Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 வயது சிறுமியை சவுதிக்கு அனுப்பிய ஆசாமி சிக்கினார் : ரிஸானாவையும் இவரே அனுப்பியுள்ளார் : அதிர வைக்கும் தகவல்கள்

Featured Replies

10 வயது சிறுமியை சவுதிக்கு அனுப்பிய ஆசாமி சிக்கினார் : ரிஸானாவையும் இவரே அனுப்பியுள்ளார் : அதிர வைக்கும் தகவல்கள்

 

 
 

(எம்.எப்.எம்.பஸீர்)

சவுதி அரே­பி­யாவில் மரண தண்­ட­னைக்கு உள்­ளான சிறுமி ரிஸானா நபீக்கை போலி ஆவ­ணங்கள் ஊடாக வெளி­நாட்­டுக்கு அனுப்­பிய நபர், கிண்­ணியா பகு­தியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு­வரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில்  சவுதி அரே­பி­யா­வுக்கு அனுப்­பிய குற்­றச்­சாட்டில் குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

arre.jpg

போலி ஆவ­ணங்­கள் ஊடாக கடவுச்சீட்டை தயா­ரித்து சிறுமி ஒரு­வரை வெளி­நாட்­டுக்கு அனுப்­பி­யமை தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையின் 360 ஈ, குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 45 (2) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக அவரை கைது செய்­த­தாக சி.ஐ.டி.யினர் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர். அதன்­படி சந்­தேக நபர் கொழும்பு பிர­தான நீதிவான் ரங்க திஸா­நா­யக்­கவால் நாளை வியாழக்கிழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

ஓமானில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில் இருந்து கடந்த 2018.03.04 ஆம் திகதி குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதில் ஓமானில் உள்ள இலங்கை தூத­ர­கத்தின் பாது­காப்பு இல்­லத்தில்  தங்­கி­யுள்ள ஒருவர் தொடர்பில் எழுத்து மூலம் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

கிண்­ணியா, குறிஞ்சிக் கிண்­ணியா பகு­தியைச் சேர்ந்த யுவதி குறித்தே அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­துள்­ளது. குறித்த யுவதி ஓமான் தூத­ர­கத்தில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த நிலையில் அவ­ரிடம் மேல­திக வாக்கு மூலம் ஒன்­றினைப் பெற்று அனுப்­பு­மாறு சி.ஐ.டி.யினர் ஆலோ­சனை வழங்க கடந்த 2018.03.10 ஆம் திகதி அது குறித்து மேல­திக வாக்குமூலம் பெறப்­பட்­டுள்­ளது.

அதன்­படி கடந்த 2017.07.10 ஆம் திக­தியே அந்த யுவதி மரு­தா­னையில் உள்ள வேலை வாய்ப்பு முகவர் நிறு­வனம் ஒன்­றினூ­டாக வெளி­நாட்­டுக்கு  சென்­றுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இந் நிலையில் அச்­சி­று­மி­யிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில், அவர் 10 வயது சிறு­மி­யாக இருந்த போது சவுதி அரே­பி­யா­வுக்கு அனுப்பப்­பட்­டமை தொடர்பில் விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 தனது வீட்­டுக்கு அருகில் வசிக்கும்  உப முக­வ­ரான பெண் ஒருவர், 2010 இல் தன்­னையும் மேலும் நான்கு சிறு­மி­க­ளையும் வெளி­நாட்­டுக்கு அனுப்பும் நோக்­குடன் கொழும்­புக்கு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்­றுக்கு அழைத்து வந்­த­தாக யுவ­தியின் வாக்குமூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்த பெண் தங்­களை பெயர், முக­வரி தெரி­யாத முஸ்லிம் நபர் ஒரு­வ­ரிடம் அழைத்து சென்­ற­தா­கவும், அதன் பின்னர் அவரின் ஆலோ­சனைப் படி தங்­கு­மி­ட­மொன்றில் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.இதன்­போதே, N4152293 எனும் கடவுச்சீட்டை தனது கைக­ளுக்கு தந்­த­தா­கவும் அதில் தனது புகைப்­படம் பெயர் என்­பன இருந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். 

எனினும் அந்த கடவுச்சீட்டில் அடை­யாள அட்டை இலக்­க­மா­னது 896416758V என குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் பிறந்த திகதி 1989.05.20 என குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எனினும் பாதிக்­கப்­பட்ட யுவ­தி­யியின் உண்­மை­யான பிறந்த திகதி 2000.11.15 என கூறும் பொலிஸார் அவ­ரிடம் இந்த கடவுச்சீட்டு கொடுக்­கப்­படும் போது அவ­ருக்கு 10 வயது என நீதி­மன்­றுக்கு அறிக்கை ஊடாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

1762 எனும் இலக்­கத்தை உடைய போலி பிறப்புச் சான்­றிதழ், போலி அடை­யாள அட்டை ஆகி­ய­வற்றை வைத்தே போலி­கடவுச்சீட்டும் பெறப்­பட்­டுள்­ளதை சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளது. அதன்­படி குறித்த யுவதி சிறு­மி­யாக இருந்த போது அதா­வது 2010.08.10 ஆம் திகதி சவுதி அரே­பி­யா­வுக்கு போலி கடவுச்சீட்டில் வீட்டுப் பணிப் பெண்­ணாக அனுப்­பப்பட்­டுள்­ள­தாக கூறும் சி.ஐ.டி., அங்கு அவர் இரு வரு­டங்கள் வேலைச் செய்த பின்னர் நாடு திரும்­பி­யுள்­ள­தா­கவும் அதன் பின்னர் குவைத்துக்கும் வேலைக்­காக சென்­றுள்­ள­தா­கவும் நீதி­வா­னுக்கு சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே தற்­போது 18 வய­தான குறித்த யுவதி ஓமானில் வீட்டுப் பணிப் பெண்­ணாக சென்­றி­ருந்த போது அங்கு இடம்­பெற்ற கொடு­மை­களை சகிக்க முடி­யாமல் ஓமான் தூத­ர­கத்­துக்கு சென்று விட­யங்­களை கூறிய போது, அதனை மையப்­ப­டுத்தி சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த அதிர்ச்சித் தக­வல்கள் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­ப­டியே சந்­தேக நப­ரான போலி ஆவ­ணங்­களை தயா­ரித்து வெளி­நாட்­டுக்கு குறித்த யுவ­தியை சிறு­மி­யாக இருந்த போது அனுப்­பிய  நபரை சி.ஐ.டி.யினர் கைது செய்து கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­துள்­ளனர்.

குறித்த நபர்  ஏற்­க­னவே இவ்­வா­றான குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டவர் எனவும்,   கடந்த 2013 ஜன­வரி 9 ஆம் திகதி சவூதி அரே­பி­யாவில் தவாத்மி சிறையில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட சிறுமி ரிஸானா நபீக்­கையும் போலி ஆவ­ணங்கள் ஊடாக சவூ­திக்கு அனுப்­பிய குற்­ற­வாளி எனவும் சி.ஐ.டி.யினர் தெரி­விக்­கின்­றனர். 

1988 பெப்­ர­வரி 4 இல் ரிஸானா நபீக் பிறந்­தி­ருந்த நிலையில் தனது 17 ஆவது அக­வையில் 2005 மே 4 இல் பணிப்­பெண்­ணாக தொழில்வாய்ப்புப் பெற்று அவர் சவூதி அரே­பி­யா­வுக்கு அனுப்பப்­பட்­டி­ருந்தார்.சிறு­வர்கள் வெளி­நா­டு­களில் தொழில் புரிய தடை உள்­ளதால், அவ­ரது பிறந்த திகதி தொழில் முக­வரால் 02.-02.1982 என மாற்­றப்­பட்டு கட­வுச்­சீட்டு பெறப்­பட்­டி­ருந்­தமை தெரிந்ததே. 

2005 மே 22 இல், குழந்­தையின் தாய் தனது குழந்­தையை ரிசா­னாவின் பரா­ம­ரிப்பில் விட்டு விட்டு வெளியில் சென்­றி­ருந்த போது, குழந்­தைக்கு சிறிது நேரத்தில் புட்­டிப்பால் ஊட்டும் போது குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்­டது. தான் அக்­கு­ழந்­தையைக் கொலை செய்­ய­வில்லை என்றும், பாலூட்டும் போது மூச்சுத் திணறி இறந்­த­தா­கவும் ரிசானா தெரி­வித்­தி­ருந்தார்.ஆனாலும், குழந்­தையின் பெற்­றோரும், காவல்­து­றை­யி­னரும்  இவர் நபீக் கொலை செய்­த­தாக குற்றம் சாட்டி இருந்­தனர். 

சவூதி காவல்­து­றை­யினர் ரிசா­னா­விடம் இருந்து வாக்­கு­மூ­லத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்­தனர். வழக்கு விசா­ர­ணையின் போது ரிசா­னா­விற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ரிசானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவராக இவர் இருந்தார். 2007 ஜூன் 16 ஆம் நாள் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. 

இந் நிலையிலேயே கடந்த  2013 ஜனவரி 9 ஆம் நாள் புதன்கிழமை உள்ளுர் நேரப்படி சவூதி அரேபியாவில் தவாத்மி சிறையில் முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணியளவில் ரிஸானாவின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40253

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.