Jump to content

Recommended Posts

தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு

 

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 32 ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

mannar.jpg

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரு அளவிற்கு முடிவடைகின்ற நிலையை எட்டியுள்ளது.

mannar_2.jpg

தற்போது வரை 23 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், பகுதி அளவாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அகழ்வில் இருந்து மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுகின்றமை குறிப்பிடதக்கது.

http://www.virakesari.lk/article/36459

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.