Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவி நீடிப்பும் பின்­ன­ணியும்

Featured Replies

பதவி நீடிப்பும் பின்­ன­ணியும்

842-50ebb312b318a3a9daa5a9ed40fdd54b0320fdb3.jpg

 

-சுபத்ரா

 

இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகளை ஒருவாறு ஒதுக்கித் தள்ளி வந்துள்ள அரசாங்கம், அதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான், மீண்டும், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு சேவை நீடிப்பை வழங்கியுள்ளது.

நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராகப் பேசுவோர், செயற்­ப­டு­வோரை இரா­ணுவ முகாம்­க­ளுக்குள் அனு­ம­திக்கக் கூடாது என்ற கடு­மை­யா­ன­தொரு உத்­த­ரவை இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க அனைத்து பற்­றா­லியன் கட்­டளை அதி­கா­ரி­க­ளுக்கும் பிறப்­பித்து, ஒரு வார காலத்­துக்குள் அவ­ருக்கு சேவை நீடிப்பு அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

 

அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் அமைச்­சர்கள் திலக் மாரப்­பன, வஜிர அபே­வர்த்­தன உள்­ளிட்ட அமைச்­சர்கள் பங்­கேற்ற அதி­கா­ர­பூர்வ அரச நிகழ்வு ஒன்றில், இரா­ஜாங்க அமைச்­ச­ரான விஜ­ய­கலா மகேஸ்­வரன், விடு­தலைப் புலிகள் மீண்டும் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று கூறி­யி­ருந்தார்.

அந்தக் கருத்து அவ­ரது இரா­ஜாங்க அமைச்சர் பத­வியைப் பறித்­த­துடன், அவர் பல­முனை விசா­ர­ணை­களை எதிர்­கொள்ளும் நிலை­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இதற்குப் பின்னர் தான், இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­க­ பிரி­வினைக் கருத்­துக்கள், இன­வாதம் போன்ற நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கு குந்­தகம் விளை­விக்கக் கூடிய கருத்­துக்­களை வெளி­யி­டு­ப­வர்­களை, இரா­ணுவ முகாம்­க­ளுக்குள் அனு­ம­திக்கக் கூடாது என்று உத்­த­ர­விட்­டுள்ளார்.

அது­மாத்­தி­ர­மன்றி, இத்­த­கை­ய­வர்­களால் ஒழுங்­கு­ப­டுத்­தப்­படும் நிகழ்­வு­களில் இரா­ணு­வத்­தினர் பங்­கேற்கக் கூடாது, அத்­த­கைய நிகழ்ச்­சி­க­ளுக்கு அநு­ச­ரணை வழங்கக் கூடாது என்றும் இரா­ணுவத் தள­ப­தி­யினால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

தனியே இந்த உத்­த­ரவு வடக்கு, கிழக்­கிற்கு மாத்­திரம் பொருத்­த­மு­டை­ய­தன்று.

யார் யார் தடை செய்­யப்­பட வேண்­டி­ய­வர்கள் என்ற பட்­டி­யலை இரா­ணுவத் தள­பதி வெளி­யி­டாத போதிலும், அது தொடர்­பான இர­க­சிய சுற்­ற­றிக்­கைகள் ஏதும், இரா­ணுவத் தள­ப­தி­யினால் முகாம்­க­ளுக்கோ, கட்­டளை அதி­கா­ரி­க­ளுக்கோ அனுப்­பப்­பட்­டி­ருக்கக் கூடும்.

தெற்கில், கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­படும் முன்னாள் படை அதி­கா­ரி­க­ளான மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன, றியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர, மேஜர் அஜித் பிர­சன்ன உள்­ளிட்ட பலர், மோச­மான இன­வாதக் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

அவர்­களின் கருத்­துக்­களும் நல்­லி­ணக்­கத்­துக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. வடக்கு, கிழக்­கி­லுள்ள மக்­களை சந்­தேகம் கொள்ள வைக்­கி­றது. இதனை அர­சாங்கம் விரும்­ப­வில்லை.

ஆனால், இவர்­களை முகாம்­க­ளுக்குள் நுழைய அனு­ம­திக்கக் கூடாது என்று உத்­த­ர­விட்டால் அது அர­சாங்­கத்­துக்கு எதி­ராக திருப்பி விடப்­படக் கூடிய அச்சம் இருந்­ததால் தான், எதுவும் செய்ய முடி­யாமல் இருந்­தது.

இந்த நிலையில், விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் கருத்தை அடுத்து, ஏற்­பட்ட சூழ்­நி­லையை, இரா­ணுவத் தள­பதி பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார் என்­பதை விட, அர­சாங்கம் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது என்று கூறு­வதே பொருத்தம்.

அவ­ரது இந்த உத்­த­ர­வுக்கு எதி­ராக இது­வரை தெற்கில் இருந்து யாரும் வாய் திறக்­க­வில்லை. ஏனென்றால், சரி­யான சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி போடப்­பட்ட உத்­த­ரவு என்­பதால் அவர்­களால் வாய் திறக்க முடி­ய­வில்லை.

அதே­வேளை, இந்த உத்­த­ரவு, வடக்கு, கிழக்கில்- இரா­ணு­வத்­தி­னரின் பார்­வையில் பிரி­வி­னைக்கு ஆத­ர­வாக அல்­லது விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வாக கருத்து வெளி­யி­டு­ப­வர்­களை- எந்­த­ள­வுக்கு பாதிக்கும் என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும்.

பொது­வா­கவே, வடக்கில் இரா­ணுவ முகாம்­க­ளுக்குத் தமிழ் அர­சி­யல்­வா­திகள் பெரும்­பாலும் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டு உள்­ளது.

அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் ஒரு சிறப்­பு­ரிமை பிரச்­சி­னையை எழுப்­பி­யி­ருந்தார். இரா­ணுவ முகாம்­க­ளுக்குச் செல்­வ­தற்கு, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இரா­ணுவத் தலை­மை­ய­கத்தின் அனு­ம­தியைப் பெற வேண்­டுமா என்று அவர் கேட்­டி­ருந்தார்.

ஏனென்றால், வடக்கில் முகாம்­க­ளுக்குச் செல்­வ­தற்கு இரா­ணுவத் தலை­மை­யகம் அல்­லது பாது­காப்பு அமைச்சின் அனு­ம­தி­யுடன் வரு­மாறு சில கட்­டளை அதி­கா­ரிகள் கூறி­யி­ருந்­தனர்.

எனினும், அத்­த­கைய எந்த நடை­மு­றையும் இல்லை, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு முகாம்­க­ளுக்குச் செல்­வ­தற்கு உரிமை உள்­ளது என்று அவை­மு­தல்வர் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல கூறி­யி­ருந்தார்.

எனினும் அந்த அனு­மதி தொடர்ந்து நடை­மு­றையில் இருக்­கி­றதா என்று தெரி­ய­வில்லை.

அது­போன்று, நல்­லி­ணக்க செயல்­மு­றை­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யி­டு­ப­வர்கள் பங்­கேற்கும் நிகழ்­வு­களை புறக்­க­ணிக்­கவும் முடிவு செய்­தி­ருக்­கி­றது இரா­ணுவம்.

வடக்கில் இந்த வீம்­புத்­த­னத்தை இரா­ணுவம் கடைப்­பி­டிக்க முற்­பட்டால், அது இரா­ணு­வத்­துக்­கான இழப்­பாகத் தான் முடியும். அதா­வது, தமிழ் மக்­க­ளுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ளும், இரா­ணு­வத்தின் தற்­போ­தைய உபா­யத்தை செயற்­ப­டுத்த முடி­யாமல் இருக்கும்.

எது­எவ்­வா­றா­யினும், கடந்த 2017ஆம் ஆண்டு இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க, இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட பின்னர், தமிழ் மக்­க­ளுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­திலும், இரா­ணு­வத்தை பொதுச்­சே­வையில் ஈடு­ப­டுத்­து­வ­திலும், கூடு­த­லான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இரா­ணு­வத்தை மூன்­றாகப் பிரித்து ஒரு பகு­தியை போருக்குத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு, ஏனைய இரண்டு பகு­தி­க­ளையும், நாட்டின் அபி­வி­ருத்தி மற்றும் கட்­டு­மா­னத்­துக்­காக பயன்­ப­டுத்தும், புதிய மறு­சீ­ர­மைப்புத் திட்­டத்தை முன்­வைத்­தவர் இப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி தான்.

அதா­வது தற்­போ­தைய அர­சாங்­கத்தின் தேவையை அறிந்து அதற்கு இடை­யூறை ஏற்­ப­டுத்­தாமல், ஒத்­தி­சை­வுடன் செயற்­படும் ஒரு­வ­ராக, லெப். ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க இருந்து வரு­கிறார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு நம்­பிக்­கை­யான- நெருக்­க­மான அதி­கா­ரி­யாக இருந்­த­போதும், முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­க­ளான சரத் பொன்­சே­காவும், ஜகத் ஜய­சூ­ரி­யவும் அண்­மையில் முட்­டுப்­பட்டுக் கொண்டு. அர­சாங்­கத்­துக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­திய போது, இவர் நடு­நி­லை­யா­கவே அந்த விவ­காரம் குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்­த­வ­கையில், லெப். ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவின் சேவைக்­கா­லத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீடித்­தி­ருப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­க­வுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­க­னவே ஒரு சேவை நீடிப்பை வழங்­கி­யி­ருந்தார். 2017 ஆகஸ்ட் 18ஆம் திக­தியே அவ­ருக்கு 55 வயது ஆகி­விட்­டது. அப்­போதே அவர் ஓய்­வு­பெற்­றி­ருக்க வேண்டும்.

ஒரு வருட சேவை நீடிப்பு வழங்­கப்­பட்டே அவர் இரா­ணுவத் தள­ப­தி­யா­கவும் நிய­மிக்­கப்­பட்டார். அவ­ரது சேவை நீடிப்பு அடுத்­த­மாதம் 18ஆம் திக­தி­யுடன் முடி­வ­டை­கின்ற நிலையில் தான், மீண்டும் ஒரு வருட சேவை நீடிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­காலம் அடுத்த ஆண்­டுடன் முடி­கி­றது. அதற்கு சில மாதங்கள் முன்னர் வரை, லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க பத­வியில் இருக்கப் போகிறார். அதற்கு அப்­பாலும் கூட அவ­ருக்கு சேவை நீடிப்பு வழங்­கப்­படும் சாத்­தி­யங்கள் உள்­ளன.

லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவின் பதவி நீடிப்­புக்கு தனியே, அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது மாத்­தி­ரமே காரணம் என்று கூற­மு­டி­யாது.

போரில் முக்­கிய பங்­கெ­டுத்து, போரில் இடம்­பெற்ற மீறல்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டுள்ள படை அதி­கா­ரிகள்- தற்­போ­தைய அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைக்கும் இயல்பை கொண்­டி­ராத அதி­கா­ரிகள் -முதன்­நி­லைக்கு வரு­வதைத் தடுக்கும் நோக்­கிலும் கூட இந்த முடிவு எடுக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­க­வுக்கு சேவை நீடிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளதால், தற்­போது இரா­ணுவத் தலைமை அதி­கா­ரி­யாக இருக்கும், மேஜர் ஜெனரல் டம்பத் பெர்­னாண்டோ, மேஜர் ஜெனரல் விக்­கி­ர­ம­ரத்ன, உள்­ளிட்ட பல மூத்த அதி­கா­ரிகள் இந்த ஆண்டில் பதவி விலகிச் செல்ல நெரிடும்.

இவர்­களில் மேஜர் ஜெனரல் டம்பத் பெர்­னாண்டோ, மேஜர் ஜெனரல் விக்­கி­ர­ம­ரத்ன ஆகி­யோ­ருக்கு வரும் செப்­டெம்பர் ,ஒக்­டோபர் மாதங்­களில் 55 வயது பூர்த்­தி­யா­கி­றது. இவர்­களை இரா­ணுவத் தள­ப­தி­யாக்க அர­சாங்கம் விரும்­ப­வில்லை. எனவே சேவை நீடிப்பு வழங்க முடி­யாது. அதனால் இவர்கள் ஓய்­வு­பெற வேண்­டி­யி­ருக்கும்.

இவர்கள் மாத்­தி­ர­மன்றி, அடுத்த, ஆண்டு ஓகஸ்ட் 18 ஆம் திக­திக்குள் 55 வயதைப் பூர்த்தி செய்­கின்ற மேஜர் ஜென­ரல்கள் அனை­வரும் கூட, இரா­ணுவத் தள­ப­தி­யாகும் வாய்ப்பைப் பெறாமல், வீட்­டுக்குச் செல்ல நேரிடும்.

அவ்­வா­றான நிலையை எதிர்­நோக்­கி­யுள்­ள­வர்­களில் மிக­முக்­கி­ய­மா­னவர் மேஜர் ஜெனரல் சவேந்­திர டி சில்வா. அவர், வரும் 2019 ஜூன் 22ஆம் திக­தி­யுடன் 55 வயதைப் பூர்த்தி செய்­கிறார். இதனால் அவ­ருக்கு இரா­ணுவத் தள­ப­தி­யாகும் வாய்ப்பு கிடைக்­காமல் போகும்.

இறு­திக்­கட்டப் போரில் நிகழ்த்­தப்­பட்ட மோச­மான போர்க்­குற்­றங்­க­ளுடன் இவ­ருக்குத் தொடர்பு இருப்­ப­தாக, தமிழ் அமைப்­புகள், மனித உரிமை அமைப்­புகள் தொடர்ச்­சி­யாக குற்­றம்­சாட்டி வரு­கின்­றன.

58 ஆவது டிவி­ஷனின் கட்­டளை அதி­கா­ரி­யாக, இறு­திக்­கட்டப் போரில் முக்­கிய பங்­காற்­றி­யவர் இவர். அதை­விட கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் நெருக்­க­மா­னவர். இது­போன்ற கார­ணங்­களால், இரா­ணுவத் தள­ப­தி­யாகும் வாய்ப்பு இவ­ருக்குக் கிடைக்­காமல் போகும் சூழ்­நிலை எழுந்­துள்­ளது.

தற்­போ­தைய அர­சாங்கம், மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட அதி­கா­ரி­களை ஒரு மட்­டத்­துக்கு மேல், முதன்­மை­யான தள­ப­தி­க­ளாக நிய­மிப்­பதை தவிர்த்தே வந்­துள்­ளது.

இறு­திக்­கட்டப் போரில் முக்­கிய பங்­காற்றி, இரா­ணுவத் தள­பதி பத­வியை குறி­வைத்­தி­ருந்த மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன, மேஜர் ஜெனரல் நந்­தன உட­வத்த, மேஜர் ஜெனரல் சாஜி கல்­லகே, மேஜர் ஜெனரல் பிர­சன்ன டி சில்வா, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்­ளிட்ட – ஒரு காலத்தில் நட்­சத்­திரத் தள­ப­தி­க­ளாக இருந்த எவ­ருக்­குமே அந்த வாய்ப்புக் கிட்­ட­வில்லை.

காரணம், இவர்கள் கிட்­டத்­தட்ட சம வயதைச் சார்ந்­த­வர்­க­ளாக இருந்­தனர். இன்­னொரு காரணம், இவர்கள் உயர் பத­வியை அடையக் கூடிய காலம் வந்த போது, இவர்­க­ளுக்குச் சாத­க­மான அர­சாங்கம் பத­வியில் இருக்­க­வில்லை.

இறுதிப்போரில் கட்டளையிடும் அதிகாரம் பெற்றிருந்த - முக்கிய அதிகாரிகளின் வரிசையில் இப்போது எஞ்சியிருப்பவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தான்.

அவரும் கூட இராணுவத் தளபதியாகக் கூடிய வாய்ப்பு இப்போதைய நிலையில் இல்லை என்றே தெரிகிறது, ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டாலன்றி அது சாத்தியமாகப் போவதில்லை.

இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகளை ஒருவாறு ஒதுக்கித் தள்ளி வந்துள்ள அரசாங்கம், அதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான், மீண்டும், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு சேவை நீடிப்பை வழங்கியுள்ளது.

ஆனாலும், இறுதிப் போரில் முதன்நிலைத் தளபதிகளாக இருந்தவர்கள் தான், இப்போது முன் வரிசையில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த நிலையில் இருந்தவர்களான நிசாந்த வன்னியாராச்சி, சத்யபிரிய லியனகே, றோகண பண்டார, ஜி.வி.ரவிப்பிரிய, தேசப்பிரிய குணரத்தன உள்ளிட்ட பலர், இப்போது மேஜர் ஜெனரல்களாக முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

எது எவ்வாறாயினும் அடுத்தகட்ட இராணுவத் தளபதி போட்டியில் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-15#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.