Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக்குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக்குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி

 

உக்ரைனிடமிருந்து  ரஸ்யா கைப்பற்றிய கிரிமியாவில் கல்லூரியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கேர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இனந்தெரியாத பொருள் வெடித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்ய பாதுகாப்பு படையதிகாரியொருவர் இது பயங்கரவாத செயல் என குறிப்பிட்டுள்ளார்.

வெடிபொருளொன்றே வெடித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள்  மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன

இதேவேளை உள்ளுர் தொலைக்காட்சியொன்று ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர், கல்லூரியில் பல உடல்களை காணமுடிகின்றது தாக்குதல்களை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் தன்னை வெடிக்கவைத்து பலியாகியுள்ளார் எனகல்லூரியின் தலைவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இது பயங்கரவாத தாக்குதல் பல உடல்களை காணமுடிகின்றது  என குறிப்பிட்டுள்ளஅவர் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டனர் இரண்டாவது தளத்தில்  அவர்கள் கண்ணால் கண்ட அனைவரையும் கொலை செய்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

crimea33.jpg

எனது மாணவர்களும் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட தொழில்நுட்ப கல்லூரியில் சந்தேகநபர்கள் மாணவர்களை பணயக்கைதிகளாக பிடிக்க முயன்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

http://www.virakesari.lk/article/42649

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரிமிய தொழில்நுட்ப கல்லூரி குண்டுவெடிப்பு – 18 பேர் பலி

October 17, 2018

1 Min Read

Crimea-1.jpg?zoom=3&resize=335%2C201கிரிமியாவில் கருங்கடலையொட்டியுள்ள கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இன்று இடம்பெற்ற தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் இதற்கு காரணம் எனவும் ரஸ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

சோவியத் யூனியன் உடைவிற்கு பின்னர், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஸ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையில் ரஸ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவே கிரிமியாவை அந்நாடு மக்கள் கருதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Crimea-2.jpg?resize=450%2C800Crimea-6.jpg?resize=787%2C439  Crimea-3.jpg?resize=800%2C450Crimea.jpg?resize=660%2C371

 

http://globaltamilnews.net/2018/99691/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.