Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் எச்சரிக்கை உண்மையானதா?

Featured Replies

மஹிந்தவின் எச்சரிக்கை உண்மையானதா?

S-04Page1Image0002-8b1e9190464bbb601474ed568ce3b195213b826e.jpg

 

-சத்ரியன்

இன்­றைய நிலையில், மஹிந்த ராஜபக் ஷ இவற்றை மீண்டும் பிடுங்கிக் கொண்டால் கூட, அவற்­றுக்­காக பெறப்­பட்ட கடன்­களை அவரால் அடைக்க முடி­யாது. திரும்பப் பெற்றுக் கொள்­வ­தானால், அதற்­கான கொடுப்­ப­ன­வையும் செலுத்த வேண்டும். அதற்கு தகுந்த கார­ணமும் கூறப்­பட வேண்டும்

இல்­லா­விடின் சர்­வ­தேச அளவில் - பரஸ்­பர வர்த்­தக உடன்­பாட்டை மீறிய அர­சாங்­க­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும்.

இந்த விளை­யாட்டை மஹிந்த வேறெந்த நாடு­க­ளு­டனும் விளை­யா­டி­னாலும் அதிக பிரச்­சினை ஏற்­ப­டாது. ஆனால் இந்­தி­யா­வு­டனும், சீனா­வு­டனும் நிச்­ச­ய­மாக விளை­யாட முடி­யாது.

 

இலங்­கையின் கூட்டு அர­சாங்கம் விற்­பனை செய்யும், நாட்டின் தேசிய சொத்­துக்­களை வாங்க வேண்டாம், நாங்கள் ஆட்­சிக்கு வந்­ததும், அவற்றை திரும்ப எடுத்துக் கொள்வோம் என்­பதே முன்னாள் ஜனாதிபதியின் எச்­ச­ரிக்கை. 

மத்­தள விமான நிலை­யத்தின் 70 சதவீத பங்­கு­களை இந்­தியா கொள்­வ­னவு செய்­ய­வுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்த நிலையில் தான், மஹிந்த ராஜபக் ஷவின் இந்த எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது 

தற்­போ­தைய கூட்டு அர­சாங்­கத்தைக் கவிழ்க்கும் நோக்­குடன், கொழும்பில் ஆரம்­பிக்­கப்­பட்ட ஜன பலய எதிர்ப்புப் போராட்­டத்தில் உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சர்­வ­தேச நாடு­க­ளுக்கு ஒரு எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருந்தார்.

இலங்­கையின் கூட்டு அர­சாங்கம் விற்­பனை செய்யும், நாட்டின் தேசிய சொத்­துக்­களை வாங்க வேண்டாம், நாங்கள் ஆட்­சிக்கு வந்­ததும், அவற்றை திரும்ப எடுத்துக் கொள்வோம் என்­பதே அவ­ரது எச்­ச­ரிக்கை.

மத்­தள விமான நிலை­யத்தின் 70 சதவீத பங்­கு­களை இந்­தியா கொள்­வ­னவு செய்­ய­வுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்த நிலையில் தான், மஹிந்த ராஜபக் ஷவின் இந்த எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுடன் இணைந்து கூட்டு முயற்­சி­யாக இயக்­கு­வது பற்றி இலங்கை அர­சாங்கம் தான் தொடர்ச்­சி­யாக பேசிக் கொண்­டி­ருக்­கி­றதே தவிர, இந்­தியா அதனை இன்­னமும் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வில்லை.

இந்­தியா இந்த விட­யத்தில் நடந்து கொள்­கின்ற முறைகள் மர்மம் நிறைந்­த­வை­யா­கவே இருந்து கொண்­டி­ருக்­கின்­றன.

மத்­தள விமான நிலை­யத்தின் பெரும்­ப­குதி பங்­கு­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக இந்­திய அதி­கா­ரிகள் பேச்சு நடத்த ஒன்­றுக்குப் பல­முறை கொழும்­புக்கு வந்­தி­ருந்­தனர். மத்­தள விமான நிலை­யத்தைப் பார்­வை­யிட்டு, அதன் ஓடு­பா­தை­களைப் பரி­சோ­தித்து, சொத்­துக்­க­ளையும் மதிப்­பீடு செய்­தி­ருந்­தனர்.

இருந்­தாலும், இந்த விமான நிலை­யத்தை இந்­திய விமான நிலைய அதி­கா­ர­சபை கொள்­வ­னவு செய்­வது பற்­றிய எந்தத் திட்­டமும் இல்லை என்று அண்­மையில் இந்­திய பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­தி­ருந்தார் இந்­தி­யாவின் சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா.

இவ­ரது இந்தக் கருத்து இலங்கை அர­சாங்­கத்­துக்கு நிச்­சயம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.

ஏனென்றால், ஒரு பக்கம் இலங்கை அர­சாங்­கத்­துடன் பேசிக் கொண்டு, அவ்­வா­றான எந்தத் திட்­டமும் கிடை­யாது என்று இந்­திய அர­சாங்கம், பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­ததை சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

எனினும், இந்­திய விமான நிலைய அதி­கார சபை­யுடன் மத்­தள விமான நிலை­யத்தை கூட்­டாக இயக்­கு­வது பற்றிப் பேச்­சுக்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என்­பதை மீண்டும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா.

இன்­னமும் இறு­தி­யான இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை என்­பதால் இந்­திய அமைச்சர் அவ்­வாறு கூறி­யி­ருக்­கலாம் என்று அவர் மழுப்ப முனைந்தார்.

எது எவ்­வா­றா­யினும், மத்­தள விமான நிலைய விவ­கா­ரத்தில், இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் இழு­ப­றிகள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது.

மத்­தள விமான நிலைய விவ­காரம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அமைச்­சர்­களும் பல மாதங்­க­ளாகக் கூறி வரு­கின்ற போதும், இந்­தியா இது­வ­ரையில் அது­பற்றி வாய் திறக்­க­வே­யில்லை.

இந்­திய பாரா­ளு­மன்­றத்தில் இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, கேள்வி ஒன்­றுக்குப் பதி­ல­ளித்­ததை தவிர, வேறெந்த சந்­தர்ப்­பத்­திலும், மத்­தள பற்றி வாய்­தி­றப்­பதை தவிர்த்தே வந்­தார்.

மத்­தள விமான நிலை­யத்தின் பெறு­மதி தொடர்­பான மதிப்­பீடு விட­யத்தில் இரண்டு தரப்­பு­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டுகள் இருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

மத்­தள விமான நிலை­யத்தின் பெறு­மதி விட­யத்தில், இலங்கை மதிப்­பிட்­டதை விட இந்­தியா மதிப்­பிட்ட தொகை குறை­வா­னது. இந்த விட­யத்­தி­லேயே இரு­த­ரப்­புக்கும் இழு­பறி இருப்­ப­தாக பசில் ராஜபக் ஷ சில நாட்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த விட­யத்தில் இணக்­கப்­பாடு ஏற்­ப­டு­வதில் இழு­ப­றிகள் நீடித்து வரும் நிலையில் தான், இந்­தி­யா­வுக்கு மஹிந்த ராஜபக் ஷ எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கிறார்.

அவர் நேர­டி­யாக இந்­தி­யாவை எச்­ச­ரிக்­கா­வி­டினும், இப்­போது இலங்­கையின் சொத்தைக் கொள்­வ­னவு செய்­வது பற்றிப் பேச்சு நடத்தும் ஒரே நாடு இந்­தியா தான் என்ற வகையில், அந்த எச்­ச­ரிக்கை இந்­தி­யா­வுக்கே பொருந்தக் கூடி­யது.

மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு எச்­ச­ரிக்கை செய்­வது இது தான் முதல் முறை­யன்று. ஏற்­க­னவே, கடந்த ஆண்டு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீன நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்கும் பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்த போதும் இதே வித­மான எச்­ச­ரிக்­கையை மஹிந்த ராஜபக் ஷ விடுத்­தி­ருந்தார்.

தாங்கள் ஆட்­சிக்கு வந்­ததும், விற்­கப்­பட்ட சொத்­துக்­களை மீளப் பெற்றுக் கொள்வோம் என்று அப்­போதும் அவர் கூறி­யி­ருந்தார்.

அதற்குப் பின்னர், சீனா­வுக்கு மஹிந்த ராஜபக் ஷ ஒரு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். அந்தப் பய­ணத்தின் பின்னர் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கு­வ­தற்கு அவ்­வ­ள­வாக எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை.

குறிப்­பாக, மீண்டும் பறித்துக் கொள்வோம் என்று எச்­ச­ரிக்­க­வில்லை.

இப்­போது மத்­தள விமான நிலை­யத்தை இந்­தியா கொள்­வ­னவு செய்யப் போவ­தாகக் கூறப்­படும் நிலையில், வெளி­நா­டுகள் நாட்டின் சொத்­துக்­களை வாங்கக் கூடாது, வாங்­கினால் அதனைப் பறித்துக் கொள்வோம் என்று மஹிந்த எச்­ச­ரித்­தி­ருக்­கிறார்.

அவர் இந்­தி­யா­வுக்குப் பயணம் ஒன்றை மேற்­கொள்­ள­வி­ருக்கும் நிலை­யி­லேயே அவ­ரது இந்தக் கருத்து வெளி­யா­கி­யி­ருக்­கி­றது. இன்று அவர் புது­டெல்­லியில் நடக்­கும் கருத்­த­ரங்கு ஒன்றில் உரை­யாற்­ற­வுள்ளார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆட்­சிக்

­க­விழ்ப்­புக்குப் பின்னர் புது­டெல்­லிக்கு அவர் மேற்­கொள்ளும் முதல் பயணம் இது.

இந்தப் பயணம் மஹிந்­த­வுக்கு முக்­கி­ய­மா­னது. புது­டெல்­லியின் கத­வு­களை மஹிந்­த­வுக்­காக திறந்து வைப்­ப­தற்­கான ஒரு நோக்கில் தான் இதனை ஏற்­பாடு செய்­துள்ளார் சுப்­ர­ம­ணியன் சுவாமி.

இப்­ப­டிப்­பட்ட நிலையில் மஹிந்த ராஜபக் ஷவின் நிலைப்­பாடு எவ்­வாறு மாற்­ற­ம­டையும் என்று எதிர்­வு­கூற முடி­யாது.

மத்­தள விமான நிலையம், அம்­பாந்­தோட்டை துறை­முகம் ஆகி­யவை விற்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக உள்­நாட்டில் அவர், பிர­சா­ரங்­களைச் செய்­தாலும், அவற்றை மீளப்­பெற்றுக் கொள்­வ­தற்கு மஹிந்­த­வினால் நட­வ­டிக்கை எடுக்க முடி­யுமா என்­பது சந்­தேகம் தான்.

மத்­தள விமான நிலை­யமும், அம்­பாந்­தோட்டை துறை­மு­கமும், எந்த வகை­யிலும் இலா­ப­மீட்டக் கூடிய முறையில் செயற்­ப­டுத்த முடி­யா­தவை. ஏற்­க­னவே மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் காலத்­திலும் அதனை செய்ய முடி­ய­வில்லை.

அதற்­காக பெற்ற கடனை அடைக்க முடி­யாத நிலையில் தான் இவற்றை இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் விற்றுத் தப்­பிக்க முனைந்­தது அர­சாங்கம்.

 இன்­றைய நிலையில், மஹிந்த ராஜபக் ஷ இவற்றை மீண்டும் பிடுங்கிக் கொண்டால் கூட, அவற்­றுக்­காக பெறப்­பட்ட கடன்­களை அவரால் அடைக்க முடி­யாது. திரும்பப் பெற்றுக் கொள்­வ­தானால், அதற்­கான கொடுப்­ப­ன­வையும் செலுத்த வேண்டும். அதற்கு தகுந்த கார­ணமும் கூறப்­பட வேண்டும்

இல்­லா­விடின் சர்­வ­தேச அளவில் - பரஸ்­பர வர்த்­தக உடன்­பாட்டை மீறிய அர­சாங்­க­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும்.

இந்த விளை­யாட்டை மஹிந்த வேறெந்த நாடு­க­ளு­டனும் விளை­யா­டி­னாலும் அதிக பிரச்­சினை ஏற்­ப­டாது. ஆனால் இந்­தி­யா­வு­டனும், சீனா­வு­டனும் நிச்­ச­ய­மாக விளை­யாட முடி­யாது.

ஏற்­க­னவே, 2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர், சீனா­வினால் மேற்­கொள்­ளப்­படும் கொழும்பு துறை­முக நகரத் திட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது.

ஆறு மாதங்­க­ளுக்கு மேலாக நீடித்த இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர், அந்த திட்­டத்தை தொட­ரு­மாறு அனு­ம­தித்­தது.

ஒரு­வேளை, சீன நிறு­வனம் அந்த திட்­டத்தை தொடர முடி­யாமல் தடுக்­கப்­பட்­டி­ருந்தால், இலங்கை விட­யத்தில் சீனாவின் உண்­மை­யான முகம் வெளிப்­பட்­டி­ருக்­கலாம்.

ஏனைய கடன்­களை வைத்து, இலங்­கையின் கழுத்து நெரிக்­கப்­பட்­டி­ருக்கும். புதிய கடன்கள், கொடைகள் வழங்­கப்­ப­டாமல் தடுக்­கப்­பட்­டி­ருக்கும். வர்த்­தக ரீதி­யான தடைகள் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டி­ருக்கும்.

அதனைத் தாங்கிக் கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டதால் தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் வேறு வழி­யில்­லாமல், துறை­முக நகர கட்­டு­மானப் பணி­க­ளுக்கு அனு­மதி அளித்­தி­ருந்­தது.

ஏற்­க­னவே ஒரு­முறை மைத்­தி­ரி­பால சிறி­சேன- ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம், கையைச் சுட்டுக் கொண்ட விடயத்தில், மஹிந்த ராஜபக் ஷதானும், கையை வைத்துச் சுட்டுக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.

மரணதண்டனையை நடைமுறைப்படுத்தி, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை அரசாங்கம் இழக்கப் போகிறது என்று எச்சரித்த ராஜபக் ஷவினர், சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தினர்.

ஆனாலும், மஹிந்த ராஜபக் ஷவின் கருத்து அந்த மாற்றம் உண்மையானதா என்று கேள்வி எழுப்ப வைக்கும் அளவில் இருப்பது ஆச்சரியம்.

நாட்டின் சொத்துக்களை வாங்கும் அரசாங்கங்களை எச்சரிப்பதாக மஹிந்த ராஜபக் ஷ காட்டிக்கொண்டாலும், அது சிங்கள மக்களை திசை திருப்புவதற்கான உத்தியாகவே படுகிறது.

உண்மையாகவே மஹிந்த ராஜபக் ஷ இதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்றால், அவர் அதனை புதுடெல்லியில் வைத்து தைரியமாக வெளிப்படுத்துவாரா?

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-12#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.