Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனுஷ்க குணதிலகவுக்குத் தடை

Featured Replies

தனுஷ்க குணதிலகவுக்குத் தடை
 
 

image_4504860fa4.jpg

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என, இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (22) அறிவித்தது.

வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரையே, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இத்தடை அமுலுக்கு வருமெனவும், இப்போட்டியிலும் இன்றைய (23) தினம் அவர் பங்குபற்ற மாட்டாரெனவும், கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/தனுஷ்க-குணதிலகவுக்குத்-தடை/44-219395

 

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு எதிராக சற்று முன்னர் அதிரடி நடவடிக்கை!

தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சற்று முன்னர் அறிவித்துள்ளது.

வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரை, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இத்தடை அமுலுக்கு வருமெனவும், இப்போட்டியிலும் நாளைய தினம் அவர் பங்குபற்ற மாட்டாரெனவும், இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தது.

இதேவேளை, தனுஷ்க குணதிலகவின் நெருங்கிய நண்பர் ஒருவரை சற்று முன்னர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்க குணதிலகவிற்கு எதிராக இரு வெளிநாட்டு பெண்களினால் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் தனுஷ்க குணதிலகவின் நெருங்கிய நண்பர் ஒருவர் சற்றுமுன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/community/01/188793?ref=home-latest

  • தொடங்கியவர்

தனுஸ்க குணதிலகவின் ஹோட்டல் அறையில் நடந்தது என்ன?

 

இலங்கை  அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர் தனுஸ்க குலதிலக தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இடம்பெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பிலேயே அவரிற்கு இலங்கை கிரிக்கெட் தடை விதித்துள்ளது என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

தனுஸ்கவின் அறையில்வைத்து அவரது நண்பர் தன்னை பாலியல்வன்முறைக்கு உட்படுத்தினார் என நோர்வேயை சேர்ந்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

தனுஸ்ககுணதிலகவும் அவரது நண்பரும் நோர்வேயை சேர்ந்த பெண்ணை தனுஸ்ககுணதிலக தங்கியிருந்த ஹோட்டலிற்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிற்கு பின்னர் அழைத்துச்சென்றுள்ளனர்.

இதன் பின்னர் இலங்கையில் பிறந்த பிரிட்டிஸ் கடவுச்சீட்டிற்குரியவரான அந்த நபர் தன்னை ஹோட்டல் அறையில் வைத்து பாலியல்வன்புனர்விற்கு உட்படுத்தியுள்ளார் என நோர்வே பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

26 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் நாங்கள் அவரை விசாரணை செய்துவருகின்றோம் என காவல்துறையினர் ஏஎப்பி செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

danuskaaaaaaaaaaa.jpg

இலங்கை அணி வீரருக்கு எதிராக  எந்த முறைப்பாடும் முன்வைக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் தவறாகநடந்துகொண்டதாக குற்றம்சாட்டி இலங்கை கிரிக்கெட் தனுஸ்ககுணதிலகவிற்கு தடை விதித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் விதிமுறைகளின் படி வீரர்கள் நள்ளிரவிற்கு முன்னர் தங்கள் ஹோட்டல்களிற்கு திரும்பவேண்டும் மேலும் அவர்கள் விருந்தினர்களை அழைத்துவரமுடியாது என்பது முக்கியமானது.

http://www.virakesari.lk/article/37129

  • தொடங்கியவர்

குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் தனுஸ்க

 

 
 

இலங்கை கிரிக்கெட்டினால் சகலவகை போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக  தான் குற்றம் எதனையும் இழைக்கவில்லை  என தெரிவித்துள்ளார்.

தனது  ஹோட்டல் அறையில் இடம்பெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பிலேயே தனுஸ்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

தனுஸ்க குணதிலக தன்மீது குற்றமில்லை என தெரிவித்துள்ளார் மேலும் நாங்கள் அவர் குறித்து விசாரணைகளை தொடரப்போவதில்லை என பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அணிக்கான விதிமுறைகளை மீறியமை தொடர்பில்  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விசாரணைகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

danushh.jpg

இதேவேளை நோர்வே பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய தனுஸ்கவின் நண்பரை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளோம்,இது பிணையில்விட முடியாத குற்றம் எனவும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தனுஸ்கவின் நண்பர் இங்கிலாந்தில் கழகமொன்றிற்கு விளையாடுபவர் தனது தந்தையை பார்ப்பதற்காக இலங்கை வந்திருந்தவேளை அவர் இந்த குற்றத்தை புரிந்துள்ளார் எனவும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/37149

  • தொடங்கியவர்
’கிரிக்கெட் வீரருடம் விரும்பியே ஹோட்டலில் தங்கினேன்’ பெண் தெரிவிப்பு
 
 

image_fcc44b4be2.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவுடன் தான் விரும்பியே ஹோட்டலில் தங்கியதாக நோர்வே நாட்டு பெண் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பெண்கள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் செய்யப்பட்ட  முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்கவின் நண்பர் ஒருவர் கைதுசெய்யபட்டார்.

கைதுசெய்யப்பட்ட, பிரித்தானிய குடியுரிமை பெற்றவரும், தனுஷ்கவின் நண்பருமான, சந்தீப் ஜூட் செல்லையா என்ற நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து வெளிநாட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துடன் தனுஷ்க குணதிலகவும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பிலான விசாரணை நேற்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனுஷ்க குணதிலகவுடன் தான் விரும்பியே ஹோட்டலில் தங்கியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நோர்வே பெண் தெரிவித்துள்ளார்.

எனினும் தனுஷ்கவின் நண்பர் சந்தீப் வேறுவொரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தீப் அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனுஷ்க குணதிலகவை அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும்  இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்றைய தினம் (23) அறிவித்திருந்தது.

நடத்தை விதி மீறல் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குணதிலகவின் போட்டிக் கட்டணமும் நிறுத்தி வைக்கப்படுவதோடு, இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையில்  மேலதிக இடைநீக்கம் அமுலுக்கு வருகிறது.

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “இலங்கை கிரிக்கெட்டால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணையில், அணி முகாமையாளர் அந்த வீரர் நடத்தை விதியை மீறியதாக முறையிட்டதை அடுத்தே இடைநிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கிரிக்கெட்-வீரருடம்-விரும்பியே-ஹோட்டலில்-தங்கினேன்-பெண்-தெரிவிப்பு/175-219465

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் வீரரின் நண்பரின் உல்லாசம்! சர்ச்சையை ஏற்படுத்திய பெண்களின் தகவல்கள் அம்பலம்

 

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவின் நண்பர் ஒருவரின் மோசமான செயற்பாடு குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டிருந்தது.

நேர்வே நாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் தொடர்பான தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் நண்பர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நாளை வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் அவரது நண்பருக்கு எதிராக முறைப்பாடு செய்த நோர்வே நாட்டு பெண்கள் இருவரின் புகைப்படங்கள் முதல் முறையாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அவர்கள் இருவரும் ஹேய்ஸ் பர்ஜி பெகென்சின் மற்றும் சில்ஜே நைலென்ட் என்ற பெயருடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 15ஆம் திகதி குறித்த இருவரும் சுற்றுலா பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளனர்.

குறித்த பெண்கள் தனுஷ்க குணதிலக்கவுடன் பேஸ்புக் ஊடாக நண்பர்களாகியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள கொழும்பு ஹோட்டலுக்கு வருமாறு குறித்த இருவருக்கும் அறிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் அவரது நண்பர் அந்த பெண்களை அறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான பானங்களை வழங்குவதற்கு அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலை, குறித்த பெண்கள் ஹோட்டலில் நடமாடும் காட்சி அங்கிருந்த சிசிடீவியில் பதிவாகியுள்ளது.

தனுஷ்க குணதிலக்க மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், விசாரணையின் பின்னர் அவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/189006?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்

தனுஷ்க குணத்திலக்கவிற்கு ஆறு மாத போட்டித் தடை

 

 

ஆறு சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணத்திலக்கவிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்துள்ளது.

Danushka_Gunathilaka.jpg

ஒழுக்க விதிமீரல் காரணமாக இவருக்கு குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/37378

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.