Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சரவை கலைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவை கலைப்பு

October 27, 2018

parliament.jpg?zoom=3&resize=335%2C201

இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இந்த அறிவிப்பு தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரசிலமைப்பு சபை மற்றும் அரச வங்கிகளின் தலைவர்கள் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்

 

http://globaltamilnews.net/2018/100967/

5 hours ago, கிருபன் said:

இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

காலதாமதமாக முரண்பாடான அறிக்கை. 

இதன் மூலம் நடந்தவை அனைத்தும் சட்டவிரோத பதவியேற்புகள் என்பது உறுதியாகிறது. 

வரும் திங்கட்கிழமை 30 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை; உறுதிப்படுத்தப்பட்ட தகவல்!

மஹிந்த பிரதமராக நேற்று முன் தினம் பதவியேற்ற நிலையிலும், தாமே தொடர்ந்து பிரதமராக இருப்பதாக ரணில் அறிவித்துள்ள நிலையில் கொழும்பு அரசியல் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில் மஹிந்த புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீங்கப்பட்டதாகவும் தெரிவித்து இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்களை அரச தலைவர் மைத்திரியின் உத்தரவுக்கமைய விடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து நேற்று இரவு புதிய பிரதமர் மஹிந்த மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 96 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்திருந்தார்.

இதன்போது புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர் நாளைய தினம் 29-ம் திகதி புதிய அமைச்சரவை பதவியேற்குமென மைத்திரி அறிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதையடுத்து மைத்திரி -ரணில் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் 49 பேரைக்கொன்ட அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நாளை மறுதினம் பதவியேற்கவுள்ள மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சரவை 30 பேரைக்கொண்டிருக்குமென ஜனாதிபதி செயலகம் மற்றும் மஹிந்த தரப்பினரே உறுதிப்படுத்தியுள்ளனர்.

யார் யாரை எந்தெந்த அமைச்சுப்பதவியில் நியமிப்பது தொடர்பிலும் மைத்திரியும் மஹிந்தவும் கலந்துரையாடி முடிவெடுத்திருப்பதாகவும் அந்தத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.ibctamil.com/srilanka/80/108184?ref=bre-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.