Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த பாம்பன் மீனவர்கள் 14 பேர் கடத்தல்: உருட்டுக்கட்டையால் அடித்து சிங்கள மீனவர்கள் சித்ரவதை

Featured Replies

[Tuesday April 03 2007 06:51:21 AM GMT] [pathma]

இதுவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி யில் இருந்து மீன் பிடிக்க செல்பவர்களைதான் சிங்கள கடற்படையினர் தாக்கி வந்தனர்.....

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக் குதலில் 5 மீனவர்கள் பலியாகி விட்டனர்.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து நாகர்கோவிலில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சிங்கள கடற்படையினரின் காட்டு மிராண்டி தனத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் 14 பேரை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று சித்ரவதை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வரு மாறு:-

கடந்த 28-ந்தேதி பாம்பனில் இருந்து செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆர்.எம்.எஸ். 2673, இன்னாசி என்பவருக்கு சொந்தமான ஆர்.எம்.எஸ். 3191, மைக்கேல் ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான ஆர்.எம்.எஸ். 2688 என்ற எண் கள் உள்ள என்ஜின் பொருத் தப்பட்ட 3 நாட்டு படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற னர்.

கிறிஸ்துராஜ், சுரேஷ், தாவீது, கொலம்பஸ், அடிமை, செல்வம், மில்டன், ரீகன், ராஜ், அமுதன், மரியடேவிட், குழந்தை, ராயப்பன், கென்னடி என்ற 14 மீனவர்கள் 3 படகுகளிலும் மீன் பிடிக்க சென்றனர்.

கடந்த 29-ந்தேதி நடுக்கட லில் வலைவிரித்து அவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது 6 விசைப் படகு களில் சிங்கள மீனவர்கள் விரைந்து வந்தனர். அவர்களது கைகளில் உருட்டுக்கட்டை, அரி வாள், கத்தி போன்ற பயங்கர ஆயு தங்கள் இருந்தன. பாம்பன் மீனவர்களை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கிய அவர் கள் 3 படகுகளுடன் 14 மீனவர் களை கடத்தி சென்றனர்.

தலைமன்னார் அருகே உள்ள கல்பட்டி என்ற இடத்தில் 14 மீனவர்களையும் ஒரு வீட்டில் சிறைவைத்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்தனர். "எங்கள் எல்லையில் வந்து மீன் பிடிப்பதால் எங்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. மேலும் எங்கள் வலைகளை தமிழக மீனவர்கள் அறுத்து எறிந்து செல்கின்றனர். எனவே தான் தமிழக மீனவர்களை எச்சரிக்கை செய்வதற்காக உங்களை கடத்தி வந்து இருக்கிறோம் என்று கூறி சிறைவைத்தனர்.

தொடர்ந்து 3 நாட்கள் சிறை வைத்து அடித்து உதைத்த சிங்கள மீனவர்களிடம் பாம் பன் மீனவர்கள் கெஞ்சி கூத்தாடிய பிறகு நேற்று திடீரென 14 மீனவர்களையும் 2 படகுகளில் ஏற்றி திருப்பி அனுப்பினர். 3191, 2688 என்ற 2 படகுகளிலும் 14 மீனவர்களும் இன்று அதிகாலை பாம்பன் கடற் கரைக்கு வந்து சேர்ந்தனர்.

3 நாட்கள் உருட்டுக்கட்டை அடிவாங்கியதுடன் சாப்பாடு எதுவும் சாப்பிடாததால் பாம் பன் மீனவர்கள் 14 பேரும் சோர்ந்து காணப்பட்டனர். கரைக்கு திரும்பிய அவர்கள் தங்களை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று சிறைவைத்து சித்ரவதை செய்தது தொடர் பாக மீன்வளத்துறை அதிகாரி யிடம் புகார் செய்தனர். போலீ சிலும் இதுகுறித்து புகார் செய் யப்பட்டது.

முதல் உதவி சிகிச்சை களுக்கு பிறகு 14 மீனவர்களும் அவர வர் வீடுகளுக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.

இந்த சம்பவம் பாம்பன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

maalaimalar.com

நன்றி : Tamilwin.com

இராணுவம் செய்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதனால் இப்போ சிங்களக் காடையர் அந்தப் பணியை தொடர்கின்றனரோ?

சிறீ லங்கா கடற்படையினர் திரும்பவும், திரும்பவும் இவ்வாறு செய்வதைப் பார்த்தால் வேறு ஏதோ அரசியல் உள்நோக்கம் இதில் இருப்பது போல் உள்ளது.

இப்படி தமிழ் மீனவர்கள் சாகடிக்கப்படும் போதும், சித்திரவதைப் படுத்தப்படும் போதும் மத்திய அரசு கைகட்டி சிங்களவனின் தலைவனை பாதுக்காப்போடி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது, மத்தியில் இருப்பவர்கள் மனிதர்களா இல்லை மிருகங்களா, தமிழனிற்க்கு எங்கேயும் மரியாதையில்லையா..........?

  • தொடங்கியவர்

மாப்ஸ் இது ஆக்கிரமிப்பு இராணுவமல்ல சிங்களக் குண்டர்கள் செய்தது. மீனவர்கள் என்ற போர்வையில் குண்டர்களை ஏவி விட்டு செய்வித்திருப்பார்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் தமிழ் நாட்டிற்குள்ளும் வந்து தமிழர்களை(இந்தியர்களை?!) செருப்பால் அடித்தாலும் இந்திய அரசு கைகட்டி வேடிக்கைதான் பார்க்கும். தனது சொந்த மக்கள் கொல்லப்படுவதையே வேடிக்கை பார்க்கும் அரசுதான் இந்திய அரசு.

தமிழர்களை செருப்பால் அடித்தால் இந்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்குமென்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆறுகோடி தமிழர்களை ஆட்டிசெய்யும் தமிழக அரசு மௌனமாக இருப்பதுதான் ஆச்சரியம்.

இப்படியான சம்பவங்களின் பின்னல் பெரிய அரசியல் காய்நகர்த்தல் ஒன்று இருக்கிற மாத்ரித்தான் இருக்கு

இப்படியான சம்பவங்களின் பின்னல் பெரிய அரசியல் காய்நகர்த்தல் ஒன்று இருக்கிற மாத்ரித்தான் இருக்கு

நானும் இதில் பாரிய ஒரு அரசியல் பின்னணி

இருப்பதாகவே நினைக்குறேன்....

பார்போம் இந்திய அரசின் நடவடிக்கை எப்படி

இருக்தென்று....

தமிழ்நாட்டில் ஒரு மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும்

Edited by yarl_son

மத்தியில இருப்பவர்கலும் இலங்கையில இருகிர அரக்கன் மகிந்தட ஆலோசனை கேட்டுதனாம் செய்யினம் என்டும் ஒரு கதை வருகுது.....இது இலங்கை இந்திய கூட்டு சதியா? அல்லது ரோ வின்ட சதியா?

பாவம் சாகுரது நம்ம சகோதரங்கல் தானே...

இதுவும் அரசியல்ல சகயம் என்ரு சொல்ல போரன்கலா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களை கடத்திய இலங்கை சிங்கள மீனவர்கள்

இந்திய இலங்கை எல்லைப்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கையின் தென் பகுதி சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று அடித்து துன்புறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றனர்.

கடந்த 28ந்திகதி மீன்பிடிக்க சென்ற இவர்கள் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது கல்பட்டி என்ற மன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள்

இலங்கை மீனவர்கள் கடத்தி சென்றதாக உருட்டு கட்டையால் தம்மை தாக்கியதாகவும் இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளதாகவும் மீனவர்கள் கடல் கண்காணிப்பு பொலிஸாரிடம் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகிற்து

-வீரகேசரி

ஆகா.... இது ரொம்பத்தான் ஒவராப் போகிது!

இந்திய மீனவர்களை பகடைக் காயாக வைத்து இங்கு எத்தனையோ சூதாட்டங்கள் தொடங்கிவிட்டது போல் இருக்கின்றது. இதற்கெல்லாம் மானங் கெட்ட இந்திய அரசு இப்போது பதில் சொல்லும் நிலமையில் இல்லை. அப்பாவி மீனவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

மகிந்து சிந்தனை நன்றாக வேலை செய்யத்தொடங்கியுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 14 பேர். சிங்கள மீனவர்களால் சித்திரவதை.

- பண்டார வன்னியன் Thursday, 05 April 2007 10:53

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் கடத்திச் சென்று மூன்று நாட்கள் தடுத்துவைத்து சித்திரவதை செய்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் கடத்திச் சென்று புத்தளத்தில் உள்ள கற்;பிட்டியில் வீடு ஒன்றில் தடுத்து வைத்துள்ளனர்.

அங்கு வைத்து அவர்களை சிங்கள மீனவர்கள் தாக்கிச் சித்திரவதை செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டு பாம்பன்கரை வந்துசேர்ந்தனர். ஆறு இழுவைப் படகுகளில் சிங்கள மீனவர்கள் விரைந்து வந்தனர் அவர்களது கைகளில் மரக்கட்டை, அரிவாள், கத்தி, போன்ற ஆயுதங்கள் இருந்தன.

அவர்கள் எம்மை சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினர் மூன்று படகுகளுடன் எம்மை சிங்கள மீனவர்கள் கடத்திச் சென்றனர். எங்கள் எல்லையில் வந்து மீன் பிடிப்பதால் எங்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை மேலும் எங்கள் வலைகளை தமிழக மீனவர்கள் அறுத்து எறிந்து செல்கின்றனர். எனவேதான் தமிழக மீனவர்களை எச்சரிக்கை செய்வதற்காக உங்களை கடத்தி வந்திருக்கிறோம் என்று கூறி சிங்களவர் எம்மை அடைத்து வைத்தனா.;

மூன்று நாட்;கள் மரக்கட்டைகளால் அடித்ததுடன் சாப்பாடு ஏதும் சாப்பிடாததால் நாங்கள் சோர்வடைந்தோம் எனத் தமிழக மீன் வளத்துறை அதிகாரியிடம் விடுவிக்கப்பட்டபோது முறைப்பாடு தெரிவித்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.