Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘நாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை’: யாழில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

‘நாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை’: யாழில் ஆர்ப்பாட்டம்

 

 

watermark-2-5-720x450.jpg

 

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய மட்டத்திலான பொது அமர்வை கண்டித்து, யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்து, யாழ். வீரசிங்கம் மண்டப வாயிலில் உறவுகள் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களின் பங்கேற்புடன் யாழ். மாவட்டத்திற்கான அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, தமது அமைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தாம் காணாமல் போனோருக்கான அலுவலகத்தையே ஏற்காத போது, அமர்வுகள் எதற்கு என்ற ஆதங்கத்தில் உறவுகள் அமர்வை புறக்கணித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

watermark-1-4.jpgwatermark-19.jpg

http://athavannews.com/?p=703427-‘நாம்-காணாமல்போனோர்-அலுவலகத்தை-ஏற்கவில்லை’:-யாழில்-ஆர்ப்பாட்டம்

  • தொடங்கியவர்

விண்ணைப் பிளக்கும் உறவுகளின் கதறல் சர்வதேசத்தின் செவிகளுக்கும் எட்டுமா?

 

 
 

காணாமற் போனோர் அலுவலைத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தும் அந்த சங்கத்தினால் நடைபெறும் அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், மாவட்ட ரீதியாக காணாமற் போனோரின் உறவினர்களைச் சந்தித்து வருகின்றது.

இதற்கமைய இன்றைய தினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காணாமற் போனோரின் உறுவினர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் காணாமற் போனோரின் உறவினர்கள் வீரசிங்கம் மண்டபம் முன்னால் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எத்தனையோ குழுக்கள் அமர்வுகளை நடத்தியும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்த அலுவலகத்திலும் எமக்கு நம்பிக்கை இல்லை. அத்தோடு எம்மை ஏமாற்றுவதற்காகவே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது, நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனத் தெரிவத்து கதறியழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/103295

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கண்டு பிடிப்பது – கடினமானது – சாலிய பீரீஸ்

 

 

1-142.jpg

 
 

 

 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை உடனடியாக கண்டு பிடிப்பது என்பது கடினமான விடயம் ஆனால் பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தி இதற்கான நகர்வை ஆரம்பிக்க முடியும் என்று காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் ,காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இன்று இரண்டுக்கும் மேற்பட்ட அமர்வுகளாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் சாலிய பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டு பிடிப்பதற்கு எமது ஓ.எம்.பி அலுவலகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீங்கள் எமக்கு தரும் தகவல் தான் உறவுகளை கண்டு பிடிக்க வழிவகைகள் செய்யும். எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள் என்றார்.

 

கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்க்ளின் உறவுகள் தெரிவித்ததாவது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் எம்மை அங்கு வா இங்கு வா என்று அழைக்கின்றார்கள்.எமக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பி அங்கு போவோம்.ஆனால் எந்த பயனும் இல்லை. எம்மை கவனிப்பார் எவரும் இல்லை.வருவார்கள் படம் பிடிப்பார்கள் போவார்கள். நிவாரணம் தந்து எங்கள் கண்களை மறைக்க வேண்டாம். எங்களுக்கு ஒரு தீர்வை சொல்லுங்கள் என்றனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகள் கேட்டு அறியப்பட்டதோடு,இழந்த உறவுகள் தொடர்பான உறுதிப் படுத்தும் ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

http://newuthayan.com/story/14/காணாமல்-ஆக்கப்பட்ட-உறவுகளைக்-கண்டு-பிடிப்பது-கடினமானது-சாலிய-பீரீஸ்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் மீது விசாரணை - சாலிய பீரிஸ்

 

 
 

(ரி.விருஷன்)

காணாமல் ஆக்கப்பட்டவர்களவி விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகததின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

saliya.jpg

காணால் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் யாழ். மாவட்டத்திற்கான அமர்வானது நேற்யை தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வினைத் தொடர்ந்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள். அந்த விசாரணைகளில் அழுத்தங்களக்கு இடமளிக்கப்படமாட்டாது. பாரபட்சம் காட்டப்படமாட்டாது. 

அத்துடன் ஜனாதிபதியாக இருந்தாலும் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தாலும் சுயாதீனமான விசாரணைகள் நடத்துவதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

மேலும் போர் காலப் பகுதியில் காணாமல்போனவர்கள் விடயத்தில் இராணுவமாக இருந்தாலும் சரி முன்னாள் தமிழீழ விதைலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்படும் என்றார்.

http://www.virakesari.lk/article/36595

  • தொடங்கியவர்

எம்மைத் தொடர்ந்து புண்படுத்தாதீர்கள் : யாழில் காணாமல் போன­வர்களின்் உற­வுகள் கதறல்

Page-01-cityPage1Image0008-32951bc7235cddce90415122413f9a1afe2f45fa.jpg

 

ரி.விரூஷன்

காணாமல் போன எமது உற­வு­களைக் கண்­டு­பி­டித்து தரு­வ­தாகக் கூறி காலத்­திற்குக் காலம் ஆணைக்­கு­ழுக்­களை அமைத்து எம்மை தொடந்து புண்­ப­டுத்­தா­தீர்கள் எனக் காணாமல் போன­வர்கள் அலு­வ­ல­கத்தின் தலைவர் முன்­னி­லையில் உற­வுகள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.தமது உற­வு­களைக் கண்­ட­றிந்து தரு­வ­தாக இது­வரை பல்­வேறு ஆணைக்­கு­ழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் இவ் ஆணைக்­கு­ழுவே இறு­தி­யான ஆணைக்­கு­ழு­வாக இருப்­ப­துடன் எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யப்­ப­டுத்த வேண்டும் எனவும் தெரி­வித்­துள்­ளனர்.

காணாமல் போன­வர்­களைக் கண்­ட­றி­வ­தற்­காக அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோர் அலு­வ­ல­க­மா­னது நேற்­றைய தினம் யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில் தனது அமர்­வினை நடத்­தி­யி­ருந்­தது.இதன்­போது இவ் அலு­வ­லகம் தமக்கு வேண்டாம் எனத் தெரி­வித்து காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களில் ஒரு பகு­தி­யினர் மண்­ட­பத்­திற்கு வெளியே

ஆர்ப்­பாட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

 அதே சமயம் இவ் ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி மற்­றொரு பகு­தி­யினர் மண்­ட­பத்­தினுள் இருந்­தனர்.

இவ்­வாறு இவ் அலு­வ­ல­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்­களே அதன் தலைவர் மற்றும் அலு­வ­ல­கத்தின் ஆணை­யா­ளர்கள் முன்­னி­லையில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்­தனர்.

இங்கு அவர்கள் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

நாங்கள் எங்கள் உற­வு­களை இழந்து எவ்­வ­ளவு காலம் தான் இன்னும் காத்­தி­ருப்­பது? . ஒவ்­வொரு முறையும் ஒவ்­வொரு ஆணைக்­கு­ழுக்­களும் அலு­வ­ல­கங்­களும் வந்து அவர்­களை கண்­ட­றிந்து தரு­கின்றோம். அவர்கள் எங்­கி­ருக்­கின்­றார்கள் என்று கூறு­கின்றோம் என கூறு­கின்­றார்­களே தவிர, இது­வரை எவ­ரையும் காட்­ட­வில்­லையே.

நாங்கள் சொல்­வது உங்­க­ளுக்கு விளங்­கு­கின்­றதா, உங்கள் பிள்­ளை­களை ஒரு நாளேனும் விட்­டு­விட்டு இருந்து விடு­வீர்­களா ?. இங்கே இந்த அலு­வ­ல­கத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து போரா­டு­கின்­ற­வர்­களைப் பேசு­கின்­றீர்கள், அவர்­களை பார்த்து எழ­ன­மாக சொல்­கின்­றீர்கள். ஆனால் அவர்கள் இப்­படி போரா­டு­வது எதற்­காக, அவர்­க­ளது பிள்­ளை­க­ளையும் கண­வர்­மார்­க­ளையும் பறி­கொ­டுத்­த­மையால் தானே இப்­படி கத்­து­கின்­றார்கள் என்­பது உங்­க­ளுக்கு புரி­கின்­றதா ?.

எங்கள் உற­வுகள் இங்கே இல்லை என கூறு­கின்­றீர்கள். நாட்டில் இத்­தனை இரா­ணுவம், பொலிஸார் ஆயிரக் கணக்கில் புல­னாய்­வா­ளர்­களும் இருக்­கின்ற போதும் ஏன் உங்­களால் எம் உற­வு­களைக் கண்­ட­றிந்து தர முடி­ய­வில்லை. எங்­க­ளுக்கு நீங்கள் தரும் நிவா­ரணம் எதுவும் தேவை­யில்லை.

உயிர் போகும் வரையில் 100 ரூபா­யேனும் உழைத்து உண்­ப­தற்கு எமக்கு தெரியும். அதற்கு எமக்கு இயலும். ஆனால் ,எம்மை நாய்கள் என்று நினைக்­கா­தீர்கள். நீங்கள் புதிது புதி­தாக ஆணைக்­ழுக்­க­ளையும் அலு­வ­ல­கங்­க­ளையும் அமைத்து அதன் பின்னால் வாருங்கள் என்று கூறினால் நாங்கள் தொடர்ந்து வருவோம் என்று எண்­ணா­தீர்கள்.

நாங்கள் இப்­போது பொறு­மை­யாக இருக்­கின்றோம். எங்கள் பொறு­மைக்கும் ஓர் எல்­லை­யுண்டு. அந்த எல்­லையை எங்­களை மீற வைக்­கா­தீர்கள். இந்த அலு­வ­ல­கமே காணாமல் போன எமது உற­வு­களைக் கண்டறிவதற்கான இறுதியான அலுவலகமாக இருக்க வேண்டும் . எங்களுக்கு இந்த அலுவலகத்தின் ஊடாக இறுதி முடிவு தெரிய வேண்டும். எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கட்டாயம் கூற வேண்டும்.

இவ்வாறு காணாமல் போனவர்களின் உறவுகள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் மற்றும் ஆணையாளர்கள் முன்னிலையில் கதறியழுதனர்.  

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.