Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வீட்டுத் திட்டத்தை பறிக்க த.தே.கூ முயற்சி’

Featured Replies

‘வீட்டுத் திட்டத்தை பறிக்க த.தே.கூ முயற்சி’
 
 

-செ.கீதாஞ்சன்

வடக்கு மாகாணத்தில், தன்னால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டப் பணிகளுக்குத் தடங்கலை ஏற்படுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முயல்கிறது என, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவில், அவரது அமைச்சால் நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவையின் போதே, இக்கருத்துகளை அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் முன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர், வடக்கில் காணப்படும் வீடமைப்புத் திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோ, வடக்கில் காணப்படும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, தான் தயாராகவே இருக்கிறாரெனவும், கூட்டமைப்பினரே அதற்குத் தடையாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

 குறிப்பாக, தன்னால் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தைத் தன்னிடமிருந்து பறித்து, வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் கையளிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனும், பிரதமரிடம் கடிதமொன்றை வழங்கியுள்ளனர் என, அவர் குற்றஞ்சாட்டினார்.

அவ்வாறு அவர்கள் கடிதம் வழங்கினார்களா என்பதை, செல்வம் எம்.பியும், மாகாண அமைச்சர் சிவநேசனும், தமது தலைமைகளிடமும் பேச்சாளரிடமும் கோர வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

“ இந்த வீடுகட்டும் பொறுப்பை, மனோ கணேசனிடமிருந்து பறித்து எடுத்து, பழைய அமைச்சர், மூன்று ஆண்டுகளாக வீடு கட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் சுவாமிநாதனிடம் வழங்குங்கள் என்று கூறினார்களா என்று கேளுங்கள். கடந்த காலங்களில், வீடு கட்டவில்லை; பொருத்து வீடு பொருந்தாத வீடு என்று சொல்லி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பேச்சாளரும் ஏனைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறைசொன்னார்கள், குற்றம் சொன்னார்கள்.

“இப்போது பார்த்தால், நான் வீடுகட்ட வருகிறேன்; நான் தயாராக இருக்கிறேன். இங்கு வாழும் மக்கள், எனது உறவுகள். கடந்த காலங்களில் கட்டப்படாத வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, விட்ட இடத்தில் தொடர்ந்து செய்ய முன்வரும் மனோ கணேசனை, வீடு கட்ட வேண்டாம்; சுவாமிநாதனிடம் வீடுகளைக் கட்டக் கொடுங்கள் என்று சொல்வார்களேயானால், என்ன முரண்பாடு இது?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, வட மாகாணத்தில் வீடுகள் கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அமைச்சர், “அரசாங்கத்தின் பங்காளி என்றவகையில், கூட்டுப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று, அக்குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டார்.

அதேபோன்று, முழு நாட்டுக்குமான அமைச்சராகவே தான் உள்ளாரெனவும், தான் வடக்குக்கும் கிழக்குக்கும் வரக் கூடாது என்றவாறான முட்டுக்கட்டைகளை யாரும் விதிக்க முடியாது எனவும், அமைச்சர் மனோ, இங்கு குறிப்பிட்டார். குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், அவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார் என்று குறிப்பிட்ட அமைச்சர் மனோ, “அவரைப் பார்த்ததே கிடையாது” என்று, தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

இதேவேளை, தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுக்கப் போவதில்லையென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் உறுதிபடக் கூறியுள்ளமையை ஞாபகப்படுத்திய அமைச்சர், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகிறது எனத் தெரிவித்ததோடு, தேசிய நல்லிணக்கம் அல்லது ஒருமைப்பாடு என்ற பாதையில் சென்றாலோ, அல்லது வடக்குக்கு ஜனாதிபதி வந்து, தேசிய ஐக்கியத்தைப் பற்றிப் பேசினாலோ, தேசிய ஐக்கியம் வந்துவிடாது என்று கூறினார். மாறாக, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியன வர வேண்டுமானால், அனைத்திலும் சமத்துவம் வர வேண்டுமெனவும், எங்கெங்கு குறைகள் இருக்கின்றனவே, அக்குறைகளைக் கண்டுபிடித்து, அவற்றைத் தீர்க்கும் போது தான் சமத்துவம் உருவாகுமெனவும், அதையே, தனது அமைச்சின் மூலம் மேற்கொள்ள முயல்வதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மனோ கணேசனின் குற்றச்சாட்டுத் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக, கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுபற்றிய செய்தி பிரசுரமானதன் பின்னர், அதற்கான பதிலை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/வன்னி/வீட்டுத்-திட்டத்தை-பறிக்க-த-தே-கூ-முயற்சி/72-220797

  • தொடங்கியவர்

அடைக்­க­ல­நா­தன் மீது சீறிய அமைச்­சர் மனோ

வட­கி­ழக்­கில் வீடு­கள் கட்­டும் விட­யத்­தில்

 
 

mano-ganesan-02.jpg

 

 

 
 
 

வட­கி­ழக்­கில் வீடு­கள் கட்­டித் தரு­மாறு என்­னி­டம் கேட்­பதை விட உங்­கள் கட்­சி­யின் தலைவர் சம்­பந்­த­னி­ட­மும், பேச்­சா­ளர் சுமந்­தி­ர­ னி­ட­மும் போய்க் கேளுங்­கள். வீடு கட்­டும் பொறுப்பை எனது அமைச்­சி­ட­மி­ருந்து ஏன் பறித்து சுவா­மி­நா­த­னி ­டம் ஒப்­ப­டைக்­கக் கோரி­னீர்­கள் என­வும் சம்­பந்­த­னி­ட­மும், சுமந்­தி­ர­னி­ட­மும் கேட்டு அறி­யுங்­கள். இவ்­வாறு அமைச்­சர் மனோ­க­ணே­சன் தெரி­வித்­தார்.

தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்­கம் மற்­றும் அரச கரும மொழி­கள் அமைச்­சின் ஏற்­பாட்­டில் முல்­லைத்;தீவு வள்­ளி­பு­னம் உயர்­தர வித்­தி­யா­ல­யத்­தில் நேற்று நடை­பெற்ற நட­மா­டும் சேவை­யில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

முல்­லைத்­தீவு குரு­தி­யால் சிவந்த மண். இடம்­பெ­யர்ந்­த­வர்­கள் அனைத்­தை­யும் இழந்­த­வர்­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் எனப் பல வரி­சைப்­ப­டுத்­தக் கூடிய அடை­யா­ளங்­க­ளைக் கொண்ட மண் இது­வா­கும். இன்று ஒரே நாடு என்ற அடிப்­ப­டை­யில் நாங்­கள் நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்ப முனைந்­தி­ருக்­கின்­றோம். தனி நாடு என்ற தேவைப்­பாடு எண்­ணம் எங்­க­ளுக்கு இல்லை. ஆயு­தப் போராட்­டத்தை நாங்­கள் விரும்­பு­ப­வர்­கள் அல்ல என்ற கருத்தை பல­முறை சம்­பந்­த­னும் எடுத்­துக் கூறி­யி­ருக்­கின்­றார்.

இங்கு வீடு­கள், கழிப்­ப­றை­கள் இல்­லை­யென எனக்கு முன்­னர் பேசிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் வட­மா­காண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் ஆகி­யோர் குறிப்­பிட்­ட­னர்.

வீடு கட்­டு­வ­தென்­பது பெரிய பணி­யா­கும். இந்­தப் பணி எனது அமைச்­சுக்கு சில மாதங்­க­ளுக்கு முன்­பு­தான் தரப்­பட்­டது. மூன்று ஆண்­டு­க­ளாக வீடு­கள் கட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக அர­சின் பங்­கா­ளிக் கட்சி என்ற வகை­யில் நான் கூட்­டுப்­பொ­றுப்பை எடுத்­துக் கொள்­கின்­றேன்.
ஆனால் வீடு கட்­டும் பொறுப்பு என்­னி­டம் இருக்­க­வில்லை. கடந்த இரண்டு மாதங்­க­ள­கா­கத்­தான் என்­னி­டம் அது வந்­துள்­ளது.

நான் வீடு கட்­டத் தயா­ராக இருக்­கின்­ற­றேன். அதற்­கான வேலை­களை எனது அமைச்­சின் செய­லர் உள்­பட அனை­வ­ரும் ஏற்­க­னவே விட்ட இடத்­தி­லி­ருந்து ஆரம்­பித்­தி­ருக்­கின்­றோம். என்­னைப் பார்த்து வீடு கட்­டித் தாருங்­கள், கழிப்­பறை கட்­டித் தாருங்­கள் என்று செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் சிவ­நே­சன் ஆகி­யோர் கேட்­பதை விட, தங்­கள் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் சென்று கேட்;கவேண்­டும்;. கடி­தம் மூலம் ஒரு கோரிக்­கையை தலைமை அமைச்­ச­ரி­டம் முன் வைத்­தார்­களா? எனக் கேளுங்­கள்.

வீடு கட்­டும்­பொ­றுப்பை மனோ­க­ணே­ச­னி­ட­மி­ருந்து பறித்­தெ­டுத்து பழைய அமைச்­சர் மற்­றும் மூன்று ஆண்­டு­க­ளாக வீடு கட்­டிக் கொண்­டி­ருக்­கும் அமைச்­சர் சுவா­மி­நா­த­னி­டம் வழங்கி விடுங்­கள் என்று சொன்­னீர்­களா? என்று அவர்­க­ளி­டம் கேளுங்­கள்.

கடந்த காலங்­க­ளில் வீடு கட்­டப்­ப­ட­வில்லை. பொருத்து வீடு பொருந்தா வீடு என்று சொல்­லித்­தான் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தலை­வர் சம்­பந்­தன், பேச்­சா­ளர் சுமந்­தி­ரன் ஏனயை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் சொன்­னார்­கள். வெளி­நா­டு­க­ளி­லும் குறை­சொன்­னார்­கள்.

இப்­போது நான் வீடு கட்ட வரு­கின்­றேன். அதற்கு தயா­ராக இருக்­கின்­றேன். இங்­குள்ள மக்­கள் எனது உற­வு­கள். எனது இடம். உற­வு­கள் என்று தேடிப்­பி­டித்து வீடு­களை கட்ட வரும் மனே­க­ணே­சன் வீடு கட்ட கூடாது.

நாங்­கள் பேசி ஏசித்­திட்டி விமர்­ச­னம் செய்த அமைச்­சர் சுவா­மி­நா­த­னி­டம் வீடு­க­ளைக் கட்­டக்­கொ­டுங்­கள் என்று சொல்­கின்­ற­னர். என்­னி­டம் கேள்­வி­கள் கேட்­பதை விட, உங்­கள் தலை­வர்­க­ளி­ட­மும் பேச்­சா­ள­ரி­ட­மும் கேட்க வேண்­டும்.

மக்­கள் கைதட்­டு­கின்­றார்­கள். பல­மாக கைதட்­டுங்­கள். மக்­கள் குரல் இது. மக்­கள் ஒலி இது. இது­தான் உண்மை – என்­றார்.

 

https://newuthayan.com/story/10/அடைக்­க­ல­நா­தன்-மீது-சீறிய-அமைச்­சர்-மனோ.html

 

குள்ளநரிகள் தங்களுக்குள் பிடுங்குப்படுகின்றன!

தமிழரசுக் கட்சியினர் மனோகணேசனிடம் வீடமைப்பு பொறுப்பை வழங்குவதை தடுத்து பல பல மாதங்கள் ஆகிவிட்டது.
அப்ப அமைதியா இருந்தவர் இப்ப முனகுவது என்?

அமைச்சு நாற்காலியை சூடேற்றிக்கொண்டிருக்கும் மனோ தனது அமைச்சின் பொறுப்பை இன்னமும் சரிவர செய்யவில்லை.

உதாரணம் 1:
https://www.ntc.gov.lk/index.php
பொதுமக்கள் தொடர்பில் இந்த முக்கியமான அமைச்சின் அறிவிப்புகள் எதுவுமே தமிழில் இல்லை. மனோ என்ன செய்கிறார்?

உதாரணம் 2:
http://www.e-thaksalawa.moe.gov.lk/web/si/library.htmlhttp://www.e-thaksalawa.moe.gov.lk/web/si/library.html4
கல்வி அமைச்சில் தமிழ்ப் புத்தகங்கள் மிக மிகக் குறைவு. சிங்களத்தில் நிறைய உண்டு.

உதாரணம் 3:
இன்னமும் பல அரச சுற்றுநிரூபங்கள் சிங்களத்தில் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது.  

இப்படி 1000 உதாரணகங்களைக் காட்டலாம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.