Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரளிக்கொட்டை

Featured Replies

அரளிக்கொட்டை

 

 
kadhir4


நீட் தேர்வு ரிசல்ட் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும்.  கமலாவின் நெஞ்சு "பட பட' வென்று அடித்துக் கொண்டிருந்தது. மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு வேண்டிக் கொண்டு  விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள்.
அந்தக் கிராமத்தில் நாம் தான் முதல் டாக்டர் என்ற கற்பனை அவளை வானத்தில் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் ஆகி இதே கிராமத்தில் இலவச வைத்தியம் பண்ணினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள்.  ஊரில் வைத்திய வசதி இல்லாததால்தான் தன் அப்பா திடீர் நெஞ்சு வலியில் செத்துப் போனதையும், அது  போல் இங்குள்ள யாரும் செத்துப் போகாமல் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தாள்.
வீடு வீடாகச் சென்று கூலிக்கு வீட்டு வேலை செய்து கஷ்டப்படும் அம்மாவை, தான் டாக்டராகி வேலைக்குப் போக வேண்டாம் என்று தடுத்து ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற ஆசையும், ஊனமான தன் தங்கச்சியின் காலைச் சரியாக்கி நடக்க வைக்க  வேண்டும் என்ற ஆசையும்  கமலாவைத் தெருவில் நடக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் நடக்க வைத்துக் கொண்டிருந்தது.

 


அந்தச் சின்னக் கிராமத்தில் வீதி பெரும்பாலும் நடமாட்டம் இல்லாமல் தான் இருக்கும். எனவே அவளால் கற்பனை செய்து கொண்டே நடந்து வர முடிந்தது. வீட்டுக்குள் வந்த உடனே அவளுக்குத் திடீர் என்று ஒரு பயம் உடம்பைச் சற்று நடுங்க வைத்தது. "ஒரு வேளை மார்க் வராமல் போனால்?'  என்ற எண்ணம் கற்பனைகளையெல்லாம் நொடி நேரத்தில் சிதற அடித்தது.
தான் கூலி வேலை செய்யும் வீடுகளில் எல்லாம் மகளை டாக்டருக்குப் படிக்க வைக்கப் போவதாகப் பெருமையாகச் சொல்லி, கூடவே காலேஜுக்குக் கட்ட  கடனும் கேட்டு வைத்திருக்கும் அம்மாவுக்கு அந்த அதிர்ச்சி? கமலாவுக்கு அதை நினைக்கவே முடியவில்லை... மீண்டும் மீண்டும்  கடவுளை வேண்டிக்கொண்டாள். 
கமலாவின் குடும்பம் ஓர்  ஏழைக் குடும்பம் தான். ஆறு வருஷத்துக்கு முன்னால்  கூலி வேலை செய்து வந்த அப்பா திடீர் நெஞ்சு வலியால் துடித்தபோது   உள்ளுரில் ஆஸ்பத்திரி வசதி இல்லாததால்  காப்பாற்ற முடியாமல்  போன அன்று  அம்மா,  ""ஐயோ... எ சாமி...என்னை அனாதியா உட்டுட்டுப் போயிட்டீயே...ரண்டு பொட்டப் புள்ளகள வச்சிக் கிட்டு நா என்ன செய்வேன்?'' 
என்று  நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுத அழுகையை நினைத்த போதெல்லாம் கமலா கண்கலங்கி விடுவாள். அதன் பிறகு, ஊனமான தங்கையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அம்மா கூலிவேலைக்குச் சென்றதால்தான்  தான் பள்ளிக்கூடம் செல்ல முடிந்தது என்பதையும் அவள் மறந்து விடவில்லை. 
பகலில் கூலி வேலை இரவில் வெகுநேரம் வரை தையல் மெஷினில் ஜவுளிக்கடைக்குப் பை தைத்துக் கொடுத்துக் கூலி வாங்கியது... இப்படி அம்மா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் அல்ல என்பதும் அவளுக்குத் தெரியும். இந்த நிலைமையில் தான் ஒரு டாக்டரானால் அம்மாவுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பதையும் எண்ணிப் பார்த்தாள்.

 


சைக்கிளை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த புரெளசிங் சென்டருக்கு ஒன்பது மணிக்கே வந்து விட்டாள். மணி பத்தை நெருங்க நெருங்க கமலா நெஞ்சு முன்பை விட வேகமாக அடித்துக் கொண்டது.
மீண்டும் கடவுளை வேண்டிக் கொண்டு கம்ப்யூட்டரை ஆன் பண்ணினாள். இன்னும் ஐந்து நிமிடங்கள்!  உடல் நடுக்கத்தைவிட மனம் அதிகமாக நடுங்கியது. அவளைப் போலவே அவளது தோழிகள் சிலரும் அதற்காக வந்திருந்த போதும் அவர்கள் எல்லாம் அவள் கவனத்தில் இல்லை. 
மணி பத்தானது. நடுக்கத்தில் தடுமாறித்  தடுமாறித் தன் பதிவு எண்ணைத் தேடினாள்.  ஒரு வழியாகக் கண்டு பிடித்தபோது அவளால் நம்ப முடியவில்லை! அவள் பயந்தது போலவே குறைவான மதிப்பெண்! அதிர்ச்சியில் தான் பார்த்த எண் தப்பாகப் போயிருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு நடுக்கத்தோடு மீண்டும் தன் ஹால் டிக்கெட்டை எடுத்துப் பார்த்தாள். அதே எண் தான்!  
கமலாவுக்கு மயக்கமே வந்து விடும் போல் ஆகிவிட்டது. கண்கள் கலங்கி விட்டன. அழுகை வந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் இரண்டு மூன்று முறை போட்டுப் பார்த்தாள். அதே தான் மார்க்! 
அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை. பணத்தைக் கொடுத்து விட்டுத் தோழிகளைக் கூடப் பார்க்கப் பிடிக்காதவளாய், அதிர்ச்சி நீங்காதவளாய், எப்படியோ சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். ஓடிப்போய்ப் பாயில் குப்புறப் படுத்துக் கொண்டு அழுதாள். 
அம்மா வேலைக்குப் போய் விட்டிருக்க, விவரம் தெரியாத தங்கச்சி தவழ்ந்து வந்து  ""ஏக்கா அழுவுற?'' என்று கேட்ட போது கமலா பதில் ஏதும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தாள். தன் கனவும், அம்மாவின் கனவும் நொறுங்கிப் போனதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 
பொதுவாகக் கமலா நன்றாகப் படிப்பவள் தான், வகுப்பில் எப்போதும்  முதல் ரேங்க் தான். ஆனாலும் நீட் தேர்வில் தோற்றுப் போன அதிர்ச்சி... இனி எப்படி ஊரார் முகத்தில் விழிப்பது? தோழிகள் முகத்தில்? அம்மாவின் டாக்டர் கனவு நொறுங்கிப் போய் விட்டதே! அம்மாவைக் கஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே, தங்கச்சியின் ஊனத்தைச் சரிபண்ண முடியாதே, ஊராருக்கு இலவச வைத்தியம் என்பதெல்லாம் வெளியே சொல்லவே கேவலமாகப் போய்விட்டதே! இனி அம்மாவுக்குப் பாரமாக  இருந்து கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பதா? அவளால் சமாதானம் பண்ணிக் கொள்ளவே முடியவில்லை. தோல்வி என்ற இடி அவளைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருந்தது.

 


புரண்டு புரண்டு அழுது பார்த்தாள். தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தாள். அவமானம்...அவமானம்... "இது வரை நீ வாங்கிய மார்க்கெல்லாம் காப்பியடித்து வாங்கியதா?' என்று கேட்பார்களே, என்ன சொல்வது? 
அம்மா வேலைக்குப் போகும் வீட்டிலெல்லாம் கேட்பார்களே...  அம்மா எப்படிக் கேவலப்படப் போகிறாள். கோச்சிங் வகுப்புக்குப் போயிருந்தால் அந்த நான்கு மார்க்கையும் வாங்கியிருக்கலாமோ? பணம் இருந்தால் போயிருக்கலாம், பணமில்லையே என்ன செய்வது? இன்னும் கொஞ்சம் படித்திருக்க வேண்டும் தான்.
"ஐயோ, ஏமாந்து போய் விட்டோமே. ஆயிரம் கனவுகளோடு வரும் அம்மாவின் முகத்தில் இனி எப்படி முழிப்பது?  தன் வகுப்புத் தோழி மாலதி  தன் அம்மா திட்டியதற்கே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாளே, நாம் இத்தனை அவமானத்தையும் கேவலத்தையும் தாங்கிக்கொண்டு எப்படி உயிரோடிருப்பது? ஊரார் கேவலமாகப் பார்ப்பார்களே...இப்படிப் பல கேள்விகள் மின்னலைப் போல் வந்து  கொண்டே இருந்தன. உலகமே அவளைப் பார்த்துச் சிரிப்பதைப்  போல் அவளுக்குத் தோன்றியது.

 


செல்போனில் அவள் தோழிகள் சிலர் அழைத்த போதிலும் எடுத்துப் பேச விரும்பவில்லை. எப்படிச் சொல்வது, அவர்கள் எல்லாம் பாஸாகி இருப்பார்களே, பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. அம்மா வருவதற்குள் ஒரு முடிவு செய்தாக வேண்டும் என்றும் அக்கம் பக்கத்தாரின் கேவலத்தை விடச் செத்துப் போவதே மேல் என்றும் தோன்றியது.
ஏற்கெனவே அதே கிராமத்துப் பெண்கள் சிலர் செய்த செயல் அவளுக்கு நினைவுக்கு வந்தது. எழுந்து கதவைச் சாத்தி விட்டுப்  பக்கத்துத் தோட்டத்துக்குப் போனாள். அங்கு வேலி ஓரம் இருந்த தங்க அரளி மரத்தில் இருந்து ஐந்தாறு கொட்டைகளைப் பறித்துத் தாவணியில் முடிந்து கொண்டாள். அதை அரைத்துக் குடித்தால் செத்துப் போகலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். கூடவே அது மிகவும் கசக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறாள். யோசித்துக் கொண்டே மாரியம்மன் கோயிலுக்கு வந்து சாமியிடம்  அம்மாவுக்காகவும் தங்கச்சிக்காகவும் வேண்டிக் கொண்டாள். 
வெளியே வரும்போது எதிர் வீட்டுப் பையன் கதிர்வேலு நொண்டி நொண்டி வந்து கொண்டிருந்தான். அவனுடைய  ஒரு கால் பிறவியிலேயே போலியோவால் ஊனம். அவன் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருப்பது கமலாவுக்குத் தெரியும். எப்போவாவது சந்தேகம் கேட்க வருவான். 
""என்ன அக்கா, எப்பவும் உங்க அம்மாவோடதான் கோயிலுக்கு வருவே, இப்போ தனியா வந்திருக்கே?'' என்று கேட்டான். 
""எங்கம்மா வர லேட் ஆகும், அதனாலே நானே வந்தே?'' என்று சொல்லிவிட்டுப் போக நடந்தவளுக்கு ஒரு யோசனை வந்தது. 
""ஏங் கதிர்வேலு, நீ எங்க போறே?''

 


""கடைக்குப் போறேங்க்கா''
""சரி கதிர்வேலு, எனக்கு ஒரு உதவி பண்றயா ?''
""என்னக்கா, சொல்லக்கா''
""இந்தா, இந்த ரண்டு ரூபாய்க்குக் கடலை முட்டாய் ரண்டு வாங்கிட்டு வந்து தர்றயா?''
""சரிக்கா''
பணத்தை வாங்கிக்கொண்டு கதிர்வேலு போனான். அவன் திரும்பி வரும் வரை கமலா கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள். அரளி விதையை அரைத்துக்  கடலை மிட்டாயைக் கடித்துக் கொண்டு குடித்துவிடலாம் என்று முடிவு செய்து கொண்டாள். இது தான் அந்தக் கிராமத்துத் தற்கொலைக் கலாசாரம்!
கொஞ்ச  நேரத்தில் நொண்டி நொண்டி நடந்து வந்த கதிர்வேலு கொஞ்சம் களைத்துப் போனதால் கடலை மிட்டாயைக் கமலாவிடம் கொடுத்து விட்டுக் கோயில் திண்ணையில் உட்கார்ந்தான்.
உதவி செய்த நன்றிக்காக ஏதாவது பேசவேண்டுமென்று கமலாவுக்குத் தோன்றியது.
""ஏங் கதிர்வேலு, ஊனமானவங்களுக்குன்னு இருக்கற பள்ளிக்கூடத்திலேயும் ஹாஸ்டல்லேயும் உனக்கு இலவச  எடங்கெடச்சுதாமே, அங்கே போனாக் கஷ்டப்படாமே படிக்கலாமே, ஏன் போகலே?''


""போக்கா, இங்க எங்கம்மாவையும்  தங்கச்சியையும்  அனாதையாக் கஷ்டப்பட வுட்டுட்டு, என்னய் மட்டு சொர்க்கத்துக்கு வான்னு கடவுளே  கூப்பிட்டாலும்  நா போக மாட்டேக்கா,  நா கஷ்டப்பட்டுப் படிச்சு வேலைக்குப் போயி, சம்பாரிச்சு, ஒரு வேள சோத்தக் கூட வயிறாரத் திங்காத எங்கம்மாவைக் கஷ்டப்படாமே காப்பாத்தணும், எந் தங்கச்சியப் படிக்க வச்சு, நகை போட்டுக் கல்யாணம் பண்ணி வெக்கணும். அப்பத்தா நா மனுச! நீ வென்னா பாரக்கா,  இந்த நொண்டி செய்து காட்றானா 
இல்லையான்னு!'' 
சொல்லிவிட்டுத் திண்ணையிலிருந்து வேகமாக இறங்கிய கதிர்வேலு வேக வேகமாக நொண்டி நொண்டி  நடந்து போனான். அது கோபமா, வீறாப்பா என்று புரியவில்லை!
விக்கித்துப் போன, வாயடைத்துப் போன கமலா  தன் பார்வையிலிருந்து மறையும் வரை கதிர்வேலுவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 
பத்து வயசுப் பையன் கதிர்வேலு! 
முட்டாள்தனமும் வெட்கமும் மண்டையில் இடிக்க மடியிலிருந்த அரளிக் கொட்டைகளைத் தூக்கி வீசிவிட்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் கமலா.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.