Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் பேச்சுக்கு தயார்: கொழும்பு ஊடகம்

Featured Replies

வான்படையின் பலத்தை உலகிற்கு காட்டிய பின்னர் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு தாம் விரும்புவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு பின்னர் கண்காணிப்புக் குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.

எனினும் பேச்சுக்களுக்கு முன்நிபந்தனையாக 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு முழுமையாக பேணப்படுவதுடன், அதன் அடிப்படையில் தான் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பு ஒரு வழமையான சந்திப்பு நிகழ்வு எனவும், விடுதலைப் புலிகள் தரப்பில் அதன் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவனும், கண்காணிப்புக் குழுவினரின் தரப்பில் அதன் பதில் தலைவரான ஜோன் ஒஸ்கார் சொல்னெஸ்னும் தலைமை தாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் இந்த அழைப்பிற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான பதில் இது வரையில் தெரிவிக்கப்படவில்லை.

எனினும் எதிர்வரும் மே 1 ஆம் நாள் சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்படும் தீர்வு யோசனைகளின் பின்னர் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துக் கட்சிக்குழு தனது இறுதியான தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிக்க தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின் போது அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான வான் தாக்குதல்கள், இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விடுதலைப் புலிகளால் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே மோதல்களால் பொதுமக்கள் அதிகளவில் உயிரிழப்பது தொடர்பாக கண்காணிப்புக் குழு கடந்தவார சந்திப்பின் போது அரசாங்க தரப்புக்கும், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது விடுதலைப் புலிகளுக்கும் தெரிவித்திருக்கின்றது.

கட்டுநாயாக்கவில் வான் தாக்குதல் நடைபெற்ற பகுதியை சென்று பார்வையிடுவதற்கு அரசாங்கம் இன்று வரை கண்காணிப்புக் குழுவினருக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

-----puthinam.com---

கண்காணிப்புக் குழுவினர் புலிகளுடன் சந்தித்துப் பேச்சு

கொழும்பு,ஏப்.9

இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் விடுதலைப் புலிகளின் தரப் பில் அவர்களது சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட குழுவினரும்

கண்காணிப்புக் குழுவின் தரப்பில் அதன் பிரதித் தலைவர் ஜோன் ஒஸ்கர் சொல்னர் தலைமையிலான குழுவினரும் இடம் பெற்றிருந்தனர்.

விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது நடத்திய வான் தாக்குதலையடுத்து புலிகளுக்கும் கண்காணிப்புக் குழுவினருக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.

uthayan.com

இனிப்பேச்சுவார்த்தை என்றால் புலிகள் பல நிபந்தனைகள் புதிதாக விதிக்க வேண்டும்

ஆகக்கூடியது 1மாதம் மட்டும்(முன்னர் போன்று 5 வருடங்கள் இல்லை)

எதாவது இன அழிப்பு நடவடிக்கை அல்லது போர் நிறுத்த மீறல்கள் நடந்தால் உடனடியாக போர் நிறுத்த கண்காணிப்பு குழு

அந்த இடத்திற்கு போய் எந்தவித தலையீடுகள் இல்லாமல் சம்பவ மக்கள் உடன் பேசி உண்மைகளை அறிந்து அரச பக்கத்தில்

அல்லது புலிகள் பக்கத்தில் பிழை சரி இருந்தால் அதனை சர்வ தேசத்திற்கு(ஊடகங்கள்) உடன் அறிவித்து ஒப்பந்தம் முறிவு அல்லது அல்லது இல்லை என அறிவிக்க வேண்டும்....இலங்கையின் பின் பதிங்கி இருக்காமல்

கடந்த கால பிழைகள் சீர் செயப்பட வேண்டும்....

கடந்த காலங்களாக கைது செயப்பட்டு இருக்கும் எல்லாத்தமிழர்களும் விடுதலை செயப்படவேண்டும்....

மக்கள் மீள அவர்களின் இடங்களுக்கு போய் குடியமர்வதற்கு ஏற்றவாறு இராணுவம் மக்களின் இடங்களை விட்டு போக வேண்டும்

இதனை செய்வதற்கு உங்களால் முடியாவிட்டால் போர் நிறுத்தத்தையும் கண்காணிப்பதற்கு, அமுல் படுத்துவதற்கு உங்களுக்கு எவ்விதத்திலும் முடியாது தயவு செய்து எமது காலத்தை கடத்தி இலங்கை ஆயுத இராணுவ பலமடைவதற்கு துணை போவதற்கு நாம் தாயரில்லை சென்று வ்வாருங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தத்தையும் கண்காணிப்பதற்குஇ அமுல் படுத்துவதற்கு உங்களுக்கு எவ்விதத்திலும் முடியாது தயவு செய்து எமது காலத்தை கடத்தி இலங்கை ஆயுத இராணுவ பலமடைவதற்கு துணை போவதற்கு நாம் தாயரில்லை சென்று வ்வாருங்கள்.....

தயவு செய்து எம்மால் முடியவில்லை

ஏன் முடியவில்லை

என்பதையாவது சொல்லிவிட்டுச்செல்லுங்கள்

இனிப்பேச்சுவார்த்தை என்றால் புலிகள் பல நிபந்தனைகள் புதிதாக விதிக்க வேண்டும்

ஆகக்கூடியது 1மாதம் மட்டும்(முன்னர் போன்று 5 வருடங்கள் இல்லை)

எதாவது இன அழிப்பு நடவடிக்கை அல்லது போர் நிறுத்த மீறல்கள் நடந்தால் உடனடியாக போர் நிறுத்த கண்காணிப்பு குழு

அந்த இடத்திற்கு போய் எந்தவித தலையீடுகள் இல்லாமல் சம்பவ மக்கள் உடன் பேசி உண்மைகளை அறிந்து அரச பக்கத்தில்

அல்லது புலிகள் பக்கத்தில் பிழை சரி இருந்தால் அதனை சர்வ தேசத்திற்கு(ஊடகங்கள்) உடன் அறிவித்து ஒப்பந்தம் முறிவு அல்லது அல்லது இல்லை என அறிவிக்க வேண்டும்....இலங்கையின் பின் பதிங்கி இருக்காமல்

கடந்த கால பிழைகள் சீர் செயப்பட வேண்டும்....

கடந்த காலங்களாக கைது செயப்பட்டு இருக்கும் எல்லாத்தமிழர்களும் விடுதலை செயப்படவேண்டும்....

மக்கள் மீள அவர்களின் இடங்களுக்கு போய் குடியமர்வதற்கு ஏற்றவாறு இராணுவம் மக்களின் இடங்களை விட்டு போக வேண்டும்

இதனை செய்வதற்கு உங்களால் முடியாவிட்டால் போர் நிறுத்தத்தையும் கண்காணிப்பதற்கு, அமுல் படுத்துவதற்கு உங்களுக்கு எவ்விதத்திலும் முடியாது தயவு செய்து எமது காலத்தை கடத்தி இலங்கை ஆயுத இராணுவ பலமடைவதற்கு துணை போவதற்கு நாம் தாயரில்லை சென்று வ்வாருங்கள்.....

நடக்குமா? <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.