Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அட்மிரல் விஜேகுணரத்னவை கைது செய்ய நீதிவான் உத்தரவு

Featured Replies

அட்மிரல் விஜேகுணரத்னவை கைது செய்ய நீதிவான் உத்தரவு

 

Vice-Admiral-Ravindra-Wijegunaratne-300xபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிவான், லங்கா ஜெயரத்ன நேற்று உத்தரவிட்டார்.

2008-09 காலப்பகுதியில் கொழும்பு நகரப் பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று கோட்டே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராகத் தேடப்பட்டு வந்த நேவி சம்பத், விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு, அட்மிரல் விஜேகுணரத்ன உதவினார் என்பதை நிரூபிக்க சாட்சியங்கள் உள்ளன என்று என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி நிசாந்த சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, சந்தேக நபரான நேவி சம்பத் வங்கி மூலம் பெற்ற 5 இலட்சம் ரூபா பற்றிய வங்கி பரிமாற்ற தரவுகள் இன்னமும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, சந்தேக நபரான நேவி சம்பத் தப்பிச் செல்வதற்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவினார் என்பதை நிரூபிக்க போதிய சான்றுகள் இருப்பின் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/08/30/news/32597

  • தொடங்கியவர்

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம் : ரவீந்திர கைதாவார்

city-1-blackGMGPage1Image0018-362d1276020df650b3c915304aeae4e285290663.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி.அறிவிப்பு; உடன் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றமும் உத்தரவு

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின்

பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதியும தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்யப் போவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தது. 

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அத்மிரால் ரவீந்திர விஜெ குணரத்ன, நேவி சம்பத் மறைந்திருக்க கொடுத்த ஒத்துழைப்பு தொடர்பில் தகவல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ளதால் கைது செய்யப் போவதாக கோட்டை நீதிவன் லங்கா ஜயரத்னவின் கேள்விக்கு பதிலளித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா அறிவித்தார். இந் நிலையில் அது தொடர்பில் சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் தாமதிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன சி.ஐ.டி.க்கு கட்டளையிட்டார்.

5 மாணவர் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற அறிவித்தல் பிரகாரம் விளக்கமறியலில் உள்ள 10 ஆவது சந்தேக நபரான நேவி சம்பத் எனும் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி மன்றில் சிறை அதிகாரிகளால் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி கல்ப பெரேர ஆஜரானார்.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஆஜரானார். விசாரணையாளர்கள் சார்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை குறித்த விசாரணைகளை கையாளும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க ஆகியோர் பிரசன்னமாகினர்.

 விசாரணைகள் ஆரம்பித்த போது நீதிவான் லங்கா ஜயரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை நோக்கி, ' சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல 5 இலட்சம் ரூபா பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் வங்கிக்கணக்கு தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொண்டீர்களா என வினவினார்.

 இதற்கு பதிலளித்தவாறே மேலதிக விசாரணை அறிக்கையையும் மன்றில் சமர்ப்பித்து விசாரணைகளை பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தெளிவுபடுத்தினார்.

' கனம் நீதிவான் அவர்களே, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கடற்படையின் வங்கிக்கணக்கொன்றிலிருந்தே ஹெட்டி ஆரச்சி நாட்டை விட்டு தப்பிச் செல்ல 5 இலட்சம் ரூபா பணம் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கை வங்கிக்கணக்கு விபரங்களை மேலதிக விசாரணைக்காக சி.ஐ.டி.க்கு வழங்க உத்தர்வு பிறப்பிக்கப்ப்ட்டுள்ள போதும் இன்னும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை.

 இந் நிலையில் 10 ஆவது சந்தேக நபரான ஹெட்டி ஆரச்சி எனும் இவரை கைது செய்யும் போது அவரிடம் இருந்த போலி அடையாள அட்டை மற்றும் பின்னர் கைப்பற்றப்பட்ட மற்றொரு அடையாள அட்டை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்தோம். இதில் சந்தேக நபரான ஹெட்டி ஆரச்சி, பொல்வத்த கால்லகே அஷோக்க எனும் பெயரில் போலி அடையாள அட்டையுடனேயே சுற்றித் திரிந்திருந்தார். 763125181வீ எனும் அந்த அடையாள அட்டையில் இலக்கம் 308 ஜயசுமனாராம மாவத்த, தல்துவ , அஹங்கம எனும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது குறித்து விசாரணை செய்தோம். இந்த போலி அடையாள அட்டை கடந்த 2007.07.05 ஆம் திக்தியே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இங்குள்ள அடையாள அட்டையின் இலக்கத்தில் உண்மையான அடையாள அட்டை ஒன்று உள்ளது. கல்கிசை , பெர்ணான்டோ மாவத்தையைச் சேர்ந்த கீரகம கனிதகே நத்திர சிசிர குமார என்பவரே அந்த அடையாள அட்டை இலக்கத்துக்கு உரியவர்,

 அவரிடம் நாம் வாக்கு மூலம் பதிவு செய்தோம். அவரது வாக்கு மூலத்தில் அவர், தனது அடையாள அட்டை ஒரு போதும் தொலைந்து போகவோ, இன்னொருவர் கைக்கு செல்லவோ இல்லை என கூறியுள்ளார். அவர் அவரது அடையாள அட்டையை கடந்த 2007.07.09 ஆம் திகதியே பெற்றுள்ளார். அதாவது ஹெட்டி ஆரச்சி போலியாக அடையாள அட்டை செய்து சில நாட்களிலேயே அந்த இலக்கத்துக்குரிய உண்மை அடையாள அட்டை உரிய நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 இந் நிலையில் இந்த அடையாள அட்டையை பெற கொடுக்கப்பட்ட அடிப்படை ஆவணங்கள் அடங்கிய கோவையை நாம் ஆட்பதிவு திணைக்களத்திடம் கோரியுள்ளோம். அதே நேரம் போலி அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட முகவரி தொடர்பில் நாம் குறித்த பிரதேச செயலாளர் ஊடாக அறிக்கை பெற்ற போது, அதில் உள்ள முகவரி அப்பிரதேச செயலகத்தில் இல்லை என பதில் கிடைத்தது. எனவெ எஇது மிகத் திட்டமிட்டு பெறப்பட்ட போலி அடையாள அட்டையாகும்.

 இந்த அடையாள அட்டை தகவல்களை வைத்து கடந்த 2017.04.13 அன்று பெறப்பட்ட என் 7014167 எனும் கடவுச் சீட்டிலேயே சந்தேக நபர் வெளிநாடு சென்றுள்ளார் என்பது தெளிவானது. அது குறித்த மேலதிக விசாரணைகளில், அதே அடையாள அட்டைக்குரிய தகவல்களை மையப்படுத்தி 2007 ஆம் ஆண்டே கடவுச் சீட்டொன்று பெறப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

என்.1014679 என்பதே அந்த கடவுச் சீட்டு இலக்கம். இந்த இரண்டு கடவுச் சீட்டுக்களையும் பெற சந்தேக நபர் கொடுத்த அடிப்படை விபரங்கள், கைவிரல் ரேகை அடங்கிய கோவைகளை விசாரணைக்காக கையளிக்க உத்தர்விட வேண்டும்.

 ஏனெனில் ஆட்பதிவு திணைக்களத்திலும், குடி வரவு குடியகல்வு திணைக்களத்திலும் சந்தேக நபர்களுக்கு சட்ட விரோதமான செயற்பாடுகளுக்காக உதவியவர்களை கண்டறிய வேண்டியுள்ளது. ( இந்த கோரிக்கைக்கு அனுமதியளித்த நீதிவான் குறித்த கோவைகளை கையளித்து வாக்கு மூலம் ஒன்றினையும் வழங்குமாறு குடி வரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டார்)

அதே நேரம் சந்தேக நபர் மறைந்திருந்த தொம்பே வீட்டில் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டை அக்போபுரவைச் சேர்ந்த சஞ்ஜீவ நிமல் பிரியதர்ஷ என்பவருக்கு சொந்தமானது. அவர் சிவில் பாதுகபபு படையணியைச் சேர்ந்தவர். அவர் 2004 ஆம் ஆண்டு கொழும்புக்கு விஷேட கடமைக்காக வந்திருந்த போது அவரது அடையாள அட்டை தொலைந்துள்ளது. அது குறித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அவர் , புதிய அடையாள அட்டையையும் பெற்றுக்கொண்டுள்ளார். இந் நிலையில் இவ்வாறான போலி ஆவணங்களுடன் அவர், தொம்பே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் காவலாளியாகவே மறைந்திருந்துள்ளார். அந்த தோட்டத்தின் உரிமையாளரிடம் வாக்கு மூலம் பெற்றோம். அவர்கள் பத்திரிகை விளம்பரம் ஊடாக சந்தேக நபரை வேலைக்கு அமர்த்தியதாக கூறினர்.

 எனினும் பத்திரிகை விளம்பரத்தையோ, அவரை சேர்க்கும் போது பெற்ற அடையாள அட்டை பிரதியையோ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர்களால் வழங்க முடியவில்லை. எனவே சந்தேக நபர் அங்கு மறைந்திருந்தது திட்டமிட்ட செயலா என்பதில் சந்தேகம் உள்ளது. அது குறித்தும் விசாரிக்கின்றோம்.

22 வங்கிகளுக்கும் பங்குச் ச

ந்தைக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு:

 போலி அடையாள அட்டை, கடவுச் சீட்டுக்கள் வேறு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்காக சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. எனவே அந்த அடையாள அட்டை இலக்கங்கள், கடவுச் சீட்டு தொடர்பில் வங்கிக் கணக்குகள், வைப்புக்கள் உள்ளனவா என்பது குறித்து தெரிந்துகொள்ள அந்த விபரங்களை வழங்குமாறு 22 நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு கோருகின்றோம். அதே நேரத்தில் பங்குச் சந்தையில் அது சார்ந்த கொடுக்கல் வாங்கல்கள் இருப்பின் அதனையும் வழங்க உத்தர்விட வேண்டும்.( உத்தரவு வழங்கப்பட்டது.)

அத்மிரால் ரவீந்ரவின் தலையீடு:

 சந்தேக நபர் இந்த வழக்கில் இருந்து தலைமறைவாக இருக்க முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலகப் பிரதானியுமான அத்மிரால் ரவீந்திர விஜே குணரத்ன மிக நெருக்கமான பங்களிப்பை செய்துள்ளார். இது குறித்து தனியாகவும் வழக்கு தாககல்ச் செய்துள்ளோம். அதற்கான சான்றுகளைப் பெற்றுள்ளோம். ரவீந்ர விஜேகுணரத்ன சந்தேக நபரை சி.ஐ.டி.யின் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆளாவதில் இருந்து சட்ட விரோதமாக தடுத்திருக்கின்றார் ' என குறிப்பிட்டார்.

 இதன்போது நீதிவான் லங்கா ஜயரத்ன, அவ்வாறெனில் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளீர்கள் என சி.ஐ.டி.யிடம் வினவினார்.

 அதற்கு பதிலளித்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, நாம் அவரைக் கைது செய்யப் போகின்றோம் என்றார்.

 இதன்போது அது குறித்து தாமதிக்காமல் உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிவான் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

 இதன்போது மீண்டும் சி.ஐ.டி.யை நோக்கி, 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல், கப்பம் பெறல் மற்றும் காணாமல் ஆக்கல் தொடர்பில் சந்தேக நபரின் வெளிப்படுத்தல்கள் என்ன என வினவினார்.

 அதற்கு பதிலளித்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா,

 ""இது தொடர்பில் நாம் விசாரணை செய்தோம். நாம் கேட்ட கேள்விகளுக்கு சந்தேக நபர், ஞாபகம் இல்லை, எனக்குத் தெரியாது, நான் இருக்கவில்லை போன்ற பதில்களையே வழங்கியுள்ளார். இந் நாட்களில் சந்தேக நபர்களுக்கு தொற்றியுள்ள நோயே அதுவாகும். என்று கூறிய போது, ஞாபகம் இல்லை என்றுதான் கூருகின்றாரே தவிர அவர் மறுக்கவில்லை. எனவே மேலதிக விசாரணைகளை முன்னெடுங்கள் என நீதிவான் உத்தரவிட்டார்.

 இதன்போது சந்தேக நபர் நேவி சம்பத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கல்ப பெரேரா,

அடுத்த தவணையில் பதிலளிப்பதாக கூறவே நேவி சம்பத்தின் விளக்கமறியலை நீடித்த நீதிவான் வழ்ககை எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அத்துடன் சிறையில் சந்தேக நபரிடம் விசாரணை செய்ய நிசாந்த சில்வா தலைமையிலான 6 பேர் கொண்ட சி.ஐ.டி. குழுவுக்கும் குற்றவியல் சட்டத்தின் 115 (4) ஆம் அத்தியாயத்துக்கு அமைய நீதிவான் அனுமதி வழங்கினார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.