Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் கடனினூடான ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் மாலைதீவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கடனினூடான ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் மாலைதீவு

புதிதாகப் பதவியேற்றிருக்கும் மாலைதீவுகளின் சனாதிபதி நஷீட், முன்னைய அரசாங்கத்தினால் சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் திறந்த வர்த்தக உடன்பாடு சமநிலையானது அல்ல, சீனாவுக்கே அதிகளவு அனுகூலமானதென்று தெரிவித்திருக்கிறார். தனது நாட்டினை பாரிய கடந்தொகைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனாவுக்கு வாய்ப்பளித்த இந்த வர்த்தக உடன்பாட்டிலிருந்து தாம் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். 

பிரஸ்த்தாப வர்த்தக உடன்பாட்டின்படி மாலைதீவுகளின் பல தீவுகளை முழுமையாக 50 ஆண்டு 100 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருக்கும் சீன நிறுவனங்கள் பெருமளவு பணத்தினை முதலீடு செய்திருக்கும் நிலையில் மாலைதீவின் புதிய தலைவர் இவ்வாறு அறிவித்திருப்பது சினாவுக்கு சினத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம். 

மேலும், தற்போது பதவியேற்றிருக்கும் நஷீட், இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதோடு, அவரின் பதவியேற்பு வைபவத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னர், சீனாவின் கடனினூடான ஆக்கிரமிப்பென்பதை மாலைதீவுகளின் முக்கிய அரச அதிகாரியொருவர் கடுமையாக விமர்சித்திருந்ததும், அதற்கு மாலைதீவிலிருக்கும் சீனத் தூதரகம் கடுமையான தொனியில் பதிலளித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. 

இது இவ்வாறிருக்க, பப்புவா நியுகினியா தீவில் அண்மையில் இடம்பெற்று முடிந்த ஏப்பெக் நாடுகளின் கூட்டத்தொடரில் அமெரிக்காவும் சீனாவும் நேரடியாகவே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது நடந்திருக்கிறது. சீனாவின் கடனினூடான ஆக்கிரமிப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர், பலவீனமான நாடுகள் மீதான சீனாவின் பலவந்தப் போக்கையும் சாடியிருந்தார். அதற்குப் பதிலளித்த சீனா, அமெரிக்காவும் நேச நாடுகளும் வேண்டுமென்றே ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மூக்கை நுழைப்பதாகக் குற்றம் சுமத்தியிருந்தது.

பப்புவா நியுனிகினியாவில் பெருமளவு பணத்தினை முதலீடு செய்திருக்கும் சீனா, இக்கூட்டத்தொடரின்பொழுது அந்நாட்டின் பிரதமுருடன் தனியே சந்திப்பொன்றை நடத்துவதற்குக் கோரியிருந்ததும், அதற்கு அந்நாடு சாதகமான பதிலினை அளிக்காததைத் தொடர்ந்து, நான்கு சீன அதிகாரிகள், பலவந்தமாக பிரதம மந்திரியின் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதும், பின்னர் பொலிசாரினால் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது. 

இக்கூட்டத் தொடருக்கு வந்த சீனத் தலைவரின் வருகை மற்றும் அவர் ஈடுபடும் சந்திப்புகள் தொடர்பாகவும் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை விரட்டிய சீன அதிகாரிகள், தனியே சீன செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருந்ததோடு, பலரிடமும் மிகவும் கடுமையாக நடந்துகொண்டுள்ளனர்.

மாநாட்டுக்கு முன்னதாக, பப்புவா நியுகினி அரசை நிர்ப்பந்தப்படுத்தி முடிவொன்றினை எடுக்கச் சீன அதிகாரிகள் எடுத்திருந்த முயற்சிகள் தோற்றுப்போன நிலையிலேயே சீனா அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமை தெரிய வந்திருக்கிறது.

இவற்றுடன் சேர்த்து இலங்கையிலும் சீனாவின் செல்லப்பிள்ளை மகிந்த அரசிலிருந்து அகற்றப்பட்டால், சீனாவின் கடனினூடான அக்கிரமிப்பென்பது இன்னும் பலவீனமாகும் என்பது திண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மற்றைய நாடுகள் மீது பலவந்தமாய் மூக்கை நுழைக்கலாம்...சீனா செய்தால் தப்பு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

அமெரிக்கா மற்றைய நாடுகள் மீது பலவந்தமாய் மூக்கை நுழைக்கலாம்...சீனா செய்தால் தப்பு 

அமெரிக்க கூட்டுவளும் சைனாவும் சிலோனிலை ஒரு மேடை போட்டிட்டினம்.

கூத்துகள் இனித்தானே தொடங்கும்.:grin:


இது ஈழத்தமிழனனுக்கு ஒரு சந்தர்ப்பம். இதையும் விட்டால்........நான் நினைக்கேல்லை பிறகு????????
ஏனெண்டால் இன்னும் கொஞ்சக்காலம் போனால் தமிழ்ச் சமூகத்தின்ரை வாழ்க்கை முறை, அரசியல்,கொள்கைகள்,சம்பிரதாயங்கள்,உணவு முறைகள்,கொண்டாட்டங்கள் எல்லாம் மாறி/மாற்றப்பட்டு விடும்.

அதுக்குப்பிறகு எல்லாரும் இருந்து வடிவு பாக்க வேண்டியதுதான் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ragunathan said:

புதிதாகப் பதவியேற்றிருக்கும் மாலைதீவுகளின் சனாதிபதி நஷீட், முன்னைய அரசாங்கத்தினால் சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் திறந்த வர்த்தக உடன்பாடு சமநிலையானது அல்ல, சீனாவுக்கே அதிகளவு அனுகூலமானதென்று தெரிவித்திருக்கிறார். தனது நாட்டினை பாரிய கடந்தொகைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனாவுக்கு வாய்ப்பளித்த இந்த வர்த்தக உடன்பாட்டிலிருந்து தாம் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். 

0-C6-FB876-4-A78-4-DCF-BC57-F312-EAFE9-C

இதையே தான் மைத்திரி ரணில் கூட்டரசு வந்த போதும் சீனாவின் போட்சிற்றி என்னும் பல பில்லியன் டொலர் கட்டுமானத்தை நிறுத்த முற்பட்டார்கள்.கொஞ்ச நாட்களாக கிடப்பிலும் போடப்பட்டிருந்தது.

ஆனாலும் ஏற்கனவே கொட்டிய பணத்தை அரசால் திருப்பிக் கொடுக்கவோ சேர்ந்து அரசமைத்த மேற்கலகாலோ முடியவில்லை.இப்போது போட்சிற்றி எழும்பிக் கொண்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.