Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்கு செக்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்கு செக்?

102.jpg

மா.ச.மதிவாணன்

சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதிக்கான பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுப் பாதை (SILK ROUTE) திட்டத்தைக் கிடப்பில் போடுவது குறித்து பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த பகீர் முடிவு சீன அரசை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக 2 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று முத்துமாலைத் திட்டம் மற்றொன்று பட்டுப் பாதை திட்டம். ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றுக்கான திட்டம் பட்டுப்பாதைத் திட்டமாகும். அதாவது சீனாவிலிருந்து வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் வரையிலான கடல்வழிப் போக்குவரத்தைத் தங்குதடையின்றி உருவாக்கிக் கொள்வதுதான் பட்டுப் பாதை திட்டம். இந்த பட்டுப் பாதைத் திட்டத்துக்குப் பாதுகாப்பாக, இக்கடல் வழியில் உள்ள பிற நாடுகளின் துறைமுகங்களை மேம்படுத்தி சீனாவின் கடற்படையை நிறுவுவதற்கான திட்டம் முத்துமாலைத் திட்டமாகும் (ONE BELT ONE ROAD).

102a.jpg

அதேபோல, சீனாவிலிருந்து காஷ்மீர், பாகிஸ்தான் வழியாக வளைகுடா நாடுகளை எட்டும் வரையில் தரை வழிப் பாதையையும் உருவாக்கியிருக்கிறது சீனா. இதுவும் முத்துமாலைத் திட்டத்தின் ஒரு அங்கமாகும். பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகம் என்பது ஆப்கானிஸ்தானையும் ஈரானையும் தொட்டுவிடும் தொலைவில் உள்ளது. இந்த கவ்தார் துறைமுகத்தைக் கையகப்படுத்தி மேம்படுத்திய சீனா அங்கிருந்து தமது மாகாணங்களுக்கு ரயில் போக்குவரத்து பாதையை அமைத்தது. வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை எளிதாகச் சீனாவுக்கு கொண்டுசெல்வதற்காகவே இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சீனாவின் முத்துமாலை மற்றும் பட்டுப் பாதைத் திட்டத்தில் பாகிஸ்தான் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான், மாலத்தீவு ஆகியவற்றில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாலும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையிலும் படுமோசமான ஊசலாட்டங்கள் வெளிப்படுவதாலும் சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் புதிய இம்ரான் கான் அரசு, சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் தயக்கம் காட்டத் தொடங்கிவிட்டது. சீனாவின் நன்மைக்காக செயல்படுத்தப்படக் கூடிய பட்டுப் பாதைத் திட்டத்துக்கு பாகிஸ்தான் ஏன் ரூ.56,000 கோடி செலவிட வேண்டும், என்பதுதான் இம்ரான் கான் அரசின் கேள்வி. இதனால் இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதா? வேண்டாமா? என்னும் குழப்பத்தில் இருக்கிறது இம்ரான் கான் அரசு.

102b.jpg

அதேபோல, மாலத்தீவில் மாரோ தீவை தனது கடற்படைப் பயன்பாடுகளுக்காக சீனா பயன்படுத்தி வந்தது. ஆனால் தற்போது அதிபர் தேர்தலில் இந்திய ஆதரவாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றிருக்கிறார். சீன ஆதரவாளர் யாமின் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இதனால் மாலத்தீவில் இனி சீனா செல்வாக்கு செலுத்த முடியுமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் எப்போதும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்தான். தெற்கு இலங்கையைச் சீனாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்த இலங்கை, வடகிழக்குப் பகுதிகளை இந்தியாவிடம் விட்டு வைத்திருக்கிறது. இலங்கை விவகாரத்தில் இந்தியா முழு வீச்சில் களமிறங்கத் தொடங்கினால் அங்கேயும் சீனாவின் செல்வாக்கு குறையும் நிலை உள்ளது. தெற்காசிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களால் தனது பட்டுப் பாதைத் திட்டம் பட்டுப் போய்விடுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறது சீனா.

https://minnambalam.com/k/2018/10/01/102

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்தியா முழு வீச்சில் களமிறங்கத் தொடங்கினால் அங்கேயும் சீனாவின் செல்வாக்கு குறையும் நிலை உள்ளது. தெற்காசிய நாடுகளில்

எதைசொல்லி வருவினம் சிங்களவர்கள் அவ்வளவுக்கு ராஜதந்திரம் அறியாதவர்கள் அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்

 

China-debt-trap-300x200.jpgஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.  குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

சீனாவின் இத்திட்டம் தொடர்பாக வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் பிரகாரம், சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது சிறிய மற்றும் வறிய நாடுகள் மீது பரந்தளவில் கடன் சுமையை உண்டுபண்ணுவதால், இந்த நாடுகளில் நிலைத்தன்மை பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இதனால் இந்த நாடுகள் இறையாண்மைக் கடன் என்கின்ற ஆபத்திற்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் இத்திட்டமானது 68 நாடுகளில் பாதிப்பைச் செலுத்துவதுடன் இந்த நாடுகள் ஒவ்வொன்றினதும் பொதுக் கடன் மீதும் தாக்கம் செலுத்தும்.

சீனாவின் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் 68 நாடுகளில் 23 நாடுகள் தற்போது எதிர்நோக்கும் கடன் சுமை ஆபத்து மற்றும் இவற்றின் இறையாண்மை கடன் ஆபத்து விகிதம் மற்றும் உலக வங்கியின் கடன் பேண்தகு நிலை போன்றவற்றை இந்த ஆய்வானது பயன்படுத்தியுள்ளது.

2016 முடிவில், சீனா தனது ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 23 நாடுகளில் குழாய் இணைப்புக்களை இரவலாக வழங்கியுள்ளதால் இந்த நாடுகள் மீதான கடன் சுமை அதிகரித்ததாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

China-debt-trap.jpg

சீனாவின் இத்திட்டம் காரணமாக எட்டு நாடுகள் தமது கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திப்பதாக ‘பூகோள அபிவிருத்திக்கான மையத்தின்’ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த எட்டு நாடுகளில் பாகிஸ்தான், டிஜிபோட்டி, மாலைதீவு, லாவோஸ், மொங்கோலியா, மொன்ரனிக்ரோ, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவை உள்ளடங்குகின்றன.

சீன-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைத் திட்டம்,  சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தின் மையப்புள்ளியாகச் செயற்படுவதுடன் சீனாவுடன் அதிக நிதி சார் தொடர்புகளை வைத்திருக்கின்ற நாடாகவும் பாகிஸ்தான் காணப்படுகிறது.

சீனாவால் கணிக்கப்பட்ட 62 பில்லியன் டொலரில் 80 சதவீத நிதியை பாகிஸ்தானுக்கு கடனாக  வழங்கியுள்ளது.

இந்த ஆய்வின் பிரகாரம், சீனா தான் வழங்கிய கடன்களை மீளப்பெற்றுக் கொள்ளும் அணுகுமுறையானது கடந்த காலத்தில் பிரச்சினையை உண்டுபண்ணியமை உறுதிப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, சிறிலங்கா, சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச்  செலுத்தத் தவறியதால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தியது.

உலகின் ஏனைய கடன்வழங்குநர்களைப் போலல்லாது சீனாவானது கடன் பெற்ற நாடுகள் கடன்களைச் செலுத்தும் போது சந்திக்கும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டிருக்கவில்லை.

கடன் பெற்ற நாடுகளுடன் நிதி சார் தொடர்புகளைப் பேணுவதற்கான சட்ட விதிகளைப் பின்பற்றும் கடன்வழங்கும் நாடுகளைக் கொண்ட  Paris Club  அமைப்பின் தற்காலிக பங்குதாரராக சீனா மட்டுமே உள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன்வழங்குநர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நியமங்கள், சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்திலும் பிரயோகிக்கப்பட வேண்டும் என ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ தெரிவித்துள்ளது.

இதற்காக இத்திட்டத்தில் உலக வங்கி மற்றும் ஏனைய பன்முக வங்கிகள் தமது பங்களிப்பை அதிகரிப்பதுடன் இத்திட்டங்கள் தொடர்பில் நியமங்களை உருவாக்குவது தொடர்பில் சீன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் பாரிஸ் கழகத்தின் முதன்மையான கோட்பாடுகளை மேற்பார்வை செய்யக்கூடிய புதிய கடன் வழங்கு நாடுகளைக் கொண்ட குழுவொன்றை உருவாக்க வேண்டும் எனவும் இந்தக் குழுவானது சீனாவுடன் அர்த்தமுள்ள பங்களிப்பை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வாளர் குழு விதந்துரைத்துள்ளது.

கடன் ஆபத்துக்களை குறைப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சீனாவானது தொழினுட்ப மற்றும் சட்ட ஆதரவுகளை வழங்க வேண்டும் எனவும் வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ பரிந்துரைத்துள்ளது.

எடுத்துக்காட்டாக காடுகளைப் பாதுகாத்தல் போன்ற சூழல் பாதுகாப்பை நோக்காகக் கொண்ட திட்டங்களுக்கு கடன்களைப் பெறும் நாடுகளுக்கு ஆதரவாக கடன் இடமாற்று ஏற்பாடுகளை சீனா வழங்க வேண்டும் என இந்த மையம் பரிந்துரைத்துள்ளது.

ஆங்கிலத்தில்  – Nikita Kwatra
வழிமூலம்        – livemint
மொழியாக்கம் – நித்தியபாரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.