Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணசபை சாதித்­தது என்ன?

Featured Replies

வடக்கு மாகாணசபை சாதித்­தது என்ன?

SAMAKALAM010918-PG01-R1Page1Image0002-3ace75bc151ba2bda103fcc2cd0fd45823d6230d.jpg

 

ஒன்­றையும் சாதிக்­க­வில்லை என்­பதை விட, இன்­னமும் சாதிப்­ப­தற்கு வாய்ப்­புகள் இருந்தும், அதனை வடக்கு மாகாண சபை பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை என்­பதே உண்மை.

அதா­வது 400 க்கும் அதி­க­மான தீர்­மா­னங்­களை நிறை­ வேற்­று­வ­தற்­கான கள­மாக இருந்த வடக்கு மாகாண சபை, தமது அதி­கா­ரத்தைப் பிர­யோ­கிப்­ப­தற்கு ஏற்ற நிலை­யியல் கட்­ட­ளை­களை நிறை­வேற்றத்தவ­றி­யி­ருக்­கி­றது 

 

வடக்கு மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் வரும் ஒக்­டோபர் 25 ஆம் திக­தி­யுடன் முடியப் போகி­றது என்று தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய கடந்­த­வாரம் கூறி­யி­ருந்தார்.

2013 செப்­டெம்பர் 21ஆம் திக­தியே வடக்கு மாகா­ண­ச­பைக்குத் தேர்தல் நடத்­தப்­பட்­டது. ஆனால், 2013 ஒக்­டோபர் 25ஆம் திக­தியே மாகாண சபையின் முத­லா­வது அமர்வு நடத்­தப்­பட்­டது.

தேர்தல் நடத்­தப்­பட்ட நாளை அடிப்­ப­டை­யாக வைத்து மாகாண சபையின் பத­விக்­காலம் கணிக்­கப்­ப­டு­வ­தில்லை. முத­லா­வது சபை கூட்­டப்­பட்ட நாளில் இருந்தே, ஐந்து ஆண்­டுகள் அதன் பத­விக்­கா­ல­மாக கரு­தப்­படும்.

அந்த வகையில் தான், எதிர்­வரும் ஒக்­டோபர் 25ஆம் திக­தி­யுடன் முத­லா­வது மாகாண சபை தானா­கவே கலைந்து போய் விடும். இந்த மாகாண சபை இன்­னமும், சுமார் 51 நாட்கள் வரை தான் உயிர்­வாழப் போகி­றது.

பெரும் நெருக்­க­டிகள், சர்ச்­சைகள், குழப்­பங்கள், போராட்­டங்­க­ளுக்கு மத்­தியில், வடக்கு மாகாண சபை அமைக்­கப்­பட்ட போது மக்கள் மத்­தியில் காணப்­பட்ட எதிர்­பார்ப்பு, இப்­போது இல்­லா­ம­லேயே போய் விட்­டது.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கிய போது, நாளிதழ் ஒன்று “மலர்ந்­தது தமிழ் அரசு“ என்று பிர­தான தலைப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அந்­த­ள­வுக்கு மிகப் பெரி­ய­தொரு எதிர்­பார்ப்பு மாகா­ண­ச­பை­யிடம் காணப்­பட்­டது.

அந்த எதிர்­பார்ப்பை நிறை­வேற்றக் கூடிய வகை­யிலோ, மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கக்­கூ­டிய வகை­யிலோ மாகாண சபை செயற்­பட்­டி­ருக்­கி­றதா என்­பதே இன்­றுள்ள மிகப் பெரிய கேள்வி. வடக்கு மாகா­ண­சபை எதையும் சாதிக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக எழும் போதெல்லாம், அதனை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும் சரி, அவ­ரது அமைச்­சர்­களும் சரி, அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞா­னமும் சரி வன்­மை­யாக மறுத்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

அவர்­களின் மறுப்பு, அவர்­க­ளது உழைப்பின் அள­வு­கோலின் அடிப்­ப­டையில் எந்­த­ள­வுக்குச் சரி­யா­ன­தாக இருக்­கலாம். அது­போல தான், தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பு அள­வு­கோலின் அடிப்­ப­டையில், வடக்கு மாகா­ண­ச­பையின் வினைத்­திறன் குறித்த விமர்­ச­னங்­க­ளையும் மறுத்து விட முடி­யாது.

ஒன்­றையும் சாதிக்­க­வில்லை என்­பதை விட, இன்­னமும் சாதிப்­ப­தற்கு வாய்ப்­புகள் இருந்தும், அதனை வடக்கு மாகாண சபை பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை என்­பதே உண்மை.

அதா­வது 400 க்கும் அதி­க­மான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான கள­மாக இருந்த வடக்கு மாகாண சபை, தமது அதி­கா­ரத்தைப் பிர­யோ­கிப்­ப­தற்கு ஏற்ற நிலை­யியல் கட்­ட­ளை­களை நிறை­வேற்றத் தவ­றி­யி­ருக்­கி­றது.

இதனால் தான், வெறு­மனே தீர்­மா­னங்­களை நிறை­வேற்றும் ஒரு பய­னற்ற சபை­யாகத் தான் இது இருந்­தது, என்ற குற்­றச்­சாட்­டுகள் அதி­க­ளவில் வந்­தன.

மாகா­ண­ச­பையில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­வது வழக்கம். அவ­சி­யமும் கூட. வடக்கு மாகாண சபையைப் பொறுத்­த­வ­ரையில் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வதில் பெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­களில் ஒன்­று­பட்டே இருந்­தி­ருக்­கி­றது.

ஆனாலும் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் எந்­த­ள­வுக்கு மக்­க­ளுக்­கான பயனை நடை­ மு­றைச்­சாத்­தி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அதனை நிறை­வேற்ற முடிந்­தி­ருக்­கி­றது என்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது.

வெறு­மனே ஒரு ஆவ­ணப்­ப­டுத்தல் முயற்சி போலவே வடக்கு மாகா­ண­ச­பையில் நூற்­றுக்­க­ணக்கில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­ட­னவே தவிர, அவற்றின் நடை­முறைச் சாத்­தி­யப்­பா­டுகள் மீது துளி­ய­ளவும் கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை.

அதனால், பெரும்­பா­லான தீர்­மா­னங்கள் அதனை சமர்ப்­பித்த, அதற்­காக கைதூக்­கிய உறுப்­பி­னர்­க­ளுக்குக் கூட, இப்­போது நினைவில் இருக்­கி­றதா என்று கூடத் தெரி­யாது.

அதை­விட, வடக்கு மாகாண சபை எப்­போ­துமே ஒரு உணர்ச்­சி­மிக்க சபை­யாகத் தான் இருந்து வந்­தி­ருக்­கி­றது.

ஆரம்­பத்தில் வடக்கு மாகாண சபையை நடத்திச் செல்­வதில் மஹிந்த அர­சாங்­கத்­துக்கும் அதன் முக­வ­ரான ஆளுநர் சந்­தி­ர­சி­றிக்கும் இடையில் தொடங்­கிய மோதல், பின்னர் அது மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான மோத­லுடன் முடிந்து போயி­ருக்­கி­றது.

மத்­திய - மாகாண அர­சு­க­ளுக்­கி­டையில் தொடர்ச்­சி­யாக ஒரு வித உணர்ச்சிப் பிளம்பு எந்த நேரத்­திலும் கனன்று கொண்டு தான் இருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் மாத்­தி­ர­மன்றி, இப்­போதும் கூட அந்த நிலையில் பெரிய வேறு­பாடு இல்லை.

வடக்கு மாகாண சபையைப் பொறுத்­த­வ­ரையில் தமக்­கான வரை­ய­றை­களைத் தெரிந்து கொண்டு – அந்த வட்­டத்­துக்குள் சிறப்­பாகச் செயற்­பட முனைந்­தி­ருக்­கலாம்.

13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் கீழ் மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்ட போதே அது போதிய அதி­கா­ரங்கள் இல்­லாத ஒன்­றாகத் தான் இருந்­தது. அதனால் தான், 1998ஆம் ஆண்டு தமிழர் தரப்பு அதனை ஒரு தீர்­வாக ஏற்றுக் கொள்­ள­வில்லை.

அதற்குப் பின்­னரும், பல்­வேறு வழி­களில் மத்­திய அர­சாங்கம், மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்­களைப் பிடுங்கிக் கொண்டு விட்­டது.

இந்த நிலையில் தான், வடக்கு மாகாண சபைக்­காக போட்டி போட வேண்­டிய நிர்ப்­பந்தம் உரு­வா­னது.

விடு­தலைப் புலி­களின் ஆயுதப் போராட்டம் தோல்வி கண்­டதன் விளை­வாக, அரை­வேக்­காட்டு மாகா­ண­ச­பை­க­ளுக்­காக போராடும் நிலை தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

தமி­ழீழம், தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம் என்று குரல் எழுப்­பிய கட்­சிகள் எல்லாம், மாகாண சபை­களின் அதி­கா­ரத்­துக்­காக, சண்­டை­யிடும் நிலை உரு­வா­னது.

மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்று தெரிந்தும், அதற்­காகப் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற பின்னர், மத்­திய அர­சுடன் முட்டி மோதிக் கொள்­வ­தி­லேயே வடக்கு மாகா­ண­சபை கவனம் செலுத்­தி­யது.

வடக்கு மாகாண சபை தனக்­கான அதி­கா­ரங்­களைப் பெறு­வ­தற்­காக மத்­திய அர­சுடன் முட்டி மோதிய போதும், அதனால் ஒன்­றையும் சாதிக்க முடி­ய­வில்லை. இழந்து போன அதி­கா­ரங்­களில் ஒன்றைக் கூட மீளப் பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை.

முத­ல­மைச்சர் நிதியம் இன்­னமும் கிடப்பில் தான் இருக்­கி­றது. காணி, அதி­காரம் கிடைக்­க­வில்லை. பொலிஸ் அதி­கா­ரமும் மீளக் கிடைக்­க­வில்லை. இப்­படி, மத்­திய அர­சினால் பிடுங்கிக் கொள்­ளப்­பட்ட அதி­கா­ரங்­களை மீளப் பெறு­வ­தற்­காக நடத்­தப்­பட்ட கயி­றி­ழுப்­புகள் எதி­லுமே மாகா­ண­ச­பை­யினால் வெற்­றி­பெற முடி­ய­வில்லை

அர­சியல் அதி­கா­ரத்­துக்­கான போராட்­டத்­தையும், தமிழர் பகு­தியை நிர்­வாகம் செய்யும் விட­யத்­தையும் ஒன்­றாகப் போட்டுக் குழப்பி்க் கொண்­டதால் தான் வடக்கு மாகாண சபை ஒரே வட்­டத்­துக்குள் சுற்றிக் கொண்­டி­ருக்கும் நிலை ஏற்­பட்­டது,

அர­சியல் தீர்­வுக்­கான போராட்­டத்தை வேறொரு தளத்தில் வைத்துக் கொண்டு மாகாண சபையை முழு­மை­யான வினைத்­தி­ற­னுடன் செயற்­ப­டுத்­து­வ­தற்கு முற்­பட்­டி­ருந்தால், இன்னும் கூடு­த­லான பயனை தமிழ் மக்­க­ளுக்குப் பெற்றுக் கொடுத்­தி­ருக்க வாய்ப்­புகள் அதிகம்.

அதை­விட வடக்கு மாகா­ண­ச­பைக்குப் பெரி­ய­தொரு தலை­வ­லி­யாக அமைந்­தது, ஆளும்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான உட்­கட்சி பூசல் தான். வடக்கு மாகாண சபையில் முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வா­கவும், எதி­ரா­கவும், தோன்­றிய இரண்டு அணி­களால், நிலைமை மோச­ம­டைந்­தது.

அதிலும், இந்த விவ­காரம் நீதி­மன்­றத்­துக்குச் சென்று, அங்கு விதிக்­கப்­பட்ட தடை­களால் இன்­னமும் கூட மாகாண அமைச்­ச­ர­வையைக் கூட்ட முடி­யாத நிலை நீடிக்­கி­றது. இது எப்­போது முடி­வுக்கு வரும் என்று கூற முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது.

மாகாண சபையில் முத­ல­மைச்சர் உள்­ளிட்ட ஐவரே அமைச்­சர்­க­ளாக இருக்க முடியும். ஆனாலும், நீதி­மன்றம் சுட்­டிக்­காட்­டி­ய­படி இப்­போதும், ஆறு பேர் அமைச்­சர்­க­ளாக இருக்­கின்­றனர்.

இதுவே சட்­ட­ரீ­தி­யாகச் செல்­லு­ப­டி­யா­னது அல்ல. ஆனாலும், இந்த விட­யத்தில் முத­ல­மைச்­சரோ அல்­லது, அவ­ருக்குக் கீழ் உள்ள அமைச்­சர்­களோ எந்த விட்­டுக்­கொ­டுப்­புக்கும் தயா­ரில்­லாமல் இருக்­கி­றார்கள்.

முத­ல­மைச்சர் இறங்கிச் செல்ல வேண்­டி­ய­தில்லை. யாரா­வது ஒரு அமைச்சர் தாமாக முன்­வந்து தமது பத­வியை விட்டு வில­கினால் கூட இந்தப் பிரச்­சினை தீர்ந்­தி­ருக்கும். அதற்கும் கூட அவர்கள் தயா­ராக இல்லை.

இன்னும் இரண்டு மாதங்­களே பத­வியில் இருக்கப் போகின்ற நிலையில் கூட எந்­த­வொரு அமைச்­சரும் தமது பத­வியை விட்டுக் கொடுக்கத் தயா­ரில்லை.

முத­ல­மைச்­ச­ருக்குக் காட்டும் விசு­வா­ச­மாக அவர்கள் இதனை நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆனால், அதுவே முத­ல­மைச்­ச­ருக்கும் கூட ஆபத்­தாக அமையக் கூடும் என்­பதை அவர்கள் கருத்தில் கொள்­ள­வில்லை.

அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களை நடத்­தாத காலப்­ப­கு­தி­யினால் முத­ல­மைச்­ச­ருக்கோ அமைச்­சர்­க­ளுக்கோ இழப்பு ஏற்­ப­டாது. அதன் பாதிப்பு அவர்­களை வாக்­க­ளித்து தெரிவு செய்த மக்­க­ளுக்குத் தான் ஏற்­படும்.

வடக்கு மாகா­ண­ச­பையைத் தெரிவு செய்த போது, தமிழ் மக்­க­ளுக்குப் பெரிய எதிர்­பார்ப்புக் காணப்­பட்­டது. அந்த எதிர்பார்ப்புகள் எல்லாமே வீணாகிப் போன உணர்வு தான் இப்போது பலரிடம் உள்ளது.

மாகாண அரசாங்கம், தனக்கான பாதையை சரியாகத் தெரிவு செய்வதற்குத் தவறி விட்டதோ என்ற கேள்வியே எழுகிறது.

முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரனை முதலமைச்சராக கொண்டும், சட்டத்தரணிகள், கல்வியாளர்களைக் கொண்ட சபையாக இருந்தும், வடக்கு மாகாண சபை எப்போதும், ஒரு கலக சபையாக தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறதே தவிர, வினைத்திறன் கொண்டதாக வெளிப்படுத்தவில்லை.

கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் போன்றவற்றில், வடக்கு மாகாணத்தை முன்னகர்த்துவதில் வடக்கு மாகாண அரசினால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.

இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாமல், அடுத்த மாகாண சபைக் கதிரைகளுக்காக கனவு காணுவதில் அர்த்தமில்லை. அவ்வாறு செயற்பட்டால், அடுத்த சபையும் கூட இந்த இலக்குகளை அடைய முடியாமல் தான் போகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.