Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலை குற்றம்: 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing

இனப்படுகொலை குற்றம் – கௌதமாலாவில் முன்னாள் இராணுவ வீரருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை!

இனப்படுகொலை குற்றத்திற்காக, கௌதமாலாவில் முன்னாள் இராணுவ வீரருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1982-ம் ஆண்டு கிராமம் ஒன்றில் 171 பேர் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கே, கௌதமாலா சிட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் மெக்சிகோ நாட்டுக்குத் தென் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு கௌதமாலா. அங்கு தொடர்ச்சியாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்ததுடன், அது சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மான்ட் ஆட்சியில் 1982-ம் ஆண்டில் உச்சத்தை தொட்டிருந்தது. இதன்போது, சர்வாதிகாரியின் உத்தரவிற்கு அமைய, எக்ஸில் மாயா இனத்தவர்கள் அங்கு கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர்.

1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டொஸ் எரிஸ் எனும் நகரில் கொரில்லாக்கள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால், கொரில்லாக்களின் விவரத்தை டொஸ் எரிஸ் நகர மக்கள் வெளியிடாத காரணத்தால், அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

வீடுகளில் இருந்த ஆண்கள் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலைச் செய்யப்பட்டனர். அதுமாத்திரமன்றி, கொலை செய்வதற்கு முன் பெண்களும், சிறுமிகளும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கௌதமாலாவின் சர்வாதிகாரியாக இருந்த எப்ரெயின் ரியாஸ் மான்ட் மீது இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்தார். 36 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரில் கௌத்தமாலாவில் 2 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட நிலையில், கடந்த 1996-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

இந்தப் படுகொலையில் ஈடுபட்ட ராணுவத்தினரில் முக்கியமான முன்னாள் ராணுவ வீரர் சான்டோ லோபஸ் மீது 171 பேரைக் கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் சான்டோஸ் லோபஸ், அமெரிக்க ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்.

உள்நாட்டுப் போரைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கைபில் பிரிவைச் சேர்ந்தவர். உள்நாட்டுப் போர் முடிந்த பின் அமெரிக்காவில் பதுங்கி இருந்த சான்டோஸ“ லோபஸ் கைது செய்யப்பட்டு கௌதமாலாவுக்கு நாடு கடத்தப்பட்டு அவர் மீது வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்த வழக்கில் கவுதமேலா சிட்டி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், 171 பேரைக் கொலை செய்த சான்டோஸ் லோபஸுக்கு ஒவ்வொருவரையும் கொலை செய்தமைக்காக தலா 30 ஆண்டுகள் வீதம் 5 ஆயிரத்து 130 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்றதற்காக கூடுதலாக 30 ஆண்டுகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கௌத்தமாலா சட்டப்படி அதிகபட்சமாக ஒருவருக்கு 50 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில், முதல் முறையாக மிகப்பெரிய அளவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இனப்படுகொலை-குற்றம்-கௌத/

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.