Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து

 

பயங்கரவாத வழக்கு ஒன்றுடன்  தொடர்புப்படுத்தி மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்-க்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம்  இன்று இரத்து செய்துள்ளது

ugregh.jpg

மாலைதீவு  முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் இடம்பெற்ற முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார்.  இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம்  நஷீத், பறிகொடுத்தார். 

அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளைச் சுமத்தியது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதியைக் கைது செய்ததாகத் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரபுப்பட்ட வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். 

சிறைவாசத்தின் போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்குத் தண்டு வடத்தில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு மாலத்தீவு அரசு அனுமதி தர மறுத்து விட்டது. வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்திரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து விட்டது. 

அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலத்தீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, சத்திரசிகிச்சைக்காக இங்கிலாந்து நாட்டுக்குச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம்  ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல மாலத்தீவில் இருந்து முகமது நஷீத் புறப்பட்டுச் சென்றார்.

சிகிச்சைக்குப் பின்னர் அவர் மாலத்தீவுக்குத் திரும்பாமல் இலங்கையில் அரசியல் தஞ்சமடைந்தார்.

மாலைதீவு  ஜனாதிபதி பதவிக்கு செப்டம்பர் 23 ஆம் திகதி தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்ததையடுத்து புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்ற நிலையில் முகமது நஷீத் சமீபத்தில் தாய்நாடு திரும்பினார்.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து முன்னர் மாலத்தீவு உயர்நீதிமன்றில் முஹம்மது நஷீத் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு அவரது சட்டத்தரணி ஹிஸான் ஹுஸைன்  ஆஜராகிவந்தார்.

இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முஹம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைவாசத்தை இரத்து செய்து உத்தரவிட்டார்

http://www.virakesari.lk/article/45236

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.