Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பத்தை வாழ வைத்த மாகாணசபை உறுப்பினர்கள்: புதிய கட்சியின் முதலாவது அதிரடி தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தை வாழ வைத்த மாகாணசபை உறுப்பினர்கள்: புதிய கட்சியின் முதலாவது அதிரடி தாக்குதல்!

August 24, 2018
page-rti-696x433.jpg

வடமாகாணசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆளணி தொடர்பான விபரங்கள் நேற்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடமாகாணசபையின் அனேக உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களையே தனிப்பட்ட ஆளணியில் நியமித்து வைத்திருந்ததை இது அம்பலப்படுத்தியிருந்தது.

இது குறித்து தமிழ்பக்கத்திற்கு மேலதிக சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை வாசகர்களுடன் பகிர்கிறோம்.

 

அண்மையில் ரெலோவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்கும் கணேஸ் வேலாயுதத்தின் அதிரடி தாக்குதலே இந்த தகவல் வெளியானதன் பின்னணி. புதிய கட்சி ஆரம்பித்தாயிற்று, மாகாணசபை தேர்தலும் நெருங்குகிறது, கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களை கலங்கடிக்க ஏதாவது செய்ய வேண்டுமென்பதற்காக இந்த தகவலை அவரே கசியவிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், இந்த தகவல்களை கோரி அவர் பெற்றுக் கொண்டதாக மாகாணசபை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் அவரே இந்த தகவல்களை பெற்றதால், அவரிற்கு சார்பான தரப்பிலிருந்தே தகவல் லீக் ஆனதென மாகாணசபை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மாகாணசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆளணி தொடர்பான தகவல்களை இதுவரை மாகாணசபைக்கு இரண்டேயிரண்டு விண்ணப்பங்கள்தான் சென்றிருக்கின்றன. அதில் இரண்டாவதே- இறுதியாக சமர்ப்பிக்கப்பட்டதே- கணேஸ் வேலாயுதத்தினுடையது.

முன்னதாக உதயன் செய்தியாளர் ஒருவரால் இந்த விடயங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரப்பட்டிருந்தது. தனிப்பட்ட அலுவலர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியிடலாமா என்ற குழப்பம் மாகாணசபை அதிகாரிகளிற்கு ஏற்பட்டது. உடனடியாக தொடர்புடைய கொழும்பு அதிகாரிகளுடன் பேசி, தகவல்களை வழங்கலாமா என வடக்கு அதிகாரிகள் வினவியுள்ளனர்.

 

இந்த தகவல்களை வழங்குவதில் எந்த சிக்கலுமில்லையென கொழும்பிலிருந்து பதில் கிடைத்ததும், உதயன் செய்தியாளரிற்கு அந்த தகவல்கள் வழங்கப்பட்டன. அந்த தகவல்களை பார்த்து அதிர்ச்சியடைந்த உதயன் நிறுவனம், அப்படியோ ஷாக் ஆகி, தகவலை மேசைக்கடியில் வைத்து மறைத்து விட்டது. காரணம் தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது குடும்பத்தை வாழ வைத்திருந்த விடயம் அதில் அம்பலமாகியிருந்தது.

முதலமைச்சர் மற்றும் தமக்கு எதிரணியிலுள்ளவர்களை பற்றிய தகவல் கிடைக்குமா என்றுதான் உதயன் தேடியது. ஆனால் கிடைத்தது வேறுவிதமான தகவல். சொந்தச் செலவில் எதற்கு சூனியம் என கருதி, விபரத்தை வெளியிடவில்லை உதயன்.

தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ப.சத்தியலிங்கம், அ.பரஞ்சோதி, வே.சிவயோகன், இ.ஜெயசேகரம் உள்ளிட்டவர்கள் அனைவருமே குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட உதவியாளராக நியமித்து வைத்திருந்தது அம்பலமானது. குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஆளணியில் இணைக்க கூடாதென்பது சட்டவிதியல்ல. ஆனால், அது அறரீதியான செயற்பாடுமல்ல.

இதன்பின்னர், இப்பொழுது கணேஸ் வேலாயுதம் அந்த தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளார்.np-1-300x196.pngnp-2-300x214.pngnp-3-300x204.pngnp-5-300x211.pngnp-6-300x199.pngnp-7-300x215.png

 

http://www.pagetamil.com/14412/

  • கருத்துக்கள உறவுகள்

எங்களில் பலருக்கு தீர்வு கிடைத்தால் தலைவரின் ஆட்ச்சி நடக்கும் என்ற நினைப்பு.இதில் பலர் இளையவர்கள்.அவர்களில் பலருக்கு எம்மவர்களின் சுயம் தெரியாது.

ஆயுத போராட்டம் மெளனிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஊடகங்களுக்கு அது தேவைப்படுகின்றது. அதிரடி தாக்குதல், கேட்க பலருக்கு இப்ப பலருக்கு புல்லரிக்கும். கெடுகுடி சொல் கேளாது.

எவருமே தனது  தனிப்பட்ட உதவியாளராக தனது நம்பிக்கைக்குரியவரையே நியமிப்பார்கள், நம்பிக்கைக்குரியவர்கள் குடும்ப உறுப்பினரோ அல்லது நண்பர்கலாகவோ தான் பெரும்பாலும் இருக்க முடியும். இதில் தவறு ஏதும் இருக்க நியாயமில்லை. எமக்கு பிடிக்காதவர்கள் என்பதற்காக அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் விமர்சிக்க வேண்டியதில்லை. சேர்ந்து தேர் இழுக்க யாரும் தயாரில்லை . தேரின் சக்கரத்தைக் கழற்ற பலர் உள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Athavan CH said:

எவருமே தனது  தனிப்பட்ட உதவியாளராக தனது நம்பிக்கைக்குரியவரையே நியமிப்பார்கள், நம்பிக்கைக்குரியவர்கள் குடும்ப உறுப்பினரோ அல்லது நண்பர்கலாகவோ தான் பெரும்பாலும் இருக்க முடியும். இதில் தவறு ஏதும் இருக்க நியாயமில்லை. எமக்கு பிடிக்காதவர்கள் என்பதற்காக அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் விமர்சிக்க வேண்டியதில்லை. சேர்ந்து தேர் இழுக்க யாரும் தயாரில்லை . தேரின் சக்கரத்தைக் கழற்ற பலர் உள்ளனர்.

நம்பிக்கைக்குரியவர்கள்தான் உதவியாளர்களாக இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் தகுதியானவர்களாகவும் இருக்கவேண்டும். 

உதவியாளர்கள் சம்பளத்திற்குத்தான் வேலை செய்கின்றார்கள். எனவே இப்படியான சலுகைகளை உறவினர்கள், நண்பர்களுக்கு பெருமளவில் கொடுப்பது தகுதியான பலருக்கு வேலைவாய்ப்பை கொடுக்காது, அரச நிதியைச் சுருட்டுவதற்கு ஒப்பானது. இங்கு “milking the money “ என்று சொல்வார்கள்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.