Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்புகூறப்படுவதை புதிய மனித உரிமை ஆணையாளர் உறுதிசெய்யவேண்டும்- உலக தமிழர் பேரவை

Featured Replies

பொறுப்புகூறப்படுவதை புதிய மனித உரிமை ஆணையாளர் உறுதிசெய்யவேண்டும்- உலக தமிழர் பேரவை

 

 
 

இலங்கையில் இடம் பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புகூறப்படுவதை ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளராக பதவியேற்றுள்ள மிச்செலே பச்லெட் உறுதிசெய்யவேண்டும் என  உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐநாவின் ஏழாவது மனித உரிமை ஆணையாளராக மிச்செலே பச்லெட் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள  உலக தமிழர் பேரவை இந்த வேண்;டுகோளையும் விடுத்துள்ளது.

இலங்கையில் 2009 ம் ஆண்டு அந்த நாட்டின் பாதுகாப்பு படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதை தடு;ப்பதில் ஐநா பாரிய தோல்வியை தழுவியது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த தோல்விக்கு தீர்வை காண்பதற்காக ஐநாவின் சிரேஸ்ட அதிகாரிகள் எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியவை எனவும் உலக தமிழர் பேரவை  தெரிவித்துள்ளது.

gtff.jpg

இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலதுஸ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறும் விடயம் தொடர்பாக ஆராயவும் இலங்கையில் இடம்பெற்ற தோல்விகள் மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதிசெய்வதற்காகவும் முன்னாள் செயலாளர் நாயகம்  பான்- கீ- மூன் நடவடிக்கைகளை எடுத்ததுடன் குழுக்களை நியமித்தார் எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

 

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கவேண்டும் என முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை குரல்கொடுத்துவந்தார் எனவும் தெரிவித்துள்ள  உலக தமிழர் பேரவை சர்வதேச பிரசித்தி பெற்ற நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நவநீதம் பிள்ளை காரணமாகயிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நவநீதம் பி;ள்ளையின் பின்னர் மனித உரிமை ஆணையாளராக பதவி வகித்த செயத்  ரால் அல் ஹ_சைன் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை கண்காணிப்பதில் முக்கிய பங்காற்றினார்,ஐக்கியநாடுகளின் அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் உலக நாடுகளின் ஆதரவு காரணமாக இலங்கை குறித்த இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானங்களிற்கு அனுசரனை வழங்கிய பேரிலும் கடந்த மூன்று வருடங்களில் தீர்மானத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையோ அரசியல் உறுதிப்பாட்டையோ அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும் உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழலில் இலங்கை தொடர்ந்தும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கண்காணிப்பின் கீழ் இருப்பதை உறுதி செய்வதற்கு 2019 தீர்மானம் மிக முக்கியமானது எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

வாக்குறுதிகளிற்கும் அவை நிறைவேற்றப்படுவதற்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கான ஏற்பாடுகள் அவசியம் எனவும் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் ஏற்படும் தோல்விகள் மிகவும் கண்டிக்கதக்க மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளிற்கு பிழையான செய்தியை சொல்வதாக  அமையலாம் எனவும் உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது

;

http://www.virakesari.lk/article/38708

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.