Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடமாற்றம் வழங்காமையால் அபிவிருத்தி உத்தியோகத்தர் நஞ்சருந்தி தற்கொலை

Featured Replies

இடமாற்றம் வழங்காமையால் அபிவிருத்தி உத்தியோகத்தர் நஞ்சருந்தி தற்கொலை

 

 
 

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

jaffna.jpg

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக மாவட்டச் செயலரைச் சந்தித்து வெளியில் வந்து அவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.

புதிய உயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவரான தில்லையம்பலம் கஜேந்திரகுமார் (வயது -32) என்ற அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவரது நண்பர்கள் தெரிவித்ததாவது:

கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.

ஆனால் இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக அந்தப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ்ப்பாண மேலதிக மாவட்டச் செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் கஜனது முறைப்பாட்டை பொருட்படுத்தாது, மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த இடத்திலேயே கஜன் தான் கொண்டு வந்திருந்த நஞ்சை அருந்தி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

கஜனின் இழப்புக்கு முற்றுமுழுதாக அதிகாரிகளே காரணம் என கஜனின் பெற்றோர் கருதுகின்றனர்  என்றனர்.

இதுதொடர்பில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபரின் பதிலைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும், அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை, தில்லையம்பலம் கஜேந்திரகுமார் போன்று மேலும் பல பட்டதாரிகள் வன்னியில் தொடர்ச்சியாக இடமாற்றம் இன்றி விரக்தியுடன் கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சுவரை கோரிக்கை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40938

9 hours ago, நவீனன் said:

தில்லையம்பலம் கஜேந்திரகுமார் போன்று மேலும் பல பட்டதாரிகள் வன்னியில் தொடர்ச்சியாக இடமாற்றம் இன்றி விரக்தியுடன் கடமையாற்றி வருகின்றனர்.

காலத்துக்கு காலம் அரச வேலை வேண்டும் என்று பட்டதாரிப் பிச்சைக்காரர்கள் பலர் தெருக்கூத்தை ஆடி வந்துள்ளார்கள். 

கூத்தின் முடிவில் அவர்களுக்கு 15,000 - 20,000 வரை மாதச் சம்பளத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் அரச நியமனம் வழங்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குறிப்பிட்ட கடமைகள் ஒதுக்கப்படவில்லை. பலர் வேலை செய்யாமலே மாதம் மாதம் சம்பளம் பெற்று வந்துள்ளனர். 

அரச வேலை கிடைத்தால் போதும் என்று நியமனத்தை அன்று பெற்றவர்கள் இன்று வீட்டுக்கு அருகில் வேலை வேண்டும் அடம் பிடிக்கிறார்கள். 

இது போன்ற கேவலமான ஜென்மங்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன? 

9 hours ago, நவீனன் said:

கஜனின் இழப்புக்கு முற்றுமுழுதாக அதிகாரிகளே காரணம் என கஜனின் பெற்றோர் கருதுகின்றனர்  என்றனர்.

முழுக்காரணம் பெற்றோர்கள் தான்! 

கோழையாக, கையாலாகாத பேர்வழியாக தற்கொலை செய்த தில்லையம்பலம் கஜேந்திரகுமாரின் பெற்றோர்களை சிறைகளில் அடைக்க வேண்டும், அவனை குறைந்த பட்சம் ஒரு மனிதனாக வளர்க்கத் தவறியமைக்காக.  

  • தொடங்கியவர்

அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து 

 

அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

jaffna.jpg

கஜனின் மரணம் தொடர்பாக பெற்றோர் மேலும் தெரிவிக்கையில்,

கஜனின் மரணம் தொடர்பாக ஊடகங்களில் தவறாக வெளியான  செய்திகளால் பிள்ளையை இழந்து தவிக்கும் எமக்கு மேலும்  மன வேதனையை ஏற்படுத்துகின்றது. 

கஜன் 2012 ஆம் ஆண்டிலிருந்து முழு மனதோடு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக மக்கள் பணி புரிந்து வருகின்றார். 

ஒரு போதும் இடமாற்றத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர் அல்ல. 

பெற்றோராகிய நாங்கள் கேட்டும் கூட  இடமாற்றம் கோர மறுத்து வந்துள்ளார்.  அவரது பிரதேச பிரிவுக்குட்பட்ட மக்களே இதற்கு சாட்சியாக உள்ளனர். 

அவர் அம் மக்களின் பேரன்பையும் அபிமானத்தையும் பெற்ற பொறுப்புள்ள ஒரு அரச உத்தியோகத்தர் ஆவார்.  

இவ்வாறிருக்க இடமாற்றம் கோரி அது கிடைக்காத  காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி முற்றிலும் தவறானது.

மேலும் மாந்தை கிழக்கு பிரதேச செயலருடன் மிகுந்த புரிந்துணர்வுடன் இணக்கமாகவும் இருந்து செயற்பட்டு தமது  பிரதேச மக்களுக்கு  மேலான சேவையை கஜன் வழங்கி வந்துள்ளார். 

இந்த நிலையில் நடந்த சம்பவமானது அவரது தனிப்பட்ட முடிவினால் எடுக்கப்பட்ட ஒன்றாகும். இவரின் மரணத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாபம்  தேட முனைவது மிகவும் வருந்தத்தக்கதாகும் என தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/40991

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.