Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் விரிவடையும் இரா­ணுவ அதி­காரம்

Featured Replies

வடக்கில் விரிவடையும் இரா­ணுவ அதி­காரம்

125-9481d090cb1cdcf274d57d8a2bba96697a299257.jpg

 

வடக்­கிலும் தெற்­கிலும் இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கின்ற ஒரே விடயம், போதைப்­பொருள் கடத்தல், விற்­பனை, பயன்­பாடு தான்.

வடக்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ கஞ்சா பொதிகள் கைப்­பற்­றப்­ப­டு­வது சர்வ சாதா­ர­ண­மான விட­ய­மாகி விட்­டது போலவே, தெற்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ ஹெரோயின், கொக்கைன் போன்­றவை ஒரே தட­வையில் சிக்­கு­வதும் சாதா­ர­ண­மாகி விட்­டது.

இலங்கைத் தீவு இப்­போது, போதைப்­பொருள் கேந்­தி­ர­மாகி விட்­டது என்­பதைத் தான் இது காட்­டு­கி­றது.

வெறு­மனே போதைப்­பொருள் கடத்தல் கேந்­தி­ர­மாக மாத்­தி­ர­மன்றி, அதனைப் பயன்­ப­டுத்­து­வோரை அதிகம் கொண்ட இட­மா­கவும், இது மாறி­யி­ருக்­கி­றது.

ஆசி­யாவில், போதைப்­பொருள் பயன்­பாடு, கடத்­தல்கள் மற்றும் அதனைச் சார்ந்த மாபியா குழுக்கள் அதிகம் உள்ள நாடு­களில் முத­லி­டத்தில் இருந்து வந்­தது பிலிப்பைன்ஸ். கடந்த 50 ஆண்­டு­க­ளாக இங்கு போதைப்­பொருள் குற்­றங்கள் சர்வ சாதா­ரணம்.

2016ஆம் ஆண்டு அங்கு ஆட்­சிக்கு வந்த, ஜனா­தி­பதி றொட்­றிக்கோ டுடேட், போதைப்­பொருள் குற்­றங்­க­ளுக்கு எதி­ரான போரை ஈவி­ரக்­க­மின்றி முன்­னெ­டுத்தார்.

இதன் ஒரு கட்­ட­மாக, 2016ஆம் ஆண்­டுக்குப் பின்னர், 4200க்கு மேற்­பட்ட போதைப்­பொருள் குற்­ற­வா­ளிகள் கேள்­விக்கு இட­மின்றிச் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டனர். இது அர­சாங்க புள்­ளி­வி­பரம். இதை விட உண்­மை­யான எண்­ணிக்கை அதிகம் என்­கி­றது எதிர்க்­கட்சி. இந்த நட­வ­டிக்­கையால் அங்கு இப்­போது போதைப்­பொருள் குற்­றங்கள் கட்­டுக்குள் வரத் தொடங்­கி­யுள்­ளன.

அதே பாணியைத் தான் இப்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கையில் எடுக்கத் திட்­ட­மிட்­டி­ருக்­கிறார் போலும். அதற்­காக அவர் இரண்டு ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்த எண்­ணி­யுள்ளார்.

முத­லா­வது, போதைப்­பொருள் குற்­றங்­களில் ஈடு­பட்டு, மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களை தூக்கில் போட்டு, இத்­த­கைய குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோரை உள­வியல் ரீதி­யாக அச்­சு­றுத்தி அடக்­கு­வது.

இரண்­டா­வது, முப்­ப­டை­க­ளுக்கும் பொலிஸ் அதி­கா­ரத்தைக் கொடுத்து, குற்­றங்­களைத் தடுப்­பது. இதற்­காக, பொலி­ஸா­ருக்கு உள்ள சில அதி­கா­ரங்கள், இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முப்­ப­டை­யி­ன­ருக்கும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த இரண்டு விட­யங்­க­ளுமே, எந்­த­ள­வுக்கு போதைப்­பொருள் குற்­றங்­களைக் கட்­டுப்­ப­டுத்த உத­வுவோ, அதே­ய­ள­வுக்கு ஜன­நா­யகம் மற்றும் மனித உரி­மை­க­ளுக்கு ஆபத்­தா­னதும் கூட. 1976ஆம் ஆண்­டுக்குப் பின்னர், இலங்­கையில் மர­ண­தண்­டனை நிறை­வேற்றும் நடை­முறை பின்­பற்­றப்­ப­ட­வில்லை. மீண்டும் அதனை, போதைப்­பொருள் குற்­றங்­களைத் தடுப்­பது என்ற சாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த முற்­படும் போது, ஏனைய கார­ணங்­க­ளுக்­காக அத்­த­கைய தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதும் வழக்­க­மாகி விடும்.

அது நவீன உலகில் மனித உரி­மை­க­ளுக்கு எதி­ரா­னது.

அதே­வேளை, முப்­ப­டை­யி­ன­ருக்கு பொலிஸ் அதி­கா­ரங்கள், மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவில் - வழங்­கப்­ப­டு­வது கூட, அபா­ய­க­ர­மா­னது தான்.

அவ­ச­ர­கா­லச்­சட்­டத்தின் கீழ், முப்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட பொலிஸ் அதி­கா­ரங்கள் எந்­த­ள­வுக்கு தவ­றாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டன என்­பதை நேர­டி­யாக அதி­க­ளவில் அனு­ப­வித்­த­வர்கள் தமி­ழர்கள் தான்.

மீண்டும் பொலிஸ் அதி­கா­ரங்கள் முப்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­ப­டு­வ­தா­னது, வடக்கு, கிழக்கில் ஆபத்­தான விளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடும்.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், வடக்கில் முப்­ப­டை­யினர், தமது முகாம்­க­ளுக்­குள்­ளேயே பெரும்­பாலும் முடக்கி வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள், வெளியில் அதிகம் நட­மா­டு­வது குறைக்­கப்­பட்­டுள்­ளது. சிவில் செயற்­பா­டு­களில் இருந்து அவர்கள் பெரிதும் ஒதுக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ஆனாலும், நல்­லி­ணக்க திட்­டங்கள் என்ற பெயரில் அவர்கள் வேறு வித­மான தலை­யீ­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர் என்­பதை மறுக்க முடி­யாது.

இந்த நிலையில், வடக்கில் ஓர­ள­வுக்­கா­வது முடக்கி வைக்­கப்­பட்­டுள்ள முப்­ப­டை­யி­னரை, அவர்­க­ளுக்கு வழங்­கப்­படப் போகும் பொலிஸ் அதி­காரம், வெளியே கொண்டு வரு­வ­தற்கு உதவப் போகி­றது.

யாழ்ப்­பா­ணத்தில் மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர், அடுத்­த­டுத்து மோச­மான குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்த போது, முகாம்­க­ளுக்குள் முடக்­கப்­பட்­டுள்ள படை­யி­னரை வெளியே வர விட்டு பாது­காப்பை பலப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரப் போவ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா கூறி­யி­ருந்தார்.

அவர் கூறி­யது போல, போதைப்­பொருள் குற்­றங்­களை ஒழிப்­பது என்ற பெயரில் முப்­ப­டை­யினர், மீண்டும் வெளியே வரும் சூழல், உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. முப்­ப­டை­யி­ன­ருக்கும் வழங்­கப்­படும் பொலிஸ் அதி­கா­ரங்கள், மூலம், அவர்கள் போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­களைப் பிடிக்­கின்­ற­னரோ இல்­லையோ, அதைக் காரணம் காட்டி முகாம்­க­ளுக்கு வெளியே தமது நட­வ­டிக்­கை­களை பகி­ரங்­க­மாக முன்­னெ­டுக்க முடியும்.

இது வடக்­கி­லுள்ள மக்­களின் இயல்பு வாழ்­வுக்கு தடை­யாக- அவர்கள் மீது திணிக்­கப்­படும் ஒரு­வித அடக்­கு­மு­றை­யாக மாறும் சாத்­தி­யங்கள் உள்­ளன.

அதற்கு உதா­ர­ண­மாக ஒரு விட­யத்தை கூறலாம். வடக்கு மாகாண ஆளு­ந­ராக றெஜினோல்ட் குரே நிய­மிக்­கப்­பட்ட பின்னர், யாழ். நகரப் பகு­தியில் உள்ள இரா­ணுவ முகாம்­களை மூடி­விட்டு, அங்­குள்ள படை­யி­னரை யாழ். கோட்­டைக்குள் நிலை­கொள்ள வைக்கும் திட்­டத்தை முன்­வைத்­தி­ருந்தார்.

500 ஆண்­டுகள் பழைமை வாய்ந்த யாழ்ப்­பாணக் கோட்டை நெதர்­லாந்து உத­வி­யுடன் புன­ர­மைக்­கப்­பட்டு, ஒரு பாரம்­ப­ரிய மர­பு­ரிமைச் சொத்­தாக பேணப்­ப­டு­கி­றது. தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்டில் இருக்­கி­றது.

பாரம்­ப­ரிய மர­பு­ரிமைச் சொத்­துக்­களை சேதப்­ப­டுத்­து­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம். ஆனால், அத்­த­கை­ய­தொரு யாழ். கோட்­டையில், இரா­ணு­வத்தைக் குடி­ய­மர்த்­து­வ­தற்கு, தொல்­பொருள் திணைக்­களம் அனு­மதி அளித்­தி­ருக்­கி­றது.

யாழ். கோட்­டைக்குள் 6 ஏக்கர் காணி­களை வழங்கி, அங்கு முகாம் அமைப்­ப­தற்கும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த திட்­டத்தின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யாக இருந்­தவர் வடக்கு மாகாண ஆளுநர்.

யாழ். கோட்­டையில் இரா­ணு­வத்தை குடி­ய­மர்த்தும் திட்­டத்­துக்கு வடக்கு, மாகா­ண­சபை, யாழ். மாந­கர சபை என்­பன எதிர்ப்புத் தெரி­வித்­தாலும், அதனை ஆளு­னரோ அர­சாங்­கமோ கண்டு கொள்­வ­தாக தெரி­ய­வில்லை.

யாழ். கோட்­டையில் இரா­ணுவ முகாமை அமைக்கும் பணிகள் இப்­போது நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இதனை நியா­யப்­ப­டுத்தி கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார் ஆளுனர் றெஜினோல்ட் குரே.

யாழ். குடா­நாட்டு வழி­யா­கவே நாட்­டுக்குள் அதி­க­ளவு போதைப்­பொ­ருள்கள் கடத்­தப்­ப­டு­கின்­றன. அதனைத் தடுப்­ப­தற்கு யாழ். கோட்­டையில் இரா­ணுவ முகாம் அமைக்­கப்­ப­டு­வது அவ­சியம். என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

யாழ். கோட்­டையில் முகாம் அமைத்து விட்டால்- யாழ். குடா­நாட்டில் போதைப்­பொருள் கடத்தல் முற்­றா­கவே கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு விடும் என்­பது போலுள்­ளது அவ­ரது வாதம்.

ஆனை­யி­றவில் முகாமை அமைப்­ப­தற்கு இப்­ப­டி­யொரு கார­ணத்தைக் கூறினால் ஏற்­கலாம். ஏனென்றால் அது தான் குடா­நாட்டின் பிர­தான நுழை­வாயில்.

ஆனால் யாழ். கோட்டை என்­பது தனியே தீவுப் பகு­தி­க­ளுக்­கான நுழை­வாயில் மட்டும் தான். அங்­கி­ருந்து கொண்டு, ஒட்­டு­மொத்த போதைப்­பொருள் கடத்­த­லையும் தடுக்­கலாம் என்­பது பொய் வாதம்.

அதை­விட, இப்­போதும் பெரு­ம­ளவு போதைப்­பொருள் கடத்­தல்கள் வடக்கு கடல் வழி­யா­கவே நடக்­கி­றது. மாதகல், வட­ம­ராட்சி பகு­திகள் கடத்தல் கேந்­தி­ரங்­க­ளா­கவே இருக்­கின்­றன. அங்­கெல்லாம் கரை­யோரப் பகு­தி­களில் இரா­ணுவம், கடற்­படை என்­பன முகாம்­களை அமைத்­தி­ருக்­கின்­றன.

ஆனாலும், அவர்­களால், போதைப்­பொருள் கடத்­தல்­களைத் தடுக்க முடி­ய­வில்லை. இந்­த­நிலை இப்­போது மாத்­தி­ர­மல்ல, ஆயுதப் போராட்டம் தொடங்­கப்­ப­டு­வ­தற்கு முற்­பட்ட காலத்தில் இருந்தே காணப்­பட்­டது.

தமி­ழ­கத்­துக்கும், யாழ்ப்­பா­ணத்­துக்கும் இடையில், கள்­ளக்­க­டத்தல் என்று அழைக்­கப்­பட்ட தொழில்- அந்தக் கால­கட்­டத்தில் கொடி கட்டிப் பறந்­தது. போதைப்­பொருள் கடத்­தல்கள் அப்­போது அரிது தான்.

சுங்கத் தீர்வை செலுத்­தாமல், இந்­தி­யாவில் உள்ள பொருட்­களை இலங்­கைக்கும், இலங்­கையில் உள்ள பொருட்­களை இந்­தி­யா­வுக்கும் கடத்தும் நட­வ­டிக்­கையே அதி­க­ளவில் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அதனைத் தடுக்க, மாத­க­லிலும், தொண்­டை­மா­னாறின் அக்­க­ரை­யிலும், கரை­யோரப் பகு­தி­களில் சிறி­ய­ள­வி­லான இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனாலும், கடத்­தல்­களைத் தடுக்க முடி­ய­வில்லை.

விடு­தலைப் புலிகள் தடுக்கும் வரையில், வடக்கில் கள்­ளக்­க­டத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருந்­தது.

இரா­ணுவ முகாம்­களை அமைத்துத் தான், கடத்­தல்­களைத் தடுக்க முடியும் என்­பது பொய்­யான வாதம். விடு­தலைப் புலி­க­ளிடம் இருந்த ஆளணி வளத்தை விட பல மடங்கு ஆளணி வளமும், முகாம்­களும் வடக்கில் தற்­போது படை­யி­ன­ருக்கு இருக்­கி­றது. நவீன தொடர்­பாடல் வச­திகள், கண்­கா­ணிப்பு கரு­விகள் இருக்­கின்­றன.

ஆனாலும், குடா­நாட்டின் வழி­யாகத் தான் பெரு­ம­ளவு போதைப் பொருட்கள் நாட்­டுக்குள் கடத்­தப்­ப­டு­கின்­றன என்று ஒரு ஆளுநர் வெட்­க­மின்றிக் கூறு­கிறார்.

போதைப்­பொருள் கடத்­தல்­களை நேர­டி­யாக தடுப்­ப­தற்கு, தலை­யி­டு­வ­தற்கு படை­யி­ன­ருக்கு அதி­கா­ர­மில்­லாமல் இருக்­கலாம்.

ஆனால், அவர்­க­ளிடம் உள்ள நவீன தொழில்­நுட்­பங்­களின் மூலமும், புல­னாய்வு வலை­ய­மைப்பு மூலமும், பொலி­ஸா­ருக்கு தக­வல்­களை பகிர்ந்து, அதனைக் கட்­டுப்­ப­டுத்த உத­வு­வதில் எந்தத் தடையும் இல்­லையே.

இத்­த­கைய எந்த நட­வ­டிக்­கை­யையும் எடுக்­காமல், யாழ். கோட்­டையில் இரா­ணு­வத்தை குடி­ய­மர்த்­தினால், போதைப்­பொருள் கடத்­தல்கள் முடி­வுக்கு வந்து விடும் போல, நியா­யப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார் ஆளுநர்.

பொலி­ஸா­ருக்­கு­ரிய அதி­கா­ரங்­களை முப்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கினால், இது போன்று தான், பொய்­யான நியா­யப்­ப­டுத்­தல்கள் நடக்கும். அத்­து­மீ­றல்கள் நிகழும். சிவில் செயற்­பா­டுகள் மீதான இரா­ணு­வ­ம­ய­மாக்கல் இன்னும் தீவி­ர­மாகும்.

இது இவ்­வா­றி­ருக்க, கடந்த மாத பிற்­ப­கு­தியில் வடக்கில் சமூக விரோத குற்­றச்­செ­யல்கள் திடீ­ரென மீண்டும் அதி­க­ரித்து, மூன்று வாரங்­க­ளுக்குப் பின்னர், கடந்த செவ்­வாய்­கி­ழமை தான், சட்டம் ஒழுங்கு அமைச்­சரும், பொலிஸ்மா அதி­பரும், அங்கு ஆய்வுப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­தார்கள்.

இவர்­க­ளுடன், சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்­டா­ரவும் சென்­றி­ருந்தார்.

விடு­தலைப் புலி­களின் காலத்தில் வடக்கில் குற்றச் செயல்கள் நடக்­க­வே­யில்லை என்று விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும், ஏன் தமிழ் மக்­களும் கூறு­வதை இவரைப் போன்­ற­வர்­களால் சகித்துக் கொள்ள முடி­ய­வில்லை.

யாழ்ப்­பாணம் வந்­தி­ருந்த போது, செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த பிரதி அமைச்சர் நளின் பண்­டார, “விடு­தலைப் புலிகளின் காலத்தில் கொலைகள், கொள்ளைகள், போதைப்பொருள் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்ற குற்றச்செயல்களே நடக்கவில்லை என்று கூறுவது தவறானது. அது அவர்களின் அறியாமை தான்” என்று கூறி விட்டுப் போயிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில், இத்தகைய எந்த அச்சுறுத்தல்களும் இல்லாமல் வாழ்ந்த இலட்சக்கணக்கான மக்கள் சாட்சியாக வாழும் மண்ணில் நின்று தான் அறியாமை பற்றிப் பேசி விட்டுப் போயிருக்கிறார் அவர். அந்த அறியாமை யாருக்கு என்று அவருக்குத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ‘அறியாமை’கள் ஆட்சி செய்வது தான் நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணம் போலும்.

விடுதலைப் புலிகளின் மீதான காழ்ப்புணர்வு, உண்மையை ஏற்றுக் கொள்ளும்- உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை இவர்களுக்கு இல்லாமல் செய்து விட்டது.

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களை தடுப்பது என்ற பெயரில் அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள், இப்போது அதிகரித்துள்ள குற்றங்களைக் கட்டுப்படுத்துமோ இல்லையோ என்று தெரியாது.

ஆனால், இதனைப் பயன்படுத்தி வடக்கில் இராணுவ மயமாக்கலும், அதன் அதிகாரமும் இன்னமும் விரிவடையப் போகிறது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.