Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்?

Featured Replies

மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்?

 

 

 

தமக்கு வாக்­க­ளித்­துத் தம்­மைப் பத­வி­யில் அமர்த்­திய மக்­க­ளது அபி­லா­சை­கள் குறித் துத் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் ஒரு கணம் சிந்­தித்­துப் பார்க்­க­வேண்­டும். தமிழ் மக்­கள் போதும் போதும் என்று கூறும் அள­வுக்­குத் துன்­பங்களை அனு­ப­வித்து விட்­ட­னர்.

இன்­ன­மும் வேத­னை­க­ளுக்கு மத்­தி­யில்­தான் அவர்­க­ளது அவல வாழ்வு தொட­ரு­கின்­றது. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் தமது துய­ரங்­க­ளுக்கு ஒரு தீர்­வைப் பெற்­றுத் தரு­வார்­கள் என்ற நம்­பிக்­கையை அவர்­கள் இன்­ன­மும் இழந்­து­வி­ட­வில்லை.

தமிழ் மக்­க­ளது நம்­பிக்­கையை தமிழ் அர­சி­யல்­வா­தி­கள்
காப்­பாற்­று­வார்­களா?

இந்த நம்­பிக்­கை­தான் அவர்­களை வாழ வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் அவர்­கள் நம்­பி­யி­ருக்­கின்ற அர­சி­யல்­வா­தி­கள் அவர்­க­ளது நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­று­வார்­களா? என்­ப­து­தான் இன்­றுள்ள முக்­கிய வினா­வா­கும்.

தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளால் தமி­ழர் அர­சி­யல் குழம்­பிப் போய்க் காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக மக்­க­ளும் குழப்­பத்­தில் ஆழ்ந்து கிடக்­கின்ற­ னர். எவர் சொல்­வது சரி?.எவர் பொய் சொல்­கி­றார்? என்­பதை அனு­மா­னிப்­ப­தில் அவர்­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். அவர்­கள் பெரி­தும் நம்­பி­யி­ருந்த வடக்கு மாகாண சபை அவர்­களை முற்­றி­லும் ஏமாற்­றி­விட்­டது.

குறிப்­பாக அதன் முத­ல­மைச்­சர் முற்­றா­கவே ஏமாற்­றி­விட்­டார். ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் என்ற வகை­யில் அவர் மீது மக்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை முற்­றா­கவே தகர்ந்து விட்­டது. முக்­கி­ய­மான சபை அமர்­வைப் புறக்­க­ணித்து விட்டு திரு­மண நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்ட அவர் அதற்­குக் கூறிய வியாக்­கி­யா­னம் விசித்­தி­ர­மா­னது.

திரு­ ம­ணம் வாழ்­வில் ஒரு­மு­றை­தான் நிக­ழக் கூடி­யது. ஆனால் மாகாண சபைக் கூட்­டம் மாதாந்­தம் நடக்­கக் கூடி­ய­தென பொறுப்­பற்ற விதத்­தில் கூறிய அவர் போன்ற வேறொ­ரு­வ­ரைக் காண்­பது அரி­தான விட­யம்.

சர்ச்­சை­க­ளுக்­குப் பெயர்­போ­ன­வர் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன்

கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சுமந்­தி­ரன் சர்ச்­சை­க­ளுக்­குப் பெயர் போன­வர். நாட்­டின் மிகச் சிறந்த வழக்­க­றி­ஞர்­க­ளில் ஒரு­வ­ரான அவர் சில­வே­ளை­க­ளில் தம்மை மறந்து சில கருத்­துக்­க­ளைக் கூறிச் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றார்.

காலி­யில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றில் உரை­யாற்­றிய அவர் சமஷ்டி தமி­ழ­ருக்­குத் தேவை­யில்லை­ எனக் கூறி­ய­தா­கத் தெரி­வித்­துக் கண்­ட­னங்­கள் எழுந்­துள்­ளன. கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளும் இதற்­குத் தமது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளன. ஆனால் தாம் சமஷ்டி தேவை­யில்­லை­யென ஒரு­போ­தும் கூற­வில்­லை­யெ­ன­வும், சமஷ்டி என்ற பெயர்ப் பல­கை­தான் தேவை­யில்­லை­யெ­னக் கூறி­ய­தா­க­வும் சுமந்­தி­ரன் புதிய விளக்­க­மொன்றை அளித்­தி­ருக்­கி­றார்.

ஆனால், இது விட­யத்­தில் சுமந்­தி­ர­னின் வியாக்கி­ யானம் எடு­ப­டுமா? என்­பது சந்­தே­கத்­துக்கு இட­மா­ன­தொன்று. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் இது போன்ற தேவை­யில்­லாத சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வது ஏற்­றுக்­கொள்­ளத் தக்­க­தல்ல.

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் சில­ரால் தமிழ் மக்­கள் பேரவை தடம்­பு­ரண்டு செல்­வ­தைக் காண­மு­டி­கின்­றது. பேர­வை­யில் அர­சி­ய­லுக்கு இட­மில்­லை­யென ஆரம்­பத்­தில் கூறப்­பட்­டது. ஆனால் அர­சி­யல்­வா­தி­க­ளின் வழி­ந­டத்­த­லின் கீழேயே பேர­வை­யின் செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­வ­தைக் காண­மு­டி­கின்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் தமது அர­சி­யல் தேவை­க­ளுக்­கா­கப் பேர­வை­யைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றார்.

கூட்­ட­மைப்­புக்கு விரோ­த­மான­ வர்­கள் அங்கு தஞ்­ச­ம­டைந்­தி­ருப்­ப­தை­யும் காண முடி­கின்­றது. இவற்­றை­யெல்­லாம் கூட்­டிக் கழித்­துப் பார்க்­கும்­போது தமிழ் மக்­கள் பேர­வை­யை­யும் ஓர் அர­சி­யல் கட்­சி­யா­கவே பார்க்க முடி­கின்­றது. இவர்­கள் மக்­களை ஏன் இவ்வாறு ஏமாற்­று­கின்­றார்­கள் என்­பது புரிய­ வில்லை.

பளை­யில் காற்­றாலை அமைத்­த­த­தில் முறை­கே­டு­கள் இடம்­பெற்­ற­னவா?

முன்­னாள் மாகாண அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன், முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் தமது சொத்து விவ­ரங்­களை உட­ன­டி­யா­கச் சமர்ப்­பிக்க வேண்­டு­மெ­னக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பளை­யில் காற்­றாலை அமைக்­கப்­பட்­ட­தில் முறை­கே­டு­கள் இடம்­பெற்­ற­தா­கக் கூறியே இந்­தக் கோரிக்கை விடப்­பட்­டுள்­ளது. ஆனால் முத­ல­மைச்­சர் தரப்­பி­லி­ருந்து இதற்­கான ஆக்­க­பூர்­வ­மான பதில் எது­வும் இது­வரை வௌிவ­ர­வில்லை. அது­மட்­டு­மல்­லாது காற்­றா­லைக்கு அனு­மதி வழங்­கிய வடக்கு மாகாண சபைக்­குப் பெரும் நிதி இழப்­பீடு ஏற்­பட்­ட­தா­கக் கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் இது தொடர்­பாக முத­ல­மைச்­சர் அலட்­சி­ய­மா­கப் பதி­ல­ளித்­துள்­ளார். பளைக் காற்­றா­லை­யால் மாகாண சபைக்­குக் கிடைத்­தது கொடையே என­வும், நிதி­யி­ழப்பு ஏது­மில்­லை­யெ­ன­வும் அவர் தெரி­வித்­ததை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் அறிக்­கை­யின் பிர­கா­ரம் மாகாண சபைக்கு நிதி­யி­ழப்பு ஏற்­பட்­டது உண்­மை­யா­னால் அதற்­குப் பொறுப்­பா­ன­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­ய­மா­கும்.

ஒட்டு மொத்­த­மா­கப் பார்க்­கும்­போது தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளின் நம்­பிக்­கைக்­குப் பாத்­தி­ர­மா­ன­வர்­க­ளா­கத் திக­ழ­வேண்­டும். மக்­க­ளின் மன­ம­றிந்து செயற்­ப­டு­கின்ற தன்­மை­யை­யும் அவர்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

https://newuthayan.com/story/13/மக்கள்-மனமறிந்து-செயற்படுவார்களா-தமிழ்-அரசியல்வாதிகள்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.