Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாடியில் இருந்து தவறி விழுந்து சினிமா நடிகர் குட்டி பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாடியில் இருந்து தவறி விழுந்து சினிமா நடிகர் குட்டி பலி

பரமக்குடி : டான்சர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் குட்டி. இவர் பரமக்குடியில் உறவினர் வீட்டு மாடியில் போன் பேசி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் பலியானார். சம்பவம் குறித்து பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர்.கொம்

Edited by கறுப்பி

டான்சர் குட்டி மரணம்

இயக்குநர் கேயாரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான டான்சர் படத்தில், ஒற்றைக்காலுடன் அபாரமாக ஆடி நடித்து அசத்திய நடிகர் குட்டி, பரமக்குடியில் கலை நிகழ்ச்சிக்காக போன இடத்தில் மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

டான்சர் படத்தில் டான்ஸராக அறிமுகமானவர் குட்டி. இவருக்கு வலது கால் கிடையாது. இருந்தாலும் இடது காலை மட்டும் வைத்துக் கொண்டு மிக அபாரமாக டான்ஸ் ஆடி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.

டான்சர் படத்தால் பிரபலமடைந்த குட்டி பல்வேறு ஊர்களுக்கும் போய் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். பரமக்குடியில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி குட்டியின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக பரமக்குடிக்கு வந்திருந்த குட்டி, நேற்று இரவு(April 3) தான் தங்கியிருந்த லாட்ஜ் மாடியில் நின்றபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.

உடனடியாக பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் குட்டியைக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே குட்டி பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக குட்டியின் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

குட்டியின் தந்தை ஜெயபால். சென்னை சாலிகிராமத்தில் உள்ளார். மகன் இறந்த செய்தியைக் கேட்டதும் அவரது பெற்றோர் அலறி அடித்தபடி மதுரைக்குக் கிளம்பிச் சென்றனர்.

குட்டியின் திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

நன்றி முத்தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘டான்ஸர்’ குட்டியின் சோக முடிவு!

p41dcs7.jpg

‘‘யாரு கண்ணு பட்டுச்சோ...!’’

‘‘என் தலையில் உன் எழுத்து அது பிழையா... பிழையா..! என் இறைவா சொல் இது முறையா... முறையா..!’’

&நெஞ்சைப் பிழியும் இந்தப் பாடல் வரிகளுடன் தமிழ் சினிமாவில் கால்பதித்த ‘டான்ஸர்’ குட்டியின் மரணம் தமிழ்த் திரையுலகை அதிர வைத்திருக்கிறது. கிராஃபிக்ஸ் தைரியத்தில் காலந்தள்ளும் ஹீரோக்கள் மலிந்துவிட்ட தமிழ் சினிமாவில், ஒற்றைக் காலுடன் ஹீரோவாக என்ட்ரியானார் குட்டி. அந்த சாதனை தொடர்வதற்குள் அவரது சகாப்தமே முடிந்து போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

பரமக்குடியிலுள்ள பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் கடந்த 3&ம் தேதி ‘ஸ்டார் ஷோ’ நடந்தது. இதற்காக சக நடிகர்களுடன் குட்டியும் பர மக்குடிக்கு வந்தார். ‘ஷோ’ ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால், தான் தங்கியிருந்த லாட்ஜின் இரண்டாவது மாடியில் நின்று மொபைலில் ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருந்த குட்டி, எதிர்பாராமல் தவறி கீழே விழுந்திருக்கிறார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு மற்றவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, கீழே குட்டி தரையில் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார்கள். உடனே அவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே முதல்உதவி செய்த மருத்துவர்கள் மதுரைக்குக் கொண்டுபோகச் சொன்னதும், ஆம்புலன்ஸ் மதுரையை நோக்கிப் பறந்திருக்கிறது. ஆனாலும், குட்டியின் உயிர் பிரிந்துவிட்டது.

மறுநாள் மதுரை ஜி.ஹெச். மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த குட்டியின் பிரேதத்தை வாங்கிச் செல்ல சக டான்ஸர்கள் அத்தனை பேரும் மார்ச்சுவரி வாசலில் விம்மியபடி நின்று கொண்டிருந்தனர். அப்போது, ‘‘அன்னைக்கு ஒரு கால்தான் போச்சு, இப்ப உசுரும் போயிடுச்சா?’’ என்று அலறியபடியே வந்து சேர்ந்தனர் குட்டியின் பெற்றோர்.

குட்டியின் அப்பா ஜெயபாலிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தோம்... துக்கத்தை அடக்கிக் கொண்டு சன்னமாகப் பேசினார். ‘‘எங்களுக்குச் சொந்த ஊர் கும்பகோணம். எனக்கு மொத்தம் அஞ்சு பசங்க. இவன்தான் கடைசிப் பையன். அவனுக்கு நாங்க வெச்ச பேரு பிலிப். ஆனா, எங்களுக்கு பொண்ணுங்க இல்லாததாலயும், இவன்தான் கடைக்குட்டிங்கிற தாலயும் ‘குட்டி’னு செல்லமா கூப்பிடுவோம். குட்டி சின்ன வயசுலயிருந்தே ஆடுறது, ஓடுறதுன்னு துறு துறுன்னு இருப்பான். எட்டு வருஷத்துக்கு முன்னாடி கும்பகோணத்துல ஒரு ஆக்ஸிடென்ட்டுல வலது கால்ல அடிபட்டுருச்சு. எவ்வளவோ சிரமப்பட்டும் அந்தக் காலை காப்பாத்த முடியலை. நாங்க ளெல்லாம் இதை நினைச்சு, வெறுத்துப் போய் நின்னப்ப, அவன் மட்டும் தைரியமா எழுந்து ஒத்தக்கால்ல நின்னான், ஆடுனான், ஜெயிச்சான். ஆனா இன்னைக்கு....’’ என்று தழுதழுத்தார்.

குட்டியின் அம்மா சரோஜா நம்மிடம், ‘‘இந்தக் காலோட, வெளிநாடெல்லாம் போய் டான்ஸ் பண்ணிட்டு வந்தான். அவனைப் பார்த்து பெருமைப்பட்டோம். ஆனா, யாரு கண்ணு பட்டுச்சோ இப்படி படக்குன்னு கண்ணை மூடிட்டான். நூறு வருஷம் வாழ்ந்து சம்பாதிக்க வேண்டிய பேரையும், புகழையும் ஒத்தக்காலை வச்சுக்கிட்டு இருபத்தி ரெண்டே வயசுல சம்பாதிச்சுட் டான். அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கல போலிருக்கு. அதான் அற்ப ஆயுசுலயே எங்க புள்ளய கூட்டிக்கிருச்சு’’ என்றபடி முகத்தைப் பொத்திக் கொண்டார்.

குட்டியை பரமக்குடிக்கு அழைத்து வந்திருந்த பிரேம்நாத்திடம் பேசினோம். ‘‘கால் போறதுக்கு முன்னாடியே குட்டி பிரமா தமா ஆடுவான். அவனுக்குக் கால் கட் ஆனதும் நாங்க எல்லாரும் வெறுத்துப் போய் நின்னப்ப, என் முன்னாடி ஒத்தக்கால்ல நின்னு பேலன்ஸ் பண்ணினான். எனக்கே ஷாக்காகிப் போச்சு. அதே தைரியத்துல, கோடம்பாக்கத்துல ஒரு திருவிழாவுல ‘அண்ணாநகரு ஆண்டாளு’ பாட்டுக்கு ஒத்தக் காலோட ஒரு ஆட்டம் போட்டான் பாருங்க, சரியான கைதட்டல். அன்னையிலிருந்து வெறியோட பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சான். கை, கால் நல்லாயிருக்கிற டான்ஸ ருங்களே பத்துப் பதினைஞ்சு டேக் வாங்கும்போது, அந்த ஸ்டெப்பை யெல்லாம் அநாயசமா போட்டு அசத்துவான். சென்னையில அவனுக்குனு ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்குதுங்க. அதிலும் ரசிகைங்க எண்ணிக்கைதான் எக்கச்சக்கம். பாடியை சென்னைக்கு கொண்டுபோனா ஒரு பெரும் கூட்டமே அழுதடிச்சு வரும். இருந்தாலும் குட்டியோட பாடியை அவன் பொறந்த ஊரான கும்பகோணத்துலயே அடக்கம் பண்ணிடலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க..’’ என்று கண்கலங்கினார்.

குட்டியின் குடும்ப நண்பரும், திரைப்பட நடிகரு மான ‘பிளாக்’ பாலாஜி, ‘‘குட்டி என்னைக்குமே தன் ஊனத்தைப்பத்தி யோசிச்சதேயில்லை. இதுவரைக்கும் ஐயாயிரத்துக்கும் மேல ‘ஸ்டேஜ் ஷோ’ பண்ணியிருக்கான். அதுல, ‘ஊனம், ஊனம் ஊனமிங்கே...’ பாட்டுக்கு அவன் ஆடுறப்போ ஆடியன்ஸ் சிலிர்த்துப் போவாங்க.. ‘அன்பே சிவம்’ பட ஷ¨ட்டிங்ல கமல் சார்கூட குட்டியைப் பத்தி ஆச்சர்யப்பட்டுப் பேசினார். ஊனமான ஒருவனை ஹீரோவா போட்டு படமெடுக்கிறதுக்கு கேயார் சாருக்கு தைரியம் வரக் காரணமே குட்டியின் திறமைதான். அவரோட நம்பிக்கையும் வீண்போகல. நேஷனல் அவார்டும், ஸ்டேட் அவார்டும் வாங்கினான் குட்டி. டான்ஸ்ல எந்த ஒரு ஸ்டெப்பையும் ஸ்டெடியாப் போட்டவனோட வாழ்க்கை, ஒரு சின்ன பேலன்ஸ் மிஸ் ஆனதுல முடிஞ்சுபோனது தாங்கமுடியாத சோகம்’’ என்றார் சோகக் குரலில்.

உண்மைதான்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.