Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல்வாதிகளின் அதிகார மோதல்

Featured Replies

தமிழ் அரசியல்வாதிகளின் அதிகார மோதல்

S-04Page1Image0002-121eb85eb915262ac38cf38adbfa4e458f10c23d.jpg

 

-கபில்

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், எந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும், அத­னுடன் சேர்ந்து கொண்டு தமது மக்­க­ளுக்கு வச­தி­களை செய்து கொடுக்­கி­றார்கள், ஆனால் தமிழ் அர­சி­யல்­வா­திகள் எதிர்ப்பு அர­சியல் நடத்­தியே காலத்தைக் கடத்­து­கி­றார்கள் என்று அவர் உதா­ர­ணமும் காட்­டி­யி­ருந்தார்.

 

“தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக் கொள்­வதில் தான் அக்­க­றை­யாக இருக்­கி­றார்­களே தவிர, தமிழ் மக்­க­ளுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்­ணு­வ­தில்லை. இவர்­களின் சண்­டையால் தான் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டி­யதும் கூட கிடைக்­காமல் போகி­றது”

ஆக மொத்­தத்தில், இந்தச் சட்டப் போராட்டம் முடிய முன்­னரே, வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடிந்து விடப் போகி­றது. அது­வரை மாகா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் குழப்பம் நீடிக்­கவே போகி­றது. இந்த வழக்கு முடியும் போது, அதன் பலா­ப­லனை அனு­ப­விக்க இரண்டு பேருமே அதி­காரப் பத­வியில் இருப்­பார்­களா என்ற சந்­தே­கமும்  இருக்­கி­றது.  

முத­லா­வது வடக்கு மாகா­ண­ ச­பையின் ஆயுட் காலம் இன்னும் மூன்று மாதங்­க­ளுக்குள் முடியப் போகின்ற நிலையில், இதனை முன்­வைத்து தமிழ் அர­சியல் தரப்­புகள் போடு­கின்ற ஆட்டம் சாதா­ரண மக்­களின் சகிப்­புத்­தன்­மையை சோதிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது. 

கடந்த வாரம் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே யாழ்ப்­பா­ணத்தில் ஒரு பாட­சாலை நிகழ்வில் உரை­யாற்­றிய போது, “தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக் கொள்­வதில் தான் அக்­க­றை­யாக இருக்­கி­றார்­களே தவிர, தமிழ் மக்­க­ளுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்­ணு­வ­தில்லை. இவர்­களின் சண்­டையால் தான் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டி­யதும் கூட கிடைக்­காமல் போகி­றது” என்று கூறி­யி­ருந்தார்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், எந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும், அத­னுடன் சேர்ந்து கொண்டு தமது மக்­க­ளுக்கு வச­தி­களை செய்து கொடுக்­கி­றார்கள், ஆனால் தமிழ் அர­சி­யல்­வா­திகள் எதிர்ப்பு அர­சியல் நடத்­தியே காலத்தைக் கடத்­து­கி­றார்கள் என்று அவர் உதா­ர­ணமும் காட்­டி­யி­ருந்தார்.

வடக்கு மாகாண ஆளு­ந­ராக சில ஆண்­டுகள் பணி­யாற்­றிய அனு­பவம் அவ­ருக்கு உள்­ளது. தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் உள்ள நட்பும் அவ­ருக்கு இந்தக் கருத்தை வெளி­யிடும் சூழலை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கி­றது.

அவ­ரது இந்தக் கருத்தில் பல முரண்­பா­டுகள் இருந்­தாலும், ஒன்றை மட்டும் ஒப்­புக்­கொண்டு தான் ஆக வேண்டும். அதா­வது தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமக்குள் சண்­டை­போட்டுக் காலத்­தையும் ,காரி­யத்­தையும் கெடுத்துக் கொள்­வதில் கூடுதல் அக்­கறை செலுத்­து­கி­றார்கள் என்­பதே அது.

இதனை ஒரு சிங்­கள அர­சி­யல்­வாதி யாழ்ப்­பா­ணத்தில் வந்து சொல்லும் நிலை வந்­தி­ருப்­ப­தற்­காக தமிழ் அர­சி­யல்­வா­திகள் வெட்கித் தலை குனிந்து கொள்ளத் தான் வேண்டும்.

வடக்கு மாகாண சபை விட­யத்தை வைத்துக் கொண்டே, இந்த விட­யங்­களைப் பார்ப்­பது பொருத்­த­மா­ன­தாகப் படு­கி­றது.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக – பதவி நீக்­கப்­பட்ட அமைச்சர் டெனீஸ்­வரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.

அந்த வழக்கில், டெனீஸ்­வ­ரனை பதவி நீக்கம் செய்த உத்­த­ரவு செல்­லு­ப­டி­யா­னது அல்ல என்றும் , அவர் இன்­னமும் பத­வியில் நீடிக்­கிறார் என்றே நீதி­மன்றம் கரு­து­கி­றது எனவும், ஒரு உத்­த­ரவை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கி­யது.

ஒரு மாதத்­துக்கு முன்­ன­தாக இந்த உத்­த­ரவை வழங்­கியும், இது­வரை டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ராக செயற்­பட முத­ல­மைச்சர் அனு­ம­திக்­க­வில்லை.

டெனீஸ்­வரன் அமைச்­ச­ர­வையின் உறுப்­பி­ன­ராக இருக்­கிறார் என்­பதை, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உறுதி செய்து விட்­டது. முத­ல­மைச்சர் உள்­ளிட்ட 5 பேர் தான் ஒரு மாகாண அமைச்­ச­ர­வையில் இருக்க முடியும். இந்த நிலையில் நீதி­மன்ற உத்­த­ரவை அடுத்து, உங்­க­ளுடன் அமைச்­ச­ர­வையில் எத்­தனை பேர் இருக்­கி­றீர்கள் அவர்­களின் விப­ரங்­களைத் தாருங்கள் என்று ஆளுநர் கடிதம் அனுப்­பியும் முத­ல­மைச்சர் அதற்குச் சரி­யாகப் பதி­ல­ளிக்­க­வில்லை.

ஏனென்றால், டெனீஸ்­வ­ரனை விலக்கி அமைச்­சர்கள் பட்­டி­யலைக் கொடுத்தால் நீதி­மன்றத் தீர்ப்பை அவ­ம­தித்­தது ஆகி விடும். அவ­ரையும் சேர்த்துக் கொடுத்தால், அர­சி­ய­ல­மைப்பை மீறி­ய­தாகி விடும்.

அதனால், மேல்­மு­றை­யீடு என்று காரணம் காட்டி முத­ல­மைச்சர் இழுத்­த­டிக்க, ஆளு­நரோ, தனது அனு­ம­தி­யின்றி மாகாண அமைச்­ச­ர­வையைக் கூட்டக் கூடாது என்று உத்­த­ரவு போட்­டி­ருக்­கிறார்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தான் திட்­டங்கள் குறித்து முடிவு எடுக்­கப்­பட வேண்டும். அனு­ம­திகள் பெறப்­பட வேண்டும். இதனால் பல வாரங்­க­ளாக அமைச்­ச­ர­வையைக் கூட்ட முடி­யாத நிலையில் முத­ல­மைச்சர் இருக்­கிறார்.

எப்­ப­டியும் கடந்த வியா­ழக்­கி­ழமை உச்ச நீதி­மன்­றத்தின் மூலம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றத் தீர்ப்­புக்கு தடை­உத்­த­ரவு பெற்று விடலாம் என்று எதிர்­பார்த்த முத­ல­மைச்­ச­ருக்கு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது ஏமாற்­றத்­தையே அளித்­தி­ருக்கும்.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் அதற்­குள்­ளாகத் தனது உத்­த­ரவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்­லையேல், குறைந்­த­பட்சம் உச்­ச­நீ­தி­மன்­றத்தின் அடுத்த தவணை வரை இதே நிலை நீடிக்க வேண்டும்.

இதனால் மாகாண அரசின் செயற்­பா­டு­களில் தேக்கம் ஏற்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும், டெனீஸ்­வ­ரனும் தமக்­கி­டை­யி­லான ஈகோ பிரச்­சி­னைக்­கா­கவே இந்தச் சட்ட மோதலில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள். தாம் தவறு செய்­ய­வில்லை என்றும், மறு­த­ரப்பே தவ­றி­ழைத்­தது என்றும் நிரூ­பிக்­கவே இரண்டு தரப்­பி­னரும் முட்டி மோது­கின்­றனர்.

யாரா­வது ஒரு தரப்பு விட்டு விலகிப் போகு­மாறு ஆலோ­சனை கூறும் நிலையில் தமிழர் தரப்பில் மதிப்­புக்­கு­ரிய எவரும் இல்­லா­ததும் ஒரு குறையே.

இரண்டு பேருமே, தமது அதி­கா­ரத்தை நிரூ­பிப்­ப­தற்­காக நடத்தும் சட்டப் போராட்டம், மாகா­ண­ச­பையின் அதி­கா­ரத்தை இன்னும் மட்­டுப்­ப­டுத்தக் கூடிய நிலையை ஏற்­ப­டுத்தும் ஆபத்தும் இருக்­கி­றது.

முத­ல­மைச்­சரின் அதி­கா­ரத்தை குறைத்து, ஆளு­நரின் அதி­கா­ரத்தை அதி­கப்­ப­டுத்தும் உச்­ச­நீ­தி­மன்றத் தீர்ப்பு வெளி­யானால், அதன் ஆபத்தை அனு­ப­விக்கப் போவது தமிழ் மக்கள் தான்.

இந்த நிலையை உணர்ந்து தான் போலும், டெனீஸ்­வரன் ஆரம்­பத்­தி­லேயே தாம் மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்று நிரூ­பிக்­கவே இந்த வழக்கைத் தொடர்ந்­த­தாக நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

பின்னர் ஒரு கட்­டத்தில் அவர், முத­ல­மைச்சர் தனது தவறை ஏற்றுக் கொண்டால், வழக்கில் இருந்து விலகி விடுவேன் என்றும் கூறி­யி­ருந்தார்.

ஆக மொத்­தத்தில், இந்தச் சட்டப் போராட்டம் முடிய முன்­னரே, வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடிந்து விடப் போகி­றது. அது­வரை மாகா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் குழப்பம் நீடிக்­கவே போகி­றது.

இந்த வழக்கு முடியும் போது, அதன் பலா­ப­லனை அனு­ப­விக்க இரண்டு பேருமே அதி­காரப் பத­வியில் இருப்­பார்­களா என்ற சந்­தே­கமும் இருக்­கி­றது.

அப்­ப­டி­யான நிலை ஏற்­பட்டால், மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடிந்த பின்னர் - இந்த வழக்கில் வெற்­றியைப் பெற்று இவர்கள் எதனைச் சாதிக்கப் போகி­றார்கள் என்றும் தெரி­ய­வில்லை.

ஆனால் , அது­வரை வடக்கு மாகாண மக்­க­ளுக்கு மாகா­ண­ச­பையின் ஊடாக முழு­மை­யான பணி­களை ஆற்ற முடி­யாத நிலை தான் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதற்குத் தானா இவர்கள் ஆசைப்­பட்­டார்கள்?

வடக்கு மாகா­ண­சபை வினைத்­தி­ற­னுடன் செயற்­ப­ட­வில்லை என்ற தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மத்­தியில், இந்த வழக்கு வேறு அதன் செயற்­பா­டு­க­ளுக்கு முடக்­கத்தை ஏற்­ப­டுத்தும் சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இதன் பாதிப்­பு­களை முத­ல­மைச்­சரோ, அமைச்­சரோ எதிர்­கொள்ளப் போவ­தில்லை. அவர்கள் தமக்­கு­ரிய ஊதியம், வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்றுக் கொள்­வார்கள். ஆனால், சபையின் செயற்­பா­டு­களில் ஏற்­படும் பாதிப்­பு­களால் சாதா­ரண மக்­க­ளுக்­கான திட்­டங்கள் தான் தொய்வு காணும். அது அவர்­களைத் தான் பாதிக்கும்.

வடக்கு மாகாண சபை உருப்­ப­டி­யாக எதையும் செய்­ய­வில்லை என்று குற்­றம்­சாட்டும், டக்ளஸ் தேவா­னந்தா போன்­ற­வர்கள், அடுத்த முறை சபையின் அதி­காரம் தமக்குக் கிடைத்தால், வடக்கை சிங்­கப்­பூ­ராக மாற்­றுவோம் என்று இப்­போதே தம்­பட்டம் அடிக்கத் தொடங்கி விட்­டார்கள்.

அதா­வது மாகாண சபைக்கு தற்­போ­துள்ள அதி­கா­ரங்­களைக் கொண்டே வடக்கை அபி­வி­ருத்தி செய்ய முடியும் என்று காண்­பிப்போம், என்­பது அவர்­களின் வாக்­கு­றுதி.

ஆனால் முத­ல­மைச்­சரோ, ஆரம்­பத்தில் இருந்தே மாகாண அர­சு­களின் அதி­காரப் போதா­மையை தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்­தவர். இதனை ஒரு ஓட்டைப் பாத்­திரம் என்று தான் அவர் கூறி வந்­தி­ருக்­கிறார்.

அத்­த­கைய ஓட்டைப் பாத்­தி­ரத்தில், நீர் நிரப்பும் வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்திக் கொள்­வதை விட, அதில் உள்ள ஓட்­டையை இன்னும் பெரி­தாக்கும் வேலையைத் தான் இப்­போது முத­ல­மைச்­சரும், டெனீஸ்­வ­ரனும் செய்து கொண்­டி­ருக்­கின்­றனர்.

இந்­த­நி­லையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார், “முத­ல­மைச்சர் நான்கு ஆண்­டு­க­ளாக மாகா­ண­சபை அதி­கா­ர­மற்­றது என்று கூறி வந்தார். அதனை ஒரு வழக்கின் மூலம் நிரூ­பித்­தி­ருக்­கிறார் டெனீஸ்­வரன் என்று பாராட்டுத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அத்­துடன் அவர் நிற்­க­வில்லை. அடுத்த மாகா­ண­சபைத் தேர்­தலில் நாங்­களும் போட்­டி­யிடப் போகிறோம், எங்­க­ளையும் ஆட்­சியில் அமர்த்தி, மாகாண சபைக்கு அதி­காரம் ஒன்­று­மில்லை என்று நிரூ­பிக்க வாய்ப்புத் தர வேண்டும் என்று அவர் கூறி­யுள்ள கருத்து வேடிக்­கை­யா­னது.

மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் திட்­டங்­களை செய்து கொடுப்போம் என்று வாக்­கு­றுதி கொடுப்­பது தான் வழக்­க­மான அர­சியல்.

ஆனால், மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்று காட்­டு­வ­தற்கு, தமக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று கோரு­வதை என்­ன­வென்று கூறு­வது?

விக்­னேஸ்­வ­ரனும், டெனீஸ்­வ­ரனும் மாகா­ண­ச­பைக்கு அதி­கா­ர­மில்லை என்று நிரூ­பித்து விட்­டார்கள் என்­பதை ஒப்­புக்­கொள்ளும் கஜேந்­தி­ர­குமார், தானும் அதனைத் தான் நிரூ­பிக்கப் போகிறேன் என்று கூறப்­ப­டு­வது அபத்தம்.

மாகாண சபை தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்றும் ஒரு கட்­ட­மைப்பு அல்ல. அதற்கு போதிய அதி­கா­ரங்­களும் இல்லை. டக்ளஸ் தேவா­னந்தா மாத்­திரம் தான் திருப்­தி­யான ஒன்­றாக இதனை ஏற்றுக் கொள்­கிறார்.

மற்­றைய எல்­லோரும், மாகாண சபையின் அதி­கா­ரங்கள் போதாது என்று தான் கூறு­கி­றார்கள். அதனால் தான் அதற்கு மேலான ஒரு அரசியல் தீர்வு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை விளங்கிக் கொள்ளாதது போல, மாகாணசபைக்கு அதிகாரமில்லை என்று நிரூபிக்கப் போவதாக கிளம்பியிருக்கிறார் கஜேந்திர குமார்.

ஒரு நீண்ட ஆயுதப் போராட்டம், அதனால் ஏற்பட்ட அழிவுகளைச் சந்தித்த மக்களுக்கு ,கிடைக்கும் அதிகாரத்தைக் கொண்டு நல்லதைச் செய்ய வேண்டியது தான் இப்போது முக்கியம். ஒரு பக்கத்தில் அரசியல் உரிமைக்கான போராட்டம் நடக்க, கிடைத்துள்ள அதிகாரங்களை வைத்து மக்களுக்கு நல்லதைச் செய்ய முனைவது தான் முக்கியம்.

அதை விடுத்து, கஜேந்திர குமார் தரப்பு இப்போதே அதிகார மல்லுக்கட்டலுக்கு தாம் தயாராகிறோம் என்று காட்ட முனைகிறது.

இந்தச் சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தால், ஆளுநர் றெஜினோல்ட் குரே, தமிழ் அரசியல்வாதிகள் பற்றிக் கூறிய கணிப்பை முற்றிலும் தவறானது என்று தூக்கியெறிந்து விட முடியாது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-29#page-4

  • தொடங்கியவர்

தமிழினவாத அரசியலினால் ஒருபோதும் வெற்றியீட்ட முடியாது 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.