Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்?

Featured Replies

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நாடாளுமன்றம் நாளை கூட்டப்படும் என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, நாளை 14ஆம் நாள்,  நாடாளுமன்றத்தைக் கூட்டும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டிருந்தார்.

அதற்குப் பின்னரே, நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழ் அறிவிப்பு அவரால் வெளியிடப்பட்டது. இந்த அரசிதழ் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், முன்னைய அரசிதழ் அறிவிப்புக்கு அமைய நாடாளுமன்றம் நாளை கூட்டப்பட வேண்டும்.

நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்றம் கூடும் என்று தேக வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு ஐதேக தலைவர்கள் மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, எராள் விக்கிரமரத்ன உள்ளிட்ட பலரும்  வரவேற்றுள்ளனர்.

சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், நீதித்துறை சுதந்திரத்தை நிலைநாட்டிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மங்கள சமரவீர கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/13/news/34381

  • தொடங்கியவர்

நாடாளுமன்றம் நாளை கூட்டப்படலாம் – சஜித் நம்பிக்கை!

sdfdff-720x450.jpg

நாடாளுமன்றம் நாளைக்கும் கூடலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றம் விரைவில் கூடுமென எதிர்பார்க்கப்படுவதோடு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறானதொரு சூழலில் நீதிமன்றத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/நாடாளுமன்றம்-நாளைக்கும்/

  • தொடங்கியவர்

அவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்!

z_p01-JVP.jpg

நாடாளுமன்றத்தை நாளை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியினர் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

அந்தவகையில் மக்கள் விடுதலை முன்னையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சந்தித்து பேசவுள்ளதாகவும், இதன் போது நாடாளுமன்றத்தை நாளை மீண்டும் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/அவசரமாக-நாடாளுமன்றை-கூட்/

  • தொடங்கியவர்

கட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு!

thumb_large_karu-jayasuriya-parliament-720x450.jpg

சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தல் இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட நிலையில் சபாநாயகர் இந்த அறிவிப்பிங் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை நாளை நாடாளுமன்றத்தை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியும் சபாநாயகரை சந்தித்து கூறவுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/கட்சித்-தலைவர்களுக்கான-வ/

  • தொடங்கியவர்

நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளதுசபாநாயகர்!

karu-2-720x450.jpg

நாடாளுமன்றம் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சபாநாயகரின் ஊடகப் பிரிவினால் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி விடுத்த 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாடாளுமன்றம் கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை காலை 8.30 அளவில் அனைத்து கட்சிகளின் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

46149216_2190252754341409_16284074769970

http://athavannews.com/நாளை-நாடாளுமன்றம்-கூடவுள/

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.