Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனை இன்னொரு பழிவாங்கல் மட்டுமே

Featured Replies

மரண தண்டனை இன்னொரு பழிவாங்கல் மட்டுமே

 

இலங்கையில் இன்று அனைத்து சமூ­கங்களும் முகங்­கொ­டுக்கும் மிகப்­பெ­ரிய பிரச்­சினை போதை­ப்பொருள் பாவ­னை­யாகும். மக்கள் மத்­தியில் வெகு­வாக பர­வி­வரும் நோய் என்றே இதனை கூற வேண்டும். இந்த நாட்டில் யுத்தம் நில­விய காலங்­களில் ஆயுத மோதல், சுட்­டுக்­கொலை என்ற செய்­திகளையே செவிமடுக்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் யுத்­தத்தின் பின்னர் இந்த நாட்டில் ஜன­நா­யகம், சமூக ஒற்­றுமை, அமைதி நில­வு­கின்­றது என கூறப்படுகின்ற போதிலும் அனைத்து பகு­தி­க­ளிலும் பொது­வாக கேட்கும் செய்தி போதைப்­பொருள் கடத்­த­லாக மாறி­யுள்­ளது. போதைப்­பொருள் கடத்­தலின் மைய­மாக இலங்கை மாறி­யுள்­ளது என்ற பார­தூ­ர­மான குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசிய வல­யத்தில் அதி­க­ளவில் போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பரி­மாற்றல் இடம்­பெறும் நாடாக அண்மைக் கால­மா­கவே இலங்கை அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் ஆசிய வல­யத்தில் அதி­க­ளவில் போதைப்­பொருள் பாவ­னை இடம்பெறும் நாடா­கவும் அதன் மூல­மாக அதிக குற்­றச்­செ­யல்கள் பதி­யப்­படும் நாடா­கவும் கூட இன்று இலங்கை தரப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

அதேபோல் போதை­ப்பொருள் கடத்தலில் ஈடு­படும் குற்­ற­வா­ளிகள் சுதந்­தி­ர­மாக தமது குற்­றச்­செ­யல்­களை, சட்டவிரோத வியா­பா­ரங்­களை நடத்தும் இட­மாக எமது நாட்டின் சிறைச்­சா­லைகள் இன்று மாற்றம் பெற்­றுள்­ளன. இவ்­வா­றான போதைப்­பொருள் கடத்தல் குற்­ற­வா­ளிகளுக்கு சிறைச்­சாலைகள் மிகவும் பாது­காப்­பான இட­மாக கரு­தப்­ப­டு­கின்­றது. சிறைச்­சா­லைகளுக்குள் இருந்­து­கொண்டு மிக அதி­க­மாக தொலை­பேசி அழைப்­புகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவற்றில் சர்­வ­தேச தொலை­பேசி அழைப்­புகள் அதி­க­மாக பதி­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அண்­மையில் விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் கூறி­யி­ருந்தார்.

இவ்­வா­றான ஒரு நிலையில்தான் போதைப்­பொருள் கடத்தல் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்டும், அதற்­கான நட­வ­டிக்­கை­களை தான் எடுப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் கூறி­யி­ருந்தார். இந்த கருத்­தினை அடுத்து நாட்டில் சமூக ஆர்­வ­லர்கள் மத்­தி­யிலும் மனித உரிமைகள் அமைப்­புகள் மத்­தி­யிலும் அர­சியல் கட்­சிகளுக்கிடை­யிலும் பொது மக்கள் மத்­தி­யிலும் மரண தண்­டனை குறித்த வாதப்பிரதிவாதங்கள் எழுந்­துள்­ளன.

குற்­றச்செயல்­களை குறைக்க அல்­லது குற்­றங்­களை தடுக்க மரண தண்­டனை ஒரு தீர்வா? இதுவே இன்­றைய கேள்­வி­யாகும். குற்­றங்­களை தடுக்க சட்­டங்கள் உள்­ளன. ஆனால் இந்த சட்­டங்­களின் மீது அச்சம் இல்­லா­மையே குற்­றங்கள் அதி­க­ரிக்க காரணம், ஆகவே சட்­டங்­களை கடி­னப்­ப­டுத்­து­வதன் மூல­மாக குற்­றங்­களை தடுக்க முடியும். அதேபோல் குற்றம் செய்­தவர் அதற்­கான விளைவை ( தண்­டனை ) அனு­ப­வித்தே ஆக­வேண்டும் என்­பது ஒரு சரா­சரி கருத்­தா­கவும் உள்­ளது.

ஒரு மனிதன் சமூ­கத்­துக்கு ஆபத்­தா­ன­வ­னாக இருக்­கிறான்;பாவத்தைச் செய்­கிறான் என்றால் சமூ­கத்தின் நன்­மையைக் கருதி அவனைக் கொன்­று­விட வேண்டும் என்ற தர்க்­கமே மறை­மு­க­மாக இன்று அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக உள்­ளது. மிகப் பழங்­காலம் தொட்டு கடு­மை­யான குற்­றங்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­படும் மர­புகள் காணப்­பட்­டுள்­ளன.அதில் முக்­கி­ய­மாக கொலைக் குற்­றங்­களை கூற­மு­டியும். எல்லா நாடு­க­ளிலும் கொலைக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­டுதல் ஏதேனும் ஒரு காலப்­ப­கு­தியில் நிலவி வந்­துள்­ளது. எனினும் கொலை மட்­டுமே கடு­மை­யான குற்றம் அல்ல.

பல்­வேறு நாடுகள் அர­சுகள் அவர்­களின் கொள்கை, தீர்­மா­னங்­க­ளுக்கு அமைய சில குற்­றங்­களை கடு­மை­யான குற்­றங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளன. இன்று இலங்­கையும் அவ்­வாறே போதைப்­பொருள் கடத்தல்,அத­னுடன் கூடிய பாரிய சமூக விரோத செயற்­பா­டுகள் என்­ப­வற்றை கடு­மை­யான குற்­றங்களாக கூறி வரு­கின்­றது.

மரண தண்­டனை என்­பது தூக்கு தண்­டனை மட்­டு­மே­யல்ல. இத் தண்­டனை நிறை­வேற்­றப்­படும் முறையும் நாட்­டுக்கு நாடு, காலத்­துக்கு காலம் வேறு­பட்ட ஒன்­றாகும்.நவீ­னத்­துவ காலத்­திலும் இன்றும் வன் குற்­றங்கள், சமூக சீர்­கேடுகளை பார்க்­கையில் ஒவ்­வொரு முறையும் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும் போது மரண தண்­டனை சரியே என்றும் தண்­ட­னைகள் கடு­மை­யானால்தான் குற்­றங்கள் குறையும் என்றும் அபத்­த­மான ஒரு கருத்­தியல் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

அயல் நாடான இந்­தி­யாவில் டெல்லி நகரில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்டு கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­ட­போது, இலங்­கையில் புங்குடுதீவு பிர­தே­சத்தில் அதே­போன்று ஒரு பாட­சாலை மாணவி கூட்டு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட போது, மேலும் பல சம்­ப­வங்­களில் சிறு­மிகள் வன் கொடு­மை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்ட போதெல்லாம் உணர்ச்சி வசப்­பட்டு மரண தண்­டனை வேண்டும் என்ற கொந்­த­ளிப்புக் குரல்கள் சமூ­கத்தில் எழுப்­பப்­பட்­டன. இன்றும் பல குற்­றங்­க­ளுக்கு அவ்­வாறே எழுப்­பப்­பட்டும் வரு­கின்­றன.

இவ்­வா­றான சீற்­றமே பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கடும் சட்­டங்­களை வலுப்­ப­டுத்த உந்­து­த­லாக இருந்­துள்­ளது.நியா­யப்­ப­டுத்­தவும் ஏது­வாக அமைந்து வரு­கின்­றது. மரண தண்­ட­னையை நீதி­மன்­றங்­களும் பிற நிறு­வ­னங்­களும் நியாயப்படுத்­தும்­போதும் முக்­கி­ய­மாக இரண்டு அம்­சங்­களை முன்­வைப்பர். சமூ­கத்தின் அறச் சீற்­றத்தைத் தணிக்க வேண்டி இந்தத் தண்­டனை அளிக்க வேண்­டி­யுள்­ளது என்­பதும், அதேபோல் இப்­ப­டி­யான கொடுங்­குற்­றங்கள் சமூ­கத்தில் நிக­ழாமல் தடுப்­ப­தற்கு ஒரு அச்­சு­றுத்தும் கரு­வி­யாக மரண தண்­டனை அவ­சியம் என்­ப­தாகும்.

ஆனால் இவ்­வாறு மரண தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும் நபர்கள் தான் நேர­டி­யாக குற்­றங்­களை செய்­துள்­ள­னரா என்ற கேள்­வியும் பல சந்­தர்ப்­பங்­களில் எழுப்­பப்­படும். குற்­றச்­செ­யலில் தெரிந்தோ தெரி­யா­மலோ ஏதோ ஒரு வகையில் சிறு உத­விகள் புரிந்­த­வர்­க­ளாக மட்­டுமே இவர்கள் இருக்க வாய்ப்­புள்­ளது. நேர­டி­யாக தொடர்­பு­கொண்ட நபர்கள் யார்? என்­ன­வா­னார்கள் என்­பது கேள்­வி­யாக மட்­டுமே அமையும்.

 ஆகவே குற்­றத்தின் நேரடிப் பங்­கேற்­பா­ளர்கள் கிடைக்­கா­த­தற்­காக இப்­படிக் கிடைத்­த­வர்­களைப் ‘பதி­லி’­யாகத் தூக்குக் கயிறுக்கு அனுப்­பு­வது எப்­படி அற அடிப்­ப­டை­யிலோ சட்ட அடிப்­ப­டை­யிலோ நியா­ய­மாகும் என்ற கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றது. அரசும் நீதி­மன்­றங்­களும் இப்­படிப் ‘பதிலி’ மரண தண்­ட­னை­களை நிறை­வேற்­று­வது என்­பது பழி­வாங்­க­லன்றி வேறென்­ன­வாக இருக்க முடியும்.

அச்­சு­றுத்தல் என்­கிற அடிப்­ப­டையில் தண்­ட­னையை தெளி­வு­ப­டுத்தும் போது மூன்று கார­ணி­களை சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். ஒன்று தண்­டனை கிடைக்கும் என்­கிற அச்சம் மக்­களைக் குற்றச் செயல்­க­ளி­லி­ருந்து தடுக்கும். இரண்­டா­வது, தண்­டனை கிடைக்கும் என்­கிற அச்சம் ஒரு குற்­ற­வா­ளியை மீண்டும் குற்றம் புரி­வ­தி­லி­ருந்து தடுக்கும். மூன்­றா­வது ஒரு குற்­ற­வா­ளிக்குக் கொடுக்­கப்­படும் தண்­டனை மற்­ற­வர்­களைக் குற்றச் செயல்­க­ளி­லி­ருந்து தடுக்கும். கடு­மை­யான குற்­றங்­க­ளுக்கு கடு­மை­யான தண்­ட­னைகள் வழங்­கப்­பட வேண்டும் என்­கிற கருத்து இந்த அடிப்­ப­டை­யி­லி­ருந்­துதான் உரு­வா­கி­றது.

ஆனால் மரண தண்­டனை என்­பது இன்­னொரு பழி­வாங்கல் மட்­டு­மே­யாகும். குற்­ற­வா­ளிக்கு அவ­னது குற்­றத்­துக்­கான தண்­டனை மரண தண்­டனை என்றால் அது எந்த வகை­யிலும் நிக­ரா­காது. சட்டம் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தண்­டனை என்­பதன் மூல­மாக சட்­டத்தால் அனை­வரும் கட்­டுப்­பட்­ட­வர்கள் என்ற அர்த்தம் புல­னா­கின்­றது. அதனை வர­வேற்க வேண்டும். ஆனால் அதற்கு அப்பால் ஒன்றும் இல்லை.

ஒரு கொலைக்­குற்­ற­வா­ளிக்கு அவன் குற்­ற­வாளி என்ற தீர்ப்பு உறு­தி­யாகிய பின்னர் சட்டம் என்ற பெயரில் அவ­னுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றது என்றால் சட்டம் என்ற பெயரில் அர­சாங்­கமும் அதே கொலைக் குற்­றத்தை செய்­கின்­றது என்­பதை மறுக்க முடி­யாது. எந்தக் கொலையை குற்றம் என சட்டம் கூறு­கின்­றதோ, அதே கொலையை தான் சட்­டமும் செய்­கின்­றது என்ற தர்க்கம் எழு­வதை நிரா­க­ரிக்­கவும் முடி­யாது.

இது கொலைக் குற்­றத்­துக்கு மட்டும் அல்ல, எந்த குற்­றத்தில் நபர் குற்­ற­வாளி ஆகின்­றாரோ அவ­ருக்கும் மரண தண்­டனை என்­பது சட்­டத்தின் பிர­கா­ரமும் கொலை­யா­கவே அமையும் என்­பதே சமூக ஆர்­வ­லர்கள், மனித உரிமைகள் அமைப்­பு­களின் கருத்­தாக உள்­ளது. மக்­களின் பெயரின் சட்­ட­மாக இந்த கொலை­களை அர­சாங்கம் செய்­வ­தா­கவே குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. ஆகவே மரண தண்­டனை ஏனைய கொலை­களை விடவும் மிகக்­கொ­டு­மை­யான கொலை­யாகும்.

சட்­டத்­தையும், பகுத்­த­றி­வையும், உணர்­சிகள் உறைந்­து­போன தர்க்­கங்­களை முன்­வைத்து இந்த கொலைகள் நடத்­தப்­ப­டு­வது சரியா என்ற கேள்வி நியா­ய­மான கேள்­வி­யாகும். உலக அளவில் மரண தண்­டனை தவ­றான தண்­டனை என பல­மான குரல் எழுப்­பப்­ப­டு­கின்­றது. மனி­தா­பி­மா­ன­மற்ற செயற்­பாடு என்ற போர்க்­கொடி உலக அரங்கில் தூக்­கப்­ப­டு­கின்­றது. பிரித்­தா­னிய கால­னித்­துவ நாடு­களின் கீழ் நாமும் இருந்த காலம் தொடக்கம் மரண தண்­டனை சட்­ட­மாக பின்­பற்­றப்­பட்­டு­வந்த போதிலும் இப்­போது 50 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக நாம் மரண தண்­டனை என்ற விதியை மாற்றி அதனை ஆயுள் தண்­ட­னை­யாக பின்­பற்றி வரு­கின்றோம்.

குற்றம் ,அதற்­கான தண்­டனை இவை அனைத்­தையும் ஒரு பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­யாக பார்க்க முடி­யாது. எனினும் மரண தண்­ட­னையை ஆத­ரிக்கும் பலரும் இதனை குற்­றத்­துக்­கான பழி­வாங்கும் தண்­டனை என்ற ரீதி­யிலே கூறு­கின்­றனர். எனினும் போதைப்­பொருள் கடத்தல், அல்­லது அத்­துடன் கூடிய வன் கொடுமை குற்­றங்கள் என்­பன வெறு­மனே நபர்கள் சார்ந்த பிரச்­சி­னை­யாக கவ­னித்து கருத்­துக்­களை முன்­வைப்­பதை விடவும் அதனை சமூக ரீதி­யான பிரச்­சி­னை­யாக கவ­னத்தில் கொள்­ள­வேண்டும்.

இன்று உலகில் 180 க்கும் அதி­கமான நாடு­களில் மரண தண்­டனை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாத,அவர்­களின் அர­சியல் சாச­னங்­களில் சட்டக் கோவை­களில் நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்ற நிலையில் எம்மைப் போன்ற மனி­தா­பி­மான அடை­யாளம் கொண்ட நாடு­களில் புதி­தாக மரண தண்­ட­னையை கொண்­டு­வ­ரு­வது என்­பது மனி­தா­பி­மானம் சார் மிகப்­பெ­ரிய கேள்­வியை எழுப்பும்.

சவூதி போன்ற நாடு­களில் ஆண்­டு­தோறும் நூற்­றுக்கும் அதி­க­மானவர்களுக்கு மரண தண்­டனை வழங்கப்படுகின்­றது. சில நாடுகள் தவிர்ந்த ஏனைய இஸ்­லா­மிய நாடு­க­ளிலும் மரண தண்­டனை உள்­ளது. ஆனால் குற்­றங்கள் குறைந்­த­தற்­கான புள்­ளி­வி­ப­ரங்­களை அவ­தா­னிக்க முடி­ய­வில்லை.

ஆகவே குற்­றங்­க­ளுக்கு நிவா­ரணம் மரண தண்­டனை அல்ல. அனைத்து குற்­றங்­க­ளுக்கும் மரண தண்­டனை இல்­லாத போதிலும் மரண தண்­டனை ஒரு சட்­ட­மா­வது குறித்து சிந்­திக்க வேண்டும்.

குற்றம் என்­பது ஒரு சமூக நிகழ்வு அந்த குற்­றத்தில் இருந்து சமூகம் தப்­பி­த்து­க்கொள்ளும் முயற்­சி­யாகக் கூட மரண தண்­டனை அமை­யலாம். குற்­றத்தை பலர் உரு­வாக்­கி­விட்டு குற்றம் நிகழ்ந்த பின்னர் ஒரு­வரை மாத்­திரம் தண்­டிப்­பது ஏற்­று­க் கொள்­ளக்­கூ­டி­யது அல்ல. மனித உயிர் வேண்­டு­மென்று திட்­ட­மிட்டு பறிக்­கப்­படக் கூடாது என்­பதே மனித உரி­மைகள் சார் அமைப்­பு­களின் கருத்­தாகும்.

ஆகவே சட்ட துரி­தப்­ப­டுத்தல் அவ­சி­ய­மாக உள்­ளது. எவ்­வா­றான சட்­டங்­களை கொண்­டா­வது இந்த நட­வ­டிக்­கை­களை தடுக்க வேண்டும் . இதில் வேடிக்கை என்­ன­வெனில், அர­சாங்க தரப்­பி­ன­ராக இருக்­கட்டும் பொலிஸ் தலை­மை­க­ளாக இருக்­கட்டும் குற்­றங்கள் நடக்­கின்­றன,ஆதா­ரங்கள், சாட்­சிகள் எம்­மிடம் உள்­ளன. காணொ­ளிகள், தொலை­பேசி அழைப்­புகள், கடத்தல் விப­ரங்கள் யார் யார் தொடர்பு என்ற அனைத்­து விடயங்களும் உள்­ளன என பிர­சித்­தி­யாக ஊட­கங்கள் முன்­னி­லையில் கூடு­கின்­றனர். ஆனால் ஏன் அத்­தனை சாட்­சிகள் இருந்தும் அதே குற்றம் மேலும் இடம்­பெற அனு­ம­திக்­கின்­றனர்.

அர­சியல்வாதி­க­ளுக்கும் பாதாள உலக கோஷ்­டி­க­ளுக்கும் இடையில் தொடர்­புகள் உள்­ள­தாக பாது­காப்பு துறை­யினர் வெளிப்­படை­யாக குற்றம் சுமத்­து­கின்­றனர். செய்தித் தாள்­களில் வெளிப்­ப­டை­யாக எழு­தப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் நேர­டி­யாக பல­ரது பெயர்­களை முன்­வைத்து குற்றம் சுமத்­து­கின்­றனர். ஆனால் இறு­தியில் அனைத்­துமே மூடி மறைக்­கப்­ப­டு­கின்­றன. அப்­ப­டி­யானால் இந்த போதைப்­பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்­றங்கள் அனைத்­திற்கும் மூல காரணம் என்ன என்­பது தெரி­கின்­றது அல்­லவா.

பாதாள உலக கோஷ்­டி­களை கைது செய்­தாலே நாட்டில் பாரிய சம்­ப­வங்கள் குறை­வ­டைந்­து­விடும். முன்­னைய காலத்தில் நடந்­ததை கூறும் அர­சாங்கம் ஏன் இப்­போது அதனை செய்ய முடி­யாத நிலைமை உள்­ளது என்ற கேள்வி அனைத்து மக்கள் மத்­தி­யிலும் எழுந்­துள்ள கேள்­வி­யாகும். அர­சாங்கம் சட்­டத்தை சரி­யான நடை­மு­றைப்­ப­டுத்­தினால் அதி­கா­ரிகள் தமது கட­மை­களை சரி­யாக செய்தால் மக்கள் வாக்­கு­களில் வரும் அர­சியல் வாதிகள் மக்­க­ளுக்கு நியா­ய­மாக நடந்­து­கொண்டால் இந்த சமூக சீர்­கே­டுகள் ஏன் எழப்­போ­கின்­றன?

இலங்­கையில் மரண தண்­டனையை நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடாது என 1975 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி தீர்­மா­னிக்­கப்­பட்­டது. எனினும் 1975 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் பல்­வேறு குற்­றங்­களில் மரண தண்­டனை தீர்ப்பு வழங்­கப்­பட்டு 1248 பேர் சிறையில் உள்ளனர். இவர்களின் தமது தண்டனையை மீள்பரிசீலனை செய்யக் கோரியவர்களின் 374 பேர் மரண தண்டனை கைதிகளே என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் குறித்து இன்றும் சட்ட விசாரணைகளை முன்னெடுக்கக்பட்டு வருகின்றது.

இவர்களில் 20 பேரை போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக அரசாங்கம் அடையாளப்படுத்தியுள்ளது. இதில் நான்கு பேர் வெளிநாட்டவர். இந்த 20 பேருக்கும் மரண தண்டனை

நிறைவேற்றப்படுவதுடன் போதைப் பொருள் கடத்தல் குற்றங்கள் நின்று விடுமா? அல்லது இவர்களை அங்கீகாரக் கொலை செய்வதன் மூலமாக இலங்கை யில் போதைப்பொருள் பாவனையை தடுத்துவிட முடியுமா. பாடசாலைகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கத்தை ஏற்படுத்தும் நபர்கள் நிறுத்தி விடுவார்களா?

அரசாங்கம் சமூக சீர்கேடுகளை தடுக்கும், நாட்டில் போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும், கடல் வழியாக இங்கு போதைப் பொருட்களை கொண்டுவரும் செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என்றால் பாதுகாப்பை, தேடுதல் நடவடிக்கைகளை, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மாறாக போதைப்பொருள் கடத்தல் குற்றங்களில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை உறுதியாக்கப்பட்டு சிறையில் இருந்துகொண்டு மீண்டும் அதே தவறை செய்ததாக கூறப்படும் இந்த 20 பேருக்கு  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது டன் இந்த கதைகளும் முடிந்து விடும். ஆனால் குற்றங்கள், சமூக சீர்கேடுகள் நடந்து  கொண்டேதானிருக்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-08-04#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.