Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழக்குச் செலவைப் பெற்றார் சுமந்திரன்….

Featured Replies

வழக்குச் செலவைப் பெற்றார் சுமந்திரன்….

 

 

Sumanthiran-2.jpg?resize=666%2C470

தமிழரசு கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனிடம் இருந்து வழக்கு செலவை பெற்றுக்கொண்டு உள்ளார். வலி,தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ. பிரகாஸ்சை உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு விசாரணைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரனும் , வழக்காளி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்னிலையானர்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த வழக்கை வழக்காளி மீள பெற விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணி , எம்.ஏ. சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது , இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் தாக்கல் செய்த வழக்கில் கட்சியில் இருந்து அவரை நீக்குவதற்கும் , சபையின் உறுப்புரிமையை நீக்குவதற்கும் நீதிமன்றினால் கட்டானை வழங்கப்பட்டு இருந்தது.

அந்நிலையில் இன்றைய தினம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் , செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் சார்பில் முன்னிளையானேன். இந்த வழக்கு நீதிமன்றுக்கு வெளியே தீர்க்கப்பட்டு விட்டது என எனக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு இருந்தது.

அதனை நான் நீதிமன்றுக்கு ஆரம்பத்தில் தெரிவித்த போது பிரகாஸ் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவ்வாறு தனக்கு எதுவம் தெரியபடுத்த வில்லை என தெரிவித்து வழக்கினை மேற்கொண்டு நடத்த கேட்டுக்கொண்டார்.

அதன் போது நான் பூர்வாங்க ஆட்சேபனை ஒன்றினை தெரிவித்திருந்தேன். இந்த வழக்கு சரியான முறையில் தாக்கல் செய்யப்பட வில்லை கூட்டினைக்க படாத நிறுவனத்திற்கு எதிராக மூவரின் பெயரை குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்வதாயின் சிவில் நடவடிக்கை கோவை பிரிவின் 16 கீழ் நீதிமன்ற அனுமதி பெற்று ஊடகங்களில் அதனை தெரியப்படுத்த வேண்டும். அவற்றை நான் மேற்கோள் காட்டி வழக்கினை முதல் நிலையிலையே தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்து சமர்ப்பணம் செய்தேன்.

அதன் பின்னர் வழக்காளியின் சட்டத்தரணி குறித்த வழக்கு சமரசமாக தீர்க்கப்பட்டு உள்ளது தன்னுடைய கட்சி காரர் தனது வழக்கை மீள பெற உள்ளதாக தெரிவித்தார். அதன் போது நீதிபதி வழக்காளியிடம் நேரடியாக கேட்ட போது ஆம் நான் வழக்கினை மீள பெற விரும்புகிறேன் என தெரிவித்தார்.

வழக்கின் ஆரம்பித்தில் நான் சமரசம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த போதே வழக்கினை மீள பெற்று இருந்தால் வழக்கு செலவு கேட்டு இருக்க மாட்டேன். அப்படியில்லை என தர்க்கித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட வுள்ளது என தெரிய வந்ததும் வழக்கினை மீள பெற விரும்புவதாக தெரிவித்தமையால் வழக்கு செலவினை கேட்டு இருந்தேன். அதனால் எனக்கு வழக்கு செலவு தந்தே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. என தெரிவித்தார்.

அதன் போது ஊடகவியலாளர்கள் வழக்கு செலவாக எவ்வளவு தொகை பெற்றுக் கொண்டீர்கள் என சட்டத்தரணி சுமந்திரனிடம் கேட்ட போது . அதற்கு பதிலளிக்காமல் சிரித்துகொண்டு சென்றார். என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/97106/

  • தொடங்கியவர்

“வழக்கு செலவை செலுத்த மாட்டேன்” – மணிவண்ணன்….

manivannan.jpg?resize=554%2C467

தன்னுடைய கட்சி காரர் தன்னிடம் எந்த சந்தர்ப்பத்திலும் வழக்கு வழக்கினை மீள பெற போவதாக கூறவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வலி,தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ. பிரகாஸ்சை உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு விசாரணைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரனும், வழக்காளி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்னிலையானர்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த வழக்கை வழக்காளி மீள பெற விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்நிலையில் தான் வழக்காளியின் சட்டத்தரணியிடம் இருந்து வழக்கு செலவினை பெற்றுக்கொண்டதாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் கேட்ட போது ,

வழக்கு விசாரணை நடக்கும் போது கூட எனது கட்சி காரர் வழக்கினை வாபஸ் பெற வுள்ளதாக என்னிடம் கூறவில்லை. அதனாலயே வழக்கினை வாபஸ் பெற முடியாது என மன்றில் தெரிவித்தேன்.

நீதிபதி நேரடியாக வழக்காளியான எனது சட்டத்தரணியிடம் கேட்ட போது, தான் வழக்கினை வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் என்னிடம் தான் வழக்கினை வாபஸ் பெற விரும்புவதாக எந்த சந்தர்பத்திலும் கூறவில்லை.

இதேவேளை சட்டத்தரணி சுமந்திரன் மன்றில் செய்த விண்ணப்பம் கராணமாக வழக்கு தள்ளுபடி செய்யும் நிலைக்கு சென்ற போதே தான் வாபஸ் பெற விரும்புவதாக கூறிய கருத்தை முற்றாக தான் நிராகரிப்பதாகவும் , வழக்காளி வழக்கினை வாபஸ் பெற விரும்பியதால் தான் வழக்கு தள்ளுபடி செய்யபட்டது என தெரிவித்தார்.

வழக்கு செலவு செலுத்தியமை தொடர்பில் கேட்ட போது, எனக்கு எந்த அறிவித்தலும் வழங்காமல் மன்றில் திடீரென வழக்கினை வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தமையால் வழக்கு செலவினை வழக்காளியே செலுத்த வேண்டும் எனுவும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/97100/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.