Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒடிசா–ஆந்திரா இடையே கரையை கடந்தது ‘தித்லி’ புயல்!- இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒடிசா–ஆந்திரா இடையே கரையை கடந்தது ‘தித்லி’ புயல்!- இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

tit-720x450.jpg

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘தித்லி’ புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஒடிசா – ஆந்திரா இடையே 149 கிலோமீற்றர் வேகத்தில் கரையை கடந்துள்ளது.

புயல் தாக்கத்தின் எதிரொலியாக குறித்த பகுதியில் கடும் மழை பெய்து வருவதுடன், இக்காலநிலை தொடர்ந்து மூன்று, நான்கு மணிநேரங்களுக்கு நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று முதல் இரண்டு தினங்களுக்கு ஒடிசா அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் எதிரொலியாக மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சரிந்து விழுந்து பாரிய சேதங்கள் பதிவாகியுள்ளதுடன், ஆந்திரா பிரதேசத்திலுள்ள கலிங்கப்பட்டிணம் முதல் கோபால்பூர் வரையான கடலோர பிராந்தியங்கள் ஊடான ரயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தித்லி புயல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, 2 இலட்சம் பேர் வரையானோர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

இவர்களை தங்கவைப்பதற்கௌ ஒடிசாவில் 879 தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/ஒடிசா-ஆந்திரா-இடையே-கரைய/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திராவில் ரிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் உயிரிழப்பு

October 11, 2018

titly-1.jpg?resize=800%2C533

ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் ரிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலினால் முக்கிய நகரங்களை இணைக்கும் வீதிகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ரிட்லி புயல் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இன்று அதிகாலை ரிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்த போது மணிக்கு சுமார் 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.
மிக பலத்த மழை காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன் மின் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.

இந்தநிலையில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் மேலும் இந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

titli-3.jpeg?resize=800%2C350titli.jpg?zoom=3&resize=335%2C206

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓடிசாவில் ஏற்பட்ட டிட்லி புயல் – வெள்ளத்தினால் 57 பேர் பலி :

October 19, 2018

1 Min Read

odisa.jpg?zoom=3&resize=335%2C191

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் திகதிகரையைக் கடந்தனையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

வீதிகளில்  மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டிருந்தது.இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வெள்ளத்தினால் சுமார் 2,765 கோடி ரூபாய் பெறுமிதயான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

 

http://globaltamilnews.net/2018/99809/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.