Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபரிமலையில் 3 நாட்கள் 144 தடை உத்தரவு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலையில் 3 நாட்கள் 144 தடை உத்தரவு..

November 3, 2018

Restrictions-Announced-As-Kerala-Braces-

சபரிமலையில் நாளை மறுநாளம் 5ம் திகதி நடைதிறக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது  சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐயப்ப பக்தர்கள் கேரளாவில்  பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் ஐப்பசி மாத நடை திறப்பின் போது சபரிமலைக்கு சென்ற இளம்பெண்களையும் தடுத்து நிறுத்தியமையினால் ஐயப்ப பக்தர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் மோதல் நிலைமை ஏற்பட்டது.  இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்தநாளையொட்டி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திங்கட்கிழமை மாலை திறக்கப்பட்டு மறுநாள் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதனையடுத்து இந்த முறையும் சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதனால் ஐயப்ப பக்தர்கள் மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி சபரிமலையில் பலத்த காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2018/101876/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக பொலிஸார் குவிப்பு

Sabarimalai-720x450.png

சபரிமலை கோயில் நடை நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுவதனால் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாமென உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியா முழுவதிலும் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கோயிலின் நடை நாளை திறக்கப்படவுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஐய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனால், இதுவரை 3,719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் அனைவரின் மீதும் 546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படவுள்ளமையால் அங்கு ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்கள்.

மேலும், இளம் பெண்களும் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமென மாநில அரசு அறிவித்துள்ளதுடன் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாளை நடை திறப்பின்போது, இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் சபரிமலையில் நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, ஐய்யப்ப பக்தர்கள் முகத்தை துணியால் மூடிக் கொண்டு செல்லக்கூடாது என்றும் அவ்வாறு சென்றால் அவர்களது முகத்திரையை விலக்கி பொலிஸார் விசாரணைகளை நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 16 மணித்தியாலங்களுக்குள் பக்தர்கள் கோவிலில் இருந்து வர வேண்டும் என்றும் இந்திய பொலிஸால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சபரிமலையில்-பாதுகாப்பு-ப/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.