Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் கழிவறையில் புத்தகம் வாசிக்கிறோம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: ஏன் கழிவறையில் புத்தகம் வாசிக்கிறோம்?

24.jpg

 

ஆர்.அபிலாஷ்

2009இல் ரோன் ஷோல் எனும் மருத்துவர் 499 இஸ்ரேலிய ஆண்களிடமும் பெண்களிடமும் பாத்ரூமில் வாசிப்பதைப் பற்றி ஓர் ஆய்வை நடத்தினார். 64% ஆண்களும் 41% பெண்களும் பாத்ரூமில் வாசிப்பதை ஒப்புக்கொண்டனர். பாத்ரூமில் வாசிப்பது மனதை ஆசுவாசப்படுத்தி லகுவாய் மலம் கழிக்க உதவுவதாகவும், இது ஓர் உத்தி மட்டுமே எனவும் அவர் கண்டறிந்துள்ளார்.

முன்பு ஒருமுறை நான் இயக்குநர் ராமின் வீட்டுக்குப் போயிருந்தபோது அவரது கழிப்பறையில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தைக் கவனித்தேன். சிலர் கழிப்பறைக்குப் புத்தகம் எடுத்துப் போவார்கள்; வெளியே படித்தபடியே தொடர்ச்சிக்கு உள்ளேயும் கொண்டு போவார்கள். ஆனால் ராம் கழிப்பறைக்கு எனவே தனியாக புத்தகங்கள் வைத்திருந்தார். நாவல், கட்டுரை என வழக்கமான நூல்களே. கழிப்பறையில் வாசிப்பதற்கு மட்டுமே தகுதியான புத்தகங்கள் உண்டு என அவர் என்னிடம் விளையாட்டுத்தனமான புன்னகையுடன் சொன்னார்.

ஆனால், நான் என்றுமே கழிப்பறையில் புத்தகம் படித்ததில்லை. கழிப்பறையில் நான் செய்தித்தாள் படிப்பதுண்டு. உள்ளே போனால் விளையாட்டுப் பக்கம் மற்றும் நடுப்பக்கங்களைப் படித்து முடித்துவிட்டே வருவேன். இப்போது படிக்க மொபைலுடன் போகிறேன்.

 

தனிமை தரும் ஆசுவாசம்

24a.jpg

இப்படிப் படிப்பது உடல் நலனுக்கு நல்லதல்ல என சில நண்பர்கள் கூறிக் கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு பக்கத்தை நீங்கள் கழிப்பறையில் படிப்பதற்கும் வெளியே படிப்பதற்கும் முக்கிய வித்தியாசம் உள்ளது. ஒருவித பிரத்யேகத் தனிமை, பாதுகாப்புணர்வு கழிப்பறையில் மட்டுமே உள்ளது.

நான் ஏதாவது முக்கிய முடிவெடுக்க வேண்டுமெனில் பாத்ரூமில் போய் உட்கார்ந்துகொள்வேன். குளிக்கையில், நீர்த்திவலைகளின் திரை என்னை மூடுகையில், எனக்கு நானே பேசிக்கொள்வேன். அப்போது எடுக்க முடிவது போன்ற தெளிவான முடிவுகள் வெளியே எனக்குச் சாத்தியமாவதில்லை.

இப்போதெல்லாம் காலையில் எழுந்ததுமே எனக்கு ஏற்படுகிற முதல் உற்சாகமே பாத்ரூமில் படிக்கலாமே எனும் எண்ணம் தருவதுதான். இப்பழக்கம் வேறு பலருக்கும் உண்டென அறிவேன்.

ஏன் கழிப்பறை? ஏன் படுக்கையறையிலோ, பால்கனியிலோ அந்த இதமான தனிமை நமக்குக் கிடைப்பதில்லை?

 

கிளர்ச்சியும் ஆறுதலும்

கழிப்பறை / குளியலறைகள் மிக இடுங்கலாய் கட்டப்பட்டவை. வெளி ஓசைகள், அசைவுகள், நிழல்கள், சிறு சிறு தொந்தரவுகள் அங்கு இல்லை. பாத்ரூமில் நமக்கு வேறெந்த பொறுப்பும் இருக்க முடியாதல்லவா! படுக்கையில் படுத்துப் படிக்கையில்கூட ஏதாவது வேலை நினைவு வந்து நாம் கவனம் சிதறலாம்; போன் வந்தால் பேச நேரிடலாம்; டிவி பார்க்கத் தோன்றலாம்; பசியெடுக்கலாம்; ஜன்னல் வழி வெளியே தெருவில், எதிர்வீட்டு பால்கனியில் கடந்து போகும் பெண்களை சைட் அடிக்கத் தோன்றலாம். ஆனால், பாத்ரூமுக்குள் இவையெல்லாம் தடை சாத்தியப்படாதவை.

மார்க் ஸ்கோன்பெல்ட் எனும் வலைப்பதிவர் இதைப் பற்றி எழுதுகையில் மலம் கழிப்பதில் ஒருவித சுகானுபவம் உள்ளதைக் குறிப்பிடுகிறார். வயிற்றின் பாரம் இறங்குவதன் ஆறுதலைப் பற்றிக் கூறுகிறார். மலத்துவாரம் உள்ள பகுதியில் உள்ள ஏகப்பட்ட நரம்பணுக்கள் செக்ஸுடன் சம்பந்தப்பட்டவை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆக, மலம் கழிப்பதன் கிளர்ச்சியை உணர்ந்துள்ளவர்கள் அதை நீட்டிக்க விரும்புகிறார்கள். வாசிப்பு அதற்கு உதவுகிறது. அது மட்டுமல்ல, வாசிப்பு என்பதன் சுவையே மலத்துவாரத் தசைகள் விரிவுறும் கிளர்ச்சியுடன் இணைந்து பல மடங்கு மேலாகிறது என நான் கருதுகிறேன். பொன்னியின் செல்வனில் கரிகாலனும் நந்தினியும் சந்திக்கும் பகுதியாகட்டும், முராகாமியின் நார்வேஜிய வனம் நாவலின் துவக்க அத்தியாயங்களாட்டும், அடிவயிற்றை எக்கி ரசித்து பாரம் இறக்கியபடி அவற்றை வாசிக்கும் அனுபவமும் வெறுமனே நாற்காலியில் அமர்ந்து கூர்ந்து வாசிக்கும் அனுபவமும் ஒன்றல்ல. ரொமான்டிக்கான அத்தியாயங்கள், பரபரப்பான திகில் மற்றும் ஆக்‌ஷன் அத்தியாயங்கள் பாத்ரூமில் வாசிக்கத் தோதாய் உள்ளது இதனால்தான் எனக் கருதுகிறேன்.

அமெரிக்க நாவலாசிரியர் ஹென்ரி மில்லர் இதைப் பற்றி சொல்கையில் பாத்ரூமைப் போல வாசிப்புக்குத் தகுந்த இடம் வேறில்லை என்கிறார். பாத்ரூமில் படிக்கையிலேயே ஒரு நல்ல நூலின் சிறந்த குணங்கள் மேலெழுந்து வரும்; பாத்ரூம் வாசிப்புக்கு உகந்து வராத புத்தகங்கள் இலக்கியத் தகுதியற்றவை என்கிறார். ஜேம்ஸ் ஜாய்ஸின் உச்சபட்ச சாதனையான யுலைசஸ் நாவலைத் தான் முழுக்க பாத்ரூமில் வைத்தே படித்ததாய் மில்லர் கூறுகிறார்.

 

ஒடுங்கிக்கொள்ளும் இச்சை

24b.jpg

மேலும், பாத்ரூமின் அந்த இடுங்கலான அமைப்பே ஒரு பொந்தைப் போன்றது. நாம் கருவில் தாயின் கருவறை எனும் பொந்தில்தானே வாழ்ந்தோம். அதன் பின்னர் தொட்டில். தொட்டிலுக்குப் பின்னரும் போர்வையைப் போர்த்தி ஒரு சின்னக் கூடாரத்துக்குள் நம்மை இரவில் ஒடுக்கிக்கொண்டு தூங்குகிறோம். பள்ளியில் / அலுவலகத்தில் தூங்க வேண்டுமானால் மேஜையில் கையை வைத்து அதன் மேல் தலைசாய்த்து நம்மையே அணைத்து ஒடுங்கிப் போகிறோம். என்னதான் பெரிய அகண்ட உலகில் வாழ்ந்தாலும் நாம் தொடர்ந்து அந்தச் சின்ன இடுங்கலான இடத்துக்காகவே ஆசைப்படுகிறோம். மனம் கசக்கையில் யாராவது அணைத்துக்கொள்ள மாட்டார்களா என ஏங்குகிறோம். பகலெல்லாம் அலைந்துவிட்டு இரவில் அந்தச் சிறிய இருட்டான இடத்துக்காகவே ஏங்குகிறோம். நமது உடலுறவுகூட இன்னொரு உடம்புக்குள் தற்காலிகமாய் ஒடுங்கித் திணித்து இளைப்பாறும் இச்சைதானே?

இந்த உளவிழைவைச் சரியாய்ப் புரிந்துகொள்ள நம் வீட்டு வளர்ப்புப் பிராணிகளை கவனித்தாலே போதும். நாய்க் குட்டி என்றால் சின்ன வயதிலேயே அதற்கு என ஒரு கூண்டு வேண்டும். பூட்டி வைக்க அல்ல, விளையாடிக் களைத்த பின் அதற்கு என்று யார் தொந்தரவும் இல்லாமல் ஒரு இடமாக. பூனைக்கு என்றால் ஆளவரமற்ற ஒரு மூலை, பரண் அல்லது கார்ட்போர்ட் பெட்டி. நாயோ நம்முடனே திரியும் என்பதால் நம் கால்களின் இடையிலான இடமே அதன் புகலிடம். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அங்கே போய் இடுங்கிக்கொள்ளும். அங்கேதான் கண்ணுறங்கும். கனவு காணும். கனவில் பேசும், சொறிந்துகொள்ளும், வாலாட்டும்.

நாகரிக உலகில் நமக்கெல்லாம் பாத்ரூம்தான் என்றும் தாயின் கருவறை. என்ன, சற்றே நாற்றமெடுக்கும் கருவறை.

(கட்டுரையாளர்: அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர். யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர். இலக்கியம், உளவியல், கிரிக்கெட் முதலான பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.

http://www.minnambalam.com/k/2018/10/03/24

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கக்கூசிலை பேப்பர் வாசிக்கிற மாதிரி புகைத்தல் செய்யுறவையும் இருக்கினம். சுருட்டோ சிகரெட்டோ வாயிலை வைக்காட்டில் ஒண்டும் வெளியிலை போகாது. காலைக்கடனும் முடியாது. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.