Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் கிழக்கு மாகாண வெற்றிகளை விட வான்புலித் தாக்குதலே சாதனை வெற்றி: முன்னாள் இராணுவப் பேச்சாளர்

Featured Replies

சிறிலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாண வெற்றிகளை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல் மூலம் புதிய வெற்றியை சாதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவ முன்னாள் உயர் அதிகாரியும் இராணுவப் பேச்சாளருமான மேஜர் ஜெனரல்; சரத் முனசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள இணைய தளம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இடங்களை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்வது படைகளுக்கு மிகவும் ஆபத்தானது

கட்டைபறிச்சான்-சம்பூர்-கொக்கட்டிச்சோலை என இராணுவம் இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் தந்திரோபாயமாக தாக்குதலை நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்கின்றனர். இது இராணுவத்துக்கு ஆபத்தானது. ஏனென்றால் இதே பகுதிகள் முன்னரும் இராணுவத்திடம் இருந்தன. இது இல்லாமல் போனது ஏன் என்பதை பாதுகாப்புத்துறையினர் சிந்திக்க மறுக்கின்றனர்.

1993முதல் வட போர்முனைக்காகவே இந்த இடங்களை இராணுவம் கைவிடவேண்டிவந்தது. இன்றும் அந்த அளவில் தான் படைப்பரம்பல் உள்ளது.

கிழக்கில் வெறும் ஆளற்ற பகுதிகளை எதிர்ப்பில்லாமல் பிடிப்பது இராணுவ வெற்றியா?

இதைவிட கடந்த 26ம் திகதி வான்தாக்குதல் மூலம் புலிகள் தமது புதிய வெற்றியை சாதித்துள்ளனர். அந்த தாக்குதலை புலிகளின் வான்படையின் ஒரு சோதனை நடவடிக்கை என்றே கொள்ளவேண்டும். இந்த விமானங்களில் 400 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட குண்டுகளுடன் வந்து தாக்கமுடியும்.

அத்துடன் தேவையேற்படின் சாதாரண வீதியையே ஓடுபாதையாக பயன்படுத்தவும் முடியும். பரந்த நிலப்பரப்பின் ராடார்களுக்கு தெரியாமல் அவர்கள் கொழும்புக்கு வந்து தாக்கியுள்ளனர்.

இரவில் தாக்குதல் நடத்தும் வல்லமையை புலிகள் நிருபித்துள்ளதால் சிறிலங்காவின் சிறப்பு நிகழ்வு நாள் ஒன்றில் வெடிபொருளை நிரப்பி வந்து வான்தாக்குதலை நடத்தி பெரும் அழிவையும் அவர்களால் ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

1990களின் தொடக்கத்திலிருந்து 1990களின் கடைசி வரை தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ்மக்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் சரத்முனசிங்க தீவிரமாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=31375

அப்ப பாருங்க இவரே இப்படி நினைக்கேக்க அமெரிக்கா, இந்தியா , பிரிட்டன் எல்லாம் புலிகளை எப்படி எல்லாம் கணிப்பார்கள். முக்கிய மான நேரத்தில முக்கியமான் வேலையினை புலிகள் செய்து காட்டி உலக தமிழரின் செல்வாக்கினை மீண்டும் வெளிந்நாட்டு மக்களிடையே மீண்டும் ஓயாத அலைகள் போல ஒரு முறை உலுப்பிவிட்டுள்ளார்கள்.

அப்ப ஓயாத அலைகளும் தொடங்கினா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் இராணுவ 'பொய்யுரைப்பவராக" பேச்சாளராக இருந்தபோது இதைச்சொல்லியிருந்தால் பெறுமதியாக இருந்திருக்கும்

இப்ப கடிவாழத்தை கழட்டிப்போட்டு குலைக்கிறார்

உம் ஒரு பிரயோசனமுமில்லை

இவருக்கும் கனபேர் திரும்பதிரும்ப சொன்னவ

எழுதினவ பொய் சொல்லாதையும் என்று.

இப்ப வாறார் கிழுpக்க...

இப்ப வாறார் கிழிக்க...

ஓய்வு பெற்றால்தான் உண்மைகளும் வெளிவரும். பதவியில் இருக்கும்போது தாங்கள்தான் ஹீரோ.

இது இப்பத்தான் இவருக்குப்புரியுதாக்கும். ஆனாலும் புலிகளின் தந்திரோபாயங்களை புரிந்துகொள்ளும் அளவிற்கு இவருக்கு மட்டுமல்ல இலங்கை அரசுக்கே வல்லமை கிடையாது.

இவர் சந்திரிக்காவுக்கும், றத்வதைக்கும் யால்ரா அடிச்சவர்தான் இவர் சொன்ன பொய்களில பத்தில் ஒரு பங்கைக் கூட றம்புட்டான் என்னும் சொல்ல வில்லை, இப்போ இப்படி சொல்றார். ஐ திங் எகேயன் யால்ரா போர் சந்திரிக்க :lol:

ஓய்வு பெற்றால்தான் உண்மைகளும் வெளிவரும். பதவியில் இருக்கும்போது தாங்கள்தான் ஹீரோ.

பதவி போய் முன்னால் ஆனால் தான் பல பேருக்கு புத்தி பிறக்கிறது. பதவியில் இருக்கும் போது பதவி கண்ணை மறைக்கும் போல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.