Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரு கள­மு­னை­க­ளி­லும் போரா­டி­யே­யாக வேண்­டும்

Featured Replies

இரு கள­மு­னை­க­ளி­லும்  போரா­டி­யே­யாக வேண்­டும்

 

 

வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான அரச தலை­வர் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் தமி­ழர் தரப்பு பற்­கேற்­பதா இல்­லையா என்­கிற விவா­தம் தொடங்­கி­யுள்­ளது. இது வெறும் விவா­த­மாக மட்­டுமே இருந்­தி­ருந்­தால், அது பற்றி மக்­க­ளும் பெரி­தாக அலட்­டிக்­கொண்­டி­ருக்­கப்­போ­வ­தில்லை.

ஆனால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும் இடை­யி­லான முரண்­பாட்­டின் நீட்­சி­யாக இந்த விவ­கா­ர­மும் எழுந்­துள்­ள­தால், அதன் மீது மக்­க­ளின் கவ­னம் குவிக்­கப்­ப­டு­வ­தும் தவிர்க்க முடி­யா­த­து­தான்.

இந்­தச் செய­ல­ணி­யில் வடக்­குத் தமி­ழர் தரப்­பில் ,அரச சார்பு இல்­லா­த­வர்­க­ளில் முத­லில் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­த­வர் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்­தான். ஆனால், அந்­தக் கூட்­டத்­திற்­குத் தான் வரப்­போ­வ­தில்லை என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அவர் கடி­தம் எழு­தி­யி­ருந்­தார். பொரு­ளா­தார நன்­மை­க­ளுக்கு முன்­ன­தாக அர­சி­யல் தீர்வே முக்­கி­யம் என்­றும் அவர் அந்­தக் கடி­தத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தக் கடி­தத்தை அவர் எழு­தி­ய­தற்­குப் பிற்­பாடு, செய­ல­ணி­யின் முத­லா­வது கூட்­டம் நடை­பெ­ற­வி­ருந்த நிலை­யில், கூட்­டம் நடக்­கும் திக­திக்கு சில நாள்­க­ளுக்கு முன்­பா­கத் தானும் அந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வார் என்­றும், முத­லா­வது கூட்­டம் என்­ப­தால் அதில் கலந்­து­கொண்டு அபி­வி­ருத்தி தொடர்­பி­லான வடக்கு மாகா­ணத்­தின் எதிர்­பார்ப்பை ஆணித்­த­ர­மாக முன்­வைத்­து­விட்­டு பின்­னர் தான் ஒதுங்­கிக் கொள்­வார் என்­றும் மாகாண அரச அதி­கா­ரி­க­ளி­டம் அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, அவர் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அரச தலை­வர் மேற்­கொண்­டி­ருந்­தார். ஆனால் கூட்­டம் நடை­பெ­று­வ­தற்கு இரண்டு நாள்­க­ளுக்கு முன்­ன­தா­கத் தனது முடிவை மாற்­றிக்­கொண்ட முத­ல­மைச்­சர் , தான் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என்று மீண்­டும் அறி­வித்­தார்.

அது­போன்றே, அவர் அந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ள­வு­மில்லை. அவர் கலந்­து­கொள்­ளாத நிலை­யில் வடக்கு, கிழக்­கில் உள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கா­தமை குறித்து தனது அதி­கா­ரி­க­ளைக் கடிந்­து­கொண்­டார் அரச தலை­வர். இதைத் தொடர்ந்து செய­ல­ணி­யின் இரண்­டா­வது கூட்­டத்தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கலந்­து­கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ளது.

தான் பங்­கேற்­காத நிலை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அந்­தக் கூட்­டத்­தில் பங்­கேற்­கப் போகி­றார்­கள் என்­ப­தைத் தெரிந்­து­கொண்ட முத­ல­மைச்­சர், அத­னைத் தடுத்து நிறுத்த கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்கு ஒரு கடி­தம் எழு­தி­னார். அதில் அர­சி­யல் தீர்வு ஒன்­றைக் காண்­ப­தற்கு முன்­பா­கப் பொரு­ளா­தார நலனை நோக்­கிச் செல்­வது சரி என்று நீங்­கள் முடிவு செய்­தால், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ள­லாம் என்று தனது கடி­தத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார். அந்­தக் கடி­தத்தை அவரே ஊட­கங்­க­ளுக்­குப் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யும் இருந்­தார்.

அவ­ரது கோரிக்­கைக்கு மாறாக, அதனை நிரா­க­ரிக்­கும் வகை­யில் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ள­வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் அனைத்­தும் ஒரு­ம­ன­தாக முடிவு செய்­துள்­ளன. இது சரியா? பிழையா? அர­சி­யல் தீர்வு ஒன்று எட்­டப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கப் பொரு­ளா­தார நல­னைத் தமி­ழர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாமா, இல்­லையா, என்­கிற வாதத்தை முத­ல­மைச்­ச­ரின் கடி­தம் கிளப்­பி­யுள்­ளது.

தீர்­வுக்கு முன்­பா­கப் பொரு­ளா­தார நலன்­களை அரசு வழங்­கு­வ­தன் நோக்­கம், தனது அர­சி­யல் செல்­வாக்­கைத் தமிழ் மக்­கள் மத்­தி­யில் விரி­வாக்­கிக்­கொள்­வதே என்­கிற சந்­தே­கமே அத்­த­கைய முயற்­சி­க­ளைப் புறக்­க­ணிக்­கும்­படி முத­ல­மைச்­சர் கோரு­வ­தற்­கான கார­ணங்­க­ளில் ஒன்று. பொரு­ளா­தார நலன்­களை வழங்கி அர­சி­யல் வேண­வா­வில் இருந்து தமி­ழர்­களை வில­கச் செய்­து­வி­டு­வார்­கள் என்­பதே அதன் அடிப்­ப­டை­யில் உள்ள அச்­சம்.

இந்த அச்­சம் நியா­ய­மா­னது தான் என்­கி­ற­போ­திலும், தமி­ழர்­கள் பங்­கேற்­றா­லும் இல்­லா­விட்­டா­லும் இந்­தத் திட்­டத்தை அரசு செயற்­ப­டுத்­தத்­தான் போகி­றது. கடந்த 30 ஆண்­டு­க­ளா­கப் பொரு­ளா­தார ரீதி­யில் வடக்கு, கிழக்கை கொழும்பு ஆட்­சி­கள் புறக்­க­ணித்து வரு­கின்­றன என்று குற்­றஞ்­சாட்டி வரும் தமி­ழர்­கள், அர­சின் செயலை கண்­டிக்­கவோ மறுக்­கவோ அடிப்­ப­டைத் தர்க்க நியா­யம் இல்­லா­த­வர்­கள். எனவே தமி­ழர்­கள் பங்­கேற்­காத நிலை ­யில் அரசு தனக்­கேற்ற வடி­வத்­தில் இந்­தத் திட்­டங்­களை முன்­னெ­டுத்­துச் செல்­லவே போகின்­றது. அத­னைக் கட்­டுப்­ப­டுத்­து­ வ­தற்கு தமி­ழர் தரப்பும் இந்தச் செயற்றிட்டத்தில் பங்காளியாக இருப்பது அவசியம்.

விரும்­பியோ விரும்­பா­மலோ பொரு­ளா­தார அர­சி­யல் களத்­தைக் கொழும்பு திறக்­கின்­ற­போது , அதில் நின்று கள­மாட முடி­யாது என்ற சொல்ல முடி­யாது. அதி­கார அர­சி­யல் களத்­தி­லும், பொரு­ளா­தார அர­சி­யல் களத்­தி­லும் என்று இரு முனை­க­ளி­லும் கள­மா­ட­வேண்­டி­யது தமி­ழர் தரப்­பின் முன்­னுள்ள நிர்ப்­பந்­தம். அதனை வெற்­றி­க­ர­மாக எதிர்­கொள்­வ­தன் மூலமே அதி­கார அர­சி­யல் களத்­தி­லும் காத்­தி­ர­மான வெற்­றி­யைத் தமி­ழர் தரப்­புப் பதிவு செய்­ய­மு­டி­யும்.

https://newuthayan.com/story/12/இரு-கள­மு­னை­க­ளி­லும்-போரா­டி­யே­யாக-வேண்­டும்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.