Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆவாக்குழுவுக்கு பகிரங்க எச்சரிக்கை- வாள்களைக் காட்டி துண்டு அறிக்கைகள் விநியோகித்த இளைஞர்கள்!!

Featured Replies

ஆவாக்குழுவுக்கு பகிரங்க  எச்சரிக்கை- வாள்களைக் காட்டி துண்டு அறிக்கைகள் விநியோகித்த இளைஞர்கள்!!

39799552_2142354102751135_59507031216205

யாழ்ப்பாணம் கொக்குவில் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆவாக் குழுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு அறிக்கைகள்  சற்றுமுன்னர் விநியோகிக்கப்பட்டன.

மோட்டார் சைக்கிளிலில்  வாளுடன் பயணித்த இளைஞர்கள் சிலர் இந்த துண்டு அறிக்கைகளை விநியோகித்தனர்.

வீதியில் பயணித்தவர்களுக்கு  வாள்களைக் காட்டி பயமுறுத்தியும் சென்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

வாள்வெட்டு வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு சமூக ஆர்வலர்கள் எனக் குறிப்பிட்டு இந்தத் துண்டு அறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

https://newuthayan.com/story/16/ஆவாக்குழுவுக்கு-பகிரங்க-எச்சரிக்கை-வாள்களைக்-காட்டி-துண்டு-அறிக்கைகள்-விநியோகித்த-இளைஞர்கள்.html

  • தொடங்கியவர்

ஆவாவுக்கு சவால் விடும் புதிய குழு ஒன்றும் “ஆவா”(வந்தது)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில், தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

 

ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவருக்கு காண்பித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் இன்று புதன்கிழமை (22.08.18) மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என காவற்துறையினர் தெரிவித்தனர்.

இலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டது. கும்பலிடம் இருந்த வாள்கள் தெரிந்தன. அவை மிகப் பெரியளவில் இருந்தன.

வந்தவர்களில் ஒருவர் தனது அலைபேசியின் ஊடாக வீடியோ அழைப்பை ஒருவருக்கு எடுத்து தமது அடாவடிகளை நேரலையாகக் காண்பித்தார் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி லேன் மற்றும் புகையிர நிலையத்தடியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

உடமைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. அந்த இரண்டு வீடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இணுவில் சந்திக்கு அண்மையாகவுள்ள தேனீ்ர் கடை மற்றும் கராஜ் என்பன தாக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து தாவடி பாடசாலை லேனில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் கும்பல் செயற்பட்டது. இணுவில் மற்றும் தாவடிப் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுடைய வீடுகள் உடமைகளே சேதமாக்கப்பட்டன என காவற்துறையினர் தெரிவித்தனர். சம்பவங்கள் இடங்கள் சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று காவற்துறை  நிலையங்களும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

Aava-new.jpg?resize=557%2C800

http://globaltamilnews.net/2018/92430/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.