Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவால்களை எதிர்நோக்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்

Featured Replies

சவால்களை எதிர்நோக்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்

 

 

 

1-1-5-750x430.jpg

 
 

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம் இலங்­கை­யில் தமி­ழ­ரின் மர­பு­ரிமை உட்­பட்ட சுய­நிர்­ணய உரி­மைக்­காகப் போரா­டிய இயக்­கங்­க­ளில் தனித்­து­வ­மா­ன­தொரு பேரி­யக்கமாகும். புலி­கள் இயக்­கம் ஆரம்­பித்த காலம் தொடக்­க­ம், இன்­று­வரை இலங்கைத் தமி­ழர்­கள் உரிமை, அர­சி­யல், சக­வாழ்வு, சமூ­கம் என்ற சகல சந்­தர்ப்­பங்­க­ளி­லும் அவர்­க­ளது பெயர், பேச்­சுக்குப் பேச்­சும், வரிக்கு வரி­யும் உச்­ச­ரிக்­கப்­ப­டா­மல் இல்லை.

ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­க­வும், வேண்­டப்­பட்ட விடு­த­லைக்­கா­க­வும் தம்மை விரித்­துக்­கொண்டு களம் புறப்­பட்­ட­வர்­க­ ளா­கவே அவர்­கள் மக்­கள்­முன் தெரிந்­த­னர். கால ஓட்­டம், புலி­கள் பக்­கத்­தில் கருத்­தா­ழம்­மிக்க, ஒரு பற்­றற்ற மாறு­தலை உரு­வாக்கி முக­ம­றியா மனி­தர்­கள் ஆக்கி இருக்­கின்­றது.

சீரு­டை­யும், சீரிய நன்­ன­டத்­தை­யும் கொண்டு சமூ­கத்­துள் உல­வி­ய­வர்­கள், 2009ஆம் ஆண்டு இறு­திப் போருக்­குப் பின்­னர் சிறை, புனர்­வாழ்வு, சமூ­கத்­து­டன் இணைப்பு என்ற மூன்று சம்­பி­ர­தா­ய­மற்ற சடங்­கு­க­ளுக்கு முகம் கொடுத்து, தாம் உயிர் கொடுக்­கத் தயா­ராக இருந்த சமூ­கத்­துக்­குள் நிரா­யு­த­பா­ணி­க­ளாக வரும்­போது முற்­றி­லும் மாறு­பட்ட மனி­தர்­க­ளாக வாழ்­வி­யலை எதிர்­கொள்­கின்­ற­னர்.

 

முத்­திரை குத்­தப்­பட்­ட­வர்­க­ளாக
நிலை நிறுத்­தப்­பட்­டுள்ள
முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள்

விரும்­பியோ, விரும்­பா­மலோ அவர்­கள் ஏற்­றுக்­கொண்ட பாத்­தி­ரத்­தி­லி­ருந்து விடு­பட முடி­யா­மல் முத்­திரை குத்­தப்­பட்ட மனி­தர்களாக நிலை­ நி­றுத்­தப்­பட்டுள்­ள­னர்.

பெரும்­பா­லான முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள் அங்­க­வீ­னர்­க­ளா­க­வும், போரில் தம் உட­லில் ஏற்­றுக்­கொண்ட விழுப்­புண் கார­ண­மாக, உடல் பல­மற்­ற­வர்­க­ளா­க­வும் நட­மா­டு­கின்­ற­னர். பெரும்­பா­லான முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள் சிறை வாசத்­தின்­பின் திடீ­ரென சாவடையும் உடல்­நி­லை­யி­லேயே காணப்­ப­டு­கின்­ற­னர். இது தொடர்­பான உள்­ளார்த்­தம் பொது­வா­ன­தா­கவே வைத்­துக்­கொள்­வோம். ஆனா­லும், சமூ­கம், வாழ்­வி­யல் என்ற கண்­ணோட்­டத்­தில் இவர்­க­ளது தளம், பொது­மக்­கள் வாழ்­வில் இருந்து சரி­வர இரண்­டா­கப் பிரிக்கப்­ப­டு­ கி­றது.

போருக்கு முன்­னர் மதிக்­கப்­பட்ட அவர்­கள் போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர் அடங்கி ஒடுங்கி வாழ­வேண்டிய நிர்ப்பந்­தத்­திற்­குள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். ஒரு­சி­லர் தமது வாழ்­வி­ய­லை­யும், வாழ்க்­கைப் போக்­கை­யும் மாற்­றிக் கொண்டு, வௌிநா­டு­க­ளில் தஞ்­ச­ம­டைந்து வாழ்­கின்­ற­னர். பெரும்­பா­லா­ன­வர்­கள் புனர்­வாழ்­வுக்­குப் பின்­னர் வௌிநா­டு­க­ளுக்கு தப்­பிச்­செல்ல முடி­யாத இக்­கட்­டான சூழ­லில், வாழ்க்­கையை நகர்த்­து­கின்­றமை முற்­றி­லும் உண்­மை­யான விட­யம்.

பேச்­சுச் சுதந்­தி­ரம் அற்­ற­வர்­க­ளா­கிப்
போன­தாக உண­ரும்
முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள்

சமூ­கத்­துக்­குள் கல­க­லப்­பாக, ஒரு அங்­க­மாக இருந்த புலி உறுப்­பி­னர்­கள், சுய­மான பேச்­சுச் சுதந்­தி­ரமோ, நியா­யம் நீதி­களை எடுத்­து­ரைக்­கும் சுதந்­தி­ரமோ அற்­ற­வர்­க­ளா­கிப் போனார்­கள்.

தாம் உண்டு, தம்­பாடு உண்டு என வாழ­வேண்­டிய நிர்ப்­பந்­தம் சூழல் கார­ணி­யாக அவர்­களை முடக்கி வைத்­தி­ருப்­பது, அவர்­க­ளது தனிப்­பட்ட வாழ்­வி­ய­லி­லும், மன­த­ள­வி­லும் கடு­மை­யான தாக்­கத்­தைச் செலுத்­து­வதை உண­ர­மு­டி­கின்­றது.

மக்­க­ளோடு மக்­க­ளாக தங்­களை நிலை ­நி­றுத்­திக்­கொள்ள முடி­யாத ஒரு விசித்­தி­ர­மான பிரிவு நிலையை அவர்­கள் சந்­திக்­கின்­றார்­கள். கால ஓட்­டத்­தில் மாற்­றம் கண்­டு­வ­ரும் அர­சி­யல், சமூக சூழ் நிலை­களே இதற்­கான கார­ணம் என உண­ர­மு­டி­கி­றது.

பெரும்­பா­லும் அங்­க­வீ­ன­முற்ற போரா­ளி­க­ளின் நிலமை மிக­வும் கவ­லைக்­கு­ரி­ய­தா­கவே இருக்­கின்­றது. தமது வாழ்­வி­யல் போக்கை மாற்ற வலு இல்­லா­மை­யால், அவர்­கள் தமது வாழ்­நா­ளோடு போரா­டும் நிலமை பரி­தா­பத்­துக்கு உரி­ய­தாக ஆகி இருக்­கின்­றது.

சமூ­கத்­தில் இப்­போது தலை­ விரித்­தா­டும் சமூக ஊட­கங்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­வர்­கள், தமக்­கான கருத்­துச் சுதந்­தி­ரம் மூலம் ஓர­ளவு தமது பிரச்­சினை ­களை (பொரு­ளா­தா­ரம், மருத்­து­வம்) நண்­பர்­க­ளோடு பகிர்ந்து தமது வாழ்வை நகர்த்­து­கின்­ற­னர். ஆனால், இப்­ப­டி­யான சமூ­கத் தொடர்பு இல்­லாத முன்­னாள் புலி உறுப்­பி­னர்­க­ளின், அது­வும் உடல்­கா­யங்­க­ளு­டன் அங்­க­வீன­மாக இருப்­ப­வர்­க­ளின் நிலமை சொல்­லி­ மா­ளாதது.

இரு­த­லைக் கொள்ளி எறும்­பின் நிலை­யில்
ஒரு சில முன்­னாள் புலி உறுப்­பி­னர்­கள்

குறிப்­பிட்ட ஒரு­சி­ல­ரின் நிலமை சொல்­லொ­ணாத் துய­ர­மா­னது. சமூ­கத்­துக்­குள் தாம் ஒரு முன்­னாள் புலி உறுப்­பி­னர் என்று சொல்­வ­தால் ஏற்­ப­டும் நன்­மை­கள், தீமை­கள் தொடர்­பில் அவர்­கள் இரு­த­லைக்­கொள்ளி எறும்­பா­கவே திண்­டா­டு­கின்­ற­னர்.

அரச, இரா­ணுவ பார்வை அவர்­க­ளில் இருந்து வில­கா­மல் கழு­குக்­கண்­கள் அவர்­களை மொய்த்­துப் பிடித்த வண்­ணம் உள்­ள­தும் உண்­மை­யா­னதே.
இந்த முன்­னாள் புலி உறுப்­பி­னர்­க­ளின் வாழ்­வி­யலை மேம்­ப­டுத்த பலர் முன்­வ­ரு­கின்றபோதும், அவர்­க­ளுக்­கான உள­வ­ளத்தைத் தர எவ­ரும் முன்­வ­ராமை கவ­லைக்­கு­ரி­யது. ஒரு­ம­னி­த­னால் மன ஆரோக்­கி­யத்தைப் பேண­மு­டி­யா­மல் போனால், உடல் நலி­வு­று­வது இயற்­கையே. நலி­வு­றும் உட­லையே தூக்கி நிறுத்­தும் வல்­லமை மன ஆற்­றுப்­ப­டுத்­த­லுக்­கும், மனத் தைரி­யத்­துக்­கும் உண்டு. இதைப் பொறுப்­பா­ன­வர்­கள் நன்­கு­ணர்ந்­து­கொள்ள வேண்­டும்.

பொறுப்­பு­டன் அவர்­க­ளது மனதை
அண்­மிக்­கும் செயற்­பா­டு­களே
தற்­போது அவ­ச।ி­ய­மா­னவை

வீர­மு­ழக்­கங்­க­ளும், வீர வணக்­கங்­க­ளும் அவர்­க­ளின் மன உணர்­வு­க­ளைத் தற்­போது பிரித்­துப்­போ­டும் நிலை­யில் இல்லை. கார­ணம், அவர்­கள் நோயி­னா­லும், விழுப்­புண்­ணா­ லும், வறு­மை­யா­லும் நலி­வுற்று இருக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு ஆக்­ரோ­ச­மான பேச்­சுக்­க­ளையோ, வீர வச­னங்­க­ளையோ கேட்­கும் மன­நிலை இல்லை. எனவே பொறுப்­பு­டன் அவர்­க­ளின் மனதை அண்­மிக்­கும் செயற்­பா­டு­களே தற்­போது தேவை­யா­னவை. தாம் அனா­த­ர­வாக்­கப்­பட்­டுள்­ளோம் என்ற உள்­ளு­ணர்வு அவர்­க­ளி­டம் இருப்­பதை நான் நேர­டி­யாக கண்டு, கேட்டு உணர்ந்­துள்­ளேன். ஆகை­யி­னால் அவர்­க­ளின் மன­நி­லை­யில், மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி உடல்­நி­லை­யைத் தேற்­றி­ட­நாம் முன்­வர வேண்­டும். ஒரு­சி­ல­ருக்­கா­னது என்­றில்­லா­மல், ஒட்­டு­மொத்­த­மாக அவர்­க­ளது உள நல­னில் அக்­கறை காட்ட வேண்­டிய தலை­யாய கடமை இன்­றைய எமது தமிழ்ச் சமூ­கத்­துக்கு உண்டு.

அண்­மை­யில் ஒரு முன்­னாள் புலி உறுப்­பி­னர் (திலீ­பன் என்ற பெயர் கொண்­ட­வர்) படுத்த படுக்­கை­யாக தன் உடல் உபா­தை­யோடு போரா­டும் விட­யம் வௌிக்­கொ­ண­ரப்­பட்­டது. யுத்­தம் முடி­வ­டைந்­தும் 9வரு­டங்­க­ளின் பின் இப்­படி ஒரு உயிர் வாழ்­வோடு போரா­டிக் கொண்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டமை துர­திஷ்­ட­வ­ச­மான விட­யமே. காலம் முந்­திய நிலை­யில் அவர் கண்­ட­றி­யப்­பட்டு இருந்­தால், அவ­ரது வாழ்க்கை நில­மையை கண்­டிப்­பாக மாற்றி அமைத்­தி­ருக்க முடி­யும். எனவே அவர்­கள் தொடர்­பில் பாரா­மு­க­மாக சமூ­கம் இருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. குறிப்­பிட்ட பல வரு­டங்­கள் அவர்­கள் உண­வுக்­கும் உடைக்­கும் தமது தலை­மை­யில் தங்கி வாழ்ந்­த­வர்­கள். சுய­மான பொரு­ளா­தா­ரம், வாழ்­வி­யல் என்­பது போராட்­டத்­துக்கு அடுத்த மாறு­பட்ட படி­நிலை. இதனை அவர்­கள் யாதார்த்­த­மாக உணர்­வது மிக­வும் கடி­ன­மா­னது. முற்­றி­லும் மாறு­பட்ட ஒரு வாழ்க்­கை­யைச் சந்­தித்­த­வர்­கள் சமூ­கத்­தின் தற்­போ­தைய மாற்­றத்­துள் நுழை­வது சவா­லான விட­யமே.

சமூக ஆர்­வ­லர்­க­ளும்
பொறுப்­புள்­ள­வர்­க­ளும்
முன்­னாள் போரா­ளி­கள் விட­யத்­தில்
கரி­சனை கொள்­ள­வேண்­டும்

இதனை சமூக ஆர்­வ­லர்­க­ளும் பொறுப்­புள்­ள­வர்­க­ளும் நன்கு உணர்ந்து அவர்­கள் தொடர்­பில் கண்­டிப்­பாக கரி।­­ச­னை­கொள்ள வேண்­டும். அவர்­கள் வாழ்­வி­யலை நுணுக்­க­மாக வழிப்­ப­டுத்த உறு­துணை புரி­ய­ வேண்­டும். ‘‘சமூ­கத்­துள் இணைப்பு’’ என்ற சொற்­ப­தமே, அவர்­களை பிரி­வி­னைப்­ப­டுத்­திய பின்பே சமூ­கத்­துக்­குள் நகர்த்தி இருக்­கின்­றது. இந்த நில­மையை மாற்றி அவர்­க­ளின் உள, உடல் நல­னில் கரி­சனை கொள்­ளல் மனித பொது நீதி­யாக ஆகி­யுள்­ளது.

தமது நிலமை தொடர்­பில் பலர் வௌிப்­ப­டை­யாக பேச­மு­டி­யா­மல் உள்­ள­மை­யும், இங்கு நோக்க வேண்­டிய விட­யம். அர­சி­யல் நகர்வு, சுதந்­தி­ரம் என்ற பக்­கம் பார்க்­கா­மல், சக சமூ­க­மாக அவர்­களை நோக்­கும்­போது, தனித்து அவர்­கள் எதிர்­கொள்­ளும் சவால்­கள் விசித்­தி­ர­மாக உள்­ளன. அவை, சமூக நிலை­யில் தாக்­கம் செலுத்­து­வதை அவர்­கள் உண­ரா­ம­லும் இல்லை. உதவி, வாழ்வு என்று அவர்­கள் ஏமாற்­றப்­பட்ட கதை­க­ளும் இல்­லா­மல் இல்லை. சமூ­கப் பொறுப்­பு­ணர்வு ஒன்று கண்­டிப்­பாக இவர்­கள் தொடர்­பில் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­தல் தற்­போது இன்­றி­ய­மை­யா­த­தாக ஆகி­யுள்­ளது.

http://newuthayan.com/story/09/சவால்களை-எதிர்நோக்கும்-முன்னாள்-விடுதலைப்புலி-உறுப்பினர்கள்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.