Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – யாருக்கு அந்த அதிஷ்டம்?

Featured Replies

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – யாருக்கு அந்த அதிஷ்டம்?

 

 

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? என்ற கேள்விக்கு இன்னும் தெளிவற்ற பதில்களே கிடைக்கப்பெறுகின்றன.

அன்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், மீண்டும் தாம் ஆட்சிக்கு வருவது உறுதி என்றும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தமது சகோதரன் ஒருவரே போட்டியிடுவார் என்றும். எனினும் இதுவிடயமாக கூட்டு எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இந்தியாவின் ‘இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்தின்போது அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்சவையும் கூடவே அழைத்துச் சென்றிருந்தார். நாமல் ராஜபக்சவும் இன்னொரு மகிந்தராஜ பக்சவைப் போன்று தோற்றமளித்தார்.

அவற்றைப் பார்க்கும் போது மகிந்த ராஜபக்சவின் அடுத்த அரசியல் வாரிசாக நாமல் ராஜபக்சவை இந்தியாவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஒரு ராஜதந்திர நகர்வாகவே இருந்தது. தனது மகனுக்கு வயது போதாமை காரணமாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோதரன் ஒருவரையே களமிறக்கப்போவதாக கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் மூன்று பேர் தற்போது அரசியலில் இருக்கின்றார்கள். மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச, அடுத்து கோட்டபாய ராஜபக்ச, அடுத்து பசில் ராஜபக்ச இவர்களில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான சமிக்ஞையை மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

இவர்களில் சமல் கடந்த ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்த அனுபவம் இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக மிளிர்வதற்கு போதுமான மக்கள் ஆதரவைத் திரட்டக்கூடியவரல்ல. கோட்டபாய முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்டவர், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததில் இவரின் துணிச்சலான தீர்மானங்களும், தந்திரோபாயங்களும் மிகப்பெரிய பங்கு வகித்தது என்பதால், அந்த வரலாற்று வெற்றியின் கதாநாயகனாக சிங்கள மக்கள் கொண்டாடும் ஒருவர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நகர அபிவிருத்திப் பணிகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்து நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றியவர் என்ற நற்பெயரும் இவருக்கு இருக்கின்றது.

இறுதியாக பசில் இவர் கடந்த ஆட்சியில் முக்கிய அமைச்சுப் பொறுப்பான பொருளாதார அபிவிருத்தியையும், திட்டமிடல் அமைச்சையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு விரைவுச்சாலைகள் அமையவும், 50 வருடங்களாக ஒட்டுப்போட்டு பாவிக்கப்பட்டு வந்த நாட்டின் முக்கிய பிரதான வீதிகளை காப்பற் வீதிகளாக மாற்றியமைத்தது மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள நிர்வாகக் கட்டிடங்களை மீளக்கட்டி எழுப்பியவர், சமுர்த்தி, மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை ஏற்படுத்தி கிராமங்களின் எழுச்சிக்கு திட்டம் வகுத்தவர்.

இந்த ராஜபக்சக்கள் கொள்ளையடித்தார்கள், அதிகாரத்துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள் என்றெல்லாம் ஆயிரம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி நாட்டின் பல நல்ல காரியங்கள் நடத்தேறியது அவர்களின் ஆட்சிக்காலத்தில் என்பதே இன்றளவும் பேசப்படுகின்றது.

இவர்களில் கோட்டபாய ராஜபக்சவுக்கு யுத்தத்தை வெற்றிகொண்ட கதாநாயகன் என்ற மதிப்பும், படைகளின் பாதுகாவலனாக இருக்கக்கூடியவர் என்பதால், முப்படையினர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பும், அத்துடன் பௌத்த இனவாதிகளின் ஆசிர்வாதத்திற்கும் தகுதியானவர் என்ற கருத்துக்கள் நிலவகின்றது. அதற்கு பலம் சேர்க்கும் வகையில் கூட்டு எதிரணியினர் ஒன்றினைந்து பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்தால் அவரது வெற்றி நிச்சயிக்கப்படும்.

இதேபோல் பசில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவரின் பிரதான பலமாக இருப்பது அவர் ஒழுங்கமைத்து வழிநடத்திய கூட்டு எதிரணியின் பொதுஜன பெரமுன கட்சியானது மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. அந்த பலம் ஒருபக்கமாகவும், கோட்டபாயவைவிட ராஜபக்ச குடும்பத்திலிருப்பவர்களில் பசில் ராஜபக்ச இனவாதியாகவோ, சிறுபான்மையினங்களின் வெறுப்புக்குரியவராகவோ இல்லாதவர் ஆகையால் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை ஓரளவு பெறக்கூடிய ராஜபக்ச குடும்பத்தில் ஒருவராக இருக்கின்றார். எனவே பசிலுக்கும் வெற்றிவாய்ப்பு இருக்கின்றது.

இதில் சர்ச்சைக்குரிய விடயம் என்னவென்றால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்தானா வேட்பாளராக இருக்க வேண்டும். கூட்டு எதிரணியில் இருக்கும் மூத்த அரசியல்வாதிகளுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என்பதுதான் பொது எதிரணியிலுள்ள சிரேஷ்ட தலைவர்களின் கேள்வியாக இருக்கின்றது.

அவர்களில் தற்போது பொது எதிரணியின் தலைவராக இருக்கும் தினேஸ் குணவர்தன முதன்மையானவராக இருக்கின்றார். இந்தியாவில் மகிந்த ராஜபக்ச தெவித்த கருத்துத் தொடர்பில் பொது எதிரணியின் மூத்த உறுப்பினரில் ஒருவரான குமார வெல்கம கருத்துத் தெரிவித்த போது, மகிந்தவின் சகோதரர் ஒருவர்தான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு முடிவு செய்யப்படுமாக இருந்தால், அவர்கள் இன்னொரு மைத்திரிபால சிறிசேனவை உருவாக்கப்போகின்றார்கள் என்று கூறியிருந்தார்.

இன்னொரு சிறிசேன என்று கூறப்படுவது எதுவெனில் கூடவே இறுதிவரை இருந்துவிட்டு இறுதியில் ஒரே இரவில் அந்தக் கூட்டத்திலிருந்து விலகி நன்பர்களுக்கு துரோகியாக எதிரணியில் நிற்பது என்றுதான் அவர்கள் வரைவிலக்கணம் கொடுக்கின்றார்களால் என்றால், மகிந்த ராஜபக்ச அல்லாத வேறு ராஜபக்சக்களில் ஒருவர் முன்னிலைப்படுத்தப்படுவாராக இருந்தால் அதற்கு எதிராக நண்பர்களும் எதிரியாக மாறுகின்ற நிலைமை உறுவாகும் என்பதையே அவ்வாறு கூறுகின்றார்கள்.

இவ்வாறான சர்ச்சைகளுக்கு பிரதான காரணமாக இருப்பது, அடுத்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக தற்போதுள்ள ஆட்சியாளர்களால் மக்களின் பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது என்ற கணிப்பும், பொது எதிரணிக்கு நாளாந்தம் மக்கள் ஆதரவு பெறுகிவருவதும்தான் என்கின்றார்கள் நோக்கர்கள்.

இதற்கிடையே நல்லாட்சி நடத்தும் இரு கட்சியினரும், ஒற்றுமையையும், தமக்கிடையேயான நம்பிக்கையீனத்தையும் இழந்து ஆளுக்கொரு திசையில் பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதில் சுதந்திரக்கட்சியினரைப் பொருத்தவரை அடுத்த ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலதான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள்.

ஒருவேளை அடுத்த தேர்தலில் மைத்திரிபால தோற்றுப்போய்விட்டால் அவர்களின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை அவர்களால் சிந்திக்கவும் முடியவில்லை.

அந்த அணியினரைப் பொறுத்தவரை இருளான பாதையில் மைத்திரிபால எனும் ஒரு கைவிளக்கை மட்டும் பிடித்துக்கொண்டு பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, அவர்களும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவே மக்களால் தெரிவு செய்யப்படுவார் என்று திட்டவட்டமாக நம்புகின்றார்கள். ஆனாலும் கடந்த மூன்று ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கம் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்வார்களா? என்பது கேள்விக்குரியாகத்தான் இருக்கின்றது.

இந்த இரு கட்சிகளும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கடந்த தேர்தலைப்போன்று இடையிலுள்ள அனைத்து முரண்பாடுகளையும், நம்பிக்கையீனங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி முயற்சி செய்வார்களாக இருந்தால் பொது எதிரணிக்கு கடும்போட்டியைக் கொடுக்கவும், வெற்றியைப் பெறவும் முடியுமாக இருக்கலாம். ஆனால் அதற்கான புறச்சூழலை இம்முறை யார் தோற்றுவிப்பார்கள் என்பதே கேள்வியாகும்.

-ஈழத்துக் கதிரவன்-

http://athavannews.com/இலங்கையின்-அடுத்த-ஜனாதி-3/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – யாருக்கு அந்த அதிஷ்டம்?

எவர்   ஆட்சிக்கு   வந்தாலும்   என்ரை     செல்லக்குஞ்சுகள்    சம்சும் கொம்பனிக்கு   ஓட்டமெற்றிக் அதிஷ்டம் கண்டியளோ :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.