Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாட்டில் புது ஆட்சி: ஐ.தே.க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாட்டில் புது ஆட்சி: ஐ.தே.க

[வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 08:07 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்காவில் எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆட்சி மலரும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எட்வேட் குணசேகர மீண்டும் கட்சிக்கு வந்தது தற்போதைய அரசாங்கத்தை இல்லாது ஒழிக்க எமது கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகும் என அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கிராண்ட்பாசில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு கலந்து கொண்டு கட்சி ஆதரவாளர்களிடம் பேசிய ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாவது:

நாடாளுமன்றத்தின் தேவையை தனது சர்வாதிகாரப் போக்கினால் முடக்க நினைத்த அரசாங்கத்தின் நடவடிக்கையை கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து நான் தடுத்துள்ளேன். இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கிப் போராடுவோம். நாட்டின் ஜனநாயகத்தை சீரழித்து நாடாளுமன்றத்தை ராஜபக்ச சகோதரர்கள் ஆட்கொள்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

நாடாளுமன்றம் ஒரு தனியார் நிறுவனமல்ல, அது மக்களினுடையது, இந்த நிலையை தக்கவைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தன்னால் இயன்றதனை செய்யும்.

அரசாங்கம், ஒரு பிரச்சாரப் போரில் ஈடுபட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் கிழக்கை விடுவித்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் வாகரையை சில மணி நேரங்களுக்குள் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் இழப்புடன் கைப்பற்றி இருந்தது.

ஆனால் தற்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கு வாகரையை விடுவிக்க 4 மாதங்கள் எடுத்ததுடன், 400 படையினரும் தமது உயிர்களை இழந்திருக்கின்றனர். உக்கிரைனில் இருந்து பழைய வானூர்திகளை கொள்வனவு செய்ததன் மூலம் உயர் அதிகாரிகள் பெரும் தொகையை சம்பாதித்துள்ளனர் என்றார் அவர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க, செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க, தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர்களான மொகமட் மஹரூப்ஃ, ரவி கருணாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதினம்

தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாட்டில் புது ஆட்சி மலரும் என்று கூறாமல், புது கட்சி மலரும் என்று கூறி இருந்தாலாவது சனம் கொஞ்சமாவது கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்கும்....

சிறீ லங்கா பேரினவாத அரசியல் கட்சிகள் விடும் செய்திகளான புது ஆட்சி மலருதல், புது காட்சி புலருதல் எல்லாம் இனி அடுப்பில் வேகாது...

கீரிக்கெட்டு விளையாட்டில் தோல்வியடைந்த அணிகளின் வீரர்கள் தாம் இனி போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுகின்றோம் என அறிவிப்பது போல், கிளட்டு யானைகள் குறிப்பாக அணில் விக்கிரமாதித்தன் போன்றோர் சிறீ லங்கா அரசியலில் இருந்து ஓய்வு பெற முன்வரவேண்டும். இனியும் சனாதிபதி கனவில் காலந்தள்ளி சிங்கிளவர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடுவதில் அர்த்தம் இல்லை.

சிறீ லங்காவில் தற்போது உள்ள முன்னணி சிங்கள பேரினவாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவதன் மூலமே சிங்கிளவர்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு இன்னொரு சந்தர்ப்பம் ஏற்படக்கூடும்...

இவங்கடை கதையும் ஒரு கதையோ??? விசரங்கள். சும்மா சிங்களவனை சிங்களவனே ஏமாற்றும் தந்திரம்.எது என்னவோ போறபோக்கை பாத்தால் தழிழ் சிங்கள புதுவருடத்துடன் தங்கத்தமிழீழம் மலர்ந்தாலும் ஆச்சரியப்படுறாத்துக்கில்லை

ஆனால், இந்த ஏப்ரல் கதை பலகாலமாக அடிபடுது..உண்மை பொய் தெரியவில்லை..

பாவம் சேனைத்தலைவன் சீ கா யானைத் தலைவன் பேரசையில ஒவ்வொரு வருசமும் இப்படித்தான் சொல்லுவாரு அண்ணாச்சி,

  • கருத்துக்கள உறவுகள்

அயல் நாடுகளைப்பற்றி கதைப்பதை விட்டுவிட்டு நம்ம நாட்டு நடப்புகளைக்கொஞ்சம் கதைக்கலாமே???

வியாழன் 05-04-2007 01:57 மணி தமிழீழம் ஜமுகிலன்ஸ

தமிழ்ப் பிரதிநிதிகளை விடுவிக்கக் கோரி பாரிசில் எதிர்வரும் 9 நாள் எதிர்ப்புப் போராட்டம்

பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது.

இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்புஇ தமிழ்ப் பெண்கள் அமைப்புஇ தமிழ் வர்த்தக சங்கம்இ விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது.

ரொக்கட்றரோ (வுசழஉயனநசழ) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

என்ன செய்யப்போகின்றீர் புலம் பெயர்ந்தோரே???

அயல்நாட்டு அரசியல் கோமளி சுப்பிரமணியனைப் போல இங்கேயும் ஒரு அரசியல் வெருளியாக ரணில் மாறிக் கொண்டிருப்பதை பேச்சுகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஈழத்திலிருந்த

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

அயல்நாட்டு அரசியல் கோமளி சுப்பிரமணியனைப் போல இங்கேயும் ஒரு அரசியல் வெருளியாக ரணில் மாறிக் கொண்டிருப்பதை பேச்சுகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஈழத்திலிருந்த

ஜானா

*******************************************************

நாங்களும் இந்த புது வருடத்தை ஒரு விதமாகத் தான் எதிர் பார்க்கிறோம், எல்லாம் தலைவரின் ஆணையில் தான் தங்கியுள்ளது..நானும் ஒரு பெரிய தமிழீழக் கொடி வாங்குவதிற்கு தயாராகி விட்டேன், நீங்களும் தயாரா? புரிந்திருக்கும் தானே?

சிங்கள அரசியல் வாதிகளெல்லாம் இப்போது நன்றாகக் குறி சொல்கிறார்கள். புதுவருடத்திற்கு முன் கோத்தபாய புலிகளை ஒழித்துவிடுவாராம். ரணில் புதுவருடத்தில் புது ஆட்சியே வருமாம் என்கிறார். இவர்களுடைய கைகளில் குடுகுடுப்பையைக் கொடுத்து வீதி வீதியாகத் திரிந்து குறி சொல்வதநற்காக அனுப்பி விடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.