Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்ட செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு வல்வெட்டித்துறை பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திலும், ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆயினும் இந் நிகழ்விற்கு பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர்.

அதாவது நிகழ்வு ஒழுங்கமைப்பு பணியில் ஈடுபட்டவர்களின் அடையாள அட்டைகளைப் பறித்துச் சென்றதுடன் அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஐpலிங்கம் தலைமையில் கேக் வெட்டுவதற்கு முயற்சித்த போது அதனையும் பொலிஸார் தடுத்திருந்தனர்.

இதன் பின்னர் தீருவில் பொதுப் பூங்காவில் வைத்து கேக் வெட்ட முயற்சித்த போது அங்கு நின்றிருந்த சிவாஜிலிங்கம் மற்றும் அவரது சாரதி உள்ளிட்ட நான்குபேரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றிருந்தனர்.

இதன் பின்னர் பிறந்தநாளுக்கு வெட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்ட கேக் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து கைது செய்து கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தனர். இதே வேளை இந் நிகழ்வு நடைபெறுவதை அறிந்து அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக அங்கு நின்றிருந்த ஊடகவியிலாளர்களை தமது கைத் தொலைபேசியில் தொடர்ந்தும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அத்தோடு அங்கு நின்றிருந்த வாகனங்களின் இலக்கங்களையும் தமது கைத்தொலைபேசிகளில் புகைப்படமெடுத்துக் கொண்டனர். இவ்வாறு அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியியலாளர்களால் ஊடக அமைப்புக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/109849

  • தொடங்கியவர்

மாவீரர்களின் பெற்றோர்களை அச்சுறுத்திய இராணுவப் புலனாய்வாளர்கள்

மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேசசபைக்கு உட்பட்ட கொடுவாமடு பிரதேசத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்களை சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் நாளைய தினம் நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதா இல்லையா என்று முடிவெடுக்க முடியாது தாங்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் மாவீரர்களின் பெற்றோர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் தினத்தை இம்முறை பெரும் எடுப்பில் நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

படையினரதும், படைப் புலனாய்வாளர்களினதும் தொடர்ச்சியாக கண்காணிப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மட்டக்களப்பு - கொடுவாமடு பிரதேசத்தில் மாவீரர் தின ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் சிலர் படைப் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் உறுதிப்படுத்திய மாவீரர் ஒருவரின் பெற்றோர்கள், இதனால் நாளைய தினம் இடம்பெறவுள்ள மாவீரர்தின நிகழ்வில் கலந்துகொண்டு தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த தாம் அஞ்சுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளன்.

இதேவேளை தனது மகனையும், கணவரையும் இழந்து தனிமையில் வாழ்ந்துவரும் தனக்கு இனி என்ன நேர்ந்தாலும் கவலை இல்லை என கண்ணீர் மல்க குறிப்பிட்ட தாய் ஒருவர் நாளைய தினம் இடம்பெறும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வேன் என உறுதிப்படத் தெரிவித்தார்.

இதேவேளை அச்சுறுத்தல்களுக்க மத்தியிலும் மாவீரர் நாளை பெரும் எடுப்பில் அனுட்டிப்பது தொடர்பில் பெருமிதம் வெளியிட்ட முன்னாள் போராளியொருவர், உரிமைக்கான போராட்டத்தில் அனைத்தையும் இழந்து உயிருடன் இருக்கும் தன்னைப்போன்ற போராளிகளின் அடிப்படை வாழ்வாதரத்தை கட்டியெழுப்பவது தொடர்பிலும் தமிழ் சமூகம் அக்கறை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திக்கேட்டுக்கொண்டுள்ளார்.

20 வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்து யுத்தத்தில் தனது ஒரு காலை இழந்துள்ள தான் குடும்ப வறுமை காரணமாக பலரிடம் கையேந்தும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள போதிலும், எவரும் எந்தவித உதவிகளும் இதுவரை செய்துகொடுக்க முன்வரவில்லை என்றும் முன்னாள் போராளி கவலை வெளியிட்டார்.

https://www.ibctamil.com/srilanka/80/109845

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.