Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் தளராத பொருளாதாரமும் தடுமாறும் ரூபாவும்

Featured Replies

இந்தியாவின் தளராத பொருளாதாரமும் தடுமாறும் ரூபாவும்

Untitled-5-3fa6153d244549dcd826d333f9069f8af01d0e5d.jpg

 

இந்­தி­யாவின் பொரு­ளா­தாரம் 2018-இன் இரண்டாம் காலாண்டில் 8.2வீதம் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இது உலகின் பெரிய நாடு­களில் மிக அதிக அள­வி­லான வளர்ச்­சி­யாகும். ஒரு நாட்டின் பொரு­ளா­தாரம் அதிக அளவில் வளர்ச்­சி­ய­டையும் போது வட்டி வீதம் அதி­க­ரிக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பில் அந்த நாட்டின் நாண­யத்தின் பெறு­மதி அதி­க­ரிக்கும். ஆனால், இந்­திய ரூபாவின் பெறு­மதி தொடர்ந்து வீழ்ச்­சி­ய­டைந்து கொண்டே இருக்­கின்­றது. மற்ற வளர்­முக நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் , இந்­திய ரூபாவின் வீழ்ச்சி குறை­வா­ன­தாக இருந்­தாலும் இந்­திய ரூபாவின் வீழ்ச்சி பெரிய அர­சியல் பொரு­ளா­தாரத் தாக்­கத்தை இந்­தி­யாவில் ஏற்­ப­டுத்தும். பொரு­ளா­தார வளர்ச்சி என்­பது மதிப்­பீடு மட்­டுமே. பெரும்­பாலும் சரி­யான கணிப்­பீ­டாக இருப்­ப­தில்லை. விவ­ரங்­கெட்ட புள்ளி விப­ரங்கள் 

2017ஆம் ஆண்டு இந்­தியப் பொரு­ளா­தாரம் 7.7 வீதம் வளர்ந்­த­தாக இந்­திய புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­வித்­தன. ஆனால் 2017இல் இந்­தி­யாவின் ஏற்­று­மதி வள­ரவே இல்லை, இந்­திய வங்­கிகள் கடன் வழங்­கு­வது மந்த நிலை­யி­லேயே இருந்­தது. இந்­தியத் தொழிற்­துறை உற்­பத்தி வள­ர­வில்லை. இதனால் இந்­தியப் பொரு­ளா­தாரம் 7.7வீதம் வளர்­கின்­றது என்­பது உண்­மைக்கு மாறா­ன­தாக இருக்­கின்­றது என்றார் விஜய் ஆர் ஜோஸி (Emeritus Fellow of Merton College, Oxford and Reader Emeritus in Economics, University of Oxford). இந்­தியப் பொரு­ளா­தாரம் வளர்ந்தும் அதன் நாணயப் பெறு­மதி அதி­க­ரிக்­காமல் இருப்­ப­தற்கும் இந்­தியா தனது பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பான பிழை­யான அல்­லது பொய்­யான புள்­ளி­வி­ப­ரங்­களை வெளி­யி­டு­வது கார­ண­மாக இருக்­கலாம். சீனா உட்­பட பல வளர்­முக நாடுகள் தமது பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பாக பொய்­யான அல்­லது தவ­றான புள்­ளி­வி­ப­ரங்­களை வெளி­யி­டு­வ­தாகப் பல பொரு­ளா­தார நிபு­ணர்கள் நம்­பு­கின்­றனர். Morgan Stanley Investment Management என்ற முத­லீட்டு முகாமை நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் இந்­தி­ய­ரான ருச்சிர் ஷர்மா இது பற்றி இண்­டியன் எக்ஸ்­பி­ரஸில் 2015 இல் ஒரு கட்­டுரை வரைந்­துள்ளார். 2014-ஆம் ஆண்டு இந்­தியப் பொரு­ளா­தாரம் 6.9 வீதம் பொரு­ளா­தார வளர்ச்­சி­ய­டைந்­தது என்ற மோச­மான பகிடிக்கு உல­கமே சிரிக்­கி­றது என்­பது அவ­ரது கட்­டுரைத் தலைப்பு. 2018 செப்­டெம்பர் 17-ஆம் திகதி திங்­கட்­கி­ழமை 8.2% வளரும் இந்­தி­யாவின் ரூபாவின் மதிப்பு ஒரு புறம் சரிந்து கொண்­டி­ருக்க , மறு­புறம் 6.2% வளர்ச்­சி­ய­டையும் சீனாவின் பங்குச் சந்தை 2014-ஆம் ஆண்டின் பின்னர் மோச­மான வீழ்ச்­சியைக் கண்­டது.

பேரியப் பொரு­ளியல் (Macro-Economic) சிக்கல்  

இந்­திய நடை­மு­றைக்­க­ணக்குப் பற்­றாக்­குறை 0.7 வீதத்­தி­லி­ருந்து 1.வித­மாக அதி­க­ரித்­துள்­ள­மையும், இந்­திய ரூபா அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக 2018 செப்­டெம்பர் வரை 14வீதம் வீழ்ச்­சி­ய­டைந்­த­மையும் 2018.-09-.15 இந்­தி­யாவின் வெளி­நாட்டுச் செலா­வணிக் கையி­ருப்பு $426பில்­லி­ய­னி­லி­ருந்து $399பில்­லி­ய­னாகக் குறைந்­த­மையும், அரச நிதிப்­பற்­றாக்­குறை 6.5 வீத­மாக இருத்­தலும் இந்­தியா ஒரு பேரியப் பொரு­ளியல் (Macro Economic) சிக்­கலில் மாட்­டி­யுள்­ளதைச் சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

இந்­திய நிதி­ய­மைச்சர் 2018 செப்­டெம்பர் 15-ஆம் திகதி அறி­வித்த நட­வ­டிக்­கைகள்:

1. அத்­தி­யா­வ­சி­ய­மற்ற இறக்­கு­ம­தி­களைக் கட்­டுப்­ப­டுத்­துதல்.

உயர்ந்­த­விலைக் கார்கள், வீட்டுச் சாத­னங்கள் இலத்­தி­ர­னி­யல் ­க­ரு­விகள் போன்­ற­வற்றின் இறக்­கு­ம­திகள் மீது கட்­டுப்­பாடு விதிக்­கப்­படும்

2. அந்­நிய முத­லீட்டை இல­கு­வாக்­குதல்

இந்­தி­யாவில் வெளி­நாட்­டி­னர் முத­லீடு செய்­வ­தற்கு உள்ள கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­து­வ­துடன் வெளி­நா­டு­களில் குடி­யு­ரிமை பெற்று வாழும் இந்­தி­யர்கள் செய்யும் முத­லீட்டை இல­கு­வாக்­கு­தலும் செய்­யப்­படும்.

3. வெளி­நாட்டு நாண­யத்தில் இந்­திய நிறு­வ­னங்­களைக் கடன் பட அனு­ம­தித்தல்.

இந்த நட­வ­டிக்­கை­களின் பின்­னரும் 2018-.09-.17 ரூபா 1% வீழ்ச்­சி­ய­டைந்­தது. 2018-.09-.15 இந்­தி­யாவின் வெளி­நாட்டுச் செலா­வணிக் கையி­ருப்பு $426பில்­லி­ய­னி­லி­ருந்து $ 399 பில்­லி­ய­னாகக் குறைந்­தது.

மசாலா கட­னீடு (Masala Bonds)

உல­கெங்கும் உள்ள பெரிய தனியார் நிறு­வ­னங்கள் தமக்குத் தேவை­யான நிதியை வங்­கி­க­ளி­ட­மி­ருந்து பெறு­வது மட்­டு­மல்ல , கட­னீ­டுகள் (Bonds) மூல­மா­கவும் நிதி திரட்­டு­வ­துண்டு. வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களில் இது சாதா­ரணம். இந்­தியா தனது தனியார் நிறு­வ­னங்­களை இந்­திய ரூபாவில் கட­னீ­டு­களை வழங்க 2015இல் அனு­ம­தித்­துள்­ளது. பொது­வாக நாணய மதிப்பு ஏற்ற இறக்­கத்தால் ஏற்­படும் பாதிப்­பு­களைத் தவிர்க்க அமெ­ரிக்க டொலரில் தனியார் நிறு­வ­னங்கள் கட­னீ­டு­களை முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வழங்கும். இந்­திய ரூபா மோச­மான மதிப்­பி­ழப்பைச் சந்­திக்கும் போது வெளி­நாட்டு நாண­யங்­களில் கடன் வாங்­கிய இந்­திய தனியார் நிறு­வ­னங்கள் கடும் பாதிப்பைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்கும். இதைத் தவிர்க்­கவே இந்­திய ரூபாவில் கட­னீ­டுகள் வழங்க இந்­திய காப்­பொ­துக்க வங்கி அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இந்த கட­னீ­டு­களை உலக நிதி நிறு­வ­னங்கள் மசாலா கட­னீ­டுகள் எனக் கிண்­ட­லாக அழைக்­கின்­றன. டொலர் கட­னீ­டு­களில் நாணய மதிப்பு ஏற்ற இறக்­கத்தால் ஏற்­படும் பாதிப்­பு­களை கடன்­படும் நிறு­வ­னங்­களே தாங்­கிக்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும். ஆனால், மசாலா கட­னீ­டு­களில் கடன் கொடுப்­ப­வர்­களே நாணய மதிப்­பி­றக்­கத்தால் கலங்க வேண்­டி­யி­ருக்கும்.

முன்னாள் வேறு இன்னாள் வேறு  

முன்னாள் இந்­திய நிதி­ய­மைச்சர்  

ப. சிதம்­பரம் ரூபாவின் வீழ்ச்­சிக்கு எதி­ராக மோடி அரசு எடுத்த நட­வ­டிக்­கைகள் காலம் கடந்­த­வை­யாக உள்­ளன என்­ற­துடன் ,அரசு அரை மன­து­ட­னேயே இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது என்றார். ஆனால், 2013-ஆம் ஆண்டு அவர் நிதி­ய­மைச்­ச­ராக இருந்த போது இந்­திய ரூபா பெறு­மதி வீழ்ச்­சி­ய­டைந்த போது அதை­யிட்டுக் கல­வ­ர­ம­டையத் தேவை­யில்லை என்­றவர் ப சிதம்­பரம். ஒரு நாட்டின் நாண­யத்தின் பெறு­மதி குறையும் போது அதன் ஏற்­று­மதி அதி­க­ரிக்க வாய்ப்­புண்டு என்­பது பொது­வான பொரு­ளியல் விதி­யாகும்.

வளரும் பொரு­ளா­தார நாடு­களின் பொதுப்­பி­ரச்­சினை

தற்­போது எல்லா வளர்­முக நாடு­களின் நாண­யத்தின் பெறு­மதி அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக குறை­வ­டை­கின்­றது. மற்ற நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இந்­திய ரூபா குறைந்த அள­வி­லேயே வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. அதி­க­ரிக்கும் அமெ­ரிக்க வட்டி வீதம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அறி­வித்­துள்ள வர்த்­தகப் போர், உல­க­மெங்கும் பரவும் இறக்­கு­ம­தி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் போன்­ற­வற்றால் உலகப் பொரு­ளா­தா­ரத்தில் ஒரு நம்­பிக்­கை­யின்மை உரு­வா­கி­யுள்­ளது. அதனால் வளர்­முக நாடு­களின் நாண­யங்­களின் பெறு­ம­திகள் வீழ்ச்­சி­ய­டை­கின்­றன.

 பெரி­யண்­ண­னுடன் பிரச்­சினை

படைத்­துறை அடிப்­ப­டையில் நெருங்கும் இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் பொரு­ளா­தார அடிப்­ப­டையில் வில­கியே நிற்­கின்­றன. அமெ­ரிக்­காவின் நீண்­ட­கால நட்பு நாடு­க­ளையே கண்­ட­படி விமர்­சிக்கும் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் இந்­தி­யாவைக் கேந்­தி­ரோ­பாய பங்­காளி என்றே அழைக்­கின்றார். ஆனால், இந்­தி­யாவின் பொரு­ளா­தாரம் இன்­னமும் மூடப்­பட்ட நிலையில் இருப்­ப­தாக அவர் கரு­து­கின்றார். அவ­ரது வர்த்­தகப் போர் இலக்­கு­களில் இந்­தி­யாவும் ஒன்று. இந்­தியா ஈரா­னி­ட­மி­ருந்து எரி­பொருள் இறக்­கு­மதி செய்­வதை டொனால்ட் ட்ரம்ப் விரும்­ப­வில்லை.

 இந்­திய எரி­பொருள் தேவையின் 80% இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றது. சவூதி அரே­பி­யாவும் பாகிஸ்­தானும் நெருக்­க­மான உறவை வைத்­தி­ருப்­பதைச் சமா­ளிக்க இந்­தி­யா­விற்கு ஈரானின் நட்பு அவ­சியம். உலக எரி­பொருள் விலை அதி­க­ரிப்பு இந்­தியப் பொரு­ளா­தா­ரத்­திற்கு மட்­டு­மல்ல , இந்­திய ஆளும் கட்­சிக்கும் பாத­க­மாக அமையும். அதைச் சரி­செய்ய பொரு­ளா­தாரத் தடைக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் ஈரா­னி­ட­மி­ருந்து எரி­பொருள் வாங்­கு­வதை இந்­தியா விரும்­பு­கின்­றது. ஈரா­னி­ட­மி­ருந்து எரி­பொருள் வாங்­கினால் அதற்­கான கொடுப்­ப­ன­வுகள் ஈரானைப் போய்ச் சேராமல் அமெ­ரிக்கா தடைகள் செய்­யலாம். அதைத் தவிர்க்க ஈரான் மீது பொரு­ளா­தாரத் தடை விதிக்­காத ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உத­வியை இந்­தியா நாடி­யுள்­ளது.

                 அதை எந்த வகையில் அமெ­ரிக்கா பார்க்கும் என்­பது கேள்­விக்­கு­ரிய ஒன்றே.

இந்­தியா மட்­டு­மல்ல.....

கடந்த ஐந்து ஆண்­டு­களில் அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக ஆர்­ஜென்­டீ­னாவின் நாணயம் 546வீதம், துருக்­கியின் லிரா 221வீதம், பிரே­ஸிலின் ரியால் 84 வீதம், தென் ஆபி­ரிக்­காவின் ரண்ட் 51 வீதம், மெக்­சிக்கன் பெசோ 47 வீதம், மலே­ஷிய ரிங்கிட் 27 வீதம் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கையில் இந்­திய ரூபா 16வீதம் மட்­டுமே வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இந்­திய ரூபாவின் வீழ்ச்சி சமா­ளிக்கக் கூடி­யது என்­கின்­றனர் , இந்­திய ஆட்­சி­யா­ளர்கள்.

பன்­னாட்டு நாணய நிதியம்

2018 செப்­டெம்பர் 18-ஆம் திகதி பன்­னாட்டு நாணய நிதியம் வெளி­யிட்ட அறிக்­கையில்:

1. மற்ற நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் , இந்­தியப் பொரு­ளா­தாரம் ஒரு மூடப்­பட்ட பொரு­ளா­தாரம்.

2. 2018இன் இரண்­டாம காலாண்டில் இந்­தி­யாவின் பொரு­ளா­தார உற்­பத்­தியில் ஏற்­று­ம­தியின் பங்கு அதி­க­ரித்­துள்­ளது. இந்­திய ரூபாவின் மதிப்­பி­ழப்பு இதை மேம்­ப­டுத்தும்.

3. இந்­திய நாண­யங்­களைச் செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கி­யமை, ஜீ.எஸ்.டி. வரி­வி­திப்பு ஆகிய இரண்டு தடை­க­ளையும் இந்­தியப் பொரு­ளா­தாரம் தாண்டி விட்­டது. இனி வளர்ச்சிப் பாதையில் அது தொடரும்.

4. இந்­தியப் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு மக்­களின் கொள்­வ­னவு அதி­க­ரிப்பும் முத­லீட்டு அதி­க­ரிப்பும் இனி பங்­க­ளிப்புச் செய்யும்.

5- தற்­போது நடந்து கொண்­டி­ருக்கும் இந்­தியப் பொரு­ளா­தா­ரத்தை எண்­மியப் படுத்­து­தலும் நிய­மப்­ப­டுத்­து­தலும் அதிக வரி வசூ­லிப்புச் செய்ய உத­வு­வதால் இந்­திய அரச நிதிப் பற்­றாக்­குறை சீர­டையும்.

பன்­னாட்டு நாணய நிதி­யத்தின் கருத்­துக்­களை பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்கள் ஏற்­றுக்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. வளர்­முக நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு வெளி­நாட்டு முத­லீ­டுகள் அவ­சி­ய­மா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. நரேந்­திர மோடியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுக்கு 2017-ஆம் ஆண்டு 86வீதம் இந்­தி­யர்கள் நம்­பிக்கை வைத்­தி­ருப்­ப­தாக கருத்து வெளி­யிட்­டனர் . 2018-ம் ஆண்டு அது 56 வீத­மாகக் குறைந்து விட்­டது. இந்­தி­யாவில் நிகர வெளி­நாட்டு முத­லீடு குறைந்து கொண்டே செல்­கின்­றது. முத­லீட்­டா­ளர்கள் இந்­தி­யாவில் இருந்து வெளி­யே­று­வ­தற்­கான கார­ணங்கள்:

1. அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம், ஜப்பான் ஆகி­ய­வற்றின் பொரு­ளா­தா­ரங்கள் வளர்ச்­சி­ய­டையத் தொடங்­கி­யதால் அவற்றின் நடுவண் வங்­கிகள் அள­வுசார் இறுக்­கத்தைச் (QUANTITATIVE TIGHTENING) செய்யத் தொடங்­கி­யுள்­ளன. அதா­வது தமது நாடு­களின் வங்­கி­க­ளி­டை­யே­யான நாணயப் புழக்­கத்தைக் கட்­டுப்­ப­டுத்த தொடங்­கி­விட்­டன. அதனால் அவற்றின் நாண­யங்­களின் பெறு­மதி தொடர்ந்து அதி­க­ரிக்கும். அந்த நாடு­களின் வட்­டியும் அதி­க­ரிக்கும். இந்­தி­யாவில் முத­லீடு செய்­வ­திலும் பார்க்க உறுதியான அரசியல் நிலைப்பாடுடைய நாடுகளில் முதலீடு செய்வதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்புகின்றார்கள்.

2. 2019-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை தற்போது உறுதியாகச் சொல்ல முடியாத நிலை இருப்பதால் ஓர் உறுதியற்ற நிலை இந்தியாவில் தோன்றியுள்ளது.

3. உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது இந்தியாவில் பணவீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆனால் , இந்தியாவில் கட்டிடங்களில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். அதற்கு அவர்கள் பல சிவப்பு நாடாக்களைக் கடக்க வேண்டியுள்ளது.

ரூபாவின் மதிப்பிறக்கம் இந்தியாவின் ஏற்றுமதியைக் கூட்டுவதற்கு தரமான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்திய ஏற்றுமதி பெரும்பாலும் மூலப்பொருட்களாகவே இருக்கின்றது. தொழில்துறை உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான உட்கட்டுமானங்கள் இந்தியாவில் போதிய அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு இதுவரைகாலமும் முன்வைக்கப்பட்டது. உலக வங்கி இந்திய உட்கட்டுமானத் துறையில் பல பசுந்தளிர்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது .

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.