியுயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை பிர­சு­ரிக்­க­வில்லை. ராஜ­ப­க்ஷவின் பதி­ல­ளிப்பு உரிய வகையில் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டி­ருக்க வில்லை.

அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபாமா மற்றும் கிளிண்டன் போன்ற லிபரல் முகா­முக்குள் வாழும் பத்­தி­ரிகை தற்­போ­தைய ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பிக்கு கூட நியா­யத்தை கூற வாய்ப்­ப­ளிப்­ப­தில்லை. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் நாம் எவ்­வாறு நீதியை எதி­ர­பார்க்க முடியும்.

இணை­யத்­த­ளங்­களில் வெளி­வரும் தக­வல்­களை மையப்படுத்தி யார் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கமுடியாது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியமையால் ஏற்பட்ட அவமானம் காரணமாகவே இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபடுகின்றன 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-06#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உண்மை இல்லாமல் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

இதில் உண்மை இல்லாமல் இல்லை. 

இவர் காசு வாங்கேல்ல எண்டால், இப்படியா, அலம்பறை பண்ணிக் கொண்டு இருப்பார். See you in Newyork court எணடெல்லோ மானநஸ்ட வழக்காட கிளம்பி இருப்பார்.

விசயம் என்ன வென்றால், தாங்கள் தானே வெல்லப்போறம் எண்ட நிணைப்பில, சீனாக்காரனட்ட காசா வாங்காம செக்கா எல்லா வாங்கி செலவழிச்சாச்சு.

அதால தானே NYT ம் விசயத்தை துணிந்து எழுதினது.

மகேந்திரன், மருமோன் அலோசியசும், செக்கா கொடுத்து தானே மாட்டப் பட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை மேற்கு நாடு ஊடகங்கள் தூக்கி பிடிப்பதற்கான காரணத்தையே  பற்றியே எனது கருத்து.

சுனாமி நிதியில் எவ்வளவு ராஜபக்சே குடும்பத்திற்கு சென்றது என்பதை பற்றி எப்போதாவது இந்த    மேற்கு நாடு ஊடகங்கள் எதாவது ஓர் முணுமுணுப்பு செய்தனவா?

 சுனாமி நிதியில் எவ்வளவு யுத்தத்திற்கு செலவிடப்பட்டது என்பதற்கு பற்றி ஓர் சிறு சலப்பையாவது இந்த    மேற்கு நாடு ஊடகங்கள் செய்தனவா?

தமக்கு வேண்டப்படாதோர் (புலிகள்) களத்தில்  இருந்து அகற்றப்படும் முன்னெடுப்புக்கோ, தமது நலனான access and cross  services treaty  இ சொறி சிங்களம், அதுவும் இதே ராஜபக்சே செய்யும் போதோ வழங்கும் போதோ சொறி சிங்கள லங்காவில் பாலும் தேனும் ஓடுகிறது, ராஜபக்சே ஆட்சி ஆகா  ஓகோ.

ராஜபக்சே தமது விருப்புக்கு தாளம் போடவில்லையெனில், கள்ள வாக்கெடுப்பு, சீன நிறுவனம் ராஜபக்சே இட்கு தேல்தளில் நிதி உதவி இன்னும் எத்தனையோ.

இதில், உண்மையாக ராஜபக்சே புலிகளை விட கூர்மை. இந்த மேட்ற்குலகு நினைத்தாலும் வாலை  ஆட முடியாது.    

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதை மேற்கு நாடு ஊடகங்கள் தூக்கி பிடிப்பதற்கான காரணத்தையே  பற்றியே எனது கருத்து.

சுனாமி நிதியில் எவ்வளவு ராஜபக்சே குடும்பத்திற்கு சென்றது என்பதை பற்றி எப்போதாவது இந்த    மேற்கு நாடு ஊடகங்கள் எதாவது ஓர் முணுமுணுப்பு செய்தனவா?

 சுனாமி நிதியில் எவ்வளவு யுத்தத்திற்கு செலவிடப்பட்டது என்பதற்கு பற்றி ஓர் சிறு சலப்பையாவது இந்த    மேற்கு நாடு ஊடகங்கள் செய்தனவா?

தமக்கு வேண்டப்படாதோர் (புலிகள்) களத்தில்  இருந்து அகற்றப்படும் முன்னெடுப்புக்கோ, தமது நலனான access and cross  services treaty  இ சொறி சிங்களம், அதுவும் இதே ராஜபக்சே செய்யும் போதோ வழங்கும் போதோ சொறி சிங்கள லங்காவில் பாலும் தேனும் ஓடுகிறது, ராஜபக்சே ஆட்சி ஆகா  ஓகோ.

ராஜபக்சே தமது விருப்புக்கு தாளம் போடவில்லையெனில், கள்ள வாக்கெடுப்பு, சீன நிறுவனம் ராஜபக்சே இட்கு தேல்தளில் நிதி உதவி இன்னும் எத்தனையோ.

இதில், உண்மையாக ராஜபக்சே புலிகளை விட கூர்மை. இந்த மேட்ற்குலகு நினைத்தாலும் வாலை  ஆட முடியாது.    

 

அப்போது புலிகளை ஒடுக்க ராஜபக்சேக்கள் தேவை இருந்ததால் கண்டுகொள்ளப்படவில்லை.

இப்போது, இலங்கைப் பெண்ணை, ராஜபக்சேக்களை வைத்து சீனாக்காரன் தள்ளிக்கொண்டு போகப்போறான் என்று, கண்டுகொள்ளப்படுகிறார்கள்

  • தொடங்கியவர்

நியுயோர்க் டைம்ஸின் தகவல் – மஹிந்தவின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது…

 

Mangala-Mahinda-Rajapaksa.jpg?resize=600
நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது அவர் மீது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது என நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, சீன தூதரகத்துடன் அனுமதி கேட்பது அவசியமில்லை எனத் தெரிவித்த மங்கள, நியுயோர்க்டைம்ஸ் அனைத்து தகவல்களையும் வழங்க தயாராக உள்ளதாகவும், இவ்விடயத்தில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்கு சீன நிறுவனம் 7.6 பில்லியன் கடனை வழங்கியதாகநியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியை ஊடகங்கள் வெளியிட்டமைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பேராசியியர் ஜி. எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளமையானது ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே காணப்படுகின்றது.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் உள்ளுர் ஊடகவியலாளர்களை அசசுறுத்தல் வேண்டாம் என்றும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் தம்மை தொடர்பு கொள்ளுமாறு நியுயோர்க்டைம்ஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மைக்கல் ஸ்லெக்மன் குறிப்பிட்டுள்ளமையினை மஹிந்த தரப்பினர் பின்பற்ற வேண்டும். ஒரு சாதாரண மனிதர் தனக்க எதிராக பொய்யான குற்றச்சாடடை முன்வைத்தால் அதனை எதிர்த்து தனக்கு நியாயத்தினை பெற்றுக் கொள்ள முற்படுவார்கள் ஆனால் ஜனாதிபதி பதவி வகித்து தற்போது பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் அமைதி காப்பது பாரிய சந்தேகத்தினை தோற்றிவித்துள்ளது. சீன தூதரகம் இவ்விடயம் தொடர்பில் மறுப்பினை தெரிவித்தமையினை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிகளை, கூட்டு எதிர்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2018/86689/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.