Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பெண்களுக்கு பாதுகாப்பில்லை" - சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை

Featured Replies

"பெண்களுக்கு பாதுகாப்பில்லை" - சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை

 
"பெண்களுக்கு பாதுகாப்பில்லை" - சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனைபடத்தின் காப்புரிமைANDRESR Image caption(சித்தரிக்கப்பட்டது)

சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில், "இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு" என்று பெற்றோர் சொன்னதால் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை போட்டியிலேயே பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது பள்ளி மாணவியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆப்ரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என 16க்கும் மேற்பட்டோர் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்ததாக வெளியான தகவல் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலுள்ள பெண்களின் பாதுகாப்பை காரணம் காட்டி சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை உலக ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் சார்பில் 13வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட 28 நாடுகளை சேர்ந்த 171 வீரர், வீராங்கனைகளும், இந்தியா சார்பில் 12 பேரும் பங்கேற்றுள்ளனர்.

"இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு"

இந்த போட்டியில், இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் கொண்ட சுவிட்சர்லாந்து அணியும் பங்கேற்றுள்ளது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஸ்குவாஷ் விளையாட்டில் ஜூனியர் பிரிவு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அம்பர் அலின்கெக்ஸ் என்ற 16 வயது மாணவி இந்தியாவில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மையால் இந்த போட்டியிலேயே பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியானது.

வலதுபுறத்திலிருந்து இரண்டாவதாக நிற்பவர் அம்பர் அலின்கெக்ஸ்படத்தின் காப்புரிமைINSTAGRAM Image captionவலதுபுறத்திலிருந்து இரண்டாவதாக நிற்பவர் அம்பர் அலின்கெக்ஸ்

இதுதொடர்பாக, சுவிட்சர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான பாஸ்கல் புரினிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "எங்களது நாட்டின் சார்பில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என்று ஆறு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளோம். ஆனால், நாட்டின் முதல்நிலை வீராங்கனையான அம்பர் அலின்கெக்ஸ் இந்தியாவில் பெண்களுக்கு நிலவும் ஆபத்தான சூழ்நிலையால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது வருத்தமான ஒன்று" என்று அவர் கூறினார்.

"அம்பர் அலின்கெக்ஸ் இந்த போட்டியில் பங்கேற்பதற்கு மிகவும் ஆவலுடன்தான் இருந்தார். ஆனால், இந்தியாவில் பெண்களுக்கெதிரான நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் குறித்த செய்திகளை இணையத்தில் படித்த அவரது தாயார், தங்களது மகளை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு அனுப்பமுடியாது என்று உறுதிபட கூறியதால்தான் அவர் பங்கேற்கவில்லை" என்று கூறினார்.

பாஸ்கல் புரின் Image captionபாஸ்கல் புரின்

ஆனால், இதுவரை தனக்கும், தனது அணியினருக்கும் சென்னையில் எவ்விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், "நான் போட்டி நடைபெறும் மைதானத்திலிருந்து அருகிலுள்ள இடத்திற்கு ஆட்டோவில் சென்றேன். அதற்கு கட்டணமாக 21 ரூபாயை ஆட்டோக்காரர் கேட்டதற்கு, நான் 30 ரூபாயாக கொடுத்தேன். மீதி பணம் வேண்டாம் என்று நான் கூறியபோதும், அதை மறுத்த ஆட்டோக்காரர் 10 ரூபாய் கொடுத்தார். என்னிடம் ஒரு ரூபாய் சில்லறை இல்லை என்றவுடன், பரவாயில்லை என்று கூறிவிட்டு அவர் நகர்ந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது" என்று பாஸ்கல் கூறுகிறார்.

"வீரர்களின் பாதுகாப்புக்கு பிரச்சனையில்லை"

இந்த விவகாரம் குறித்து போட்டி அமைப்பாளரான மைக்கேலிடம் பேசியபோது, "உலகளவிலான இந்த போட்டியில் 28 ஆண்டுகளை சேர்ந்த 171 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் பங்கேற்பதற்கு பதிவே செய்யாத அந்த வீராங்கனை குறித்து எங்களால் எந்த தகவலையும் வழங்க முடியாது" என்று கூறினார்.

 

 

"அவமானமாக கருதுகிறேன்"

சென்னையில் நடக்கும் ஒரு சர்வதேச போட்டியில் பெண்களுக்கான பாதுகாப்பை காரணம் காட்டி, சுவிட்சர்லாந்து வீராங்கனை பங்கேற்காதது குறித்து தமிழகத்தின் முதல் சர்வதேச பெண் கால்பந்து நடுவரான ரூபா தேவியிடம் கேட்டபோது, "இது மிகவும் அவமானகரமான செய்தி. நமது நாட்டில் கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டில் ஒரு சர்வதேச போட்டியை நடத்துவது என்பது கடினமான விடயமாக இருக்கும்போது, அதில் பெண்களுக்கான பாதுகாப்பை காரணம் காட்டி ஒரு முன்னணி வீராங்கனை பங்கேற்காதது சர்வதேச அளவில் இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையே காட்டுகிறது" என்று கூறுகிறார்.

"நான் சில வருடங்களுக்கு முன்பு கத்தாரில் நடந்த சர்வதேச கால்பந்து போட்டி ஒன்றுக்கு நடுவராக சென்றிருந்தேன். அப்போது, அங்கிருந்த சீனாவை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த கொடுமையை பற்றி விசாரித்தபோது, அதற்கு பதில் சொல்லமுடியாமல் தலைகுனிய நேரிட்டது. நமது நாட்டின் பெண்களுக்கே இங்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கும்போது, வெளிநாட்டை சேர்ந்த ஒரு இளம் வீராங்கனை இந்த போட்டியில் பங்கேற்காமல் இருப்பதில் தவறேதும் உள்ளதாக எனக்கு தெரியவில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான குற்றங்களை, கடுமையான தண்டனைகளை அளித்து தடுக்காதவரை, உலக அரங்கில் இந்தியாவுக்கான மதிப்பும், இதுபோன்ற விளையாட்டுகளை நடத்துவதில் பிரச்சனையும் தொடர்ந்து இருக்கும் என்று ரூபா தேவி கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/sport-44904938

  • தொடங்கியவர்

"சென்னை வராததற்கு காரணம் என்ன?" - விளக்கும் சுவிட்சர்லாந்து வீராங்கனையின் தந்தை- #BBCExclusive

 
 

சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், சுவிட்சர்லாந்து அணியின் முதல்நிலை வீராங்கனை ஏம்பர் அலின்க்ஸ் "இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு" என்பதால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறியதாக பல ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டு வந்த நிலையில் அது வெறும் வதந்தி என ஏம்பர் அலின்க்ஸின் தந்தை பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

வீராங்கனை Image captionதந்தையுடன் ஏம்பர் அலின்க்ஸ்

இந்த செய்தியை, தற்போது சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் பாஸ்கல் புரினிடம் உறுதி செய்து நேற்று (சனிக்கிழமை) பிபிசி தமிழும் செய்தி வெளியிட்டிருந்தது.

அப்போது, "எங்களது நாட்டின் சார்பில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என்று ஆறு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளோம். ஆனால், நாட்டின் முதல்நிலை வீராங்கனையான ஏம்பர் அலின்க்ஸ் பாதுகாப்பு காரணங்களால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது வருத்தமான ஒன்று" என்று மற்ற செய்தி ஊடகங்களிடம் தான் கூறியதை பாஸ்கல் புரின் ஒப்புக்கொண்டார்.

"ஏம்பர் அலின்க்ஸ் இந்த போட்டியில் பங்கேற்பதற்கு மிகவும் ஆவலுடன்தான் இருந்தார். ஆனால், இந்தியாவில் பெண்களுக்கெதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களால், அவரது தாயார் தங்களது மகளை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு அனுப்ப முடியாது என்று உறுதிபட கூறியதால்தான் அவர் பங்கேற்கவில்லை" என்றும் அவர் கூறினார்.

இந்த விடயம், ஊடகங்களில் மட்டுமல்லாது, சமூக இணைதளங்களிலும் பெரும் விவாதத்திற்குள்ளானது.

Presentational grey line

இதுகுறித்து, தமிழகத்தின் முதல் சர்வதேச பெண் கால்பந்து நடுவரான ரூபா தேவியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இது மிகவும் அவமானகரமான செய்தி. நமது நாட்டில் கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டில் ஒரு சர்வதேச போட்டியை நடத்துவது என்பது கடினமான விடயமாக இருக்கும்போது, அதில் பெண்களுக்கான பாதுகாப்பை காரணம் காட்டி ஒரு முன்னணி வீராங்கனை பங்கேற்காதது சர்வதேச அளவில் இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையே காட்டுகிறது" என்று கூறியிருந்தார்.

பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி

அதனைத் தொடர்ந்து, போட்டியில் பங்கேற்காத சுவிட்சர்லாந்து வீராங்கனை ஏம்பர் அலின்க்ஸை தொடர்பு கொண்டு இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்கும், மேலதிக தகவல்களை பெறுவதற்கும் பிபிசி தமிழ் முயற்சித்தது.

இந்நிலையில், இந்திய ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து ஏம்பர் அலின்க்ஸ் மற்றும் அவரது தந்தை இகர் ஆகியோர் பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.

அதில், "இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எனது மகள் ஏம்பர் அலின்க்ஸுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள் அவரின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது மற்றும் நாங்கள் இதனால் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம்" என்று அவரது தந்தை இகர் கூறினார்.

"சென்னையில் நடக்கும் உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் ஏம்பர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் தவறானவை" என்று கூறிய இகர், "ஏம்பர் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டாமென பெற்றோர்களாகிய நாங்கள் கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே முடிவு எடுத்துவிட்டோம். அதற்கு, இரண்டு காரணங்கள் உள்ளன."

வீராங்கனைபடத்தின் காப்புரிமைANDRESR

"முதல் காரணம், 16 வயதேயாகும் ஏம்பருக்கு இதுபோன்ற பல போட்டிகளில் பங்கேற்பதற்கு எண்ணற்ற வாய்ப்புகளுள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையிலான போட்டியில் பங்கேற்க செய்து ஏம்பருக்கு உடல்ரீதியாக அழுத்தமளிக்க வேண்டாமென நினைத்தோம்.

"இரண்டாவதாக, நாங்கள் நீண்டகாலம் விடுப்பெடுத்து குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு இதுவே சரியான வாய்ப்பு என்று நாங்கள் நினைத்தோம். எனவே, தற்போது ஸ்குவாஷ்க்கு பெயர்போன எகிப்துக்கு சுற்றுலா வந்திருக்கிறோம். எங்களுடன் ஏம்பர் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி" என்று அவர் மேலும் கூறினார்.

Presentational grey line

எனவே, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று நாங்கள் கூறியதாக பரப்பப்படும் வதந்திகளை நிறுத்துங்கள் என்ற இகர், "வயது, குடும்ப சுற்றுலா போன்றவற்றால்தான் இம்முறை ஏம்பரால் இந்தியாவுக்கு வர இயவில்லை. வருங்காலத்தில் வேறு காரணங்கள் இருந்தால் இந்தியாவுக்கு வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்" என்று மேலும் கூறினார்.

தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து ஸ்குவாஷ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "16 வயதான சுவிட்சர்லாந்தின் முதல்நிலை வீராங்கனை ஏம்பர் அலின்க்ஸ் சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்காதது குறித்து பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் பொய்யானவை. இது ஏம்பர், அவரது பெற்றோர் மற்றும் சுவிஸ் ஸ்குவாஷ் அமைப்பு மீது தவறான எண்ணத்தை உண்டாக்கியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

"சென்னை வராததற்கு காரணம் என்ன?"படத்தின் காப்புரிமைINSTAGRAM

"சுவிஸ் ஸ்குவாஷ் அமைப்பு பாதுகாப்பு மற்றும் அரசியல் அபாயத்தின் அடிப்படையில் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் அனைத்தையும் எப்போதும் பரிசோதிக்கிறது. இந்திய ஸ்குவாஷ் சங்கம் நடத்தும் இந்த போட்டியில் பங்கேற்பு நாடுகளின் பாதுகாப்பு இதுவரை கேள்விக்கு உட்படுத்தப்படாததை தொடர்ந்து நாங்கள் எங்களது அணியினரை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளோம்."

"ஆனால், இந்த போட்டியில் ஏம்பர் பங்கேற்காமல் இருப்பதற்கான காரணம் வருத்தத்திற்குரியதாக இருந்தாலும், வீரர் ஒருவரை போட்டிக்கு அனுப்பும்போது அவரது எண்ணம், குடும்பத்தினரின் முடிவு மற்றும் மற்ற விடயங்களை கருத்திற்கொள்வது மிகவும் அவசியமானது."

எனவே, வயது மற்றும் குடும்ப சுற்றுலா ஆகியவற்றின் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்காத ஏம்பர் மீது தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துவதுடன், சமூக வலைதளங்களில் தாக்குவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்வதாக சுவிஸ் ஸ்குவாஷ் அமைப்பு தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-44915522

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.