Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இந்தியா அமரிக்கா சீனா - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் செல்வாக்கு மண்டலங்களும்.
கேழ்வியும் பதிலும்.
.
கேழ்வி.

Segudawood Nazeer
மேற்க்கு உள் நுளைந்தால் சுரங்கப் பாதையை தகர்த்துக் கொண்டு சீனா உள் நுளையும்,இவைகள் மீண்டுமொரு உலகப் போருக்கு வித்துடக் கூடும் .
.
பதில்.
Jaya Palan
இலங்கைக்காகவும் மாலைதீவுக்காகவும் உலகபோர் ஒன்றும் வராது. உலகப்போருக்கு சீனா தயாராகவும் இல்லை. 
.
இன்றுள்ள நிலவரத்தில். இலங்கையின் வடகிழக்கிலும் மேற்க்கு கரையிலும் சீனா கால்வைக்கிற வாய்ப்பு இல்லை, மலையக தமிழ் பிரதேசங்கள் தவிர்ந்த வடமத்திய மத்திய மற்றும் தென் இலங்கை பகுதிகள் சீன ஆதரவுய் புலமாகும். அங்கு செல்வாக்கு செலுத்தும் முயற்ச்சிகளில் மேற்க்கு நாடுகளும் இந்தியாவும் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. இலங்கையில் முதலீடு கட்டுமானப் பணிகளிற்கூட இந்தச் செல்வாக்கு மண்டலங்கள் செயல்படவே செய்கின்றன.
.
பேட்டைக்காரர்கள் எப்பவும் தம் தமது ஏரியாவை தெரிந்து வைத்திருப்பார்கள். நலன்களைக் காப்பதற்கான அவர்களது போட்டியும் ”என்னுடைய இது என்னுடைய ஏரியா. உள்ளே வராதே” என்பதாகத்தான் அமைகிறது. வல்லரசுப் போட்டியும் ஓரளவுக்கு இப்படித்தான் நிகழ்கிறது. இதற்க்கு பனிப்போர்காலத்து கியூபா நல்ல உதாரணம்.
. 
சீனாவுக்கு தனது ஏரியா தெரியும். அதுபோல அமரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் தங்களது ஏரியா எதுவென நன்கு தெரியும். எனினும் . ஒத்த நலன்களைக் கொண்டிருந்தபோதும் இந்தியாவுக்கும் அமரிக்காவுக்கும் இடையில் ராஜதந்திர மட்டத்தில் இலங்கையில் யாருக்கு முதல் மரியாதை என்கிற பனிப்போர் நடக்கிறதாக கருதுள்ளது. இந்திய அமரிக்கப் பனிப்போரை சீனா தென்னாசியா முழுவதிலும் சீனா தனது செல்வாக்கை பலப்படுத்துவதப் பயன்படுத்தி வருகிறது. இதனால்தான் இலங்கையில் சிறிமாவோ பண்டார நாயக்க காலத்தில் இருந்தே சீன சார்பு எஸ்.எல்.எப்.பி கட்ச்சி இந்தியாவின் செல்லப் பிள்ளையாகவும் இருக்க முடிகிறது. இதனால்தான் சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் கச்சதீவு இலங்கைக்கு கைமாறுதல் போன்ற நடவடிக்கைகள் சாத்தியமானது. இந்தச் சூழல் தமிழரைப் பதட்டப் படுத்துவதாக உள்ளது. 
.
இலங்கையின் அடிப்படை சிக்கலே அது பல செல்வாக்கு மண்டலமாக பிரிந்திருப்பதுதான். இனப் பிரச்சினைக்கு உள்வாரியான தீர்வுகாணாமல் வெளியார் தலையீடுகளில் இருந்து இலங்கை விடுபட வாய்ப்பில்லை. இதைத்தான் மகவம்சமும் சிங்களவருக்கு உணர்த்த முனைகிறதுபோலும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து நாம்... அறிய வேண்டிய பாடம்  என்னவென்றால்....
ஸ்ரீலங்கா... ஒரு, விபச்சார  நாடு.
எங்காவது...  முட்டுப் பட்டால், முதலில்...  பலியாகுவது, விபச்சாரி   என்பது, 
உலகம்.... முழுக்க, நடக்கும்  வழமை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.