Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை : இந்தியாவில் மஹிந்த

Featured Replies

தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை : இந்தியாவில் மஹிந்த

 

 
 

“விடுதலைப் புலிகளுக்கெதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தை இன ரீதியிலான யுத்தமாக கருதக்கூடாது. மேலும் அவ்  யுத்தத்தில் தமிழர்களை குறி வைத்து இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை”  என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் “விராட் ஹிந்துஸ்தான்” சங்கம் சார்பில் டெல்லியில் “இந்தியா - இலங்கை உறவுகள்: அதை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கான பாதை” என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் மேலும் மஹிந்த,

mahindha_at_india.jpg

“விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது இந்தியா மற்றும் பிற அயல் நாடுகளுடன் கலந்தாலோசனை நடத்துவது தொடர்பான கொள்கையை இலங்கை கடைப்பிடித்தது.

பொருளாதாரம் சமூகம் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கும் இதே போன்ற நடைமுறையை இந்தியாவும், இலங்கையும் கொண்டுவர வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை ஒரு போதும் இன ரீதியிலான யுத்தமாக கருதக்கூடாது. தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் செயல்பாடானது இலங்கை எல்லையுடன் மட்டும் நிற்கவில்லை. இந்தியா வரை நீண்டது. இந்திய மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் பலரை அவர்கள் படுகொலை செய்தனர். இதை எப்போதும் மறக்க கூடாது.

தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்பது ஒரு இனத்தினருக்கு பயன் தரும் நடவடிக்கையாக பார்க்க கூடாது. அதனால் ஒட்டு மொத்த நாட்டிற்கும் நன்மையாகும்.

விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தம் தீவிரமாக நடைபெற்ற வேளையில் பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளரும் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சரும் என்னைத் தொடர்பு கொண்டு உடனடியாக யுத்தத்தை நிறுத்தும் படி வலியுறுத்தினர்.

ஆனால் அதை நிராகரித்து விட்டேன். அப்படி செய்தால் எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என நான் பதிலளித்தேன்.

இந்தியாவுடன் இணக்கமான நட்புறவை வைத்துக்கொள்வது மற்றும் இரு நாடுகளும் பரஸ்பரம் முழுவதும் புரிந்து கொள்வது ஆகியவையே எனது எதிர்கால வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாகும்” என குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவின் உரைக்கு பின்னர் சுப்பிரமணியன் சுவாமி,

“இலங்கையில் தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைப்பது ராஜபக்ஷ தான் என பரவலாக நம்பப்படுகிறது. 

இலங்கையிலிருந்து தீவிரவாதத்தை அவர் அழித்து நாட்டை சுத்தப்படுத்தினார். இதனால் சர்வதேச நாடுகள் முதலீடுக்கான உகந்த மையமாக இலங்கையை தற்போது கருதுகின்றன” என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.        

http://www.virakesari.lk/article/40341

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.