Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்­தர்ப்­பத்தை இனி­யா­வது பயன்­ப­டுத்த வேண்டும்

Featured Replies

சந்­தர்ப்­பத்தை இனி­யா­வது பயன்­ப­டுத்த வேண்டும்

 

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு காணும் முயற்­சி­யா­னது தொடர்ந்தும் இழு­பறி நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்ற நம்­பிக்கை தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்­தது. கடந்த கால படிப்­பி­னை­களை பாட­மாகக் கொண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காணும் என்ற எதிர்­பார்ப்பு மேலோங்­கி­யி­ருந்­தது. ஆனாலும் தற்­போ­தைய நிலையை எடுத்­து­நோக்­கினால் அர­சியல் தீர்­வுக்­கான முயற்சி கைகூ­டுமா என்­பது பெரும் கேள்­விக்­கு­றி­யான நிலை­யாக மாறி­யி­ருக்­கின்­றது.

மாறி­மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் அர­சியல் தீர்வு தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­த­போ­திலும் அதற்­கான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. எமது நாட்டின் வர­லாற்றை எடுத்­துக்­கொண்டால் ஆளும் கட்­சி­யினர் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண முயற்சி எடுப்­பதும் அதனை எதிர்க்கட்­சிகள் எதிர்ப்­ப­து­வுமே வழ­மை­யான நட­வ­டிக்­கை­யாக இருந்­து­வந்­துள்­ளது.

தமிழ் மக்­களின் தலை­வர்கள் மூன்று தசாப்­த­கா­லத்­துக்கு மேலாக அகிம்சை வழியில் உரி­மை­க­ளுக்­காக போரா­டி­னார்கள். தந்தை செல்­வ­நா­யகம் காலத்தில் சிங்­கள தலை­வர்­க­ளான டட்லி சேன­நா­யக்க, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோ­ருடன் ஒப்­பந்­தங்­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தார். ஆனால் அந்த ஒப்­பந்­தங்கள் கூட பௌத்­த­பிக்­கு­க­ளி­னதும் எதிர்க்­கட்­சி­க­ளி­னதும் எதிர்ப்­பு­க­ளினால் கிழித்து எறி­யப்­பட்­டி­ருந்­தன. ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டங்கள் தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து மூன்று தசாப்­த­கா­ல­மாக தமிழ் இளைஞர், யுவ­திகள் ஆயு­த­மேந்தி அர­சியல் உரி­மை­க­ளுக்­காக போராடும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. அந்த போராட்­டமும் 2009ஆம் ஆண்டு மே மாதம் தோல்­வி­யு­றச்­செய்­யப்­பட்­டது.

போராட்ட காலத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தி­களான ஜே.ஆர். ஜெய­வர்­தன, ஆர். பிரே­ம­தாச, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகி­யோரின் காலத்­திலும் விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. 1994ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆட்­சிக்கு வந்­த­போது விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் அர­சியல் தீர்வு குறித்த பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் காலத்தில் அதி­காரப் பகிர்­வுக்­கான திட்­ட­வ­ரைவு தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. எல்­லை­க­ளற்ற சமஷ்டி கட்­ட­மைப்­பைக்­கொண்ட இந்த வரை­வா­னது 2000ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­திலும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. ஆனால் இதற்கு அன்­றைய எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­துடன் பாரா­ளு­மன்­றத்தில் திட்ட நகல்­களை எரி­யூட்­டி­யி­ருந்­தது. இந்தக் காலத்தில் பலம்­பெற்­றி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களும் அந்தத் தீர்­வுக்கு இணங்­க­வில்லை. இதனால் சந்­தி­ரிகா குமா­ர­துங்க காலத்தில் அர­சியல் தீர்­வுக்­கான முயற்சி தோற்­றுப்­போ­னது.

இத­னை­ய­டுத்து 2001ஆம் ஆண்டு சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஆட்சி அமைக்­கப்­பட்­டது. இதன்­போது தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் நோர்­வேயின் அனு­ச­ர­ணை­யுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்டு பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது. சமஷ்டி தீர்­வுக்­கான ஒஸ்லோ உடன்­ப­டிக்­கையும் இதன்­போது மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனாலும் இந்த சமா­தான முயற்­சியும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இதன்­பின்னர் மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­தை­ய­டுத்தும் புலி­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்த முயற்சி எடுக்­கப்­பட்­டது. ஆனாலும் அந்த முயற்சி கைகூ­டா­மை­யினால் யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் பின்­னரே இறுதி யுத்­தத்தில் விடு­தலைப் புலிகள் தோல்­வி­ய­டை­யச்­செய்­யப்­பட்­டனர். புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­போ­திலும் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­க­மா­னது இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்வை இல­கு­வாக கண்­டி­ருக்க முடியும். ஆனால் அவர்கள் அதற்­கான முயற்­சி­யினை எடுக்­க­வில்லை.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் 2011ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் 2012ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் வரையில் அர­சாங்கத் தரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­ய­போதிலும் இத­ய­சுத்­தி­யு­ட­னான பேச்­சுக்கள் இடம்­பெ­ற­வில்லை. இந்தப் பேச்­சுக்­க­ளி­லி­ருந்து அர­சாங்கத் தரப்­பினர் வில­கிக்­கொண்­டனர். இதன் பின்னர் அர­சியல் தீர்­வுக்­கான முயற்சி எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்­த­நி­லை­யில்தான் நல்­லாட்சி அர­சாங்கம் 2015ஆம் ஆண்டு பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்த ஆட்சி உரு­வா­னது. இது­வரை காலமும் ஆளும்­கட்­சி­யாக ஐக்­கிய தேசியக் கட்சி இருந்­த­போது எதிர்க்­கட்­சி­யான சுதந்­திரக் கட்சி அர­சியல் தீர்வு முயற்­சி­களை எதிர்த்து வந்­தது. அதே­போ­லவே சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஆட்சி இருந்­த­போது ஐக்­கிய தேசி­ய­கட்சி எதிர்க்­கட்­சி­யாக எதிர்ப்பு வெளி­யிட்­டது. ஆனால் நல்­லாட்­சியில் இந்த இரு பிர­தான தேசியக் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­த­மை­யினால் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­பது சுல­ப­மான விடயம் என்ற நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

தமிழ் மக்­களும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னரும் அர­சியல் தீர்வு காண­மு­டியும் என்ற நம்­பிக்­கையைக் கொண்­டி­ருந்­தனர். நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து கால­தா­ம­தத்தின் மத்­தியில் அர­சியல் தீர்­வுக்­கான முயற்சி எடுக்­கப்­ப­ட்­டது. புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இது­தொ­டர்­பான இடைக்­கால அறிக்­கையும் சமர்ப்­பிக்­க­ப­்பட்டு அர­சியல் யாப்பு சபையில் விவா­திக்­கப்­பட்­டது. இருந்­த­போ­திலும் தற்­போது இந்த முயற்­சி­யா­னது தடைப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றது.

புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. பொது எதி­ர­ணி­யினர் இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் முன்­னணி வகித்து வரு­கின்­றனர். கடந்த உள்­ளூ­ராட்­சித்­தேர்­தலில் பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஏற்­பட்ட பின்­ன­டை­வா­னது புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சிக்கு பெரும் முட்­டுக்­கட்­டை­யாக அமைந்­தி­ருக்­கின்­றது. எதிர்­கா­லத்தில் அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்சி கைகூ­டுமா என்ற கேள்வி தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. தற்­போ­தைய இந்த சந்­தர்ப்பம் நழு­வ­வி­டப்­ப­டு­மானால் அர­சியல் தீர்வு என்­பது எதிர்­கா­லத்தில் சாத்­தி­ய­மா­காத நிலைமை ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­ச­நிலை தோன்­றி­யி­ருக்­கின்­றது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தின் தலை­வி­யு­மான சந்­தி­ரிகா குமா­ர­துங்க யாழ்ப்­பா­ணத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்­றின்­போது கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஒரு­கட்சி ஒரு விட­யத்தைச் செய்­யும்­போது மற்­றைய கட்சி அதனை எதிர்க்கும். ஆனால் தற்­போ­தைய சூழ­லா­னது சிறந்­த­தொரு சந்­தர்ப்­ப­மாகும். இரு பிர­தான கட்­சிகள் இணைந்து ஆட்சி அதி­கா­ரத்தில் இருக்­கின்­றன. எனவே இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி அர­சியல் தீர்­வினை காண­வேண்டும் என்று சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்த நிகழ்வில் கலந்­து­கொண்ட வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனும் சுயாட்சி தந்து எம்மை நாமே ஆளு­வ­தற்­கான நிலையை ஏற்­ப­டுத்த வேண்டும். மத்­தி­யி­லி­ருந்­து­கொண்டு தாய்க்­கோழி தனது குஞ்­சுகள் வளர்­வதை பக்­கு­வ­மாக பார்த்­து­வ­ரு­வதைப் போல் எங்­களை நீங்கள் பார்க்க வேண்டும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். முத­ல­மைச்­சரின் கருத்­தா­னது தமிழ் மக்­களின் எதிர்­பார்­ப­்பு­களை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. இதேபோன்றே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கடந்தகால படிப்பினைகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டவர் என்பதனால் யதார்த்தத்தை பேசியிருக்கின்றார்.

உண்மையிலேயே நாட்டில் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதாகும். அத்தகைய தீர்வைக் காண்ப­தற்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நல்லதொரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதும் இந்த சந்தர்ப்பம் நீடித்து வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் அரசியல் தீர்வு என்பது வெறும் கானல்நீராகவே மாறிவிடும். தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தீர்வைக்காண சகலரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

இந்த விடயத்தில் அரசியல் சுயநலன்களைக் கருத்தில்கொண்டு செயற்பட்டால் நாடு மீண்டும் பின்னோக்கிச் செல்லும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-04#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.