Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறைக்கதவு திறக்கப்பாடிய ஈழத்துத் தமிழ்ப்புலவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்கதவு திறக்கப்பாடிய ஈழத்துத் தமிழ்ப்புலவர்

[02 - April - 2007]

-தமிழவேள் சி.க. கந்தசாமி-

தமிழ்மொழியை வளம்படுத்தியவர்கள் தமிழ்ப்புலவர்கள். இவர்களுட் பலர் முத்தமிழ்ப் புலமையொடு பல்கலைத்துறை அறிவுள்ளவர்களாகவும் அருளாற்றல் உள்ளவர்களாகவும் விளங்கினர். தமிழ்ப்புலவர் மரபு சங்க காலத்தில் தொடங்குகிறது. சங்கப்புலவர்கள் உயர்ந்த பண்பாடுகளும் தெய்வ ஆற்றலும் உள்ளவர்களாகவும் இருந்ததனால் இவர்களைச் சமயகுரவர் நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார், "பொய்யடிமை இல்லாத புலவர்களுக்கும் அடியேன்" எனப் போற்றி உள்ளார்.

உயர்ந்த பக்திப்பாடல்களை அருளிய சமயக் குரவர்களும் ஆழ்வார்களும் தமிழினதும் தமிழ்ப்பாடல்களினதும் தெய்வ ஆற்றல்களை உணர்த்தியுள்ளனர். பெரும் புலவர்களான நக்கீரர், கம்பர், ஒட்டக் கூத்தர், காளமேகம், பொய்யா மொழிப்புலவர், இரட்டையர் முதலிய புலவர்களின் வரலாறுகள் இவர்களின் அருளாற்றலை உணர்த்துகின்றன.

சங்ககாலம் முதல் இலங்கைத் தமிழ்மொழி வழங்கும் நாடாக விளங்குகின்றது. இந்துப் பெருநீர்ப் பரப்பில் கடல்கோளினால் நீருள் அமிழ்ந்திய பண்டைய தமிழ்ப் பெருநிலத்தில் வடக்கில் எஞ்சிய பகுதி இலங்கை என அறிஞர்கள் கருதுகின்றனர். சங்ககாலத்தில் இலங்கையில் பூதந்தேவனார் என்னும் தமிழ்ப்புலவர் இருந்தார் எனச் சங்க இலக்கியப் பாடல்களால் அறிகின்றோம்.

யாழ். அரசர் காலத்திலும் ஐரோப்பியர் ஆட்சிக்காலத்திலும் புகழ்பெற்ற பெருந்தமிழ்ப் புலவர்கள் இலங்கையில் இருந்தனர். இவர்கள் சிறந்த இலக்கிய நூல்களை ஆக்கி ஈழத்து இலக்கியத்துறையை வளப்படுத்தியுள்ளனர். இவர்களுள் ஒருவர் இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் ஆவார். இந்நாட்டுக்குப் பெருமை பெற்றுத் தந்த இப்பெரும் புலவரின் வரலாற்றையும் பெருமையையும் பலர் அறியார்.

இப்பெரும் புலவரின் இயற்பெயர் கதிர்காமச் சந்திரசேகர முதலியார் என்பது. சின்னத்தம்பிப் புலவர் என்பது ஊரில் வழங்கிய பெயர். இவர் ஒல்லாந்தர் என்னும் ஐரோப்பிய இனத்தவர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் யாழ்ப்பாணத்து இணுவில் எனும் ஊரில் வாழ்ந்தவர். யாழ்.அரசர் ஆட்சிக்காலத்தில் முத்தமிழுக்கு நிலைக்களனாய் `இணையிலி' எனப் பெயர் பெற்று இவ்வூர் விளங்கியது. யாழ் அரசு காலத்தில் இவ்வூர் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த ஆட்சியாளர் மரபில் இவர் வந்தவர் என்பது இவரது பாடலினால் அறியலாம்.

சின்னத்தம்பிப் புலவர் எனப் பெயருள்ள வேறு புலவர்களும் யாழ்ப்பாணப்பகுதியில் இருந்தனர். ஆதலினால், இவருக்கு இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் என்னும் பெயர் வழங்குகின்றது. இவர் முத்தமிழும் வல்ல புலவர். இவர் இவ்வூர் சிவகாமியம்மையை வழிபடு கடவுளாகக் கொண்டவர். அவரது அருள் பெற்றவர், இயல்பாகவே தமிழ்ப்புலமை பெற்று வரகவியாக விளங்கியவர்.

ஒல்லாந்த ஆட்சியாளர் இந்நாட்டில் குடிகளின் காணி உரிமைகளைப் பதிவு செய்தல் ஆகிய `தோம்பு எழுதும் முறையை' முதன் முதல் நடைமுறைப்படுத்தினர். தோம்பு எழுதும் இப்பெரும் பொறுப்புக்கு முதன் முதல் நியமனம் பெற்றவர்களுள் இவரும் ஒருவராக இருந்து இப்பணியைச் செய்துவந்தார்.

ஒருமுறை இவரைப் பற்றித் தவறான செய்தியொன்றை இவரோடு பணி செய்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்த மேலதிகாரிக்கு அறிவித்தார். அந்த ஒல்லாந்த அதிகாரி அச்செய்தியை ஆராயாது இவரைச் சிறையில் இடுவித்தான்.

எதிர்பாராத வகையில் தமக்கு ஏற்பட்ட அவமதிப்பையும் சிறைக்கூடத்தில் தாம் அனுபவித்துவரும் பல வகைத் துன்பங்களையும் நினைத்து நினைத்து இப்புலவர் மிகவும் மனம் வருந்தினார். ஆகவே, தம் வழிபடு கடவுள் ஆகிய சிவகாமியம்மையை, நினைத்துப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

எட்டாவது பாடலாக -

"துப்பூட்டும் என்றனது துன்னார்தாம் சிறைப்படுத்தும்

அப்பூட்டும் தீயவர் அரியசிறை வீட்டிருக்கும்

இப்பூட்டும் நிர்பூட்டாய் என் சிறை நீக்கியருள்

செப்பூட்டும் திருத்தாட் சிவகாம சுந்தரியே" என்னும் பாடலைப் பாடியதும் அச் சிறைக் கூடத்துக் கதவு தானாகத் திறந்தது.

இந்நிகழ்வினை அச்சிறைக் கூடத்துக் காவலாளர் உடனே மேலதிகாரிகளுக்கு அறிவித்தனர். இச்செய்தியை அறிந்த ஒல்லாந்த மேலதி காரியே அங்கு சென்றான். இந்த அற்புத நிகழ்வை நேரில் பார்த்தான். நிகழ்ந்தவற்றைக் கேட்டு அறிந்தான். இவர் ஒரு தெய்வப் புலவர் என்பதையும் தன் தவறையும் உணர்ந்தான். உடனே அந்த அதிகாரி இவரை வணங்கித் தனது தவறான செயலை மன்னிக்கும் படி தெரிவித்து, இவரை சிறையிலிருந்து விடுவித்தான்.

இப்புலவரை சிறையில் இட்ட தனது தவறுக்காக வருந்திய அந்த ஒல்லாந்த அதிகாரி, இவரைப் பற்றித் தவறான செய்தியைத் தெரிவித்த வரை உடனே அச்சிறையில் இடுவித்தான். இதனை இப்புலவர் தமது அடுத்த பாடலில் என்னைச் சிறையில் வைத்துப்பின் என் பகைவன் தன்னை வைத்துத் தரணியெல்லாம் புகழத் துன்னியே என்னைச் சிறையில் விடுவித்தாய் அன்னையே இணுவைச் சிவகாமி சுந்தரியே எனத் தெரிவித்துள்ளார்.

"சிவகாமியம்மை தனக்கு நேரில் வந்து பேரமிழ்தம் வழங்கியதைச் சந்திரோதய முகத்துச் சாற்றொணாத் தோற்றமுடன் வந்தே நின் திருவாயில் பேரமிர்தம் தந்தாயன்றே" என இப்பதிகத்துப் பாடலினால் தெரிவித்தார்.

இப்பதிகம் இலக்கிய வகையிலும் வரலாற்று வகையினும் இந்நாட்டிற்கு மிகப் பயன் உள்ளது. "சீலைப்பேன் நுளம்பு எறும்புதெள்ளுநுள்ளான் மூட்டைக் கடி சாலப்பல என்னும் இப் பதிகப் பாடல் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திச் சிறைக் கூடத்துத் துன்பங்களை உணர்த்துகின்றது. இப்பாடலில் `பார் சேயன் சற்றும் இரங்கான்' எனும் பகுதி ஒல்லாந்த மேலதிகாரியின் இரக்கமற்ற கடும்போக்கை உணர்த்துகின்றது. `பார் சேயன்' என்பது ஒல்லாந்த அதிகாரியைக் குறிப்பதாகும்.

இப்பதிகம் தேவாரத் திருமுறைப் பதிகங்கள் போல உள்ளன. இப்புலவர் ஒல்லாந்த அதிகாரி விதித்த தண்டனையில் இருந்து விடுபட்டமை சமண குருமாருக்காக அரசன் விதித்த தண்டனைகளிலிருந்து அப்பரடிகள் பதிகங்கள் பாடி, அத் தண்டனைகளிலிருந்து விடுபட்டமையை உணர்த்துகின்றது. தமிழ்ப் பாடற் பதிகங்களால் அற்புதங்கள் சமயக்குரவர் காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்திலும் நிகழும் என்பதற்கு இப் புலவர் வரலாறும் இப் பதிகமும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகவுள்ள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.